|

இஸ்ரேல்-3 (தனிச்சிறப்புகள்)

யூதர்கள் என்று அழைக்கப்படுகிற, இன்றைய இஸ்ரவேலர்களின் வளர்ச்சி பற்றி இப்பதிவில் காணலாம்.

யூதர்கள் இனவெறி பிடித்தவர்கள். தங்கள் தெய்வம் மட்டுமே உண்மையான தெய்வம் என்று கருதுபவர்கள். தங்கள் தெய்வத்துக்காக, தங்கள் தேசத்துக்காக எந்த எல்லைக்கும் போகிறவர்கள். உலகை ஆளுகை செய்கிறவர்கள். இல்லுமினாட்டிகள். உலகினை ஆளப்பிறந்தவர்கள் யூதர்கள் என்ற திமிர் பிடித்தவர்கள். பழிவாங்குபவர்கள். மோசமானவர்கள். வந்தேறிகள். இரத்த வெறி பிடித்தவர்கள். பாலஸ்தீன தேசத்தைப் பிடித்துக்கொண்டு, பாலஸ்தீனியர்களை சுட்டுக் கொல்பவர்கள்

இதெல்லாம் YouTube comments களில் நான் படித்து அறிந்தது. (2 வருடங்களுக்கு முன்பு எடுத்த கருத்துக்கள் இவை. இப்பொழுது இன்னும் மோசமாக இஸ்ரேலைப் பற்றி பேசுகின்றனர்) இவைகள் எல்லாம் நம் தமிழ் மக்கள் கமெண்ட்களில் யூதர்களைப் பற்றிக் கூறிய வார்த்தைகள். உண்மையில் யூதர்கள் யார்? அவர்கள் கடந்து வந்த பாதைகள் என்ன? யூதர்களின் இரத்த சரித்திரம் என்ன என்று இக்கட்டுரையில் தொடர்ச்சியாக காண்போம்.

தற்போதைய இஸ்ரேல் (After 1948)

இப்போது இருக்கும் இஸ்ரேல் தேசத்தின் வளர்ச்சிகளை முதலாவது நாம் காணலாம்.

  • 1. கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளாக, தங்களுக்கென்று ஒரு தேசம் இல்லாமல், பல தேசத்திலும் அடிமைப்பட்டு, சிறைபிடிக்கப்பட்டு, கொல்லப்பட்டு, அவமானப்பட்டு இருந்த மக்கள், தங்களுக்கு என்று ஒரு சுய தேசத்தை உருவாக்கி, அதில் இந்த 75 ஆண்டுக்குள்ளாக மாபெரும் புரட்சி செய்து, உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்திருப்பது, இஸ்ரேலின் சிறப்புகளில் மிகச் சிறந்தது.
  • 2. 1948ல் தான் இஸ்ரேல் என்ற நாடு உருவாகி, அதை சுதந்திர நாடு என்று பிரகடனப்படுத்தியதே மே14,1948 தான். அதற்கு அடுத்த நாளே, சுற்றிலும் இருந்த அரபு நாடுகள் சேர்ந்து, இஸ்ரேலின் மீது போர் தொடுத்தது. அப்போதைய இஸ்ரேலின் மக்கள் தொகை வெறும் ஐந்து லட்சம். சுற்றி இருந்த அரபு நாடுகளின் மக்கள் தொகை கிட்டத்தட்ட ஆறு கோடி. அதாவது 120 மடங்கு அதிகம் மக்கள் தொகை கொண்ட அரபு நாடுகள், வெறும் ஒருநாள் வயது குழந்தையான இஸ்ரேலை சுற்றி படையெடுத்தது.
  • இஸ்ரேல் என்ற பெயர், உலக வரைபடத்தில் இல்லாமல் போக வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். இந்தப் போரைப் பற்றி விரிவாக வரும் பகுதிகளில் படிக்கலாம். ஆனால் அவ்வளவு படைவீரர்கள் சூழ்ந்து நின்ற போதிலும், இஸ்ரேல் தனது படைவீரர்கள் பலரை இழக்கக் கொடுத்தாலும், அந்தப் போரில் வெற்றி பெற்றது. அதுதான் இஸ்ரேல். எட்டு முறை அண்டை நாட்டினருடன் போரிட்டாலும், ஒரு முறை கூட தோற்காத நாடு என்று பெருமையுடன் காணப்படுவது இஸ்ரேல்.
  • 3. பாலஸ்தீனியர்கள் மட்டுமே கிட்டத்தட்ட 170 முறை, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். யாரிடமும் தோற்றுப் போகாத நாடாக, எதிர்ப்பவர்களின் கண்களில் விரல் விட்டு ஆட்டிக் கொண்டிருப்பது இஸ்ரேல்.
  • 4. படித்தவர்கள் அதிகம் காணப்படும் நாடு இஸ்ரேல். கிட்டத்தட்ட 99 சதவீத பேர் படித்தவர்களாக இருப்பதுடன், அதிக அளவு போஸ்ட் கிராஜுவேட்(PG) முடித்தவர்கள் கூட இஸ்ரேலில் தான் இருக்கிறார்கள்.
  • 5. தனி நாடாக இஸ்ரேல் உருவான பின்னர் 13 பேர் அறிவியலில் நோபல் பரிசு பெற்றுள்ளனர். உலக அளவில் டாப் யூனிவர்சிட்டிஸ் என்ற வரிசையில், முதல் 100 இடத்தில், மூன்று இஸ்ரேலிய கல்லூரிகள் உள்ளன.
  • 6. சாட்டிலைட் சொந்தமாக தயாரித்து அனுப்பும் 10 நாடுகளில், இஸ்ரேலும் ஒன்று. இதுவரை 13 சாட்டிலைட்டுகள் அனுப்பப்பட்டு இருக்கிறது. நமது இந்தியா கூட ஒரு சாட்டிலைட் இஸ்ரேலிடம் இருந்து வாங்கி, அதைத்தான் பிற நாடுகளை கண்காணிப்பதற்காக அனுப்பி இருக்கிறோம்.
  • 7. பள்ளிப் பிள்ளைகள் தயாரித்த சாட்டிலைட்டை, வானிற்கு அனுப்பிய முதல் நாடு இஸ்ரேல் தான். இதிலிருந்து அறிந்து கொள்ளலாம், அவர்களின் குழந்தைகள் எவ்வளவு அறிவாளிகளாக இருக்கிறார்கள் என்று.
  • 8. குடிப்பதற்கு தண்ணீரே இல்லாத நாடு என்றால் அது இஸ்ரேல்தான். ஆனால் அவர்கள் பாலைவனத்தில் கூட விவசாயம் செய்கிறார்கள். எப்படி? கடல் தண்ணீரை சுத்திகரித்து, குடிநீராக மாற்றி ,அதைத்தான் உபயோகித்துக் கொண்டிருக்கிறார்கள்.
  • 9. கழிவுநீரை அதிகமாக மறுசுழற்சி செய்கிற நாடும் இஸ்ரேல்தான். வீடுகளில் இருந்து வரும் 60% கழிவுநீரும், ஃபேக்டரிகளில் இருந்து வெளிவரும் 85 சதவீத தண்ணீரையும், சுத்திகரித்து, அதிலிருந்து வரும் தண்ணீரை 97% விவசாயத்திற்கு உபயோகித்துக் கொண்டிருக்கின்றனர். விவசாயத்திற்கு அவர்கள் உபயோகிக்கிற நீரில் 55 சதவீத தண்ணீர் drainage water.
  • 10. தண்ணீரை எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்பதைத் தெரிந்தவர்கள் இஸ்ரவேலர்கள் தான். அவர்கள் தான் சொட்டுநீர் பாசனம் முறையை கண்டுபிடித்தவர்கள்.
  • 11. உலக அளவில் பால் உற்பத்தியில் முதலிடம் பிடிப்பதும் இஸ்ரேல்தான். அதிகளவு பால் உற்பத்தி பண்ணுகிற மாடு இஸ்ரேலில் தான் கிடைக்கும்.
  • 12. உலகிலேயே மியூசியம் அதிகம் உள்ள நாடு இஸ்ரேல் தான். உலகிலே அதிக ஆர்கெஸ்ட்ரா உள்ள நாடும் இஸ்ரேல்தான்.
  • 13. இஸ்ரேல் நாட்டில் மட்டும் 137 பீச் இருக்கிறது.
  • 14. அதிக வரலாற்று சிறப்புமிக்க இடம் கொண்ட நாடு இஸ்ரேல் தான். எருசலேமில் மட்டும் கிட்டத்தட்ட 2000 இடங்கள் வரலாற்று இடங்களாக உள்ளது.
  • 15. உலகிலேயே உயரமான இடம் எவரெஸ்ட் என்பது அனைவருக்கும் தெரியும்(8848m). World lowest pointஎது என்று கேட்டால், அது இஸ்ரேலில் உள்ள Dead seaதான். 1315m low ஆக இருக்கும். அங்குள்ள உப்புத்தன்மை அதிகம் என்பதால், அதில் சுலபமாக மிதக்க முடியும்.
  • 16. நாம் கையில் வைத்திருக்கிற smart phoneக்கு foundation போட்டது இஸ்ரேல் தான். Israelல் உள்ள Motorola company ன் Research and Development engineers, இன்றைக்கு உபயோகிக்கும் மொபைல் போன்களுக்கு அடித்தளம் போட்டவர்கள்.
  • 17. Google, Apple, Microsoft, Intel இப்படி பெரிய நிறுவனங்களுக்கு Research and Development team இன்றும் இஸ்ரேலில் இருக்கும். டெக்னாலஜியில் அதிகம் பெயர் பெற்ற நாடு இஸ்ரேல்.
  • 18. ஒரு வருடத்துக்கு மட்டும் கிட்டத்தட்ட 1000 கடிதங்கள் கடவுளுக்கு(To God) என்று பெயர் போட்டு வரும். இதை டீல் செய்வதற்காகவே ஒரு தனி டிபார்ட்மெண்ட் போஸ்டல் துறையில் உள்ளது.
  • 19. Mount of Olives என்று ஒரு சுடுகாடு இஸ்ரேலில் உள்ளது. இதுவரை அது சுடுகாடாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. பொதுவாக ஒரு இடம் சுடுகாடாக பயன்படுத்தப்படும். பின்னர் அந்த இடம் வேறொரு பயன்பாட்டில் வந்து சேரும். அல்லது வேறொரு பயன்பாட்டில் இருந்த இடம், சுடுகாடாக மாறும். ஆனால் இஸ்ரேலிலுள்ள இந்த ஒரு இடம் மட்டும் , உலகிலே மிகப் பழமையான சுடுகாடு என்ற பெருமையை பெற்றது.
  • 20. மிகப் பழமையான பட்டணங்கள் பட்டியலில், எருசலேமும் ஒன்று. ஆனால் இந்த எருசலேம் இரண்டு முறை முற்றிலுமாக அழிக்கப்பட்ட நகரம். அதே போல 23 முறை எதிரி படையால் சூழப்பட்டிருந்தது. 53 முறை எதிரியால் தாக்கப்பட்டிருந்தது. 44 முறை பிடிக்கப்பட்டுள்ளது. இத்தனையும் தாண்டி இன்றும் எருசலேம் என்ற பட்டணம் அங்கே காணப்படுவது ஒரு சிறப்பு தானே!

Similar Posts

  • இஸ்ரேல் – 10

    ஈசாக்கு முதல் மோசே ஆபிரகாமின் மகன் ஈசாக்கு. ஈசாக்கின் மகன் யாக்கோபு. ஈசாக்கு 60 வயதாகும்போது யாக்கோபு பிறந்து விட்டார். ஈசாக்கு மரிக்கும்போது 180 வயது. யாக்கோபு, ஏசாவுக்கு பயந்து ஓடிப்போன பின்பு தான், யாக்கோபு திருமணம் செய்தார், எனவே ஓடிப் போகும்போது அவருக்கு 40 வயதாக இருக்கும் என்று வைத்துக் கொள்வோம். யாக்கோபுக்கு 40 வயது என்றால், ஈசாக்குக்கு அப்போது 100 வயது. 100 வயதாகும்போதே நான் சாகப்போகிறேன், வந்து ஆசீர்வாதம் வாங்கி கொள்ளுங்கள் என்று…

  • |

    Day 173 (22-06-2025)

    Scripture Portion: Proverb 30-31 நீதிமொழிகள் 30 1யாக்கேயின் குமாரனாகிய ஆகூர் என்னும் புருஷன் ஈத்தியேலுக்கு வசனித்து, ஈத்தியேலுக்கும் ஊகாலுக்கும் உரைத்த உபதேச வாக்கியங்களாவன: 2மனுஷரெல்லாரிலும் நான் மூடன்; மனுஷருக்கேற்ற புத்தி எனக்கு இல்லை. 3நான் ஞானத்தைக் கற்கவும் இல்லை, பரிசுத்தரின் அறிவை அறிந்துகொள்ளவும் இல்லை. 4வானத்துக்கு ஏறியிறங்கினவர் யார்? காற்றைத் தமது கைப்பிடிகளில் அடக்கினவர் யார்? தண்ணீர்களை வஸ்திரத்திலே கட்டினவர் யார்? பூமியின் எல்லைகளையெல்லாம் ஸ்தாபித்தவர் யார்? அவருடைய நாமம் என்ன? அவர் குமாரனுடைய நாமம்…

  • |

    Day 291 (18-10-2025)

    Scripture Portion: John 6 யோவான் 6 1இவைகளுக்குப்பின்பு இயேசு திபேரியாக்கடல் என்னப்பட்ட கலிலேயாக் கடலின் அக்கரைக்குப் போனார். 2அவர் வியாதிக்காரரிடத்தில் செய்த அற்புதங்களைத் திரளான ஜனங்கள் கண்டபடியால் அவருக்குப் பின்சென்றார்கள். 3இயேசு மலையின்மேல் ஏறி, அங்கே தம்முடைய சீஷருடனேகூட உட்கார்ந்தார். 4அப்பொழுது யூதருடைய பண்டிகையாகிய பஸ்கா சமீபமாயிருந்தது. 5இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து, திரளான ஜனங்கள் தம்மிடத்தில் வருகிறதைக் கண்டு, பிலிப்புவை நோக்கி: இவர்கள் சாப்பிடத்தக்கதாக அப்பங்களை எங்கே கொள்ளலாம் என்று கேட்டார். 6தாம் செய்யப்போகிறதை…

  • |

    Day 80 (21-03-2025)

    Scripture Portion: Deuteronomy 30-31 உபாகமம் 30 1நான் உனக்கு முன்பாக வைத்த ஆசீர்வாதமும் சாபமுமாகிய இந்தக் காரியங்களெல்லாம் உன்மேல் வரும்போது: நீ உன் தேவனாகிய கர்த்தரால் துரத்திவிடப்பட்டு, எல்லா ஜாதிகளிடத்திலும் போயிருக்கும்போது, நீ உன் இருதயத்திலே சிந்தனைசெய்து, 2உன் தேவனாகிய கர்த்தரிடத்துக்கே திரும்பி, இன்று நான் உனக்குக் கற்பிக்கிறபடியெல்லாம், நீயும் உன் பிள்ளைகளும் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அவருடைய சத்தத்திற்குச் செவிகொடுத்தால், 3உன் தேவனாகிய கர்த்தர் உன் சிறையிருப்பைத் திருப்பி, உனக்கு இரங்கி, உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிதற…

  • |

    Day 72 (13-03-2025)

    Scripture Portion: Deuteronomy 5-7 உபாகமம் 5 1மோசே இஸ்ரவேலர் எல்லாரையும் அழைப்பித்து, அவர்களை நோக்கி: இஸ்ரவேலரே, நான் இன்று உங்கள் காதுகள் கேட்கச் சொல்லும் கட்டளைகளையும் நியாயங்களையும் கேளுங்கள்; நீங்கள் அவைகளின்படியே செய்யும்படிக்கு அவைகளைக் கற்றுக் கைக்கொள்ளக்கடவீர்கள். 2நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஓரேபிலே நம்மோடே உடன்படிக்கைபண்ணினார். 3அந்த உடன்படிக்கையைக் கர்த்தர் நம்முடைய பிதாக்களுடன் பண்ணாமல், இந்நாளில் இங்கே உயிரோடிருக்கிற நம்மெல்லாரோடும் பண்ணினார். 4கர்த்தர் மலையிலே அக்கினியின் நடுவிலிருந்து முகமுகமாய் உங்களோடே பேசினார். 5கர்த்தருடைய வார்த்தையை உங்களுக்கு அறிவிக்கும்படி, அக்காலத்திலே நான் கர்த்தருக்கும், உங்களுக்கும் நடுவாக நின்றேன்;…

  • |

    Day 317 (13-11-2025)

    Scripture Portion: Luke 23, John 18-19 லூக்கா 23 1அவர்களுடைய கூட்டத்தாரெல்லாரும் எழுந்திருந்து, அவரைப் பிலாத்துவினிடத்திற்குக் கொண்டுபோய்: 2இவன் தன்னைக் கிறிஸ்து என்னப்பட்ட ராஜாவென்றும், ராயருக்கு வரிகொடுக்க வேண்டுவதில்லையென்றும் சொல்லி, ஜனங்களைக் கலகப்படுத்தக் கண்டோம் என்று அவர்மேல் குற்றஞ்சாட்டத் தொடங்கினார்கள். 3பிலாத்து அவரை நோக்கி: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். அவர் அவனுக்குப் பிரதியுத்தரமாக; நீர் சொல்லுகிறபடிதான் என்றார். 4அப்பொழுது பிலாத்து பிரதான ஆசாரியர்களையும் ஜனங்களையும் நோக்கி: இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *