|

பண்டிகைகள்-3 (பாவ நிவிர்த்தி நாள்)

Yom Kippur (Day of Atonement)

பாவ நிவிர்த்தி நாள்

Happy Yom kippur (Day of Atonement)

September 24,2023 Evening 6லிருந்து, September 25 Evening வரை பாவ நிவிர்த்தி நாள் என்கிற  ஆறாம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆம், இன்று எபிரேய காலண்டரில் ஏழாவது மாதம் 10ம் தேதி. கர்த்தர் கொண்டாடச் சொல்லிய ஏழு பண்டிகைகளில், ஆறாவது பண்டிகை இன்று. எபிரேய ஏழாம் மாதத்தில் முதல் நாள் Rosh Hashannah என்று, முதல் பதிவாகப் படித்தோம். ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், எபிரேய ஏழாம் மாதம் முதல் தேதியிலிருந்து, எபிரேய ஏழாம் மாதம் பத்தாம் தேதி வரை, இந்த 10 நாட்களை பரவசத்தின் நாட்கள் (Days of Awe) என்று கூறுகிறார்கள். 10 days of Fasting என்று இந்த நாட்களை நியமித்து,  பத்தாவது நாளுக்காக காத்திருப்பார்கள். இந்த நாளானது இஸ்ரேலருக்கு அவ்வளவு முக்கியமான நாள். இந்த 10 நாட்களும் பரலோகத்தின் தேவனிடம் மன்றாடி, தங்கள் பெயரை ஜீவபுஸ்தகத்தில் எழுத வைக்கும் நாட்களாக கருதுகின்றனர். கடந்த ஒரு வருடம் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு பெறும் நாட்களாக கருதுகின்றனர். இன்றைய நாளின் முடிவில் ஒரு எக்காளம் ஊதுவார்கள். அதோடு பரலோகத்தின் கதவுகள் மூடப்படுவதாக கருதுகின்றனர் இஸ்ரவேலர்கள்.

ஏன் அப்படி  நினைக்கிறார்கள்? அதற்கு லேவியராகமம் 16ம் அதிகாரத்துக்கு செல்ல வேண்டும். வருடத்துக்கு ஒரு முறை பிரதானஆசாரியன் மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள் செல்வார் என்று அடிக்கடி கேட்டிருக்கிறோம் அல்லவா… அந்த நாள் இன்றைக்குத்தான். இந்த நாளில்.

லேவி 16ல் பாவ நிவாரண பலி, சர்வாங்க தகன பலிக்கான செய்முறை குறித்து ஆண்டவர் பேசி இருப்பார். ஆரோன் தனக்காக பாவ நிவாரண பலி செலுத்தி விட்டு, பின்னர் இஸ்ரவேலர் எல்லோருக்காகவும் செலுத்த வேண்டும். இரண்டு வெள்ளாட்டுக்கடா எடுத்துக் கொண்டு, சீட்டு போட்டு பார்த்து விட்டு, சீட்டில் வந்த வெள்ளாட்டுக்கடாவை கர்த்தருக்கென்று, பிரித்து வைக்க வேண்டும். முதலில் ஆரோன், தனக்காக காளையை பலியிட்டு, அதன் இரத்தத்தை ஏழு தரம் தெளிக்க வேண்டும். பின்பு ஜனங்களின் பாவத்துக்காக சீட்டில் விழுந்த வெள்ளாட்டுக்கடாவை எடுத்து பலியிட்டு, அதன் இரத்த்த்தையும் தெளிக்க வேண்டும்.  மற்றொரு கடாவை, பிரதான ஆசாரியன், அதன் தலையின் மீது கை வைத்து, இஸ்ரவேலர் எல்லோருடைய பாவத்தையும் அதன் தலையில் சுமத்தி, அதை வனாந்திரத்தில் போக்காடாக விட வேண்டும். 

ஆண்டவர் கொடுத்த கட்டளை, அது விசேஷித்த ஓய்வு நாள். அதில் ஆத்துமாவை தாழ்த்த வேண்டும். இது தான் ஆண்டவர் கொடுத்த கட்டளை.

பிரதான ஆசாரியன் அந்த நாளில் தெளித்த இரத்தம், மிக குறைந்த நேரம் மட்டுமே கர்த்தருடைய சன்னிதியில், பிரதான ஆசாரியனை நிற்க வைத்தது.  ஆனால் இன்று நமக்கான பலி, இயேசு கிறிஸ்து. அவருடைய இரத்ததின் பரிசுத்தம், நம்மை எப்பொழுதும், எந்நேரமும் அவருடைய சன்னிதியில் நிற்க வைத்திருக்கிறது. இப்பொழுது இஸ்ரவேலர் இந்த பண்டிகையில் என்ன செய்கிறார்கள் என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

  1. மன்னிப்பு கேளுங்கள்

 

இந்த நாட்களில், தேவனிடம் மட்டுமல்ல, பிற மனிதர்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது தெரிந்தாலும், நாம் அவர்களிடம் உண்மையான மனதுடன் மன்னிப்பு கேட்க வேண்டியது அவசியம்.

2. பிறரை மன்னியுங்கள்

மன்னிப்பு கேட்பது கூட சில சமயங்களில் எளிது. ஆனால் பூரணமாக மன்னிப்பது மிகவும் கடினம். இயேசு தான் நமது எடுத்துக்காட்டு. இந்த உலகை, உலகிலுள்ள ஒவ்வொரு பொருள், இடம் எல்லாவற்றையும் பார்த்து பார்த்து ரசித்து படைத்த நம் இயேசுவை, அவரின் படைப்பான மனிதனே, சிலுவையில் தொங்க விட்டு, அதுவும் நிர்வாணமாய் தொங்க விட்டான். அவர்களையும் மன்னித்தார் இயேசு.

 பரமண்டலங்களில் இருக்கிற எங்கள் பிதாவே ஜெபத்தில், பிறருடைய குற்றங்களை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னியும் என்று போதித்தார். அதனுடைய இன்னொரு அர்த்தம், பிறருடைய குற்றங்களை நாம் மன்னிக்கவில்லை என்றால், நம் குற்றங்களை அவர் மன்னிக்க மாட்டார்

3. விசேஷித்த ஓய்வு நாள்

இந்த நாளினை ஓய்வு நாளாக கொண்டாடி, எந்த ஒரு வேலையும் செய்ய மாட்டார்கள். இந்த நாளில் அவர்கள் செய்வது எல்லாம், தேவனை நோக்கி அமர்ந்திருப்பது மட்டும் தான்.

4. உபவாசம்

தோராயமாக 25 மணி நேரம் உபவாசம் இருப்பார்கள். இன்று சூரிய மறைவு முதல், நாளை சூரிய மறைவு வரை உபவாசம் இருப்பார்கள். லேவி 16- 31ல் ஆத்துமாவை தாழ்மைப்படுத்த வேண்டும் என்று தேவன் கூறி இருப்பார். “உங்களுக்கு அது விசேஷித்த ஓய்வுநாள்; அதிலே உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப் படுத்தக்கடவீர்கள்; இது நித்திய கட்டளை”.

ஆனால், தாவீது, “நான் உபவாசத்தால் என் ஆத்துமாவை உபத்திரப்படுத்தினேன்” என்று சங்கீதம் 35-13ல் கூறி இருப்பார். இந்த உபவாசம் அவர்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்காக, மற்றும் மனந்திரும்புதலுக்காக.

ஆத்துமாவின் ஒடுக்கம் என்பதால், வெறும் உபவாசம் மட்டும் அல்ல, அன்றைய தினம் விலை கூடிய உடைகள், லெதர் ஷூ அணிவது என்று சில வெளி அடையாளங்களையும் காட்டுவார்கள். 

5. வெள்ளை உடை

இந்த நாளில், பெரும்பாலான யூதர்கள் வெள்ளை உடை அணிந்து இருப்பார்கள். தூய்மை மற்றும் மனத்தாழ்மைக்கு அடையாளமாக, தேவன் நம் பாவத்தை மன்னித்ததற்கு அடையாளமாக வெள்ளை உடை போடுவர்.

6. கதவு அடைக்கப்படும்

யூத பாரம்பரிய நம்பிக்கையின்படி, Gates of Heaven எனப்படும் பரலோகத்தின் கதவு அடைக்கப்படும் நாள் இன்றுதான். இதுவரை திறந்து இருக்கிற புத்தகங்கள், எக்காளம் ஊதியவுடன் மூடப்படும், இந்த வருடத்துக்கான நியாயத்தீர்ப்புக்கு முத்திரை போடப்படும் என்று நம்புகிறார்கள். இந்த நாள் தான் மனம் திரும்புதலுக்கான கடைசி நாள். இதை விட்டு விட்டால், அடுத்த வருடம் எபிரேய ஏழாம் மாதம் வரை காத்திருக்க வேண்டும். அதற்கு இடையில் மரணம் வந்து விட்டால், கொடுத்த தருணத்தை இழந்து விட்டோம் என்று கருதுகிறார்கள்.

நமக்கு இயேசுவின் இரத்தம் மூலம், எப்பொழுது வேண்டுமானாலும் மன்னிப்பு பெற்றுக் கொள்ளலாம். ஆனால், நம் கடைசி நாள் என்ன என்பது நாம் அறியாததே… எனவே ஒருவேளை ஏதேனும் ஒரு காரியத்துக்காக மனம் திரும்ப வேண்டுமானால், இன்றே திரும்புவோம். பாவ நிவிர்த்தி நாளை சந்தோஷமாக கொண்டாடலாம்.

Similar Posts

  • |

    Day 138 (18-05-2025)

    Scripture Portion: Psalm 26,40,58,61-62, 64 சங்கீதம் 26 (தாவீதின் சங்கீதம்) 1கர்த்தாவே, என்னை நியாயம் விசாரியும், நான் என் உத்தமத்திலே நடக்கிறேன்; நான் கர்த்தரை நம்பியிருக்கிறேன், ஆகையால் நான் தள்ளாடுவதில்லை. 2கர்த்தாவே, என்னைப் பட்சித்து, என்னைச் சோதித்துப்பாரும்; என் உள்ளிந்திரியங்களையும் என் இருதயத்தையும் புடமிட்டுப்பாரும். 3உம்முடைய கிருபை என் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; உம்முடைய சத்தியத்திலே நடந்துகொள்ளுகிறேன். 4வீணரோடே நான் உட்காரவில்லை, வஞ்சகரிடத்தில் நான் சேருவதில்லை. 5பொல்லாதவர்களின் கூட்டத்தைப் பகைக்கிறேன்; துன்மார்க்கரோடே உட்காரேன். 6கர்த்தாவே, நான் துதியின் சத்தத்தை தொனிக்கப்பண்ணி, உம்முடைய அதிசயங்களையெல்லாம்…

  • |

    Day 313 (09-11-2025)

    Scripture Portion: Matthew26, Mark14 மத்தேயு 26 1இயேசு இந்த வசனங்களையெல்லாம் சொல்லி முடித்தபின்பு, அவர் தம்முடைய சீஷரை நோக்கி: 2இரண்டுநாளைக்குப்பின்பு பஸ்காபண்டிகை வருமென்று அறிவீர்கள்; அப்பொழுது, மனுஷகுமாரன் சிலுவையில் அறையப்படுவதற்கு ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றார். 3அப்பொழுது, பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் ஜனத்தின் மூப்பரும், காய்பா என்னப்பட்ட பிரதான ஆசாரியனுடைய அரமனையிலே கூடிவந்து, 4இயேசுவைத் தந்திரமாய்ப் பிடித்துக்கொலைசெய்யும்படி ஆலோசனை பண்ணினார்கள். 5ஆகிலும் ஜனங்களுக்குள்ளே கலகமுண்டாகாதபடிக்குப் பண்டிகையிலே அப்படிச்செய்யலாகாது என்றார்கள். 6இயேசு பெத்தானியாவில் குஷ்டரோகியாயிருந்த சீமோன் வீட்டில் இருக்கையில், 7ஒரு…

  • |

    Day 214 (02-08-2025)

    Scripture Portion: 2 kings 20-21 2 இராஜாக்கள் 20 1அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தான்; அப்பொழுது ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குப்படுத்தும்; நீர் பிழைக்கமாட்டீர், மரித்துப்போவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். 2அப்பொழுது எசேக்கியா தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு, கர்த்தரை நோக்கி: 3ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மனஉத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணினான். எசேக்கியா மிகவும் அழுதான்….

  • |

    Day 119 (29-04-2025)

    Scripture Portion: 1 Chronicles 7-10 1 நாளாகமம் 7 1இசக்காருடைய குமாரர், தோலா, பூவா, யசுப், சிம்ரோன் என்னும் நாலு பேர். 2தோலாவின் குமாரர், ஊசி, ரெப்பாயா, யெரியேல், யக்மாயி, இப்சாம், சாமுவேல் என்பவர்கள்; தோலாவுக்குப் பிறந்த இவர்கள் தங்கள் பிதாக்கள் வம்சத்தலைவரும் தங்கள் சந்ததிகளிலே பராக்கிரமசாலிகளுமாயிருந்தார்கள்; தாவீதின் நாட்களில் அவர்கள் தொகை இருபதினாயிரத்து அறுநூறு பேராயிருந்தது. 3ஊசியின் குமாரரில் ஒருவன் இஸ்ரகியா; இஸ்ரகியாவின் குமாரர், மிகாயேல், ஒபதியா, யோவேல், இஷியா என்பவர்கள்; இவர்கள் ஐந்துபேரும்…

  • |

    Day 200 (19-07-2025)

    Scripture Portion: 2 kings 18:1-8, 2 Chronicles 29-31, Psalm 48 2 இராஜாக்கள் 18: 1-8 1இஸ்ரவேலின் ராஜாவாகிய ஏலாவின் குமாரன் ஓசெயாவின் மூன்றாம் வருஷத்திலே ஆகாஸ் என்னும் யூதாவுடைய ராஜாவின் குமாரனாகிய எசேக்கியா ராஜாவானான். 2அவன் ராஜாவாகிறபோது, இருபத்தைந்து வயதாயிருந்து, எருசலேமிலே இருபத்தொன்பது வருஷம் அரசாண்டான்; சகரியாவின் குமாரத்தியாகிய அவன் தாயின் பேர் ஆபி. 3அவன் தன் தகப்பனாகிய தாவீது செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான். 4அவன் மேடைகளை அகற்றி, சிலைகளைத் தகர்த்து, விக்கிரகத்தோப்புகளை…

  • |

    Day 83 (24-03-2025)

    Scripture Portion: Joshua 5-8 யோசுவா 5 1இஸ்ரவேல் புத்திரர் கடந்து தீருமளவும், கர்த்தர் யோர்தானின் தண்ணீரை அவர்களுக்கு முன்பாக வற்றிப்போகப்பண்ணினதை, யோர்தானுக்கு மேல்கரையில் குடியிருந்த எமோரியரின் சகல ராஜாக்களும், சமுத்திரத்தருகே குடியிருந்த கானானியரின் சகல ராஜாக்களும் கேட்டதுமுதற்கொண்டு, அவர்கள் இருதயம் கரைந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகச் சோர்ந்துபோனார்கள். 2அக்காலத்திலே கர்த்தர் யோசுவாவை நோக்கி: நீ கருக்கான கத்திகளை உண்டாக்கி, திரும்ப இரண்டாம்விசை இஸ்ரவேல் புத்திரரை விருத்தசேதனம்பண்ணு என்றார். 3அப்பொழுது யோசுவா கருக்கான கத்திகளை உண்டாக்கி, இஸ்ரவேல் புத்திரரை ஆர்லோத் மேட்டிலே விருத்தசேதனம்பண்ணினான்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *