|

நன்றியுடன் 21 நாட்கள் Day – 13

Day – 13 (13- டிசம்பர், 2023)

ஆவிக்குரிய ஆசீர்வாதங்களுக்காக நன்றி

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்.

எபேசியர் 1 -3

  1. Praised be ADONAI, Father of our Lord Yeshua the Messiah, who in the Messiah has blessed us with every spiritual blessing in heaven.

கர்த்தர் நம்மை ஆவிக்குரிய சகல ஆசீர்வாதங்களாலும் ஆசீர்வதித்திருக்கிறார். அதற்காக நன்றி சொல்வோம். அது என்ன ஆவிக்குரிய ஆசீர்வாதம்? நிறைய நாட்கள், ஆவிக்குரிய ஆசீர்வாதம் என்றால் என்ன என்றே தெரியாமல், அதற்கு நன்றி சொல்லி இருப்போம். ஆனால் நமக்கு தெரிந்த காரியங்கள்தான், ஆனால் இவை தான் ஆவிக்குரிய ஆசீர்வாதம் என்பதை உணராமல் நன்றி சொல்லியிருப்போம். எபேசியர் 1ம் அதிகாரத்தில், வரிசையாக அந்த ஆசீர்வாதங்கள் சொல்லப்பட்டிருக்கும்.

  1. In the Messiah, he chose us in love before the creation of the universe to be holy and without defect in his presence.

அவருக்கு முன்பாக, நாம் பரிசுத்தமுள்ளவர்களாய் இருக்கிறோம், குற்றமற்றவர்களாய் இருக்கிறோம் என்பது ஆவிக்குரிய ஆசீர்வாதம். கொஞ்சம் யோசித்து பார்ப்போம், நாம் யார் என்பது நமக்கு தெரியும். “நான் பரிசுத்தவான், நான் குற்றமற்றவன்” என்று ஒரு மனிதன் கூறினால், அது சுயமாக அவனாலேகூட, ஏற்றுக்கொள்ள முடியாதது. ஏனெனில் எல்லாரும் மனிதர்கள் தான். ஆனால், தேவனுடைய பார்வையில் நாம் பரிசுத்தமானவர்கள், குற்றமற்றவர்கள். இன்னும் சொல்லப்போனால், பிதா நம்மைப் பார்க்கும்போது, நாம் பரிசுத்தமானவர்களாக தெரிவோம், ஏனெனில் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் நம்மைக் கழுவி விட்டது. எத்தனை பெரிய பாக்கியம் அல்லவா! பிதாவினுடைய பார்வையில் நாம் பரிசுத்தவான்களாக தெரிகிறோம். இந்த பெரிய ஆவிக்குரிய ஆசீர்வாதத்துக்காக நாம் நன்றி சொல்லலாமே!

  1. In the Messiah, he chose us in love before the creation of the universe to be holy and without defect in his presence.

உலகத்தோற்றத்துக்கு முன்னரே நம்மை தெரிந்து கொண்டாராம். அதாவது, வெளிச்சம் உண்டாகக்கடவது என்று வெளிச்சத்தை படைக்கும் முன்னரே, நமக்கான திட்டம் உருவாக்கி, நம்மை தெரிந்து கொண்ட ஒரு நல்ல தேவன் நமக்கு இருக்கிறார். தேவனுக்கு முன்பாக நம்முடைய நிலை (Status) இப்படி இருக்கும் என்று அப்போதே முன் குறித்து இருக்கிறார். ஒருவேளை நாம், இயேசு பிறப்பதற்கு முன்பாக, கிமு காலத்தில் பிறந்து இருந்தால், நாம் அவருடைய இரத்தத்தால் கழுவப்பட முடியாது. ஒருவேளை கிபி காலத்தில், சுவிசேஷம் இவ்வளவு பரவுவதற்கு முன் நாம் பிறந்திருந்தால், அவரை அறிந்திருக்க முடியாது. இப்போது, நாம் இருக்கும் காலம் ஒரு பொற்காலம். உலகம் நம் கைக்குள் வந்து விட்டது. வேத புத்தகம் நம் கைகளில் தவழ்கிறது. உலகத் தோற்றத்துக்கு முன்னரே, நமக்கு இவ்வளவு சிறப்பான காலத்தில் பிறக்க அவர் வைத்திருந்த திட்டத்தை எண்ணி, அந்த ஆவிக்குரிய ஆசீர்வாதத்துக்காக நன்றி சொல்லலாமே!

  1. He determined in advance that through Yeshua the Messiah we would be his sons – in keeping with his pleasure and purpose –

தமக்கு சுவிகார புத்திரராகும்படி, நம்மை முன்குறித்திருக்கிறார். இஸ்ரவேலர் ஆபிரகாமின் சந்ததி என்று பெருமை பாராட்டுவார்கள். அவர்கள் மாம்சத்தின்படி ஆபிரகாமின் பிள்ளைகள், நாமோ, இஸ்ரவேலர் அல்ல. அவர்கள் பார்வையில் புற ஜாதிகள்(Gentiles). ஆனால் தேவன் நம்மை தத்தெடுத்து இருக்கிறாராம், அதுவும் அவருடைய சொந்த பிள்ளைகளாய். இயேசுவின் மூலமாக, நாம் தேவனுக்கு பிள்ளைகளாகி விட்டோம். சொந்த பிள்ளைகளே, இயேசுவை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிறார்கள். ஆனால், நாம் இயேசுவை ஏற்றுக் கொண்டதால், அவருடைய சொந்த பிள்ளைகளாகி விட்டோம். இஸ்ரவேலரிலும் மேன்மையான ஆசீர்வாதங்களை சுதந்தரித்து விட்டோம். தேவனுக்கு நன்றி சொல்வோம்.

7.In union with him, through the shedding of his blood, we are set free – our sins are forgiven; this accords with the wealth of the grace

நாம் விடுதலையாக்கப்பட்டு விட்டோம். நாம் பாவிகள் அல்ல. இயேசுவின் இரத்தம் நம்மைக் கழுவி விட்டது.  அவருடைய கிருபைக்குள் இருக்கிறோம்.  நம் பாவங்கள் மன்னிக்கப்பட்டு விட்டது என்ற நிச்சயம் நமக்கு வேண்டும். பாவ மன்னிப்பு என்ற ஆவிக்குரிய ஆசீர்வாதம் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை ஏற்றுக்கொண்டு, அதை நினைத்து கர்த்தருக்கு நன்றி சொல்லலாமே!

இன்னும் அனேக ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் வேதத்தில் உள்ளது. ஞானஸ்நானம் மூலமாக அவருடன் மரித்து உயிர்த்தெழுந்து விட்டோம். நாம் ஆவிக்குரியவர்கள் ஆகிவிட்டோம், நீதிமான்கள் ஆகிவிட்டோம். ஆதாம் இழந்த ஆசீர்வாதங்கள் நமக்கு கிடைத்து விட்டது. கிறிஸ்துவின் மணவாட்டி ஆகிவிட்டோம். அதை எல்லாம் நினைத்துப் பார்த்து தேவனுக்கு நன்றி சொல்வோம்.

Similar Posts

  • |

    பொருளாதாரத்துக்கான விசுவாச அறிக்கை

    பொருளாதாரத்துக்கான விசுவாச அறிக்கை ஏதோ பாரம்பரியமாக விசுவாச அறிக்கைகளைச் சொன்னால், நிச்சயமாக எந்த பலனும் கிடையாது. நாம் தேவனுடைய பிள்ளை என்கிற அதிகாரத்தை உணர்ந்து, விசுவாசத்தோடு கூறி, அதன் பலனைப் பெற்றுக் கொள்வோம். வசன அறிக்கைகள் பரிசுத்தமுள்ள என் தேவன் எனக்கு கொடுத்த அதிகாரத்தினால், மற்றும் இயேசுவின் நாமத்தினால் நான் அறிக்கையிடுகிறேன். என் கடன்கள் யாவும் கட்டி தீர்ந்தது. எனக்கான பொருளாதார ஆசீர்வாதத்தை நான் கட்டவிழ்க்கிறேன். பரலோகத்திலும் அவை கட்டவிழ்க்கப்படுவதாக. தேவன் எனக்கு கொடுத்த அதிகாரத்தினாலே, என்…

  • |

    ஆவிக்குரிய வாழ்க்கைக்கான விசுவாச அறிக்கைகள்

    ஆவிக்குரிய வாழ்க்கைக்கான விசுவாச அறிக்கைகள்  ஆழமான அறிக்கைகள் என்று சொல்வதை விட, ஆவிக்குரிய வாழ்க்கைக்கான அடிப்படை அறிக்கைகள் என்று கூறலாம். நான் நீதிமான் என்னும் தலைப்பில் உள்ள விசுவாச அறிக்கைகள் இன்னும் ஆழமாக தேவனிடம் சேர்க்கும். ஆனால் எந்தவொரு விஷயத்தையும் பாரம்பரியமாக வாசிப்பதால் எந்த பயனும் இல்லை. உண்மையாக புரிந்து தினமும் அறிக்கையிட்டால், தேவனுக்குள் இன்னும் ஆழமாகச் செல்லலாம்.  வசன அறிக்கைகள் நான் கிறிஸ்துவுக்குள் இருக்கிறேன். நான் இப்போது பழைய மனுஷன் அல்ல. புது சிருஷ்டியாயிருக்கிறேன். என்…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 2

    Day – 2 (02- டிசம்பர், 2023) நல்ல குடும்பத்துக்காக நன்றி இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள். இன்று நாம் நன்றி சொல்ல இருப்பது நம் குடும்பத்திற்காக. தேவன் நமக்கு குடும்பத்தை தந்திருக்கிறார். நன்றி சொல்வது நம் கடமை. நாம் எப்போதுமே இருப்பதை உணராமல், இல்லாததை நினைத்தே கவலைப்படுபவர்கள். ஒருவேளை, கணவரின் சம்பளம் குறைவு என்றால் அல்லது, கணவர் குடிக்கிறார் என்றால், மனைவி எப்போதும் ஏதாவது சொல்லிக் கொண்டே இருக்கிறார் என்றால், இவரைப் போய் திருமணம் செய்து விட்டோமே…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 5

    Day – 5 (05- டிசம்பர், 2023) குறைவுகளை நிறைவாக்கினீர் நன்றி இந்த வருடம் முழுவதும் நம்மை போஷித்தார், ஆதலால் தேவனுக்கு நன்றி சொல்வோம் என்று சபையில் ஊழியர்கள் சொல்லும்போது, அந்த நேரத்தில் கூட, “ஆண்டவரே என் குறையை மாற்றும்” என்று ஜெபிப்பவர்கள் உண்டு. அல்லது, அடுத்த வருடம் இதே ஜெபத்தில் நானும் நன்றி சொல்கிற அளவு உயர வேண்டும் என்று ஜெபிப்பவர்களும் உண்டு. ஆனால் இன்று, நாம் இருக்கிற இந்த நிலைக்கு, நன்றி சொல்ல வேண்டும்…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 19

    Day – 19 (19- டிசம்பர், 2023) இரட்சிப்புக்காக நன்றி தேவன் இந்த உலகத்தை மனிதனிடம் கொடுத்து, பலுகி பெருகுங்கள் என்றும், எல்லாவற்றையும் ஆண்டு கொள்ளுங்கள் என்றும் கூறினார். சாத்தான் சதியால், கீழ்ப்படியாமை வந்து, தேவனோடு இருந்து நெருங்கிய தொடர்பை துண்டித்துப் போட்டது. அதன் பின்னர், இந்த உலகத்தின் அதிபதியாக சாத்தான் இருந்து நம்மை ஆண்டு வந்தான். ஒரு கூட்ட ஜனங்கள் மட்டும் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு, இஸ்ரேல் என்னும் இனமாக வாழ்ந்தார்கள். அவர்களாலும் சாத்தானை ஜெயிக்க முடியவில்லை….

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 15

    Day – 15 (15- டிசம்பர், 2023) ஆவிக்குரிய யுத்தத்தில் துணை நின்றீர் நன்றி பல நேரங்களில், சாத்தான் சில உத்திகளைப்(Strategies) பயன்படுத்தி, நம்மை மேற்கொள்ள பார்ப்பான். ஏமாற்றுதல்(deception), குற்றச்சாட்டு(accusation) ,அலட்சியம்(negligence), கிளர்ச்சி(rebelliousness), பயம்(fear), தெய்வ பக்தியின்மை(ungodliness), சோதனை(temptations) போன்ற பல காரியங்கள் நம் வாழ்வில் இருக்கும். சிலர் நம் கூடவே இருப்பார்கள், ஏமாற்றி விட்டு போயிருப்பார்கள்… நம்மை எல்லாரும் குற்றம்சாட்டி பேசுவார்கள்… மதிப்பு கொடுக்காமல் நம்மை அலட்சியப்படுத்துவார்கள்… நமக்கு நிறைய சோதனை வரும்… நம் நண்பர்களுக்குள்,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *