இஸ்ரேல்-14 (இஸ்ரேலுக்கு ராஜா)

இஸ்ரவேலுக்கு ராஜா

சாமுவேல் இஸ்ரவேலின் கடைசி நியாயாதிபதி என்று பார்த்தோம். சாமுவேல் தனக்கு அடுத்ததாக தன் பிள்ளைகளை நியாயாதிபதியாக வைக்கிறார். ஆனால் அது தேவ சித்தம் அல்ல. இன்றைக்கு ஊழியர்கள் கூட அந்த தவறை செய்கிறார்கள். தங்களுக்கடுத்து தங்கள் பிள்ளைகளை ஊழியத்தில் ஏற்றுகிறார்கள். நிச்சயமாக அப்பாவின் அபிஷேகம் பிள்ளைகள் மீது இருக்கும். ஆனால், கர்த்தருடைய அழைப்பு இருக்கிறதா என்பதை சரிபார்த்து, ஊழியத்துக்கு வரவேண்டும். இதுவரை நியாயாதிபதிகளாய் இருந்தவர்கள், வேறு வேறு கோத்திரத்திலிருந்து வந்தார்கள். அவர்களையும் தெரிவு செய்தவர் கர்த்தர். ஆனால் சாமுவேலோ, தனக்கு பின் தன் பிள்ளைகள் என்று அரசியலை உள்ளே கொண்டு வந்தார்.

ஆனால் சாமுவேலின் பிள்ளைகள் சாமுவேலைப் போல இல்லாமல், லஞ்சம் வாங்கி காரியங்களை நடப்பித்ததால், மக்கள் கோபம் கொண்டனர். இதுவரை தேவனுடைய ஆளுகைக்கு கீழாக இருந்தவர்கள், இப்போது “தங்களுக்கு ஓரு ராஜா வேண்டும்” என்று கேட்டார்கள். தேவனுடைய திட்டம் தாவீதை ராஜாவாக்குவது தான். ஆனால், மக்கள் தேவன் குறித்த காலத்துக்கு முன்பே கேட்க ஆரம்பித்து விட்டார்கள். எனவே தான் தேவன் சவுலை ராஜாவாக்கினார்.

தாவீதை தான் ராஜாவாக்க வேண்டும் என்று தேவன் முடிவு செய்து இருந்தால், தாவீது சிறு வயது என்பதால், அவருடைய தந்தையாகிய ஈசாயை ராஜாவாக்கி இருக்கலாமே! அல்லது, அதே யூத கோத்திரத்தில் வேறு யாரையாவது ராஜாவாக்கி இருக்கலாமே! ஏன் வெளியே, பென்யமீன் கோத்திரத்தில் சவுலை தேர்ந்தெடுக்க வேண்டும்? இப்படி அனேக நாட்கள் யோசித்தது உண்டு. தேவனுடைய திட்டங்களும், அவருடைய நியாயங்களும் நம்மால் புரிந்து கொள்ள முடியாது.

வேதவல்லுநர்கள் கருத்துப்படி, மற்றவர்கள் கூறுவது போல தாவீது ஏழை மேய்ப்பன் அல்ல. பெரிய பணக்காரர். போவாஸ் என்பவர், ரூத்தின் சரித்திரத்தில் படிக்கும்போது, அவர் ஒரு பணக்காரர் என்பது தெரியும். அதே வேளையில் நகோமியும், தன் கையில் கணவனாகிய எக்லோன், பிள்ளைகளாகிய மக்லோன் கிலியோன் என்பவர்களுடைய நிலத்தை வைத்திருந்தாள். எனவே ரூத்தை திருமணம் செய்ததன் மூலம், அந்த ஏரியாவிலேயே பெரிய பணக்காரர் ஆகியிருப்பார் போவாஸ்.

ரூத்தின் புத்தகத்தில் வாசிக்கும்போதே, போவாஸ்க்கு ஊரில் செல்வாக்கு இருந்தது புரியும். எனவே போவாஸ்க்கு பின்னர் வந்த அவருடைய சந்ததியும் செல்வாக்கானவர்களாக இருந்திருப்பார்கள். அப்படியெனில், ஈசாயும் செல்வாக்கானவர் தானே! கர்த்தர் ஈசாயை ராஜாவாக்கி இருக்கலாமே! ஏன் செய்யவில்லை?

கர்த்தர் சபைக்குள் மோவாபியர்கள் அல்லது வேசி பிள்ளைகள் வர வேண்டுமானால், பத்து தலைமுறை கடந்து தான் வர முடியும் என்று கூறியிருக்கிறார். முதலாவது ரூத். பரிசுத்த வித்து கடந்து வருகிற சந்ததியில், இஸ்ரேல் தேசத்தில், ரூத் இணைந்தார். யார் இந்த மோவாபியர்கள்? லோத்தின் காலத்துக்கு சென்றால், லோத்து மகளுடன் இணைந்து பெற்ற குழந்தைகள் தான், அம்மோனியரும் மோவாபியரும்.

ரூத் இப்போது இஸ்ரேலில் இணைய, 10 தலைமுறை கணக்கு முடிந்திருக்குமா? கீழ்கண்ட அட்டவணையில் பார்த்தால், போவாஸ் பத்து தலைமுறை முடிந்த சந்ததி என்பது புரியும். ஆபிரகாமும் லோத்துவும் ஒரே கால கட்டத்தில் வாழ்ந்ததால், ஆபிரகாமின் சந்ததியை வைத்து கணக்கீடு செய்து இருக்கிறோம். லோத்துவின் பிள்ளைகள் பெரியவர்கள், ஆபிரகாமுக்கு தாமதமாக குழந்தை பிறந்தது என்று எடுத்துக்கொண்டாலும், போவாஸ் ரூத்தை திருமணம் செய்யும்போது கிழவன் என்று தான் வேத அறிஞர்கள் கூறுகிறார்கள். எனவே, ரூத் உள்ளே நுழைந்தது, பத்து தலைமுறை முடிந்த பிறகே என்பது புரிகிறது.

சந்ததி பெயர்
1 ஆபிரகாம்
2 ஈசாக்கு
3 யாக்கோபு
4 யூதா
5 பாரேஸ்
6 எஸ்ரோன்
7 ராம்
8 அமினதாப்
9 நகசோன்
10 சல்மோன்
11 போவாஸ்

நாம் இப்போது, ஏன் ஈசாய் ராஜாவாகவில்லை என்று பார்த்துக் கொண்டு இருக்கிறோம். “வேசிப்பிள்ளையும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது; அவனுக்குப் பத்தாம் தலைமுறையானவனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது.”  யூதாவின் மகன் பாரேஸ் எப்படி பிறந்தார்? யூதா மருமகளை வேசி என்று நினைத்து அவளிடம் சேர்ந்ததால்தானே! எனவே பாரேஸ்ம் வேசிப்பிள்ளை தான். நம் தேவனை புரிந்து கொள்ளவே முடியாது. அவருடைய பார்வையில் யூதாவின் பிள்ளைகள் வேசிப்பிள்ளைகளாக தெரிந்து இருந்தால், அவர்கள் சந்ததியில் பரிசுத்த வித்து வந்திருக்க முடியாது. வேசிப்பிள்ளையாக பார்க்கவில்லை என்றால், தேவனால் ஈசாயையே ராஜாவாக்கியிருக்க முடியும். அவருடைய பார்வைதான் என்ன? மனிதன் பார்க்கிற பிரகாரம் நான் பார்க்கமாட்டேன் என்று கூறினார் அல்லவா! நம்மால் நிச்சயம் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் அவர் கிருபை உள்ளவர், அதே சமயம் நீதியும் உள்ளவர் என்பதை புரிந்து கொள்ளலாம்.

சந்ததி பெயர்
1 யூதா
2 பாரேஸ்
3 எஸ்ரோன்
4 ராம்
5 அமினதாப்
6 நகசோன்
7 சல்மோன்
8 போவாஸ்
9 ஓபேத்
10 ஈசாய்
11 தாவீது

 தேவனுடைய திட்டம், பதினொன்றாவது தலைமுறை தாவீதை ராஜாவாக்குவது தான். ஆனால், மக்கள் அதற்கு முன்பாகவே ராஜா கேட்டதால், யூதா கோத்திரத்தை விட்டு வெளியே பென்யமீன் கோத்திரத்தில் சவுலை தெரிந்து கொண்டார். இஸ்ரேலின் முதல் ராஜாவாகிய சவுலை பற்றி வரும் பதிவுகளில் படிக்கலாம்.

Similar Posts

  • |

    Day 25 (25-01-2025)

    Scripture Portion: Genesis 38-40 ஆதியாகமம் 38 1அக்காலத்திலே யூதா தன் சகோதரரை விட்டு, அதுல்லாம் ஊரானாகிய ஈரா என்னும் ஒரு மனிதனிடத்தில் போய்ச் சேர்ந்தான். 2அங்கே யூதா, சூவா என்னும் பேருள்ள ஒரு கானானியனுடைய குமாரத்தியைக் கண்டு, அவளை விவாகம்பண்ணி, அவளோடே சேர்ந்தான். 3அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்றாள்; அவனுக்கு ஏர் என்று பேரிட்டான். 4அவள் மறுபடியும் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்கு ஓனான் என்று பேரிட்டாள். 5அவள் மறுபடியும் கர்ப்பவதியாகி ஒரு…

  • |

    Day 106 (16-04-2025)

    Scripture Portion: Psalm 56,120, 140-142 சங்கீதம் 56 (பெலிஸ்தர் தாவீதைக் காத்தூரில் பிடித்தபோது யோனாத் ஏலம் ரிக்கோகீம் என்னும் வாத்தியத்தில் வாசிக்கும்படி தாவீது பாடி இராகத்தலைவனுக்கு ஒப்புவித்த மிக்தாம் என்னும் சங்கீதம்) 1தேவனே, எனக்கு இரங்கும்; மனுஷன் என்னை விழுங்கப்பார்க்கிறான், நாள்தோறும் போர்செய்து, என்னை ஒடுக்குகிறான். 2என் சத்துருக்கள் நாள்தோறும் என்னை விழுங்கப்பார்க்கிறார்கள்; உன்னதமானவரே, எனக்கு விரோதமாய் அகங்கரித்துப் போர்செய்கிறவர்கள் அநேகர். 3நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன். 4தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்;…

  • |

    Day 18 (18-01-2025)

    Scripture Portion: Genesis 19-21 ஆதியாகமம் 19 1அந்த இரண்டு தூதரும் சாயங்காலத்திலே சோதோமுக்கு வந்தார்கள். லோத்து சோதோமின் வாசலிலே உட்கார்ந்திருந்தான். அவர்களைக் கண்டு, லோத்து எழுந்து எதிர்கொண்டு தரைமட்டும் குனிந்து: 2ஆண்டவன்மார்களே, அடியேனுடைய வீட்டு முகமாய் நீங்கள் திரும்பி, உங்கள் கால்களைக் கழுவி, இராத்தங்கி, காலையில் எழுந்து பிரயாணப்பட்டுப் போகலாம் என்றான். அதற்கு அவர்கள்: அப்படியல்ல, வீதியிலே இராத்தங்குவோம் என்றார்கள். 3அவன் அவர்களை மிகவும் வருந்திக்கேட்டுக்கொண்டான்; அப்பொழுது அவனிடத்திற்குத் திரும்பி, அவன் வீட்டிலே பிரவேசித்தார்கள். அவன்…

  • |

    Day 159 (08-06-2025)

    Scripture Portion: Proverbs 16-18 நீதிமொழிகள் 16 1மனதின் யோசனைகள் மனுஷனுடையது; நாவின் பிரதியுத்தரம் கர்த்தரால் வரும். 2மனுஷனுடைய வழிகளெல்லாம் அவன் பார்வைக்குச் சுத்தமானவைகள்; கர்த்தரோ ஆவிகளை நிறுத்துப்பார்க்கிறார். 3உன் செய்கைகளைக் கர்த்தருக்கு ஒப்புவி; அப்பொழுது உன் யோசனைகள் உறுதிப்படும். 4கர்த்தர் சகலத்தையும் தமக்கென்று படைத்தார்; தீங்குநாளுக்காகத் துன்மார்க்கனையும் உண்டாக்கினார். 5மனமேட்டிமையுள்ளவனெவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்; கையோடே கைகோத்தாலும் அவன் தண்டனைக்குத் தப்பான். 6கிருபையினாலும் சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள். 7ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார். 8அநியாயமாய் வந்த அதிக…

  • |

    Day 250 (07-09-2025)

    Scripture Portion: Ezekiel 35-37 எசேக்கியேல் 35 1கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 2மனுபுத்திரனே, நீ உன் முகத்தை சேயீர்மலைக்கு நேராகத் திருப்பி அதற்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்து, 3அதற்குச் சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், சேயீர்மலையே, இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து, என் கையை உனக்கு விரோதமாக நீட்டி, உன்னைப் பாழும் அவாந்தரவெளியுமாக்குவேன். 4உன் பட்டணங்களை வனாந்தரமாக்கிப்போடுவேன்; நீ பாழாய்ப்போவாய்; நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வாய். 5நீ பழைய பகையை வைத்து, இஸ்ரவேல் புத்திரருடைய அக்கிரமம் நிறைவேறுகையில் அவர்களுக்கு…

  • |

    Day 113 (23-04-2025)

    Scripture Portion: 1 Chronicles 1-2 1 நாளாகமம் 1 1ஆதாம், சேத், ஏனோஸ், 2கேனான், மகலாலெயேல், யாரேத், 3ஏனோக்கு, மெத்தூசலா, லாமேக்கு, 4நோவா, சேம், காம், யாப்பேத். 5யாப்பேத்தின் குமாரர், கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ் என்பவர்கள். 6கோமரின் குமாரர், அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா என்பவர்கள். 7யாவானின் குமாரர், எலீசா, தர்ஷீஸ், கித்தீம், தொதானீம் என்பவர்கள். 8காமின் குமாரர், கூஷ், மிஸ்ராயிம், பூத், கானான் என்பவர்கள். 9கூஷின் குமாரர், சேபா, ஆவிலா,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *