இஸ்ரேல்-6 (இஸ்ரேல் – கடந்து வந்த பாதை)

கடந்து வந்த பாதைகள்:

(வேதாகமம் தொடங்கி இப்போது வரை)

பரிசுத்த வேதாகமத்தை எடுத்துக் கொண்டால், ஆதியாகமம் முதல் 11 அதிகாரங்கள் மட்டுமே உலக வரலாற்றைக் கொண்டிருக்கும். அதன் பின்னர், ஆதியாகமம் 12 முதல் அப்போஸ்தலர் இரண்டாம் அதிகாரம் வரை, அது இஸ்ரவேலர்களின் வரலாற்றைப் பற்றி மட்டுமே எடுத்துக் கூறுகிறது. எனவே வேதாகமத்தை இஸ்ரவேலரின் வரலாறு என்று கூறலாம்.

வானமும் பூமியும் சிருஷ்டிக்கப்பட்ட வரலாறு, மனுஷன் வஞ்சிக்கப்படுதல், காயின் வரலாறு என்று ஆதாமின் வம்ச வரலாறு ஆதியாகமம் ஐந்தாம் அதிகாரம் வரை உள்ளது. தேவன் சகலத்தையும் ஆண்டுகொள்ளும்படி மனிதனை படைத்தார். ஆனால் சத்துருவினால் மனிதன் பாவம் செய்துவிட்டான். என்ன பாவம் செய்தான்? கீழ்ப்படியாமல் போய் விட்டான். என்ன தண்டனை? ஜீவனை இழந்தான். அப்போதும் கர்த்தர் மனிதனைக் கைவிடாமல், அவனை மீட்கும்படி புதிய மீட்பின் திட்டத்தோடு வந்தார். சாத்தான் தவறு செய்யும்போது மன்னிக்காத தேவன், மனிதன் தவறும் போது, அவனை மன்னித்து, அவனுக்கான மீட்பின் திட்டத்தைக் கொடுக்கிறார். ஆதியாகமம் 3:15 தான் வேதத்தின் அடிப்படை வசனம்.

உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை என்று தேவன் கூறியதால், சாத்தானுக்கு தெரியும், ஸ்திரீயின் வித்து தலையை நசுக்குவார். அதாவது, ஏதோ ஒரு பிள்ளை பிறந்து, தன்னைக் கொல்லும் என்பது தெரியும். காயீன் ஆபேலை பார்த்தவனுக்கு, அந்த வித்து ஆபேலிடம் தான் இருக்கிறது என்பது தெரிந்து விட்டது. ஆபேலை கொலை செய்து விட்டான். அதன் பின்னர், ஆதாமுக்கு அனேக பிள்ளைகள் பிறந்தார்கள். இந்த பரிசுத்த வித்து யாரிடம் இருக்கிறது என்பதை தேவன் மறைத்து விட்டார். அவனால் கண்டு பிடிக்க முடியவில்லை. அந்த பரிசுத்த வித்து யார்யாரிடம் பயணித்து வந்தது என்பதற்காகத்தான் ஆதியாகமம் 5ம் அதிகாரத்தில் ஆதாம் முதல் நோவா வரையுள்ள பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

சாத்தானுக்கும் இப்பொழுது குழப்பம் அதிகமாகி விட்டது. அந்த பரிசுத்த வித்து யாரிடம் இருக்கிறது என்பது தெரியாமல் இருந்தான். ஆனால், அந்த பரிசுத்த வித்தை குலைத்து போட சாத்தான் ஒரு திட்டம் தீட்டினான்.

இந்த வசனத்துக்கு இரண்டு வகையான விளக்கங்கள் கூறுகிறார்கள். பொதுவாக யூதர்களைப் பொருத்தவரை, ஒரு வசனத்துக்கு 12 வகையான விளக்கம் இருக்கும். அது அனைத்துமே சரியாகவும் இருக்கும். ஏனெனில் பரிசுத்த ஆவியானவரின் ஞானம் மனித மூளைக்கு அப்பாற்பட்டது.  அதேபோல இந்த வசனத்துக்கும் அனேக விளக்கங்கள் உண்டு. எனக்கு இதுவரை கிடைத்த விளக்கம் இரண்டு தான்.

முதல் விளக்கம்

முதலாவது விளக்கம், இங்கே தேவகுமாரர் என்பது ஏதேன் தோட்டத்தில் வாழும் ஆதாமின் மகன் மற்றும் பேரன்கள். மனுஷ குமாரத்திகள் என்பது, காயீனுடைய சந்ததி என்று கூறுகிறார்கள்.

தமிழில் மொழிபெயர்ப்பு பிழை தான் ஏதேன் என்னும் தோட்டம். உண்மையான மொழிபெயர்ப்பு, ஏதேன் என்னும் இடத்தில் ஒரு தோட்டத்தை உருவாக்கினார். முதலாவது கர்த்தர் பூமியில் தண்ணீரை தனியாக பிரித்து, தண்ணீர் தனியாகவும், வெட்டாந்தரை தனியாகவும் பிரித்தார். அதாவது பூமியில் இப்பொழுது இருப்பதைப் போல ஆங்காங்கே கடல் இருக்காது. ஒரே கண்டம், ஒரே கடல். அந்த வெட்டாந்தரையில், ஏதேன் என்னும் ஒரு இடம். அந்த ஏதேனில் கிழக்காக ஒரு ஏதேன் தோட்டம். ஒருவேளை இந்த ஏதேன் என்னும் இடத்தில் நாட்டு மிருகங்களும், ஏதேனுக்கு வெளியே காட்டு மிருகங்களும் இருந்திருக்கலாம். தேவன் ஆதாம் ஏவாளை, ஏதேன் தோட்டத்தில் வைத்தார். கீழ்ப்படியாமையில் வந்த போது, ஏதேன் தோட்டத்தை விட்டு துரத்தினார், ஆனால் ஏதேன் என்னும் இடத்தை விட்டு துரத்தவில்லை. எனவே ஆதாம் ஏவாள் ஏதேன் என்னும் தேசத்தில் வாழ்ந்தார்கள்.

இந்த ஏதேன் என்னும் இடத்தில் வாழும்போது தான், ஆபேலை காயீன் கொன்று விடுகிறான். கர்த்தர் காயீனை அந்த தேசத்திலிருந்து துரத்தி விடுகிறார்.

மேற்கண்ட படத்தின் மூலமாக இந்த காரியங்களை புரிந்து கொள்ள முடியும். காயீன் கர்த்தருடைய சந்நிதியை விட்டு நோத் என்னும் தேசத்தில் போய் குடியிருந்தான் என்பதின் மூலம், ஏதேன் என்னும் இடம், கர்த்தருடைய சந்நிதி என்று தெரிகிறது. ஏதேனை விட்டு வெளியே சென்றால் காட்டு மிருகங்கள் இருக்கும். அதனிடமிருந்து தப்பித்துக் கொள்ள, பட்டணம் கட்டுவது அவசியமாகி விட்டது. ஏதேனில் யாரும் பட்டணம் கட்டவில்லை, ஆனால் வெளியே சென்ற காயீன், நோத் தேசம், அதில் ஏனோக்கு பட்டணம் கட்டினார். உள்ளே ஏதேனில் இருப்பவர்கள் ஒரு lifestyle வாழும்போது, வெளியே வந்த இந்த கூட்டத்தார், பித்தளை, இரும்பு கண்டு பிடித்தனர். Music Instruments தயாரித்தனர். வெளியே சந்தோஷமாக வாழ ஆரம்பித்தனர்.

இந்த ஏதேனில் வாழ்பவர்கள், தேவகுமாரர்கள் என்றும், வெளியே சென்று பட்டணம் கட்டி வாழ்பவர்கள் மனுஷர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். ஏதேனுக்கு வெளியே இருந்த மனுஷ குமாரத்திகள் அழகாக இருந்ததால், ஏதேனுக்கு உள்ளே இருந்த தேவ குமாரர்கள் அவர்களை திருமணம் செய்தனர். பரிசுத்த வித்தை கெடுக்கும்படி வெளியே இருக்கிற மனுஷர்களிடம் சம்பந்தம் கலக்க வைத்தான் சாத்தான். இது ஒரு விளக்கம்.

இரண்டாவது விளக்கம்

Book of Enoch என்ற ஒரு புத்தகத்திலிருந்து இந்த விளக்கம் கூறப்படுகிறது. இந்த புத்தகத்தில், Demons and Nephilim எப்படி உருவானார்கள் என்று எழுதப்பட்டிருக்கும். நோவா காலத்தில் வெள்ளம் வர அவசியம் என்ன என்று எழுதப்பட்டிருக்கும். நம் தேவனுடைய 1000 வருட அரசாட்சி பற்றி எழுதப்பட்டிருக்கும். வேதத்தில் யூதா புத்தகத்தில் ஏனோக்கு புத்தகத்தின் வசனம் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார். ஆனாலும் இந்த புத்தகம் பலராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இதுதான் உண்மை என்று யார்மீதும் திணிக்க முடியாது. இப்படியும் இருக்கலாம் என்று வேத அறிஞர்கள் கருதுகிறார்கள் என்பதற்காகவே இப்பதிவு.

The Hebrew word Nephilim is sometimes translated as “giants”, and sometimes taken to mean “the fallen ones”. Nephilim என்பதற்கு இராட்சதர் என்று அர்த்தம். நாம் இப்பொழுது தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக செளந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள் என்கிற வசனத்தின் இரண்டாம் விளக்கத்தைப் படித்துக் கொண்டிருக்கிறோம்.   சம்யாசா என்கிற விழுந்து போன தூதன், தனக்கு கீழே 120 தூதர்களை சேர்த்துக்கொண்டு, பூமியை அசுத்தப்படுத்த வந்தனர். மகா உன்னதமானவருக்கு விரோதமாக பாவம் செய்யப் போகிறோம் என்பது தெரிந்தே, தங்களுக்குள் உடன்படிக்கை செய்து கொண்டு, பூமியை கறைப்படுத்த, பரிசுத்த வித்தை கெடுத்துப்போட வந்தனர். 120 பேரும் 120 பெண்களை மனைவியாக்கிக் கொண்டு, பரலோகத்தில் மறைந்திருக்கிற காரியங்களை மக்களுக்கு கற்றுக் கொடுத்தனர். அந்த பெண்களுக்கு பிறந்த பிள்ளைகள் இராட்சதர் ஆக பிறந்தனர். அதன்பின்னர் தேவதூதர்கள் மகாஉன்னதமானவரிடம், இதை எடுத்துக்கொண்டு போகும்போது, சம்யாசாவை ஒரு இடத்தில் அடைத்துப் போட்டு, இனி எப்போதும் அவன் வெளியே வருவது இல்லை என்ற தண்டனையை கொடுத்து, மற்ற அனைத்து தூதர்களுக்கும் 70 தலைமுறை கடந்த பின்னர் நியாயத்தீர்ப்பு என்று தண்டனை கொடுத்தார். அதன்பின்னர் தான் தேவ தூதர்கள், விழுந்து போன தூதர்களால், தேவ அனுமதி இல்லாமல் மனித உருவம் எடுக்க முடியாமல் போனது. இப்படி தூதர்கள் மனுஷ குமாரத்திகளிடம் இணைந்து பிள்ளை பெற்றதை தான் இவ்வசனம் கூறுகிறது என்றும் ஒரு விளக்கம் உள்ளது. இந்த இராட்சதரை கடைசியாக பூமியிலிருந்து அழித்தது தாவீது தான். கானான் தேசத்தை சுதந்தரிக்க போகும்போது, அவர்கள் பார்வைக்கு நாங்கள் வெட்டுக்கிளி போல இருந்தோம் என்று இஸ்ரவேலர் கூறியதன் காரணம், அவர்கள் இராட்சதராய் இருந்ததால் தான்.

பரிசுத்த வித்து மூலம் ஒரு பிள்ளை பிறந்து, சாத்தானை அழித்து போடும் என்பது தீர்க்கதரிசனம். ஆபேலைக் கொன்று போட்டதால், தேவன் வித்தை மறைத்து வைத்தார். எனவே பூமியிலுள்ள அத்தனை பேரையும் கெடுத்துப்போட சாத்தானின் திட்டம் மனுஷ குமாரத்திகளிடம் கலந்தது. ஆனாலும் ஒரு குடும்பத்தை தேவன் இராட்சதர்களோடு கலக்காமல் பாதுகாத்து வந்தார். வரும் பதிவுகளில் தொடர்ச்சியாகப் பார்க்கலாம்.

Book of Enoch – Source From http://www.goldwynsudhakar.com/blog/

 

Similar Posts

  • |

    Day 119 (29-04-2025)

    Scripture Portion: 1 Chronicles 7-10 1 நாளாகமம் 7 1இசக்காருடைய குமாரர், தோலா, பூவா, யசுப், சிம்ரோன் என்னும் நாலு பேர். 2தோலாவின் குமாரர், ஊசி, ரெப்பாயா, யெரியேல், யக்மாயி, இப்சாம், சாமுவேல் என்பவர்கள்; தோலாவுக்குப் பிறந்த இவர்கள் தங்கள் பிதாக்கள் வம்சத்தலைவரும் தங்கள் சந்ததிகளிலே பராக்கிரமசாலிகளுமாயிருந்தார்கள்; தாவீதின் நாட்களில் அவர்கள் தொகை இருபதினாயிரத்து அறுநூறு பேராயிருந்தது. 3ஊசியின் குமாரரில் ஒருவன் இஸ்ரகியா; இஸ்ரகியாவின் குமாரர், மிகாயேல், ஒபதியா, யோவேல், இஷியா என்பவர்கள்; இவர்கள் ஐந்துபேரும்…

  • |

    இஸ்ரேல்–32 (ஆங்கிலோ சாக்சன் சாம்ராஜ்யம்)

    உலக அளாவில் பெரிய சாம்ராஜ்யங்களாக இருந்த அசீரிய சாம்ராஜ்யம், பாபிலோன் சாம்ராஜ்யம், மேதிய பெர்சிய சாம்ராஜ்யம், கிரேக்க சாம்ராஜ்யம், ரோம சாம்ராஜ்யம் பற்றி பார்த்தோம் அல்லவா? அடுத்ததாக ஆறாவதாக வந்த சாம்ராஜ்யம் பற்றி பார்க்கலாம். ஆங்கிலோ சாக்சன் சாம்ராஜ்யம் ஆறாவதாக வந்த சாம்ராஜ்யம் ஆங்கிலேயர்கள். சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யம் என்று இங்கிலாந்தை தான் கூறுவார்கள். கிரேக்க சாம்ராஜ்யம் கூட அப்படி கிடையாது. ஆங்கிலேயர் ஆட்சியில் தான், அவர்கள் ஆட்சிக்குட்பட்ட ஏதாவது ஒரு நாட்டில், எப்போதும் பகல் இருந்து…

  • |

    விடுதலை – 3 திருமணத்துக்கு பிறகு ஆபாச படம்

    திருமணத்துக்கு பிறகு ஆபாச படம் இந்த deliverance பற்றி எழுத உள்ளத்தில் உந்தப்பட்ட எனக்கு, உண்மையில் எப்படி ஆரம்பிக்க வேண்டும்? எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்ற புரிதல் இல்லை. அந்த நேரத்தில், என் நண்பர் ஒருவரிடம் இருந்து எனக்கு whatsapp message வந்தது, “உன் ministryக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறேன்” என்று. அவரிடம் இதைப்பற்றி நான் பேசும்போது, அழகான ஒரு விளக்கம் கொடுத்தார். According to Bible, we can’t resist but we have to…

  • |

    Day 102 (12-04-2025)

    Scripture Portion: 1 Samuel 15-17 1 சாமுவேல் 15 1பின்பு சாமுவேல் சவுலை நோக்கி: இஸ்ரவேலராகிய தம்முடைய ஜனங்கள்மேல் உம்மை ராஜாவாக அபிஷேகம்பண்ணுகிறதற்குக் கர்த்தர் என்னை அனுப்பினாரே; இப்போதும் கர்த்தருடைய வார்த்தைகளின் சத்தத்தைக் கேளும்: 2சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வந்தபோது, அமலேக்கு அவர்களுக்கு வழிமறித்த செய்கையை மனதிலே வைத்திருக்கிறேன். 3இப்போதும் நீ போய், அமலேக்கை மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரித்து அவன்மேல் இரக்கம் வைக்காமல், புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்று போடக்கடவாய்…

  • |

    Day 352 (18-12-2025)

    Scripture Portion: 1 Timothy 1-6 1 தீமோத்தேயு 1 1நம்முடைய இரட்சகராயிருக்கிற தேவனும், நம்முடைய நம்பிக்கையாயிருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் கட்டளையிட்டபடியே, இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாயிருக்கிற பவுல், 2விசுவாசத்தில் உத்தம குமாரனாகிய தீமோத்தேயுவுக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினாலும் கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக. 3வேற்றுமையான உபதேசங்களைப் போதியாதபடிக்கும், விசுவாசத்தினால் விளங்கும் தெய்வீக பக்திவிருத்திக்கு ஏதுவாயிராமல், தர்க்கங்களுக்கு ஏதுவாயிருக்கிற கட்டுக்கதைகளையும் முடிவில்லாத வம்சவரலாறுகளையும் கவனியாதபடிக்கும், நீ சிலருக்குக் கட்டளையிடும்பொருட்டாக, 4நான் மக்கெதோனியாவுக்குப் போகும்போது, உன்னை எபேசு பட்டணத்திலிருக்க வேண்டிக்கொண்டபடியே…

  • இஸ்ரேல்-12 (யோசுவா)

    யோசுவா ஆதாமிலிருந்து, மோசேயின் மனைவி வரை நாம் கடந்த பதிவுகளில் பார்த்தோம். மோசே தவறு செய்தபோதும், மோசேயின் கீழ் அடங்கி இருந்தவர் யோசுவா. இன்னொரு சிறப்பான குணாதிசயம் என்னவென்றால், இந்த யோசுவா, கர்த்தருடைய சமுகத்தை விட்டு பிரியாதிருந்தவர். அதனால் தான் மோசேயின் பிள்ளைகளைத் தேவன் தெரிந்து கொள்ளாமல், யோசுவாவைத் தெரிந்து கொண்டார் கர்த்தர். 11 ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார்; பின்பு, அவன் பாளயத்துக்குத் திரும்பினான்; நூனின் குமாரனாகிய யோசுவா என்னும்…

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *