Bible Study

  • |

    இஸ்ரேல்

    இஸ்ரவேலின் தேவனுடைய நாமத்தில் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் என்று வேதத்தில் வாசிக்கும் போதெல்லாம், இஸ்ரவேலைப் பற்றி அதிகமாக படிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்படும். ஏன் அவர் இஸ்ரவேலின் தேவன்? இந்தியாவின் தேவனாக ஏன் அவர் இருந்திருக்கக் கூடாது? பிற மதத்தினர் சொல்வது போல வெளிநாட்டு கடவுளை வணங்கிக் கொண்டிருக்கிறேனா? இது போன்ற எண்ணங்கள் எனக்கு பள்ளிப்பருவத்திலே அதிகமாக வந்தது உண்டு. எவ்வளவு அதிகமாக வேதத்தை வாசிக்கிறேனோ, அவ்வளவு அதிகமாக இதைப் பற்றியும்…

  • |

    இஸ்ரேல்-2 (அந்த இடம்)

    இஸ்ரவேல் என்ற அந்த தேசம், அதிலிருக்கும் ஒரு இடம், எவ்வளவு முக்கியமானதாக கருதுகிறார்கள் யூதர்கள் என்று இப்பதிவில் காணலாம். யூதர்களின் கருத்து யூதர்களுக்கு தோரா என்ற புனிதநூல் உள்ளது. முதல் ஐந்து பழைய ஏற்பாட்டு புத்தகங்கள் அவர்களின் தோரா. பழைய ஏற்பாடு மட்டும் தான் யூதர்களின் பைபிள். பழைய ஏற்பாட்டை மூன்று பிரிவுகளாக பிரித்துள்ளார்கள். Torah – மோசேயினால் எழுதப்பட்ட முதல் 5 ஆகமங்கள் (நியாயப்பிரமாணம்) Neviim – தீர்க்கதரிசன புத்தகங்கள் Ketuvim – மற்றவை நியாயப்பிரமாணமும்…

  • |

    இஸ்ரேல்-3 (தனிச்சிறப்புகள்)

    யூதர்கள் என்று அழைக்கப்படுகிற, இன்றைய இஸ்ரவேலர்களின் வளர்ச்சி பற்றி இப்பதிவில் காணலாம். யூதர்களைப் பற்றி தமிழ் மக்களின் கருத்து: யூதர்கள் இனவெறி பிடித்தவர்கள். தங்கள் தெய்வம் மட்டுமே உண்மையான தெய்வம் என்று கருதுபவர்கள். தங்கள் தெய்வத்துக்காக, தங்கள் தேசத்துக்காக எந்த எல்லைக்கும் போகிறவர்கள். உலகை ஆளுகை செய்கிறவர்கள். இல்லுமினாட்டிகள். உலகினை ஆளப்பிறந்தவர்கள் யூதர்கள் என்ற திமிர் பிடித்தவர்கள். பழிவாங்குபவர்கள். மோசமானவர்கள். வந்தேறிகள். இரத்த வெறி பிடித்தவர்கள். பாலஸ்தீன தேசத்தைப் பிடித்துக்கொண்டு, பாலஸ்தீனியர்களை சுட்டுக் கொல்பவர்கள் இதெல்லாம் YouTube…

  • |

    இஸ்ரேல்-4 (வினோத சட்டங்கள்)

    இஸ்ரேலின் விநோதமான சட்டங்கள் 1. இஸ்ரேலில் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, கட்டாயமாக இரண்டு வருடம் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும். ராணுவத்தில் பெண்களைக் கொண்ட நாடு என்ற பெருமையும் இஸ்ரேலுக்கு உள்ளது. 2. நமது குழந்தைகள் பார்க்கும் கார்ட்டூனில் அதிக அளவு கார்ட்டூனை தயாரிப்பவர்கள் யூதர்கள் தான். ஆனால் இஸ்ரேல் நாட்டில் குழந்தைகள் கார்ட்டூன் பார்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் மூளை மழுங்கி விடும் என்பதால், 15 வயது வரை கார்ட்டூன் பார்க்க கூடாது…

  • இஸ்ரேல் – 5 (இஸ்ரேல் தேசிய கீதம்)

    இஸ்ரேல் – 5 இஸ்ரேல் தேசிய கீதம் யார் இந்த யூதர்கள்? பூமியில் யூதர்கள் கஷ்டப்பட்ட அளவு, வேறு எந்த இனமும் கஷ்டப்பட்டது கிடையாது. அதேபோல யூதர்கள் வெறுக்கப்பட்ட அளவு, வேறு எந்த இனமும் வெறுக்கப்பட்டதும் இல்லை. யூதர்களை அதிகம் வருத்தியப்படுத்தியது முஸ்லிம்களோ, அரபியர்களோ கிடையாது. வரலாற்றை நன்றாக படித்துப் பார்த்தால், யூதர்களை கொடுமைப்படுத்தியது கிறிஸ்தவர்கள் தான் என்பதை அறியலாம். இயேசு ஒரு யூதர். இயேசுவைக் கொன்றவர்கள் யூதர்கள். இயேசுவின் சீஷரை விரட்டி விரட்டி கொன்றவர்கள் யூதர்கள்….

  • இஸ்ரேல்-6 (இஸ்ரேல் – கடந்து வந்த பாதை)

    கடந்து வந்த பாதைகள்: (வேதாகமம் தொடங்கி இப்போது வரை) பரிசுத்த வேதாகமத்தை எடுத்துக் கொண்டால், ஆதியாகமம் முதல் 11 அதிகாரங்கள் மட்டுமே உலக வரலாற்றைக் கொண்டிருக்கும். அதன் பின்னர், ஆதியாகமம் 12 முதல் அப்போஸ்தலர் இரண்டாம் அதிகாரம் வரை, அது இஸ்ரவேலர்களின் வரலாற்றைப் பற்றி மட்டுமே எடுத்துக் கூறுகிறது. எனவே வேதாகமத்தை இஸ்ரவேலரின் வரலாறு என்று கூறலாம். வானமும் பூமியும் சிருஷ்டிக்கப்பட்ட வரலாறு, மனுஷன் வஞ்சிக்கப்படுதல், காயின் வரலாறு என்று ஆதாமின் வம்ச வரலாறு ஆதியாகமம் ஐந்தாம்…

  • இஸ்ரேல்-7 (இஸ்ரேல் – நோவா)

    நோவா தேவன் மனுக்குலத்தை மீட்பதற்காக ஒரு திட்டத்தைக் கொடுத்தார். பெண்ணிடம் இருந்து பிறக்கும் பிள்ளை, சாத்தானை ஜெயிக்கும் என்பதே அந்த திட்டம். சாத்தான் அந்த திட்டத்துக்கு எதிராக போராடி, முதலில் பரிசுத்த வித்து இருந்த ஆபேலைக் கொன்றான். பின்னர், வித்து யாரிடம் இருக்கிறது என்பது தெரியாததால் முழு மனிதகுலத்தையும் அசுத்தமாக்க முடிவு செய்து, தேவ புத்திரர்களை மனுஷ குமாரத்திகளுடன் கலக்க விட்டான். நோவா காலம் வரை இந்த பரிசுத்த வித்து மறைந்து இருந்தது. ஆதாமுக்கு அனேக பிள்ளைகள்…

  • இஸ்ரேல்-8 (நிம்ரோத்)

    நிம்ரோத் பூமியில் இராட்சதர்கள் பெருகி, மனிதர்களை வாழ விடாமல் செய்ததாலும், பூமியில் பாவம் பெருகி விட்டதாலும், தேவன் மனிதர்களை அழிக்க முடிவு செய்தார். ஆனாலும் பரிசுத்த வித்து இருந்த நோவா மற்றும் அவரது 3 மகன், 3 மருமகள், மனைவி என்று 8 பேரை பேழையில் வைத்து பாதுகாத்தார் என்று பார்த்தோம். நோவாவுடைய மகனான காம் ஓரினச்சேர்க்கை பாவத்தில் ஈடுபட்டதால், தேவன் ஆசீர்வதித்த பூமியில் சாபத்தை கொண்டு வந்தார் நோவா.  நோவா சபித்த காமுடைய குமாரன் தான்…

  • இஸ்ரேல்-9 (ஆபிரகாம்)

    ஆபிரகாம் நோவாவின் குமாரர் சேம், காம், யாப்பேத் என்று அறிவோம். எனவே சேம் தான் முதல் மகனாக இருப்பான் என்று நினைத்தால் தவறு. யாப்பேத் தான் முதல் மகன் என்றும், அவன் தம்பி தான் சேம் என்றும் வசனம் கூறுகிறது. ஆதியாகமம்10:21சேமுக்கும் பிள்ளைகள் பிறந்தார்கள்; அவன் ஏபேருடைய சந்ததியார் எல்லாருக்கும் தகப்பனும், மூத்தவனாகிய யாப்பேத்துக்குத் தம்பியுமாய் இருந்தான். ஆனால் வேற்று மொழிபெயர்ப்பில், யாப்பேத்தின் மூத்த சகோதரன் சேம் என்றிருக்கும். எனவே யார் முதலாவது பிறந்தவர் என்பதில் குழப்பம்…

  • இஸ்ரேல் – 10

    ஈசாக்கு முதல் மோசே ஆபிரகாமின் மகன் ஈசாக்கு. ஈசாக்கின் மகன் யாக்கோபு. ஈசாக்கு 60 வயதாகும்போது யாக்கோபு பிறந்து விட்டார். ஈசாக்கு மரிக்கும்போது 180 வயது. யாக்கோபு, ஏசாவுக்கு பயந்து ஓடிப்போன பின்பு தான், யாக்கோபு திருமணம் செய்தார், எனவே ஓடிப் போகும்போது அவருக்கு 40 வயதாக இருக்கும் என்று வைத்துக் கொள்வோம். யாக்கோபுக்கு 40 வயது என்றால், ஈசாக்குக்கு அப்போது 100 வயது. 100 வயதாகும்போதே நான் சாகப்போகிறேன், வந்து ஆசீர்வாதம் வாங்கி கொள்ளுங்கள் என்று…