இஸ்ரேல்-12 (யோசுவா)

யோசுவா

ஆதாமிலிருந்து, மோசேயின் மனைவி வரை நாம் கடந்த பதிவுகளில் பார்த்தோம். மோசே தவறு செய்தபோதும், மோசேயின் கீழ் அடங்கி இருந்தவர் யோசுவா. இன்னொரு சிறப்பான குணாதிசயம் என்னவென்றால், இந்த யோசுவா, கர்த்தருடைய சமுகத்தை விட்டு பிரியாதிருந்தவர். அதனால் தான் மோசேயின் பிள்ளைகளைத் தேவன் தெரிந்து கொள்ளாமல், யோசுவாவைத் தெரிந்து கொண்டார் கர்த்தர்.

யோசுவா என்றாலே சிறுவயதிலிருந்தே நமக்கு கற்றுக் கொடுத்திருப்பது எரிகோ மதில்தான். யோசுவா எரிகோ பட்டணத்தைப் பிடித்தார் அல்லவா!. எரிகோ மதில் எப்படி இருந்தது தெரியுமா? எரிகோவை சுற்றிலும், இரண்டு சுவர்கள் இருந்தன. அந்தக் காலத்தில், விமானங்கள் எல்லாம் இல்லாததால், வான்வெளி தாக்குதல்கள் கிடையாது. எனவே, உயரமான சுற்று சுவர் கட்டினால் போதும், அந்த பட்டணம் பாதுகாப்பாக இருக்கும். அப்படித்தான் எரிகோ பட்டணமும், அங்கே இரண்டு பெரிய மதில் சுவர்கள் பட்டணத்தை சுற்றிலும் இருந்தது. வெளிப்புற சுவர்(மதில்) 12 முதல் 15 அடி அகலமானது, உட்புற சுவர் 6 அடி அகலமானது. இரண்டு சுவர்களுக்கும் இடையே, வெற்றிடம் 9 அடி அகலத்தில் இருந்தது.  அந்த எரிகோ மதிலின் மேல் நான்கு இரதங்கள் போகும் அளவுக்கு அகலம் இருந்தது. அதாவது அந்த மதிலின் மேல் கிட்டத்தட்ட நான்கு கார்கள் ஒரே நேரத்தில் செல்லலாம். அவ்வளவு அகலமான சுவர். அந்த சுவரை வெளிப்புறமாக சாய்த்து கட்டியிருந்தார்கள். ஒருவேளை பெரிய பூமி அதிர்ச்சி ஏற்பட்டால், மதில் வெளிப்புறமாக விழும் அளவுக்கு கட்டியிருந்தார்கள். அந்த மதில் சுவரின் உள்ளேயே, அதாவது சுவருக்குள், உட்புறமாக ராணுவ சிப்பாய்களின் வீடுகள், விபச்சார விடுதி, சாராயம் விற்கும் இடம் போன்ற இடங்கள் இருந்தன.

இஸ்ரவேலர் ஆறு நாட்கள் தினமும் ஒருமுறை அந்த மதிலை சுற்றி வரும் போது, எரிகோ ராஜா எதுவுமே பண்ணவில்லை. ஏனென்றால் அவருக்குள் ஒரு தைரியம் இருந்தது. இவ்வளவு பலமான மதிலை இந்த இஸ்ரவேலரால் எதுவும் செய்ய முடியாது என்று இருந்து கொண்டார். ஆனால் ஏழாவது நாள் ஏழு தரம் சுற்றும் போது மதில் கீழே விழுந்தது. எப்படி விழுந்தது? மதில் உட்புறமாக விழுந்தது. அதனால் தான் எரிகோவின் குடிகள் எல்லாரும் அதிர்ச்சி அடைந்து விட்டனர். அவர்கள் அந்த நேரத்தில் யுத்தத்துக்கு தயாராக இல்லை. அவர்கள் அந்த தாக்குதலை எதிர்பார்க்கவும் இல்லை. மதில் வெளிப்புறம் விழுந்தால் கூட, அது பூமியதிர்ச்சி என்று நினைக்கலாம், ஆனால் வெளிப்புறம் சாய்வாக இருக்கும் மதில், உட்புறமாக விழுந்தது, எரிகோவின் மக்களை செயல்பட விடாமல் தடுத்தது. அந்த யுத்தம் கர்த்தருடைய யுத்தம்.

கர்த்தர் ஒவ்வொரு யுத்தத்திலும் இஸ்ரவேலருடன் இருந்தார். யோசுவா சொல் கேட்டு, சூரியன் அப்படியே நின்றது என்று பார்க்கிறோம். அந்த அளவுக்கு தேவனையே சார்ந்து யுத்தத்தை நடத்தியவர் யோசுவா.

கர்த்தர் தாமே யோசுவாவோடு இருந்து யுத்தங்களை நடப்பித்தார். மோசே பிடித்த பட்டணங்களையும் யோசுவா பிடித்த பட்டணங்களையும் இணைத்து இஸ்ரேல் என்ற குட்டி நாடு உருவானது. நாம் பார்க்க இருக்கிற இஸ்ரேல் தேசம் இப்பொழுது உருவாகி விட்டது.

யோசுவா தேசத்தை 12 பிரிவுகளாகப் பிரித்தார். நாம் அறிந்தபடி, லேவி கோத்திரத்துக்கு பங்கு கிடையாது, அதற்கு பதிலாக யோசேப்பின் குமாரர் இருவருக்கும் பங்கு கொடுக்கப்பட்டது.1 கோத்திரத்துக்கு, 4 லேவி பட்டணங்கள் என்ற கணக்கில், ஒவ்வொரு கோத்திரத்துக்கும் நான்கு நான்கு லேவிய பட்டணங்கள் கட்டிக்கொடுத்தார் யோசுவா. (4*12=48 லேவிய பட்டணங்கள்) இது தேவனின் திட்டம். லேவியர் ஆசாரிய ஊழியம் செய்ய அழைக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு சொந்தமாக பட்டணம் கிடையாது. லேவியருக்கு இரண்டு ஊழியங்கள் இருந்தது. முதலாவது ஆண்டவருக்கு ஆராதனை செய்வது. இரண்டாவது ஜனங்களுக்கு நியாயப்பிரமாணத்தை கற்றுக் கொடுப்பது. ஒரே இடத்தில் எல்லா லேவியரும் இருந்தால், மக்களுக்கு நியாயப் பிரமாணத்தைக் கற்றுக் கொடுக்க முடியாது என்ற காரணத்தினால், ஒவ்வொரு பட்டணத்திலும் நான்கு திசைகளிலும் லேவியருக்கு பட்டணம் கட்டிக் கொடுக்கப்பட்டது.

யோசுவாவும், தன் தலைமையான மோசேயைப் போல, இறப்பதற்கு முன் ஒரு பிரசங்கம் செய்கிறார். யோசுவாவுடன் கானானுக்குள் நுழைந்தவர்கள் இளைஞர்கள். அவர்களுக்கு செங்கடல் பிளந்தது, 10 வாதை பற்றி கூறினால், அது வெறும் கதையாகத் தெரியும் என்பதால் தான், எரிகோ மதில், சூரியன் மனிதன் பேச்சைக் கேட்பது போன்ற அசாதாரண காரியங்கள் நடந்தது. தன் வல்லமையை விளங்கப் பண்ணினார் கர்த்தர். கடைசியாக யோசுவாவும், கர்த்தரை விட்டு அந்நிய தேவ வழிபாட்டுக்கு செல்லக் கூடாது என்று பிரசங்கிக்கிறார். ஏனெனில் ஆண்டவர் அவர்களின் தேவனாக, அவர்கள் நடுவே இருக்க விரும்பினார். அன்றும், இன்றும், யூதர்கள் அந்தக் கட்டளைக்கு கீழ்ப்படியவே இல்லை என்பது கசப்பான உண்மை.

Similar Posts

  • |

    Day 333 (29-11-2025)

    Scripture Portion: 1 Corinthians 1-4 1 கொரிந்தியர் 1 1தேவனுடைய சித்தத்தினாலே இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்பட்டவனாகிய பவுலும், சகோதரனாகிய சொஸ்தெனேயும், 2கொரிந்துவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களாயுமிருக்கிற தேவனுடைய சபைக்கும், எங்களுக்கும் தங்களுக்கும் ஆண்டவராயிருக்கிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தை எங்கும் தொழுதுகொள்ளுகிற அனைவருக்கும் எழுதுகிறதாவது: 3நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. 4கிறிஸ்துவைப்பற்றிய சாட்சி உங்களுக்குள்ளே ஸ்திரப்படுத்தப்பட்டபடியே, 5நீங்கள் இயேசுகிறிஸ்துவுக்குள்ளாய் எல்லா உபதேசத்திலும் எல்லா அறிவிலும், மற்றெல்லாவற்றிலும், சம்பூரணமுள்ளவர்களாக்கப்பட்டிருக்கிறபடியால், 6அவர் மூலமாய் உங்களுக்கு…

  • |

    Day 9 (09-01-2025)

    Scripture Portion: Job 21-23 யோபு 21 1யோபு பிரதியுத்தரமாக: 2என் வசனத்தைக் கவனமாய்க் கேளுங்கள்; இது நீங்கள் என்னைத் தேற்றரவுபண்ணுவதுபோல இருக்கும். 3நான் பேசப்போகிறேன், சகித்திருங்கள்; நான் பேசினபின்பு பரியாசம்பண்ணுங்கள். 4நான் மனுஷனைப்பார்த்தா அங்கலாய்க்கிறேன்? அப்படியானாலும் என் ஆவி விசனப்படாதிருக்குமா? 5என்னைக் கவனித்துப்பாருங்கள், அப்பொழுது நீங்கள் பிரமித்து, உங்கள் வாயைக் கையால் பொத்திக்கொள்வீர்கள். 6இதை நான் நினைக்கையில் கலங்குகிறேன்; நடுக்கம் என் மாம்சத்தைப் பிடிக்கும். 7துன்மார்க்கர் ஜீவித்து விருத்தராகி, வல்லவராவானேன்? 8அவர்களோடுங்கூட அவர்கள் சந்ததியார் அவர்களுக்கு…

  • |

    Day 172 (21-06-2025)

    Scripture Portion: 1 kings 10-11, 2Chronicles 9 1 இராஜாக்கள் 10 1கர்த்தருடைய நாமத்தைக்குறித்துச் சாலொமோனுக்கு உண்டாயிருந்த கீர்த்தி சேபாவின் ராஜஸ்திரீக்குக் கேள்வியானபோது, அவள் விடுகதைகளினால் அவனைச் சோதிக்கிறதற்காக, 2மிகுந்த பரிவாரத்தோடும், கந்தவர்க்கங்களையும், மிகுதியான பொன்னையும் இரத்தினங்களையும் சுமக்கிற ஒட்டகங்களோடும், எருசலேமுக்கு வந்தாள்; அவள் சாலோமோனிடத்தில் வந்தபோது, தன் மனதில் இருந்த எல்லாவற்றையுங்குறித்து அவனிடத்தில் சம்பாஷித்தாள். 3அப்பொழுது சாலொமோன் அவள் கேட்டவைகளையெல்லாம் விடுவித்தான். அவளுக்கு விடுவிக்கக்கூடாதபடிக்கு, ஒன்றாகிலும் ராஜாவுக்கு மறைபொருளாயிருக்கவில்லை. 4சேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனுடைய சகல ஞானத்தையும்,…

  • |

    Day 126 (06-05-2025)

    Scripture Portion: Psalm 89,96,100, 101, 105, 132 சங்கீதம் 89 (எஸ்ராகியனாகிய ஏத்தானின் மஸ்கீல் என்னும் போதக சங்கீதம்) 1கர்த்தரின் கிருபைகளை என்றென்றைக்கும் பாடுவேன்; உமது உண்மையைத் தலைமுறை தலைமுறையாக என் வாயினால் அறிவிப்பேன். 2கிருபை என்றென்றைக்கும் ஸ்திரப்பட்டிருக்கும்; உமது உண்மையை வானங்களிலே ஸ்தாபிப்பீர் என்றேன். 3என்னால் தெரிந்து கொள்ளப்பட்டவனோடே உடன்படிக்கைபண்ணி, என் தாசனாகிய தாவீதை நோக்கி: 4என்றென்றைக்கும் உன் சந்ததியை நிலைப்படுத்தி, தலைமுறை தலைமுறையாக உன் சிங்காசனத்தை ஸ்தாபிப்பேன் என்று ஆணையிட்டேன் என்றீர். (சேலா) 5கர்த்தாவே, வானங்கள்…

  • |

    விடுதலை – 8 Pornல் இருந்து வெளிவருவது எப்படி? – 1

    Porn Addiction பற்றிய சில பதிவுகளைப் பார்த்தோம். இப்போது அதிலிருந்து வெளிவருவது எப்படி என்பதை ஒரு சில பதிவுகளில், பார்க்க இருக்கிறோம். அதனோடு முக்கியமான சில சத்தியங்களை பார்க்க இருக்கிறோம். “கர்த்தரே ஆவியானவர், கர்த்தருடைய ஆவி எங்கேயோ, அங்கே விடுதலை உண்டு” என்பதைப் போல, “சத்தியத்தையும் அறிவீர்கள்… சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என்ற வசனமும் உள்ளது. சில சத்தியங்களை புரிந்து கொண்டால், இதிலிருந்து சுலபமாக வெளிவரலாம். கர்த்தர்தாமே நம்மை சரியான சத்தியத்துக்குள் நடத்துவாராக. ஏற்கனவே இரு ஊழியர்களின்…

  • இஸ்ரேல்-15 (சவுல் முதல் ராஜா)

    சவுல் முதல் ராஜா முதல் ராஜா சவுல் பற்றி பார்க்க இருக்கிறோம். கர்த்தர் கானான் தேசத்தை இஸ்ரவேலருக்கு கொடுப்பதற்கு முன்பே, பிற்காலத்தில் என்ன நடக்கும் என்று மோசேயிடம் கூறி இருப்பார். ஒரு ராஜா எப்படி இருக்க வேண்டும் என்று, கர்த்தர் ஏற்கனவே மோசே மூலமாக வழிகாட்டியிருப்பார். 14.உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச் சேர்ந்து, அதைச் சுதந்தரித்துக்கொண்டு, அதில் குடியேறினபின், நீ; என்னைச் சுற்றிலும் இருக்கிற சகல ஜாதிகளையும் போல, நானும் எனக்கு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *