|

பண்டிகைகள்-3 (பாவ நிவிர்த்தி நாள்)

Yom Kippur (Day of Atonement)

பாவ நிவிர்த்தி நாள்

Happy Yom kippur (Day of Atonement)

September 24,2023 Evening 6லிருந்து, September 25 Evening வரை பாவ நிவிர்த்தி நாள் என்கிற  ஆறாம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆம், இன்று எபிரேய காலண்டரில் ஏழாவது மாதம் 10ம் தேதி. கர்த்தர் கொண்டாடச் சொல்லிய ஏழு பண்டிகைகளில், ஆறாவது பண்டிகை இன்று. எபிரேய ஏழாம் மாதத்தில் முதல் நாள் Rosh Hashannah என்று, முதல் பதிவாகப் படித்தோம். ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், எபிரேய ஏழாம் மாதம் முதல் தேதியிலிருந்து, எபிரேய ஏழாம் மாதம் பத்தாம் தேதி வரை, இந்த 10 நாட்களை பரவசத்தின் நாட்கள் (Days of Awe) என்று கூறுகிறார்கள். 10 days of Fasting என்று இந்த நாட்களை நியமித்து,  பத்தாவது நாளுக்காக காத்திருப்பார்கள். இந்த நாளானது இஸ்ரேலருக்கு அவ்வளவு முக்கியமான நாள். இந்த 10 நாட்களும் பரலோகத்தின் தேவனிடம் மன்றாடி, தங்கள் பெயரை ஜீவபுஸ்தகத்தில் எழுத வைக்கும் நாட்களாக கருதுகின்றனர். கடந்த ஒரு வருடம் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு பெறும் நாட்களாக கருதுகின்றனர். இன்றைய நாளின் முடிவில் ஒரு எக்காளம் ஊதுவார்கள். அதோடு பரலோகத்தின் கதவுகள் மூடப்படுவதாக கருதுகின்றனர் இஸ்ரவேலர்கள்.

ஏன் அப்படி  நினைக்கிறார்கள்? அதற்கு லேவியராகமம் 16ம் அதிகாரத்துக்கு செல்ல வேண்டும். வருடத்துக்கு ஒரு முறை பிரதானஆசாரியன் மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள் செல்வார் என்று அடிக்கடி கேட்டிருக்கிறோம் அல்லவா… அந்த நாள் இன்றைக்குத்தான். இந்த நாளில்.

லேவி 16ல் பாவ நிவாரண பலி, சர்வாங்க தகன பலிக்கான செய்முறை குறித்து ஆண்டவர் பேசி இருப்பார். ஆரோன் தனக்காக பாவ நிவாரண பலி செலுத்தி விட்டு, பின்னர் இஸ்ரவேலர் எல்லோருக்காகவும் செலுத்த வேண்டும். இரண்டு வெள்ளாட்டுக்கடா எடுத்துக் கொண்டு, சீட்டு போட்டு பார்த்து விட்டு, சீட்டில் வந்த வெள்ளாட்டுக்கடாவை கர்த்தருக்கென்று, பிரித்து வைக்க வேண்டும். முதலில் ஆரோன், தனக்காக காளையை பலியிட்டு, அதன் இரத்தத்தை ஏழு தரம் தெளிக்க வேண்டும். பின்பு ஜனங்களின் பாவத்துக்காக சீட்டில் விழுந்த வெள்ளாட்டுக்கடாவை எடுத்து பலியிட்டு, அதன் இரத்த்த்தையும் தெளிக்க வேண்டும்.  மற்றொரு கடாவை, பிரதான ஆசாரியன், அதன் தலையின் மீது கை வைத்து, இஸ்ரவேலர் எல்லோருடைய பாவத்தையும் அதன் தலையில் சுமத்தி, அதை வனாந்திரத்தில் போக்காடாக விட வேண்டும். 

ஆண்டவர் கொடுத்த கட்டளை, அது விசேஷித்த ஓய்வு நாள். அதில் ஆத்துமாவை தாழ்த்த வேண்டும். இது தான் ஆண்டவர் கொடுத்த கட்டளை.

பிரதான ஆசாரியன் அந்த நாளில் தெளித்த இரத்தம், மிக குறைந்த நேரம் மட்டுமே கர்த்தருடைய சன்னிதியில், பிரதான ஆசாரியனை நிற்க வைத்தது.  ஆனால் இன்று நமக்கான பலி, இயேசு கிறிஸ்து. அவருடைய இரத்ததின் பரிசுத்தம், நம்மை எப்பொழுதும், எந்நேரமும் அவருடைய சன்னிதியில் நிற்க வைத்திருக்கிறது. இப்பொழுது இஸ்ரவேலர் இந்த பண்டிகையில் என்ன செய்கிறார்கள் என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

  1. மன்னிப்பு கேளுங்கள்

 

இந்த நாட்களில், தேவனிடம் மட்டுமல்ல, பிற மனிதர்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது தெரிந்தாலும், நாம் அவர்களிடம் உண்மையான மனதுடன் மன்னிப்பு கேட்க வேண்டியது அவசியம்.

2. பிறரை மன்னியுங்கள்

மன்னிப்பு கேட்பது கூட சில சமயங்களில் எளிது. ஆனால் பூரணமாக மன்னிப்பது மிகவும் கடினம். இயேசு தான் நமது எடுத்துக்காட்டு. இந்த உலகை, உலகிலுள்ள ஒவ்வொரு பொருள், இடம் எல்லாவற்றையும் பார்த்து பார்த்து ரசித்து படைத்த நம் இயேசுவை, அவரின் படைப்பான மனிதனே, சிலுவையில் தொங்க விட்டு, அதுவும் நிர்வாணமாய் தொங்க விட்டான். அவர்களையும் மன்னித்தார் இயேசு.

 பரமண்டலங்களில் இருக்கிற எங்கள் பிதாவே ஜெபத்தில், பிறருடைய குற்றங்களை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னியும் என்று போதித்தார். அதனுடைய இன்னொரு அர்த்தம், பிறருடைய குற்றங்களை நாம் மன்னிக்கவில்லை என்றால், நம் குற்றங்களை அவர் மன்னிக்க மாட்டார்

3. விசேஷித்த ஓய்வு நாள்

இந்த நாளினை ஓய்வு நாளாக கொண்டாடி, எந்த ஒரு வேலையும் செய்ய மாட்டார்கள். இந்த நாளில் அவர்கள் செய்வது எல்லாம், தேவனை நோக்கி அமர்ந்திருப்பது மட்டும் தான்.

4. உபவாசம்

தோராயமாக 25 மணி நேரம் உபவாசம் இருப்பார்கள். இன்று சூரிய மறைவு முதல், நாளை சூரிய மறைவு வரை உபவாசம் இருப்பார்கள். லேவி 16- 31ல் ஆத்துமாவை தாழ்மைப்படுத்த வேண்டும் என்று தேவன் கூறி இருப்பார். “உங்களுக்கு அது விசேஷித்த ஓய்வுநாள்; அதிலே உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப் படுத்தக்கடவீர்கள்; இது நித்திய கட்டளை”.

ஆனால், தாவீது, “நான் உபவாசத்தால் என் ஆத்துமாவை உபத்திரப்படுத்தினேன்” என்று சங்கீதம் 35-13ல் கூறி இருப்பார். இந்த உபவாசம் அவர்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்காக, மற்றும் மனந்திரும்புதலுக்காக.

ஆத்துமாவின் ஒடுக்கம் என்பதால், வெறும் உபவாசம் மட்டும் அல்ல, அன்றைய தினம் விலை கூடிய உடைகள், லெதர் ஷூ அணிவது என்று சில வெளி அடையாளங்களையும் காட்டுவார்கள். 

5. வெள்ளை உடை

இந்த நாளில், பெரும்பாலான யூதர்கள் வெள்ளை உடை அணிந்து இருப்பார்கள். தூய்மை மற்றும் மனத்தாழ்மைக்கு அடையாளமாக, தேவன் நம் பாவத்தை மன்னித்ததற்கு அடையாளமாக வெள்ளை உடை போடுவர்.

6. கதவு அடைக்கப்படும்

யூத பாரம்பரிய நம்பிக்கையின்படி, Gates of Heaven எனப்படும் பரலோகத்தின் கதவு அடைக்கப்படும் நாள் இன்றுதான். இதுவரை திறந்து இருக்கிற புத்தகங்கள், எக்காளம் ஊதியவுடன் மூடப்படும், இந்த வருடத்துக்கான நியாயத்தீர்ப்புக்கு முத்திரை போடப்படும் என்று நம்புகிறார்கள். இந்த நாள் தான் மனம் திரும்புதலுக்கான கடைசி நாள். இதை விட்டு விட்டால், அடுத்த வருடம் எபிரேய ஏழாம் மாதம் வரை காத்திருக்க வேண்டும். அதற்கு இடையில் மரணம் வந்து விட்டால், கொடுத்த தருணத்தை இழந்து விட்டோம் என்று கருதுகிறார்கள்.

நமக்கு இயேசுவின் இரத்தம் மூலம், எப்பொழுது வேண்டுமானாலும் மன்னிப்பு பெற்றுக் கொள்ளலாம். ஆனால், நம் கடைசி நாள் என்ன என்பது நாம் அறியாததே… எனவே ஒருவேளை ஏதேனும் ஒரு காரியத்துக்காக மனம் திரும்ப வேண்டுமானால், இன்றே திரும்புவோம். பாவ நிவிர்த்தி நாளை சந்தோஷமாக கொண்டாடலாம்.

Similar Posts

  • |

    Day 80 (21-03-2025)

    Scripture Portion: Deuteronomy 30-31 உபாகமம் 30 1நான் உனக்கு முன்பாக வைத்த ஆசீர்வாதமும் சாபமுமாகிய இந்தக் காரியங்களெல்லாம் உன்மேல் வரும்போது: நீ உன் தேவனாகிய கர்த்தரால் துரத்திவிடப்பட்டு, எல்லா ஜாதிகளிடத்திலும் போயிருக்கும்போது, நீ உன் இருதயத்திலே சிந்தனைசெய்து, 2உன் தேவனாகிய கர்த்தரிடத்துக்கே திரும்பி, இன்று நான் உனக்குக் கற்பிக்கிறபடியெல்லாம், நீயும் உன் பிள்ளைகளும் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அவருடைய சத்தத்திற்குச் செவிகொடுத்தால், 3உன் தேவனாகிய கர்த்தர் உன் சிறையிருப்பைத் திருப்பி, உனக்கு இரங்கி, உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிதற…

  • |

    இஸ்ரேல் – 49

    இதுவரையில் 48 பதிவுகள் இஸ்ரேலைப்பற்றி பதிவிட்டிருக்கிறோம். தற்போதுள்ள சூழலில், இஸ்ரேலின் யுத்தம் பற்றி பல பதிவுகள் வெளியிடலாம். ஆனால், அதை வெளியிடப் போவதில்லை. ஆகவே இந்த பதிவுடன், இஸ்ரேலைப் பற்றிய என் பதிவை முடிக்கிறேன். ஒருவேளை இஸ்ரேலுக்கு இப்போது என்ன நடக்கிறது என நீங்கள் அறிய விரும்பினால், Tamil Pokkisham என்ற YouTube Channelல் தினமும் மிக தெளிவான அப்டேட்டுகள் கிடைக்கிறது. (நான் தமிழ் பொக்கிஷத்தின் மூலம் நிறைய காரியங்கள் அறிந்து கொண்டதினால் இதை ஒரு suggestionஆக…

  • |

    Day 132 (12-05-2025)

    Scripture Portion: Psalm 65-67, 69-70 சங்கீதம் 65 (இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதமாகிய பாட்டு) 1தேவனே, சீயோனில் உமக்காகத் துதியானது அமைந்து காத்திருக்கிறது; பொருத்தனை உமக்குச் செலுத்தப்படும். 2ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள். 3அக்கிரம விஷயங்கள் என்மேல் மிஞ்சி வல்லமை கொண்டது; தேவரீரோ எங்கள் மீறுதல்களை நிவிர்த்தியாக்குகிறீர். 4உம்முடைய பிராகாரங்களில் வாசமாயிருக்கும்படி நீர் தெரிந்துகொண்டு சேர்த்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்; உம்முடைய பரிசுத்த ஆலயமாகிய உமது வீட்டின் நன்மையால் திருப்தியாவோம். 5பூமியின் கடையாந்தரங்களிலும் தூரமான சமுத்திரங்களிலுமுள்ளவர்கள்…

  • |

    Day 105 (15-04-2025)

    Scripture Portion: Psalm 7,27,31,34,52 சங்கீதம் 7 (பென்யமீனியனாகிய கூஷ் என்பவனுடைய வார்த்தைகளினிமித்தம் தாவீது கர்த்தரை நோக்கிப் பாடின சிகாயோன் என்னும் சங்கீதம்.) 1என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் எல்லாருக்கும் என்னை விலக்கி இரட்சியும். 2சத்துரு சிங்கம்போல் என் ஆத்துமாவைப் பிடித்துக்கொண்டுபோய், விடுவிக்கிறவன் இல்லாமையால், அதைப் பீறாதபடிக்கு என்னைத் தப்புவியும். 3என் தேவனாகிய கர்த்தாவே, நான் இதைச் செய்ததும், என் கைகளில் நியாயக்கேடிருக்கிறதும், 4என்னோடே சமாதானமாயிருந்தவனுக்கு நான் தீமைசெய்ததும், காரணமில்லாமல் எனக்குச் சத்துருவானவனை நான் கொள்ளையிட்டதும் உண்டானால், 5பகைஞன் என் ஆத்துமாவைத்…

  • |

    இஸ்ரேல்–25 (தாவீதின் பாவம்)

    தாவீதின் பாவம் தாவீதைப் பற்றிய பல காரியங்களைப் பார்த்தோம். பலருக்கு தாவீது என்றவுடன், பத்சேபாள் தான் நினைவுக்கு வருவார். அதைத் தாண்டி, தாவீது செய்த பல காரியங்களைப் பார்த்தோம். அதிலும் இராட்சதர்களை பூமியில் இராமல் அழித்து போட்டவர் தாவீது என்பது முக்கியமானது. தாவீது பாவம் செய்யவில்லையா? ஆம், அவர் பாவம் செய்தார். பத்சேபாளுடன் செய்தது பாவம் தான். அது மட்டும்தானா என்றால் இல்லை. தாவீது இன்னொரு முக்கியமான பாவம் செய்தார். என்ன அது? 2 சாமுவேல் 24…

  • |

    Day 246 (03-09-2025)

    Scripture Portion: Ezekiel 22-23 எசேக்கியேல் 22 1பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 2இப்போதும் மனுபுத்திரனே, இரத்தஞ்சிந்தின நகரத்துக்காக நீ வழக்காடுவாயோ? வழக்காட மனதானால், நீ அதின் அருவருப்புகளையெல்லாம் அதற்குத் தெரியக்காட்டி, 3அதை நோக்கி: கர்த்தருடைய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், உன் காலம் வரத்தக்கதாக உன் நடுவிலே இரத்தஞ்சிந்துகிறதும், உன்னைத் தீட்டுப்படுத்தத்தக்கதாக உனக்கே விரோதமாய் நரகலான விக்கிரகங்களை உண்டுபண்ணுகிறதுமான நகரமே, 4நீ சிந்தின உன் இரத்தத்தினால் நீ குற்றஞ்சுமந்ததாகி, நீ உண்டுபண்ணின உன் நரகலான விக்கிரகங்களால் நீ தீட்டுப்பட்டு, உன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *