பொருளாதாரத்துக்கான விசுவாச அறிக்கை

ஏதோ பாரம்பரியமாக விசுவாச அறிக்கைகளைச் சொன்னால், நிச்சயமாக எந்த பலனும் கிடையாது. நாம் தேவனுடைய பிள்ளை என்கிற அதிகாரத்தை உணர்ந்து, விசுவாசத்தோடு கூறி, அதன் பலனைப் பெற்றுக் கொள்வோம்.

வசன அறிக்கைகள்

  1. பரிசுத்தமுள்ள என் தேவன் எனக்கு கொடுத்த அதிகாரத்தினால், மற்றும் இயேசுவின் நாமத்தினால் நான் அறிக்கையிடுகிறேன். என் கடன்கள் யாவும் கட்டி தீர்ந்தது. எனக்கான பொருளாதார ஆசீர்வாதத்தை நான் கட்டவிழ்க்கிறேன். பரலோகத்திலும் அவை கட்டவிழ்க்கப்படுவதாக. தேவன் எனக்கு கொடுத்த அதிகாரத்தினாலே, என் பொருளாதாரத்துக்கு எதிராக செயல்படும் எல்லா வல்லமையையும் கட்டுகிறேன்.இயேசுவின் நாமத்தினாலே கட்டுகிறேன்.

மத்தேயு 18-18 பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டுவீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும்; பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டவிழ்ப்பீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

  1. கர்த்தர் எனக்கு கொடுத்த வேலைக்காக நன்றி. என் சம்பளத்துக்காக நன்றி. இயேசுவின் நாமத்தில் அறிக்கையிடுகிறேன். என் சம்பளம் பெருகுகிறது. அது பல மடங்காக பெருகுகிறது. என் சம்பளத்தின் முதற்பலனைக் கர்த்தருக்கு கொடுத்து, அவரைக் கனம் பண்ணுகிறேன். என் களஞ்சியம் நிரம்பி வழியும்.

நீதிமொழிகள் 3:9. உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு.
10. அப்பொழுது உன் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பும்; உன் ஆலைகளில் திராட்சரசம் புரண்டோடும்.

  1. சகல பரிபூரணம் அவருக்குள் இருக்கிறது. நான் அவருக்குள் இருக்கிறேன். எனவே சகல பரிபூரணமும் எனக்குள் இருக்கிறது. நான் ஆசிர்வதிக்கப்பட்டவன்.

கொலொசேயர் 1 -19 19. சகல பரிபூரணமும் அவருக்குள்ளே வாசமாயிருக்கவும்,

  1. என் சுய முயற்ச்சியினால் சம்பாதித்தேன் என்று சொல்ல மாட்டேன். கர்த்தரே எனக்கு சம்பாதிக்க ஏற்ற பலத்தை தருகிறவர். எனக்கு வேலையைத் தந்தவர் அவர். வேலை செய்வதற்கான பலன் தந்தவர் அவர். சம்பளம் தந்தவர் அவர். இன்னும் பல மடங்கு சம்பளத்தை உயர்த்தி தரப் போகிறவரும் அவரே.

உபாகமம் 8: 17. என் சாமர்த்தியமும் என் கைப்பெலனும் இந்த ஐசுவரியத்தை எனக்குச் சம்பாதித்தது என்று நீ உன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளாமலும் இருக்க எச்சரிக்கையாயிருந்து,
18. உன் தேவனாகிய கர்த்தரை நினைப்பாயாக; அவரே உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தம்முடைய உடன்படிக்கையை உறுதிப்படுத்தும்படி, இந்நாளில் உனக்கு உண்டாயிருக்கிறதுபோல, ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்குக் கொடுக்கிறவர்.

  1. நான் கர்த்தரால் ஆசிர்வதிக்கப்பட்டவன். நான் மற்றவர்களுக்கு இரங்குவேன். நான் பூமியை சுதந்தரித்துக் கொள்வேன்.

சங்கீதம் 37 21. துன்மார்க்கன் கடன்வாங்கிச் செலுத்தாமற்போகிறான்; நீதிமானோ இரங்கிக்கொடுக்கிறான்.
22. அவரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்; அவரால் சபிக்கப்பட்டவர்களோ அறுப்புண்டுபோவார்கள்.

  1. நான் கர்த்தரின் சத்தத்துக்கு செவிகொடுக்கிறவன். எனவே நான் பட்டணத்திலும் ஆசிர்வதிக்கப்பட்டு இருப்பேன், வெளியிலும் ஆசிர்வதிக்கப்பட்டு இருப்பேன். என் எல்லா வேலையிலும் கர்த்தர் என்னை ஆசீர்வதிப்பார். நான் அநேகம் பேருக்கு கடன் கொடுப்பேன், நானோ கடன் வாங்க மாட்டேன்.

உபாகமம் 28- 2. நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்குச் செவிகொடுக்கும்போது, இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்குப் பலிக்கும்.
3. நீ பட்டணத்திலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்; வெளியிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்.

  1. கர்த்தர்உன் களஞ்சியங்களிலும், நீ கையிடும் எல்லா வேலையிலும் உனக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார்; உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்திலே உன்னை ஆசீர்வதிப்பார்.
  2. ஏற்றகாலத்தில் உன் தேசத்திலே மழை பெய்யவும், நீ கையிட்டுச்செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும், கர்த்தர்உனக்குத் தமது நல்ல பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறப்பார்; நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன்கொடுப்பாய், நீயோ கடன் வாங்காதிருப்பாய

7. கர்த்தர் எனக்கு கொடுத்த ஆசீர்வாதத்திலிருந்து, தேவனுடைய ராஜ்யத்தைக் கட்டுவேன். மிஷனெரிகளுக்கு, ஊழியர்களுக்கு என் காணிக்கைகளை விதைப்பேன். அதற்கான பலனை நான் பெற்றுக் கொள்வேன்.

லூக்கா 6 : 38. கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும் என்றார்.

  1. என்னை ஆசீர்வதித்தவர் கர்த்தர். அவரின் ஆசீர்வாதம் ஐசுவரியத்தை தந்ததால், பிசாசுக்கு என் மீது எந்த அதிகாரமும் கிடையாது. எனக்கு எந்த வேதனையையும் தர பிசாசால் முடியாது.

 நீதிமொழிகள் 10 : 22. கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்.

  1. நான் தேவனுடைய ராஜ்யத்தின் பணிகளுக்கு, உற்சாகமாய் கொடுக்கிறேன். எனவே தேவன் என்மேல் பிரியமாயிருக்கிறார். எனக்கு கிருபை செய்கிற தேவனாயிருக்கிறார். விதைக்கிறவனுக்கு விதையையும் புசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும் கொடுக்கிற என் தேவன், என்னை பெருகப் பண்ணுவார்.

2 கொரிந்தியர் 9 : 7. அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.
8. மேலும், நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார்.

விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறதற்கு ஆகாரத்தையும் அளிக்கிறவர் உங்களுக்கு விதையை அளித்து, அதைப் பெருகப்பண்ணி, உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச்செய்வார்.

  1. கர்த்தர் கொடுத்த வேல்லைக்காக, கர்த்தர் கொடுத்த சம்பளத்துக்க்காக, நான் அவரிடத்தில் மகிழ்ச்சியாயிருக்கிறேன். என் எல்ல வேண்டுதலையையும் அவர் அருளிச் செய்வார். என் வாழ்க்கை உயரப் போகிறது. அது பெருகப் போகிறது.

சங்கீதம் 37: 4. கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.

  1. நான் தேவன் கொடுத்த ஆசீர்வாதத்தில் தசம பாகம் அவருக்கு கொடுத்து விடுவதால், அவர் என்னை இடம் கொள்ளாமல் போகுமட்டும் ஆசீர்வதிப்பார். நான் வலது புறத்தில் இடம் கொண்டு பெருகுவேன், இடது புறத்தில் இடம் கொண்டு பெருகுவேன், முற்புறத்தில் இடம் கொண்டு பெருகுவேன், பிற்புறத்தில் இடம் கொண்டு பெருகுவேன்.

மல்கியா 3 : 10. என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

  1. எனக்கு விரோதமாக சத்துரு தீட்டியிருக்கிற எல்லா திட்டமும் இயேசுவின் நாமத்தில் ஒன்றுமில்லாமற் போகிறது. என் வாழ்வில் சத்துரு வைத்திருக்கிற எல்லா குழப்பமும், இப்பொழுது இயேசுவின் நாமத்தில் சரியாகிறது.

ஏசாயா 54 :17. உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்; இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்தரமும் என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று கர்த்தர் சொல்லுகிறார்.

  1. என் தேவன் மிகவும் ஐசுவரியமுள்ளவர். என் குறைவையெல்லாம் அவர் மகிமையில் நிறைவாக்குவார். என்னை நிறைவாக்க வல்லவர் அவர் ஒருவரே.

பிலிப்பியர் 4: 19. என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்.

  1. நான் ஆபிரகாமின் சந்ததி. ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள் எனக்கும் உண்டு. ஆபிரகாம் விசுவாசத்தினாலே பெற்ற ஆசீர்வாதங்களை, நானும் விசுவாசத்தினாலே பெற்றுக்கொள்வேன்.

கலாத்தியர் 3 :13. மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்.
14. ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் புறஜாதிகளுக்கு வரும்படியாகவும், ஆவியைக்குறித்துச் சொல்லப்பட்ட வாக்குத்தத்தத்தை நாம் விசுவாசத்தினாலே பெறும்படியாகவும் இப்படியாயிற்று.

  1. எனக்கு தேவையான காரியங்களை எனக்கு போதித்து என்னை நடத்துகிற என் தேவன் அவரே. நான் பொருளாதார ஆசிர்வாதங்களை பெற்றுக் கொள்ள அவர் என்னை வழி நடத்துவார்.

ஏசாயா 48 : 17. இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான கர்த்தர் சொல்லுகிறதாவது: பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே.

  1. என்னை ஐசுவரியம் அடையச் செய்கிறவரும், என்னை உயர்த்துகிறவருமாயிருக்கிற என் தேவன், என்னை மேன்மைபடுத்துவார்.

கர்த்தர்தரித்திரம் அடையச்செய்கிறவரும், ஐசுவரியம் அடையப் பண்ணுகிறவருமாயிருக்கிறார்; அவர் தாழ்த்துகிறவரும், உயர்த்துகிறவருமானவர்.

1 சாமுவேல் 2 – 7

  1. நான் எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருப்பது தேவனுடைய சித்தம். நான் என் கடன், தரித்திரம் எல்லாம் நீங்கி சுகமாயிருப்பேன்.

பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்.

3 யோவான் 1 -2

  1. நான் பிசினித்தனம் இல்லாமல் ஏழைகளுக்குக் கொடுத்ததை கர்த்தர் அறிந்திருக்கிறார். எனவே என்னை மிகவும் ஆசீர்வதிப்பார்.

ஏழைக்கு இரங்குகிறவன்கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்.

நீதிமொழிகள் 19-17

விசுவாச அறிக்கைகள்

  1. நான் நல்ல ஆரோக்கியமாக இருப்பதற்காக உமக்கு நன்றி சொல்கிறேன். நீர் என்னை செழிப்பாக வைத்திருப்பதற்காக நன்றி.
  2. பொருளாதார விடுதலை வருவதாக. எங்க பொருளாதாரத்தில் இருந்த உண்மையில்லாதவைகள், தேவையற்ற ஆடம்பரம், எல்லாவற்றிலிருந்தும் விடுதலை தருவீராக. எங்களுடைய தசமபாகத்தில் உண்மை இல்லாமல் இருந்த எங்கள் குற்றங்களை மன்னிப்பீராக. உம்முடைய ரத்தத்தால் கழுவுங்க. எங்க பொறுத்தனையில் உண்மை இல்லாததை மன்னியுங்கள்.
  3. இன்றைக்கு எனக்கு தேவையான பணத்தை நீர் சந்திப்பதற்காக நன்றி. என் தேவைகள் சந்திக்கப்படுகின்றன. இயேசுவின் நாமத்தில் என் பொருளாதாரத்தில் ஒரு முன்னேற்றம் வருகிறது.
  4. என் சம்பள உயர்வு, போனஸ், உயர்வுகள், எனக்கு வரவேண்டிய பணம், எல்லாம் திரும்ப வருகிறது. எதிர்பாராத உதவிகள் இயேசுவின் நாமத்தில் என்னைத் தேடி வருகிறது. ஏமாந்த பணம், தொலைத்த பணம் எல்லாம் என்னைத் தேடி வருகிறது. சூப்பர்நேச்சுரல் காரியங்கள் என்னைத் தேடி வருகிறது.
  5. பரலோகத்தின் ஜன்னல்கள் என் மீது, என் குடும்பத்தின் மீது, என் தொழிலின் மீது திறக்கப்படுகிறது. கர்த்தர் என் மேய்ப்பராக இருப்பதால், யார் முன்பாகவும் நான் வெட்கப்பட்டு போக மாட்டேன்.
  6. தெய்வீக திட்டங்கள் எனக்கு வெளிப்படுவதாக. நான் ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்கிறேன் இயேசுவின் நாமத்தில்.
  7. நான் இயேசுவுக்குள் என்னை கடனில்லாதவனாக அறிவிக்கிறேன். என் வாகன கடன்கள், வீட்டு லோன்கள் எல்லாம் அடைக்கப்பட்டு தீர்ந்தது.
  8. என் வேலை என் நம்பிக்கை அல்ல. என் கிரெடிட் கார்டு என் நம்பிக்கை அல்ல. யெகோவாயீரே ஆக இருக்கும் என் தேவன் என் தேவைகள் எல்லாம் சந்திப்பவராக, என் நம்பிக்கையாக இருக்கிறார்.
  9. என் பொருளாதார சூழ்நிலையைப் பார்த்து நான் பயப்பட மாட்டேன். ஐசுவரியசம்பன்னராகிய இயேசு, என் நிலையை மாற்றுபவர்.
  10. நீ அநேகம் ஜாதிகளுக்கு கடன் கொடுப்பாய். நீயோ கடன் வாங்காதிருப்பாய் என்று வாக்குத்தத்தம் கொடுத்து இருக்கிறீங்க. இயேசுவின் நாமத்தில், உம்முடைய சந்நிதியில் வருகிறோம். இழப்பின் ஆவியே, தேவையற்ற செலவை கொண்டு வரும் ஆவியே, உன்னுடைய கையை எங்கள் வீட்டின் மீது இருந்து எடு. எங்கள் பொருளாதாரம் ஆசீர்வதிக்கப்படட்டும். புதிய பொருளாதார வாய்ப்புகள் உண்டாகட்டும்.
  11. எங்களுடைய எல்லா loanம் மறையட்டும் இயேசுவின் நாமத்தில். கடனின் ஆவிகளுக்கு விரோதமாக வருகிறோம். எங்கள் வாழ்வில் வந்த எல்லா கடன்களும், இயேசுவின் நாமத்தில் முடிந்து போகட்டும். கடனின் ஆவியே, உன் கடனை எடுத்துக் கொண்டு எங்கள் வீட்டை விட்டு போ. செழிப்பின் ஆவியானவர் கடந்து வருவீராக.
  12. சீர்கெட்டு போன என் பொருளாதாரம் திரும்ப கட்டப்படுவதாக. பொருளாதார செழிப்பின் அபிஷேகம் என் குடும்பத்தின் மீது ஊற்றப்படட்டும். அபிஷேகம் கட்டவிழ்க்கப்படட்டும். வசனம் சொல்கிறபடி, நான் தரித்திரன் அல்ல. நான் ஐஸ்வர்யவான். கர்த்தருடைய ராஜ்யத்தை கட்டி எழுப்புகிற ஐஸ்வர்யவான். நான் கடன் வாங்குபவன் அல்ல. கடன் கொடுப்பவன்.
  13. எங்கள் குடும்பத்தில் சந்தோஷத்தை, சமாதானத்தை திருடுகிற சத்துருவே, எங்கள் எல்லைகளை விட்டு வெளியே போ. குடும்பத்திலே, இல்லாமையும் தரித்திரத்தையும் கொண்டு வருகிற பிசாசே, உன் கரத்தை எடு இயேசுவின் நாமத்தில். நன்மைகளை ஆசீர்வாதங்களை ஒடுக்குகிற பிசாசின் ஆவிகள் இயேசுவின் நாமத்தில் அழியட்டும். எனை ஒடுக்குகிற ஆவியே, இயேசுவின் பலத்த புயம் உன்னை ஒடுக்குவதாக. என்னை ஒடுக்க பிசாசுக்கு அதிகாரம் இல்லை. என் பெயரில் தேவன் கொடுத்திருக்கிற அதிகாரங்கள், திட்டங்களை, எந்த பிசாசின் ஆவிகளும் கெடுக்க முடியாது.
  14. எனக்கு கனம் உண்டாகிற நாட்கள் இது. எனக்கு உயர்வு உண்டாகிற நாட்கள் இது. தெய்வத்திட்டங்கள் நிறைவேறுகிற நாட்கள் இது. ஆண்டவர் எனக்கு சொன்ன வாக்குத்தத்தங்கள் நிறைவேறும்படிக்கு கிரியை செய்கிற நாட்கள் இது. பொருளாதாரத்தில் முடங்கி கிடக்கிறது எல்லாம் திரும்ப எழும்புகிறது இயேசுவின் நாமத்தில். என் மேல் கர்த்தருடைய வெளிச்சம் உதித்ததால், நான் எழும்பி பிரகாசிப்பேன்.
  15. ஆசிர்வாதம் தடை செய்யப்பட்ட நிலை. எல்லாம் கைகூடி வருவது போல் இருக்கும். ஆனால் எதுவும் நடக்காது. அப்படிப்பட்ட தடைகள் உடைவதாக, இயேசுவே நாமத்தில். எனக்கென்று நியமிக்கப்பட்ட ஒவ்வொரு ஆசீர்வாதத்தையும் நான் சுதந்தரிக்க போகிறேன்.
  16. யோபு 1:10 யோபுவுக்கு வேலி அடைத்தது போல, எங்களுக்கும் வேலி அடைப்பீராக. பிசாசே, உனக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன். எங்களை சுற்றி வேலி அடைக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு எதிராக மந்திரவாதமும் இல்லை. குறி சொல்லுதலும் இல்லை. எங்களுக்கு எதிராக எழும்பும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போம். எங்களை சுற்றி தேவ அக்கினி உள்ளது. நாங்கள் முத்திரை போடப்பட்டிருக்கிறோம். இயேசுவின் நாமத்தில் முத்திரை போடப்பட்டிருக்கிறோம்.
  17. ஏசாயா 43: 18,19ன் படி, முந்தினவைகளை நினைக்க மாட்டேன். பூர்வமானவைகளை சிந்திக்க மாட்டேன். இதோ என் கர்த்தர், புதிய காரியத்தைச் செய்கிறார். இப்பொழுதே அது தோன்றுகிறது.
  18. அவர், கிறிஸ்துவுக்குள், ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் என்னை ஆசீர்வதித்திருக்கிறார். என்னை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்கு பிரியம். எனக்கு விரோதமான மந்திரவாதமும் இல்லை. எனக்கு விரோதமான குறி சொல்லுதலும் இல்லை.
  19. என்னுடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே, எனக்கு ஜெயம் கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.
  20. கர்த்தர் சீயோனிலிருந்து என்னை ஆசீர்வதிப்பார். நான் ஜீவனுள்ள நாளெல்லாம் என் பிள்ளைகளின் வாழ்வைக் காண்பேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *