|

இஸ்ரேல்-33 (அமெரிக்கா வல்லரசு)

அசீரிய சாம்ராஜ்யம், பாபிலோன் சாம்ராஜ்யம், மேதிய பெர்சிய சாம்ராஜ்யம், கிரேக்க சாம்ராஜ்யம், ரோம சாம்ராஜ்யம், ஆங்கிலோ சாக்சன் சாம்ராஜ்யம் என பல சாம்ராஜ்யங்களைப் பற்றி பார்த்தோம். இங்கிலாந்திடமிருந்து அமெரிக்கா 1931ல் பணபலத்தையும், 1948ல் படைபலத்தையும் வாங்கியது. 1931லே, பவுண்டுக்கு பதிலாக டாலர் பொதுபணமாக கொண்டு வரப்பட்டது. 1943ல் இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த பின்னர், வல்லரசு பதவி இங்கிலாந்திடமிருந்து அமெரிக்காவுக்கு போனது.

அமெரிக்காவைக் கண்டுபிடித்தவர் கொலம்பஸ். அவர் ஏன் கொலம்பஸ் என்று பெயர் வைக்காமல், அமெரிக்கா என்று பெயர் வைத்தார்? ஏனெனில், (Amerigo Vespucci) அமெரிக்கா என்ற கடல் விஞ்சானியாக இருந்த ஒரு மாலுமி தான், கொலம்பஸ்க்கு ரூட் போட்டுக் கொடுத்தார் அமெரிக்காவைக் கண்டுபிடிக்க. கொலம்பஸ் ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், ஸ்பெயின் நாட்டு மன்னரின் உதவியில் தான் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார். எனவே ஸ்பெயின் மக்கள் தான் அங்கே அதிகமாகக் குடியேறினர்.

கிபி 1560ல் ஸ்பெயினில் ஏற்பட்ட கிளர்ச்சியில், பெரும்பான்மையான யூதர்கள், ஸ்பெயினில் இருந்து அமெரிக்காவுக்கு குடியேறினர். அதேசமயம், மார்ட்டின் லூதர் மூலமாக புரொட்டஸ்டன்ட் அமைப்பு உருவானதால், அவர்களுக்கு எதிராக போப் அரசர் எல்லா கத்தோலிக்கர்களையும் தூண்டியதால், அதிக இரத்த சாட்சிகள் உயிரிழந்தனர். எனவே புரொட்டஸ்டன்ட் அமைப்பினரும் அதிகமாக அமெரிக்காவில் வந்து குடியேறினர். எனவே அமெரிக்காவில் யூதர்களும், கிறிஸ்தவர்களும் குடிபெயர்ந்தனர்.

The Men Who Built America என்ற documentryல், உலகத்தையே இப்போது ஆண்டு கொண்டிருக்கிற பெரும்பான்மையான யூதக் குடும்பங்களே, அமெரிக்காவை உருவாக்கினார்கள் என்று அறியலாம்.

1948ல் இஸ்ரேலைக் கைவிட்டது இங்கிலாந்து என கடந்த பதிவில் பார்த்தோம். ஆனால் அப்போதிலிருந்து இஸ்ரேலுக்கு ஆதரவாக இருப்பது அமெரிக்கா தான். வெறும் குட்டி நாடாக இஸ்ரேல் இருக்கும் போது, சுற்றியுள்ள அரபு நாடுகள் கூட்டமாக எதிர்த்தபோது, இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா சைன் பண்ணியது. அதற்குப் பின்னர்தான், அமெரிக்கா வல்லரசாக மாறியது. ஆனால் அதே அமெரிக்காவின் வீழ்ச்சி, வல்லரசாகி பின்னர் 70 ஆண்டுகளில் நடந்தது.

இங்கிலாந்து 1948ல் இஸ்ரவேலுக்கு சுதந்திரம் கொடுத்து விட்டு ஓடிப்போனது. அப்போது இஸ்ரேலின் தலைநகர் டெல்-அவிவ் (Tel-Aviv). 1949ல் இஸ்ரேல் எருசலேமை “Israel’s eternal capital” என்று அறிவித்தது. எருசலேம் அப்போது யூதர்கள் வசம் கிடையாது. அதன்பின்னர் 1967ல் எருசலேமை ஒரு போரில் இஸ்ரவேலர் கைப்பற்றினர். அதுவரையில் எருசலேம் ஜோர்தான் வசம் இருந்தது. யூதர்கள் எருசலேமுக்குள் செல்வதற்கு தடையும் இருந்தது.

1967ல் எருசலேமை இஸ்ரேலின் தலைநகராக இஸ்ரேல் அறிவித்தது. ஒரு நாடு தான், தன்னுடைய தலைநகர் எது என்று அறிவிக்க வேண்டும். ஆனால் இஸ்ரேலின் அந்த முடிவை மற்ற நாடுகள் எதிர்த்தனர். தலைநகர் எதுவோ, அங்கே தான் எல்லா நாடுகளின் embassy இருக்கும். மற்ற நாடுகள், டெல்-அவிவ் லிருந்து தங்கள் தலைநகரை எருசலேமுக்கு மாற்றாமல் எதிர்ப்பை தெரிவித்தனர்.

1995ல் அமெரிக்கா Jerusalem Embassy Act of 1995ல், அமெரிக்க தூதரகத்தை (embassy) எருசலேமுக்கு மாற்ற வேண்டும் என sign செய்தது. ஆனால் அதன்பின் ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் ஒருமுறை ஜனாதிபதியால், விலக்கு(தள்ளுபடி) sign போடப்படும். அதற்கு காரணமாக சொல்வது என்னவென்றால், National Security/ Bad things will happen. அமெரிக்காவில் யூதர்களின் எண்ணிக்கை அதிகம். எனவே அரசியல் தலைவர்கள், ஒவ்வொரு தேர்தலிலும் யூதர்களுக்கு வாக்குறுதி கொடுப்பார்கள்; “நான் ஜனாதிபதியானால், எருசலேமை இஸ்ரவேலின் தலைநகர் ஆக்குவேன்” என்று. ஆனால் அதை செய்ய மாட்டார்கள். அவர்களால் செய்ய முடியாது.

Donald Trump ஒரு பிசினஸ்மேன். அவர் அரசியல்வாதி அல்ல. அவரை எதிர்த்து போட்டியிட நின்றவர் Hilari Clinton. அவர்கள் அரசியலில் பயங்கர அனுபவம் உள்ளவர். டிரம்ப் அந்த தேர்தலில் ஜெயிப்பார் என்பதை யாரும் துளியும் நம்பியிருக்க மாட்டார்கள். டிரம்ப்பும் வாக்கு கொடுத்தார், எருசலேமை தலைநகர் ஆக்குவேன் என்று.

2017 டிசம்பரில், ஆச்சரியமாக டிரம்ப் ஜெயித்து விட்டார். “நீங்கள் வாக்கு கொடுத்தது போல, எருசலேமை இஸ்ரவேலின் தலைநகர் ஆக்குவீர்களா?” என்று அவரிடம் கேட்கப்பட்டது. சாதாரணமாக தேர்தலில் ஜெயிப்பவர்கள் எல்லாரும், “நாங்கள் கூடி ஆலோசித்து செய்வோம்” என்பார்கள். செய்ய மாட்டார்கள். டிரம்ப்போ, “நான் பதவி ஏற்றதும் செய்வேன்” என்றார். உலகநாடுகள் எல்லாரும் ஒன்றாக கூடி டிரம்ப்பை எதிர்த்தார்கள். அரபு நாடுகளுக்கு கோபம் வந்தது. ஆனால் டிரம்ப் தன் முடிவில் உறுதியாக இருந்தார்.

ஆனால், பூமியிலுள்ள அனைத்து நாடுகளும் எருசலேமிற்கு எதிராகச் சண்டையிடக் கூடுவார்கள். சகரியா 12-3

சகரியா 2ம் அதிகாரத்தில் உள்ள தீர்க்கதரிசனம் நிறைவேறியது.

ஜனவரி,20, 2018ல் டிரம்ப் பதவி ஏற்க வேண்டும். அவர் பதவி ஏற்ற பிறகு எதிர்க்க முடியாதென்று, ஜனவரி 15ல் 70 நாடுகள் ஒன்றாகக் கூடி, “எருசலேம் இஸ்ரவேலின் தலைநகர் ஆகக்கூடாது” என ஐநா சபையில் தீர்மானம் பண்ணினார்கள். டிரம்ப் அதற்கு பதிலடியாக, “20ஆம் தேதிக்கு பிறகு புதிய ஐநாவை பார்ப்பீர்கள்” என்று கூறிவிட்டார்.

இந்த இடத்தில் டிரம்ப்புக்கு பதிலாக, வேறு யாரேனும் ஜனாதிபதியாக இருந்தால், “நம் நாட்டின் பொருளாதாரம் என்ன ஆவது?” என யோசிப்பார்கள். டிரம்ப் அப்படி எல்லாம் யோசிக்கவில்லை. பிசினஸ் போல நினைத்து அதிரடி முடிவை எடுத்து விட்டார்.

ஐநா சபை, அடுத்த முயற்சியாக, UNESCO வைக் கையிலெடுத்து காரியம் சாதிக்க நினைத்தது. UNESCO ஒரு நகரத்தை கையில் எடுத்தால், வேறு யாரும் அதில் எதுவும் செய்ய முடியாது. UNESCO “நாங்கள் எருசலேமைக் கையகப்படுத்துகிறோம். ஏனெனில் எருசலேம் மிகவும் முக்கியமான இடம்” என்று அறிவித்தது. டிரம்ப் அசராமல், “நாங்கள் UNESCOவை கலைக்கிறோம்” என்று சொல்லி விட்டார். ஏனெனில் UNESCOக்கு மொத்த பண உதவியும் அமெரிக்கா தான் செய்து கொண்டிருந்தது.

கடைசி முயற்சியாக, World Courtஐ எடுத்தார்கள். World Court சொல்வதை எந்த நாடாக இருந்தாலும் கேட்க வேண்டும். “இஸ்ரேல் பாலஸ்தீனியர்களை வஞ்சிக்கிறது… … … இஸ்ரேல் PMஇடம் விசாரிக்க வேண்டும்” என World Court சொல்லியது. டிரம்ப் பதில், “அது ஒரு வேஸ்ட் ஆர்கனைசேஷன். World Courtன் நீதிபதிகள் யாரும் இனி அமெரிக்காவுக்குள் நுழையக்கூடாது” என அதிரடி உத்தரவு போட்டார். அந்த கேஸ் என்ன ஆனது என்பது அதன்பின் யாருக்கும் தெரியாது.

மே 14,2018ல் டிரம்ப் கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த அரசியல் விளையாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, எருசலேமை இஸ்ரவேலின் தலைநகர் ஆக்கினார். உண்மையில், எருசலேம் 1967லே இஸ்ரேலால் தலைநகர் என்று அறிவிக்கப்பட்டது. மற்ற நாடுகள் அதை ஏற்றுக் கொள்ளாமல் இருந்தனர். அமெரிக்கா ஏற்றுக்கொண்டதாக அறிவித்தாலும், தன் தூதரகத்தை டெல்-அவிவில் இருந்து எருசலேமுக்கு மாற்றவில்லை. ஆனால் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து, எருசலேமுக்கு தன் நாடாகிய அமெரிக்காவின் தலைநகரைக் கொண்டு சென்றவர் டிரம்ப்.

எருசலேம் திரும்பவும் தன் ஸ்தானமாகிய எருசலேமிலே குடியேற்றப்பட்டிருக்கும்.

சகரியா 12-6

அமெரிக்காவின் வீழ்ச்சி

1931ல் டாலர் பொதுப்பணமாக ஏற்றுக்கொள்ளப் பட்டது. மற்ற 185 நாடுகளும், அமெரிக்காவின் டாலரை வைத்துதான் மதிப்பிடப்பட்டது. அவ்வளவு வல்லரசான நாடு அமெரிக்கா. அமெரிக்காவில் இருந்த உலக வர்த்தக மையம் (WTC World Trade centre) 2001ல் கீழே விழுந்தது. அது தீவிரவாத தாக்குதலாக இருந்தாலும், கர்த்தருடைய கரம் எடுக்கப்பட்டதே அதன் வீழ்ச்சிக்கு காரணம்.

• ஜனாதிபதி கிளிண்டன் காலத்தில், இராணுவத்தில் ஓரினச் சேர்க்கை அனுமதிக்கப்பட்டது

• ஜனாதிபதி ஜார்ஜ் W புஷ் காலத்தில், One Christianity உருவாக்க வேண்டும் என்று, அப்போதிருந்த போப்‌அரசரை அழைத்து, பல கிறித்தவ அமைப்புகள் இணைந்து, வெள்ளை மாளிகையில் கையெழுத்து இட்டார்கள்

• John F Kennedy காலத்தில், பள்ளிகளில் வேதம் மறுக்கப்பட்டது. அதுவரை பள்ளியில் ஒரு பாடமாக சொல்லிக் கொடுக்கப்பட்ட வேதம், தடை செய்யப்பட்டது.

• அதன்பின் கலிஃபோர்னியா மாகாணத்தில், பரிசுத்த வேதாகமம் என்பது படிக்கக் கூடிய புத்தகம் அல்ல என்று தடை செய்யப்பட்டது.

• பிள்ளைகளை எக்காரணம் கொண்டும் கண்டிக்கக்கூடாது. 15 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் சுயாதீனமாக விட வேண்டும் என்று சட்டங்கள் இயற்றப்பட்டது

• பள்ளிகளில் துப்பாக்கிச்சூடு அதிகமாகியதால், 2015ல் ஒபாமா ஒரு அறிவிப்பு கொடுத்தார். சிலர் மாத்திரம் துப்பாக்கி வைத்திருப்பதால் தான் இந்தப் பிரச்சினை. எனவே இனி எல்லாருமே துப்பாக்கி உபயோகப்‌படுத்துங்கள் என்று அவர் அறிவிப்பு, உலகையே அதிரச் செய்தது.

Donald Trump ஜனாதிபதியாகி, எருசலேமை தலைநகராக அறிவிக்க வேண்டியிருந்தது. அதுவும் நடந்து முடிந்துவிட்டதால், இப்போது அமெரிக்கா வீழ்ச்சியின் விளிம்பில் இருக்கிறது. தற்போது உலகக்கடனில் அமெரிக்கா 26% கடன், டாலருக்கு பதிலாக யூரோ என்று அமெரிக்கா வீழ்ச்சி ஏற்கனவே ஆரம்பித்து விட்டது. இப்போது நிறைய இடங்களில் டாலருக்கு பதிலாக யூரோ தான் பயன்படுத்தப் படுகிறது.

Similar Posts

  • |

    Day 94 (04-04-2025)

    Scripture Portion: Judges 13-15 நியாயாதிபதிகள் 13 1இஸ்ரவேல் புத்திரர் மறுபடியும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தபடியால், கர்த்தர் அவர்களை நாற்பது வருஷமளவும் பெலிஸ்தர் கையில் ஒப்புக்கொடுத்தார். 2அப்பொழுது தாண் வம்சத்தானாகிய சோரா ஊரானான ஒரு மனுஷன் இருந்தான்; அவன் பேர் மனோவா; அவன் மனைவி பிள்ளைபெறாத மலடியாயிருந்தாள். 3கர்த்தருடைய தூதனானவர் அந்த ஸ்திரீக்குத் தரிசனமாகி, அவளை நோக்கி: இதோ, பிள்ளைபெறாத மலடியான நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய். 4ஆதலால் நீ திராட்சரசமும் மதுபானமும் குடியாதபடிக்கும், தீட்டானது ஒன்றும் புசியாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு. 5நீ…

  • |

    Day 23 (23-01-2025)

    Scripture Portion: Genesis 32-34 ஆதியாகமம் 32 1யாக்கோபு பிரயாணம் பண்ணுகையில், தேவதூதர்கள் அவனைச் சந்தித்தார்கள். 2யாக்கோபு அவர்களைக் கண்டபோது: இது தேவனுடைய சேனை என்று சொல்லி, அந்த ஸ்தலத்திற்கு மக்னாயீம் என்று பேரிட்டான். 3பின்பு, யாக்கோபு ஏதோம் சீமையாகிய சேயீர் தேசத்திலிருக்கிற தன் சகோதரனாகிய ஏசாவினிடத்துக்குப் போகும்படி ஆட்களை அழைப்பித்து: 4நீங்கள் என் ஆண்டவனாகிய ஏசாவினிடத்தில் போய், நான் இதுவரைக்கும் லாபானிடத்தில் தங்கியிருந்தேன் என்றும், 5எனக்கு எருதுகளும், கழுதைகளும், ஆடுகளும், வேலைக்காரரும், வேலைக்காரிகளும் உண்டென்றும், உம்முடைய…

  • |

    Day 266 (23-09-2025)

    Scripture Portion: Esther 1-5 எஸ்தர் 1 1இந்து தேசம்முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும் அரசாண்ட அகாஸ்வேருவின் நாட்களிலே சம்பவித்ததாவது: 2ராஜாவாகிய அகாஸ்வேரு சூசான் அரமனையிலிருக்கிற தன் ராஜ்யத்தின் சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தான். 3அவன் தன் ராஜ்யபாரத்தின் மூன்றாம் வருஷத்திலே தன்னுடைய பிரபுக்களுக்கும் ஊழியக்காரருக்கும் விருந்துபண்ணினான்; அப்பொழுது பெர்சியா மேதியா தேசங்களிலுள்ள மகத்தானவர்களும், நாடுகளின் அதிபதிகளும், பிரபுக்களும், அவன் சமுகத்தில் வந்திருந்தார்கள். 4அவன் தன் ராஜ்யத்தின் மகிமையான ஐசுவரியத்தையும், தன் மகத்துவத்தின் சிறந்த பிரதாபத்தையும் அநேக நாளாகிய…

  • |

    Day 341 (07-12-2025)

    Scripture Portion: Acts 20:1-3, Romans 1-3 அப்போஸ்தலர் 20:1-3 1கலகம் அமர்ந்தபின்பு, பவுல் சீஷரைத் தன்னிடத்திற்கு வரவழைத்து, வினவிக்கொண்டு, மக்கெதோனியாவுக்குப் போகப்புறப்பட்டான். 2அவன் அந்தத் திசைகளிலே சுற்றி நடந்து, சீஷர்களுக்கு வெகுவாய்ப் புத்தி சொல்லி, கிரேக்கு தேசத்திலே சேர்ந்தான். 3அங்கே மூன்றுமாதம் சஞ்சரித்த பின்பு, அவன் கப்பல் ஏறி, சீரியா தேசத்துக்குப்போக மனதாயிருந்தபோது, யூதர்கள் அவனுக்குத் தீமைசெய்யும்படி இரகசியமான யோசனை கொண்டிருந்தபடியால், மக்கெதோனியா தேசத்தின் வழியாய்த் திரும்பிப்போகத் தீர்மானம்பண்ணினான். ரோமர் 1 1இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும், அப்போஸ்தலனாகும்படி…

  • |

    Day 346 (12-12-2025)

    Scripture Portion: Acts 20:4-38, 21, 22, 23 அப்போஸ்தலர் 20 (4-38) 4பெரோயா ஊரானாகிய சோபத்தரும், தெசலோனிக்கேயரில் அரிஸ்தர்க்கும், செக்குந்தும், தெர்பையனாகிய காயுவும், தீமோத்தேயும், ஆசியா நாட்டாராகிய தீகிக்கும் துரோப்பீமும், ஆசியா நாடுவரைக்கும் அவனுக்கு வழித்துணையாய் வந்தார்கள். 5இவர்கள் முன்னாகப்போய், துரோவாபட்டணத்திலே எங்களுக்காகக் காத்திருந்தார்கள். 6புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாட்களுக்குப்பின்பு நாங்கள் கப்பல் ஏறிப் பிலிப்பி பட்டணத்தை விட்டு ஐந்து நாளைக்குள்ளே துரோவாபட்டணத்துக்கு அவர்களிடத்தில் வந்து, அங்கே ஏழுநாள் தங்கியிருந்தோம். 7வாரத்தின் முதல்நாளிலே, அப்பம் பிட்கும்படி சீஷர்கள்…

  • |

    Day 84 (25-03-2025)

    Scripture Portion: Joshua 9-11 யோசுவா 9 1யோர்தானுக்கு இப்புறத்திலே மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் லீபனோனுக்கு எதிரான பெரிய சமுத்திரத்தின் கரையோரமெங்குமுள்ள ஏத்தியரும், எமோரியரும், கானானியரும், பெரிசியரும், ஏவியரும், எபூசியருமானவர்களுடைய சகல ராஜாக்களும் அதைக் கேள்விப்பட்டபோது, 2அவர்கள் ஒருமனப்பட்டு, யோசுவாவோடும் இஸ்ரவேலரோடும் யுத்தம்பண்ண ஏகமாய்க் கூடினார்கள். 3எரிகோவுக்கும் ஆயிக்கும் யோசுவா செய்ததைக் கிபியோனின் குடிகள் கேள்விப்பட்டபோது, 4ஒரு தந்திரமான யோசனைபண்ணி, தங்களை ஸ்தானாபதிகள்போலக் காண்பித்து, பழைய இரட்டுப் பைகளையும், பீறலும் பொத்தலுமான பழைய திராட்சரசத் துருத்திகளையும் தங்கள் கழுதைகள்மேல்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *