இஸ்ரேல் – 5 (இஸ்ரேல் தேசிய கீதம்)

இஸ்ரேல் – 5

இஸ்ரேல் தேசிய கீதம்

யார் இந்த யூதர்கள்?

பூமியில் யூதர்கள் கஷ்டப்பட்ட அளவு, வேறு எந்த இனமும் கஷ்டப்பட்டது கிடையாது. அதேபோல யூதர்கள் வெறுக்கப்பட்ட அளவு, வேறு எந்த இனமும் வெறுக்கப்பட்டதும் இல்லை. யூதர்களை அதிகம் வருத்தியப்படுத்தியது முஸ்லிம்களோ, அரபியர்களோ கிடையாது. வரலாற்றை நன்றாக படித்துப் பார்த்தால், யூதர்களை கொடுமைப்படுத்தியது கிறிஸ்தவர்கள் தான் என்பதை அறியலாம். இயேசு ஒரு யூதர். இயேசுவைக் கொன்றவர்கள் யூதர்கள். இயேசுவின் சீஷரை விரட்டி விரட்டி கொன்றவர்கள் யூதர்கள். இந்த எண்ணமே கிறிஸ்தவர்கள், யூதர்களை கொலை செய்வதற்கு காரணமாக இருந்தது. யூதர்கள் இலுமினாட்டிகள் என்றும், அவர்கள் இந்த உலகை ஆள்வதற்காக, உலக மக்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள் என்றும், பல கருத்துக்கள் தற்போது நிலவுகின்றன. பாலஸ்தீனியத்தில் அடிக்கடி குண்டு மழை பொழிந்து, அதிகம் பேரை காவு வாங்கிக் கொண்டிருப்பவர்களும் யூதர்கள் தான்.

யூதர்கள் இத்தனை மூர்க்கமாக இருப்பதற்கும், இரக்கமற்று செயல்படுவதற்கும், சுயநலவாதிகளாக வலம் வருவதற்கும், வரலாறு முழுவதும் அவர்கள் அடைந்த துயரமே காரணம். இன்னொருமுறை அகதிகளாக அலைந்து திரிய அவர்கள் தயாராக இல்லை. பல நூற்றாண்டு காத்திருப்புக்குப் பின், தன் கைக்கு கிடைத்த தேசத்தை விட்டுக் கொடுப்பதற்கு அவர்கள் தயாராக இல்லை. முஸ்லிம்கள், அரபியர்கள், கிறிஸ்தவர்கள் என யாரையுமே நம்பிக்கைகுரியவராக பார்ப்பதற்கு யூதர்கள் தயாராக இல்லை. தம்மையும் தம் தேசத்தையும் காப்பாற்றிக் கொள்வதற்காக, எந்த எல்லைக்கும் போக யூதர்கள் தயாராக இருக்கிறார்கள். இரக்கமற்று எத்தனை பேரை கொலை செய்யவும், அவர்கள் தயாராக இருக்கிறார்கள். எத்தனை லட்சம் உயிர்களை பலியிடவும் தயாராக இருக்கிறார்கள். இதற்கு காரணம் 2000 ஆண்டுகள் அவர்கள் பெற்றிருந்த, நீண்ட கொடிய அனுபவங்கள்.

இஸ்ரேல் தேசிய கீதம்

இஸ்ரேலின் தேசிய கீதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை வாசிக்கும் போது அவ்வளவு ஆச்சரியம். கிபி 73ல், இஸ்ரேல் முற்றிலுமாக இல்லாமல் போனது. அதன்பின் 1948ல் தான் அவர்கள் தேசம் அவர்களுக்கு திரும்பக் கிடைத்தது. கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளாக தங்களுக்கு என்று தேசமே இல்லாத ஜனங்கள். பல நாடுகளில் அகதிகளாக வாழ்ந்த மக்கள். ஆனால் அவர்களது வெறி, இஸ்ரேல் என்று தேசியகீதம் மூலம் அறியலாம்.இந்தக் கீதம் எழுதப்பட்ட ஆண்டு கிபி1878. Naftali Herz Imber, 1878ல் எழுதி இருக்கிறார். அப்போது அவர்களுக்கென்று ஒரு தேசம் கூட கிடையாது. யூதர்கள் தங்கள் குழந்தைகளை தங்கள் தேவனுக்காக எப்படி வளர்த்து இருக்கிறார்கள் என்பதை இது காட்டுகிறது. அமைதியாக அந்த தேசிய கீதத்தை ஒருமுறை படித்துப் பாருங்கள். அவர்களின் ஏக்கம் புரியும். எந்த தேசத்தில் இருந்தாலும் எங்கள் கண்கள் சீயோனை நோக்கியே இருக்கும் என்று பாடுவது, அவர்கள் வலியைக் காட்டுகிறது.

இந்தப் பாடலை வாசித்தாலே தெரிகிறது அல்லவா! எவ்வளவு துயரம் பட்டிருக்கிறார்கள் என்று. வேறு நாடுகளில் அகதிகளாக வாழ்ந்தாலும், கண்கள் எப்போதும் கிழக்கே சீயோனை நோக்கியே இருந்தது அவர்களுக்கு. (தானியேல் பாபிலோனில் சிறைப்பட்டு இருக்கும் போது, மூன்று வேளையும் எருசலேமுக்கு நேராக திரும்பி ஜெபித்தார்.) நம் நாட்டில் இருந்து அமெரிக்கா போனால், அங்கேயே செட்டில் ஆகிறதற்கு என்ன வழி என்று தான் யோசிக்கிறார்கள். மீண்டும் இந்தியா வருவதைப் பற்றி யாரும் எண்ணிப் பார்ப்பதே இல்லை. ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளாக தங்கள் நாட்டுக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள் என்றால் எவ்வளவு தேசவெறி அல்லவா! அவர்கள் பிற நாடுகளில் எவ்வளவு கஷ்டத்தை அனுபவித்து இருக்கிறார்கள் என்பதை இனி வரும் பதிவுகளில் காணலாம்.

Similar Posts

  • |

    Day 168 (17-06-2025)

    Scripture Portion: Proverb 25-26 நீதிமொழிகள் 25 1யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் மனுஷர் பேர்த்தெழுதின சாலொமோனுடைய நீதிமொழிகள்: 2காரியத்தை மறைப்பது தேவனுக்கு மேன்மை; காரியத்தை ஆராய்வதோ ராஜாக்களுக்கு மேன்மை. 3வானத்தின் உயரமும், பூமியின் ஆழமும், ராஜாக்களின் இருதயங்களும் ஆராய்ந்துமுடியாது. 4வெள்ளியினின்று களிம்பை நீக்கிவிடு, அப்பொழுது தட்டானால் நல்ல உடைமை பிறக்கும். 5ராஜாவின் முன்னின்று துஷ்டரை நீக்கிவிடு, அப்பொழுது அவனுடைய சிங்காசனம் நீதியினால் நிலைநிற்கும். 6ராஜாவின் சமுகத்தில் மேன்மைபாராட்டாதே; பெரியோர்களுடைய ஸ்தானத்தில் நில்லாதே. 7உன் கண்கள் கண்ட பிரபுவின்…

  • |

    Day 228 (16-08-2025)

    Scripture Portion: Jeremiah 32-34 எரேமியா 32 1நேபுகாத்நேச்சாரின் பதினெட்டாம் வருஷத்துக்குச் சரியான யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா அரசாண்ட பத்தாம் வருஷத்தில், கர்த்தரால் எரேமியாவுக்கு உண்டான வார்த்தை: 2அப்பொழுது பாபிலோன் ராஜாவின் சேனை எருசலேமை முற்றிக்கை போட்டிருந்தது; ஏரேமியா தீர்க்கதரிசியோ, யூதா ராஜாவின் அரமனையிலுள்ள காவற்சாலையின் முற்றத்திலே அடைக்கப்பட்டிருந்தான். 3ஏனென்றால், இதோ, இந்த நகரத்தைப் பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கிறேன்; அவன் இதைப் பிடிப்பான் என்று கர்த்தர் சொல்லுகிறாரென்றும், 4யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா கல்தேயருடைய கைக்குத் தப்பிப்போகாமல் பாபிலோன் ராஜாவின் கையில் நிச்சயமாக…

  • |

    பண்டிகைகள்-1 (Rosh Hashannah)

    இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள். இந்த தளம் ஆரம்பித்து இதுதான் என் முதல் பதிவு. இந்தக் கிருபையைக் கொடுத்த ஆண்டவருக்கு நன்றி. இன்று ஒரு விசேஷித்த நாள். இன்றைக்கு இஸ்ரேலில் New year (Rosh Hashanna) கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள்.  நேற்று (15-09-2023) எபிரேய காலண்டரில் தேதி  29-Elul-5783. இன்று (16-09-2023) எபிரேய காலண்டரில் 1-Tishri-5784. அதாவது 5783ம் வருடத்திலிருந்து, 5784ம் வருடம் பிறந்திருக்கிறது. புதுவருட கொண்டாட்டம் அங்கே நடந்து கொண்டிருக்கிறது. நமக்கு ஜனவரி 1ம்…

  • |

    Day 98 (08-04-2025)

    Scripture Portion: 1 Samuel 1-3 1 சாமுவேல் 1 1எப்பிராயீம் மலைதேசத்திலிருக்கிற சோப்பீம் என்னப்பட்ட ராமதாயீம் ஊரானாகிய ஒரு மனுஷன் இருந்தான்; அவனுக்கு எல்க்கானா என்று பேர்; அவன் எப்பிராயீமியனாகிய சூப்புக்குப் பிறந்த தோகுவின் குமாரனாகிய எலிகூவின் மகனான எரோகாமின் புத்திரன். 2அவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள்; ஒருத்தி பேர் அன்னாள், மற்றவள் பேர் பெனின்னாள்; பெனின்னாளுக்குப் பிள்ளைகள் இருந்தார்கள்; அன்னாளுக்கோ பிள்ளை இல்லை. 3அந்த மனுஷன் சீலோவிலே சேனைகளின் கர்த்தரைப் பணிந்துகொள்ளவும் அவருக்குப் பலியிடவும் வருஷந்தோறும் தன்…

  • |

    Day 145 (25-05-2025)

    Scripture Portion: 1 Chronicles 23-25 1 நாளாகமம் 23 1தாவீது கிழவனும் பூரண வயதுள்ளவனுமானபோது, தன் குமாரனாகிய சாலொமோனை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக்கினான். 2இஸ்ரவேலின் எல்லாப் பிரபுக்களையும், ஆசாரியரையும், லேவியரையும் கூடிவரும்படி செய்தான். 3அப்பொழுது முப்பது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட லேவியர் பேர்பேராக எண்ணப்பட்டார்கள்; தலைதலையாக எண்ணப்பட்ட அவர்களுடைய இலக்கம் முப்பத்தெண்ணாயிரம். 4அவர்களில் இருபத்துநாலாயிரம்பேர் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை விசாரிக்கிறவர்களும், ஆறாயிரம்பேர் தலைவரும் மணியக்காரருமாயிருக்கவேண்டும் என்றும், 5நாலாயிரம்பேர் வாசல் காக்கிறவர்களாயிருக்கவேண்டும் என்றும், துதி செய்கிறதற்குத் தான் பண்ணுவித்த கீதவாத்தியங்களால் நாலாயிரம்பேர் கர்த்தரைத் துதிக்கிறவர்களாயிருக்கவேண்டும்…

  • |

    இஸ்ரேல்-26 (சாலொமோன்)

    சாலொமோன் தாவீதுக்குப் பிறகு சாலமோன் இஸ்ரவேல் தேசத்தை அரசாளுகிறார். சாலமோன் ராஜாவாகும்போது ஆவிக்குரிய வாழ்க்கையில் நன்றாகத்தான் இருந்தார். தேவன் அவனிடம், உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டபோது, ஞானத்தைக் கேட்டவர் சாலமோன். நன்கு வேதத்தை படித்தவர்களிடம், “தேவனைப் பற்றி உங்களது கற்பனை வாழ்வு எது?” என்று கேட்டால், தாவீதைப்போல் ஆண்டவரிடம் உறவு கொள்வது எங்கள் கற்பனை வாழ்வு என்று கூறுவார்கள். அந்த தாவீதின் மகன்தான் சாலமோன். நமக்கு ஒரு தரிசனம் கிடைப்பதே அரிது. ஆனால் சாலமோனிடம் தேவனே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *