|

இஸ்ரேல்-2 (அந்த இடம்)

இஸ்ரவேல் என்ற அந்த தேசம், அதிலிருக்கும் ஒரு இடம், எவ்வளவு முக்கியமானதாக கருதுகிறார்கள் யூதர்கள் என்று இப்பதிவில் காணலாம்.

யூதர்களின் கருத்து

யூதர்களுக்கு தோரா என்ற புனிதநூல் உள்ளது. முதல் ஐந்து பழைய ஏற்பாட்டு புத்தகங்கள் அவர்களின் தோரா. பழைய ஏற்பாடு மட்டும் தான் யூதர்களின் பைபிள். பழைய ஏற்பாட்டை மூன்று பிரிவுகளாக பிரித்துள்ளார்கள்.

Torah – மோசேயினால் எழுதப்பட்ட முதல் 5 ஆகமங்கள் (நியாயப்பிரமாணம்)

Neviim – தீர்க்கதரிசன புத்தகங்கள்

Ketuvim – மற்றவை

நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனமும் என்று அடிக்கடி புதிய ஏற்பாட்டில் பார்ப்பதன் அர்த்தம், யூதர்களின் வேதத்தைக் குறிப்பது தான், அதாவது பழைய ஏற்பாட்டை குறிக்கும். யூதர்கள் இன்றும் தோராவை புத்தகச்சுருள் போன்றுதான் வைத்திருக்கிறார்கள். அதை உள்ளே வைத்து படிக்க ஒரு  Boxம் வைத்திருப்பார்கள்.

அதேபோல், தல்மூத் என்ற மத நூலும் யூதர்களுக்கு உள்ளது. அது யூத ரபீமார்கள் எழுதிய நூல். வேதத்தில் கூறப்பட்ட ஒவ்வொரு சம்பவத்தையும் தெளிவாக விளக்கி இருக்கும், வேதத்தில் இல்லாத நிகழ்வுகளும் இருக்கும். யூத முனிவர்களின் நம்பிக்கையின்படி, குறிப்பிட்ட ஒரு இடம் இருக்கிறது. ஆங்கிலத்தில் “The Place”. அந்த இடத்தைத் தேடித்தான் பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் சென்றனர். அதுதான் உலகின் மையப்புள்ளி. இப்பதிவில் உள்ள எல்லாமே யூதர்களின் நம்பிக்கை மட்டுமே.

(Moriah mountain என்பது, collection of mountains. நிறைய சிறு சிறு மலைகள் சேர்ந்து இருப்பது தான் மோரியா. மோரியா என்பது ஒரு பெரிய மலை அல்ல.) அந்த மோரியா மலை தான் பரிசுத்தவான்கள் தேடிச்சென்ற the place என்பது யூதர்களின் நம்பிக்கை.

1. Creation

ஆண்டவர் முதலில் உலகத்தைப் படைக்கும் போது, அதாவது பூமியில் first stone உருவான இடம் மோரியா.

2. Adam

ஆதாமை ஆண்டவர் உருவாக்கியது மோரியா மலையில்.

3. Abraham

ஆபிரகாம் ஈசாக்கை பலியிட அழைத்துச் சென்ற இடம் மோரியா மலை.

தேவனே கட்டிய அந்த சிட்டியின் பெயர் சாலேம் என்றும், அதன் ராஜா மெல்கிசெதேக்கு என்றும் யூத ரபீமார்கள் நம்புகிறார்கள்.

ஆபிரகாம் தான் தேடிப்போன அந்த இடத்தை ஒரு நாள் கண்டுபிடித்தார்.

ஆம், தேவன் ஈசாக்கைப் பலியிட அழைத்த இடம் அதே மோரியா மலை. ஆபிரகாம் தன் வாழ்க்கையில், தான் தேடி அலைந்த பகுதி அது.

4. Jacob

இஸ்ரவேலின் ரபாய் எழுதி இருந்த ஒரு article மூலம் அறிந்தது…

தேவனுடைய வீடு என்று யாக்கோபு நினைக்குமளவு பயங்கரமாக இருந்த இடம், the place. யாக்கோபு படுத்த இடம், ஆபிரகாம் ஈசாக்கைப் பலி கொடுக்கச் சென்ற இடம். பலிபீடமாக இருந்து அந்தக் கல்லையே யாக்கோபு புரட்டிப் போட்டு படுத்ததாக நம்புகிறார்கள்.

யாக்கோபு திரும்பி வரும்போது, தேவனே அவரைக் கூப்பிட்டு, அவ்விடத்தில் பலி கொடுக்கச் சொன்னார். ஆபிரகாம் அந்த இடத்துக்கு போக வேண்டுமானால், பலி செலுத்த வேண்டி இருந்தது. ஆபிரகாமுக்கு, ஈசாக்குக்கு பதிலாக ஆட்டுக்கடா தேவைப்பட்டது. அதே இடத்தை யாக்கோபு அடையும்போதும், பலி செலுத்த வேண்டி இருக்கிறது.

5. David

அதன் பின்னர், அதிக வருடங்களாக மறைத்து வைக்கப்பட்ட இடம், காத் தீர்க்கதரிசியின் மூலம் தாவீதுக்கு வெளிப்படுத்தப்பட்டது.

தாவீதும் அந்த இடத்தில் பலி செலுத்தினார். தாவீதும் அந்த இடத்துக்கு போக வேண்டுமானால் பலி செலுத்த அவசியம் இருந்தது.

6. Solomon

அந்த இடத்தில் தான் சாலொமோன் ஆலயம் கட்டத் தொடங்கினர். கர்த்தரின் முழு மகிமையும் நிரம்பிய இடமாக இருந்தது. அந்த இடத்தில் ஆலயத்தில் பலி செலுத்தப்பட்டது.

7. Jeremiah

நேபுகாத் நேச்சார் காலத்தில் ஆலயம் இடிக்கப்படும் என்றும்,70 வருட சிறையிருப்பு என்றும் எரேமியாவுக்கு வெளிப்பாடு கிடைத்ததினால், எரேமியா தீர்க்கதரிசி யாருக்கும் தெரியாமல், உடன்படிக்கை பெட்டியைத் தூக்கி ஒளித்து வைத்திடுவார். அதுவும் மோரியா மலை தான் என்று தள்ளுபடி ஆகமத்தில் குறிப்பிட்டுள்ளது.

8. இயேசு கிறிஸ்து

நம்‌ தேவன் நமக்காக குற்றமற்ற பாவ நிவாரண பலியாக, தன்னையே கொடுத்தது கூட மோரியா மலையின் ஒரு பகுதியான கொல்கதாவில் தான் என்று சில வேத அறிஞர்கள் கூறுகின்றனர். நமக்கான பலியும் அங்கே செலுத்தப்பட்டு விட்டது.

இந்த நம்பிக்கைகள் எல்லாமே அந்த இடம் இஸ்ரவேலருக்கு எவ்வளவு முக்கியமான இடம் என்பதைக் குறிக்கிறது. இயேசு மரித்து உயிர்த்தெழுந்ததினாலே, நம் எல்லாரையுமே அவர் ஆலயமாக்கிவிட்டார். எனவே நாம் எருசலேமுக்கு சென்று வழிபட வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் இயேசுவை இன்னும் ஏற்றுக் கொள்ளாததால், யூதர்களுக்கு எருசலேம் தேவை. எருசலேமில் இருந்த அந்த பழைய தேவாலயமும் யூதர்களுக்குத் தேவை.

 

Similar Posts

  • |

    விடுதலை-2 (பாஸ்டர்.விளாட் அவர்களின் வாழ்க்கை)

    பாஸ்டர்.விளாட் அவர்களின் வாழ்க்கை இந்த பதிவில், ஏற்கனவே இந்த பாவத்தில் மூழ்கி, மீண்டு வந்த பாஸ்டர்.விளாட் (Pastor.Vlad) அவர்கள் அனுபவத்தை பார்க்கலாம். “இது ஆபாச படம் பார்ப்பவர்களுக்கு தானே, எனக்கு இல்லையே” என்று தயவுசெய்து எண்ண வேண்டாம். யாரோ ஒருவருக்கு அறிவுரை சொல்லும் சூழல் வந்தால் உபயோகப்படும். நமது ஆவிக்குரிய வளர்ச்சிக்கும் உதவும் என்பதில் சந்தேகமில்லை. விளாட் உக்ரைனில் பிறந்தவர். நல்ல தேவ பக்தியான குடும்பத்தில் பிறந்தவர். அவரது வீட்டுக்குள் நல்ல அழகான அன்பான குடும்ப வாழ்க்கை…

  • |

    Day 123 (03-05-2025)

    Scripture Portion: Psalm 106-107 சங்கீதம் 106 1அல்லேலூயா, கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. 2கர்த்தருடைய வல்லமையான செய்கைகளைச் சொல்லி, அவருடைய துதியையெல்லாம் பிரஸ்தாபப்படுத்தத்தக்கவன் யார்? 3நியாயத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும், எக்காலத்திலும் நீதியைச் செய்கிறவர்களும் பாக்கியவான்கள். 4கர்த்தாவே, நீர் தெரிந்துகொண்டவர்களின் நன்மையை நான் கண்டு, உம்முடைய ஜாதியின் மகிழ்ச்சியால் மகிழ்ந்து, உம்முடைய சுதந்தரத்தோடே மேன்மைபாராட்டும்படிக்கு, 5உம்முடைய ஜனங்களுக்கு நீர் பாராட்டும் கிருபையின்படி என்னை நினைத்து, உம்முடைய இரட்சிப்பினால் என்னைச் சந்தித்தருளும். 6எங்கள் பிதாக்களோடுங்கூட நாங்களும் பாவஞ்செய்து, அக்கிரமம் நடப்பித்து, ஆகாமியம்…

  • |

    Day 326 (22-11-2025)

    Scripture Portion: James 1-5 யாக்கோபு 1 1தேவனுக்கும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கும் ஊழியக்காரனாகிய யாக்கோபு, சிதறியிருக்கிற பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் வாழ்த்துதல் சொல்லி எழுதுகிறதாவது: 2என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, 3உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள். 4நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரணகிரியை செய்யக்கடவது. 5உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும். 6ஆனாலும்…

  • |

    Day 295 (22-10-2025)

    Scripture Portion: Matthew 18 மத்தேயு 18 1அவ்வேளையிலே சீஷர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பரலோகராஜ்யத்தில் எவன் பெரியவனாயிருப்பான் என்று கேட்டார்கள். 2இயேசு ஒரு பிள்ளையைத் தம்மிடத்தில் அழைத்து, அதை அவர்கள் நடுவே நிறுத்தி: 3நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 4ஆகையால் இந்தப் பிள்ளையைப்போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோகராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான். 5இப்படிப்பட்ட ஒரு பிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான். 6என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில்…

  • |

    Day 320 (16-11-2025)

    Scripture Portion: Acts 1-3 அப்போஸ்தலர் 1 1தெயோப்பிலுவே, இயேசுவானவர் தாம் தெரிந்துகொண்ட அப்போஸ்தலருக்குப் பரிசுத்த ஆவியினாலே கட்டளையிட்டபின்பு, 2அவர் எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரைக்கும் செய்யவும் உபதேசிக்கவும் தொடங்கின எல்லாவற்றையுங்குறித்து, முதலாம் பிரபந்தத்தை உண்டுபண்ணினேன். 3அவர் பாடுபட்டபின்பு, நாற்பது நாளளவும் அப்போஸ்தலருக்குத் தரிசனமாகி, தேவனுடைய ராஜ்யத்துக்குரியவைகளை அவர்களுடனே பேசி, அநேகம் தெளிவான திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார். 4அன்றியும், அவர் அவர்களுடனே கூடிவந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானம் கொடுத்தான்; நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்த…

  • |

    Day 280 (07-10-2025)

    Scripture Portion: Mark 2 மாற்கு 2 1சிலநாட்களுக்குப்பின்பு அவர் மறுபடியும் கப்பர்நகூமுக்குப் போனார்; அவர் வீட்டிலிருக்கிறாரென்று ஜனங்கள் கேள்விப்பட்டு; 2உடனே வாசலுக்கு முன்னும் நிற்க இடம்போதாதபடிக்கு அநேகர் கூடிவந்தார்கள்; அவர்களுக்கு வசனத்தைப் போதித்தார். 3அப்பொழுது நாலுபேர் ஒரு திமிர்வாதக்காரனைச் சுமந்துகொண்டு அவரிடத்தில் வந்தார்கள்; 4ஜனக்கூட்டத்தினிமித்தம் அவருக்குச் சமீபமாய்ச் சேரக்கூடாமல், அவர் இருந்த வீட்டின் மேற்கூரையைப் பிரித்துத் திறப்பாக்கி, திமிர்வாதக்காரன் கிடக்கிற படுக்கையை இறக்கினார்கள். 5இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, உன் பாவங்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *