|

இஸ்ரேல்-41 (வெளி 17ம் அதிகாரம்)

வெளிப்படுத்தின விசேஷம் 17ம் அதிகாரம்

இதை எழுதியவர் அப்போஸ்தலனாகிய யோவான். அவரது காலத்தில், ஐந்து பேர் விழுந்தார்கள். ஒருவன் இருக்கிறான். இன்னொருவன் வரவேண்டும் என்று கூறுகிறார். விழுந்த ஐந்து பேர் யார் என்று பார்த்தால், யோவான் காலத்தில் இதற்கு முன் இருந்த ஐந்து சாம்ராஜ்யம். எகிப்து, அசீரியா, பாபிலோன், மேதிய பெர்சிய ராஜ்யம், கிரேக்க சாம்ராஜ்யம். இந்த ஐந்தும் விழுந்தது. ஒருவன் இருக்கிறான் என்பது யோவான் காலத்தில் இருந்த ரோம சாம்ராஜ்யத்தை குறிக்கிறது.

இன்னொருவன் வரவேண்டும். வந்து கொஞ்ச காலம் தரித்திருக்க வேண்டும் என்பது, ஒருங்கிணைந்த ரோம சாம்ராஜ்யம் அல்லது போப்‌ சாம்ராஜ்யத்தைக் குறிக்கிறது. எல்லா சாம்ராஜ்யமும் 400 வருடங்களுக்கு குறைவாக இருந்தது. போப் ரோம சாம்ராஜ்யம் மட்டுமே, கிட்டத்தட்ட 1260 வருடங்கள் ஆட்சி செய்துள்ளனர்.

1. எகிப்து (கிமு1400-1000) 400வருடங்கள்

2. அசீரியா (கிமு1000-700) 300 வருடங்கள்

3. பாபிலோன் (கிமு 700-538) 250 வருடங்கள்

4. மேதிய பெர்சியர் (கிமு538-333) 200 வருடங்கள்

5. கிரேக்கு (கிமு333-64) 250 வருடங்கள்

6. ரோம் (கிமு 64- கிபி 538)

7. ஒருங்கிணைந்த ரோம சாம்ராஜ்யம் (538- 1798) 1260 வருடங்கள்

8. அதிலிருந்து எட்டாவது தோன்றும்.

ஏழாவது சாம்ராஜ்யத்தில் இருந்து எட்டாவது தோன்றும். அந்த பத்து நாடுகள் பிரிந்து போனாலும், அவர்கள் வேர் தான். அடுத்த சாம்ராஜ்யமாக வந்த ஆங்கிலோ சாக்சன் என்ற இங்கிலாந்து அந்த பத்து நாடுகளில் ஒன்று தான். அடுத்த சாம்ராஜ்யமாக வந்த அமெரிக்க சாம்ராஜ்யம், ஓரளவு வேர் என்றே கூறலாம். 1560ல் ஸ்பெயினில் இருந்து நிறைய யூதர்கள் அமெரிக்காவில் குடியேறினார்கள். ஸ்பெயின் ரோம சாம்ராஜ்யத்தின் வேர். ஆனால் அமெரிக்கா, இங்கிலாந்து எல்லாம் எட்டாவது சாம்ராஜ்யம் கிடையாது.

கடைசியாக எட்டாவது சாம்ராஜ்யம் என்பது அந்திக்கிறிஸ்து ஆட்சியைக் குறிக்கும். தற்போதைய வேதவல்லுநர்கள் கருத்துப்படி, European union மூலமாக உலகம் முழுவதுக்கும் ஒரே ராஜ வருவார், அவர்தான் அந்திக்கிறிஸ்து. European union நாடுகள் இணைந்து ஒற்றுமையாக, ஒருவருக்கு ஆட்சிப்பொறுப்பை கொடுப்பர். அவர்தான் அந்திக்கிறிஸ்துவாக வருவார். கர்த்தருக்கு சித்தமானால், European union பற்றிய சில காரியங்களை படிக்கலாம்.

நாம் ஏற்கனவே பல முறை எல்லா சாம்ராஜ்யங்களையும் பற்றி பார்த்ததால், இங்கே விளக்கமாக தரவில்லை. ஒருவேளை நீங்கள் புதிதாக இந்த பதிவை படித்தால், முந்தைய பதிவுகளில் ஒவ்வொரு சாம்ராஜ்யம் பற்றிய விளக்கமும் இருக்கும். இப்பொழுது இஸ்ரவேலை பற்றி படித்துக்கொண்டிருக்கிறோம். இஸ்ரவேலின் சாகசங்கள், வரும் காலத்தில் தொடர்ச்சியாக பார்க்கலாம்.

Similar Posts

  • |

    Day -1 (01-01-2025)

    Scripture Portion: Genesis 1-3 ஆதியாகமம் 1 1ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். 2பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார். 3தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார். வெளிச்சம் உண்டாயிற்று. 4வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார். 5தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று. 6பின்பு தேவன்; ஜலத்தின்…

  • |

    Day 63 (04-03-2025)

    Scripture Portion: Numbers 21-22 எண்ணாகமம் 21 1வேவுகாரர் காண்பித்த வழியாக இஸ்ரவேலர் வருகிறார்கள் என்று தெற்கே வாசம்பண்ணுகிற கானானியனாகிய ஆராத் ராஜா கேள்விப்பட்டபோது, அவன் இஸ்ரவேலருக்கு விரோதமாக யுத்தம் பண்ணி, அவர்களில் சிலரைச் சிறைபிடித்துக்கொண்டுபோனான். 2அப்பொழுது இஸ்ரவேலர் கர்த்தரை நோக்கி: தேவரீர் இந்த ஜனங்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுத்தால், அவர்களுடைய பட்டணங்களைச் சங்காரம்பண்ணுவோம் என்று பிரதிக்கினை பண்ணினார்கள். 3கர்த்தர் இஸ்ரவேலின் சத்தத்துக்குச் செவிகொடுத்து, அவர்களுக்குக் கானானியரை ஒப்புக்கொடுத்தார்; அப்பொழுது அவர்களையும் அவர்கள் பட்டணங்களையும் சங்காரம்பண்ணி, அவ்விடத்திற்கு ஓர்மா என்று பேரிட்டார்கள்….

  • |

    Day 89 (30-03-2025)

    Scripture Portion: Judges 1-2 நியாயாதிபதிகள் 1 1யோசுவா மரித்தபின் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி: கானானியரை எதிர்த்து யுத்தம்பண்ணும்படி, எங்களில் யார் முதல்முதல் எழுந்து புறப்படவேண்டும் என்று கேட்டார்கள். 2அதற்குக் கர்த்தர்: யூதா எழுந்து புறப்படக்கடவன்; இதோ, அந்த தேசத்தை அவன் கையிலே ஒப்புக்கொடுத்தேன் என்றார். 3அப்பொழுது யூதா தன் சகோதரனாகிய சிமியோனை நோக்கி: நாம் கானானியரோடே யுத்தம்பண்ண நீ என் சுதந்தரப் பங்குவீதத்தில் என்னோடேகூட எழுந்துவா; உன் சுதந்தரப் பங்கு வீதத்தில் நானும் உன்னோடுகூட வருவேன் என்றான்; அப்படியே சிமியோன்…

  • |

    Day 244 (01-09-2025)

    Scripture Portion: Ezekiel 18-19 எசேக்கியேல் 18 1கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 2பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின என்னும் பழமொழியை நீங்கள் இஸ்ரவேல் தேசத்தைக்குறித்துச் சொல்லுகிறது என்ன? 3இனி இஸ்ரவேலில் இந்தப் பழமொழியைச் சொல்வது இல்லை என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார். 4இதோ, எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள்; தகப்பனின் ஆத்துமா எப்படியோ, அப்படியே மகனின் ஆத்துமாவும் என்னுடையது; பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும். 5ஒருவன் நீதிமானாயிருந்து, நியாயத்தையும் நீதியையும் செய்து, 6மலைகளின்மேல்…

  • |

    Day 239 (27-08-2025)

    Scripture Portion: Ezekiel 1-4 எசேக்கியேல் 1 1முப்பதாம் வருஷம் நாலாம் மாதம் ஐந்தாம்தேதியிலே, நான் கேபார் நதியண்டையிலே சிறைப்பட்டவர்கள் நடுவில் இருக்கும்போது, சம்பவித்தது என்னவென்றால், வானங்கள் திறக்கப்பட, நான் தேவதரிசனங்களைக் கண்டேன். 2அது யோயாக்கீன் ராஜாவுடைய சிறையிருப்பின் ஐந்தாம் வருஷமாயிருந்தது. 3அந்த ஐந்தாம்தேதியிலே, கல்தேயர் தேசத்திலுள்ள கேபார் நதியண்டையிலே பூசியென்னும் ஆசாரியனுடைய குமாரனாகிய எசேக்கியேலுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அங்கே கர்த்தருடைய கரம் அவன்மேல் அமர்ந்தது. 4இதோ, வடக்கேயிருந்து புசல்காற்றும் பெரிய மேகமும், அத்தோடே கலந்த அக்கினியும் வரக்கண்டேன்; அதைச் சுற்றிலும்…

  • |

    Day 83 (24-03-2025)

    Scripture Portion: Joshua 5-8 யோசுவா 5 1இஸ்ரவேல் புத்திரர் கடந்து தீருமளவும், கர்த்தர் யோர்தானின் தண்ணீரை அவர்களுக்கு முன்பாக வற்றிப்போகப்பண்ணினதை, யோர்தானுக்கு மேல்கரையில் குடியிருந்த எமோரியரின் சகல ராஜாக்களும், சமுத்திரத்தருகே குடியிருந்த கானானியரின் சகல ராஜாக்களும் கேட்டதுமுதற்கொண்டு, அவர்கள் இருதயம் கரைந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகச் சோர்ந்துபோனார்கள். 2அக்காலத்திலே கர்த்தர் யோசுவாவை நோக்கி: நீ கருக்கான கத்திகளை உண்டாக்கி, திரும்ப இரண்டாம்விசை இஸ்ரவேல் புத்திரரை விருத்தசேதனம்பண்ணு என்றார். 3அப்பொழுது யோசுவா கருக்கான கத்திகளை உண்டாக்கி, இஸ்ரவேல் புத்திரரை ஆர்லோத் மேட்டிலே விருத்தசேதனம்பண்ணினான்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *