|

இஸ்ரேல்-33 (அமெரிக்கா வல்லரசு)

அசீரிய சாம்ராஜ்யம், பாபிலோன் சாம்ராஜ்யம், மேதிய பெர்சிய சாம்ராஜ்யம், கிரேக்க சாம்ராஜ்யம், ரோம சாம்ராஜ்யம், ஆங்கிலோ சாக்சன் சாம்ராஜ்யம் என பல சாம்ராஜ்யங்களைப் பற்றி பார்த்தோம். இங்கிலாந்திடமிருந்து அமெரிக்கா 1931ல் பணபலத்தையும், 1948ல் படைபலத்தையும் வாங்கியது. 1931லே, பவுண்டுக்கு பதிலாக டாலர் பொதுபணமாக கொண்டு வரப்பட்டது. 1943ல் இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த பின்னர், வல்லரசு பதவி இங்கிலாந்திடமிருந்து அமெரிக்காவுக்கு போனது.

அமெரிக்காவைக் கண்டுபிடித்தவர் கொலம்பஸ். அவர் ஏன் கொலம்பஸ் என்று பெயர் வைக்காமல், அமெரிக்கா என்று பெயர் வைத்தார்? ஏனெனில், (Amerigo Vespucci) அமெரிக்கா என்ற கடல் விஞ்சானியாக இருந்த ஒரு மாலுமி தான், கொலம்பஸ்க்கு ரூட் போட்டுக் கொடுத்தார் அமெரிக்காவைக் கண்டுபிடிக்க. கொலம்பஸ் ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், ஸ்பெயின் நாட்டு மன்னரின் உதவியில் தான் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார். எனவே ஸ்பெயின் மக்கள் தான் அங்கே அதிகமாகக் குடியேறினர்.

கிபி 1560ல் ஸ்பெயினில் ஏற்பட்ட கிளர்ச்சியில், பெரும்பான்மையான யூதர்கள், ஸ்பெயினில் இருந்து அமெரிக்காவுக்கு குடியேறினர். அதேசமயம், மார்ட்டின் லூதர் மூலமாக புரொட்டஸ்டன்ட் அமைப்பு உருவானதால், அவர்களுக்கு எதிராக போப் அரசர் எல்லா கத்தோலிக்கர்களையும் தூண்டியதால், அதிக இரத்த சாட்சிகள் உயிரிழந்தனர். எனவே புரொட்டஸ்டன்ட் அமைப்பினரும் அதிகமாக அமெரிக்காவில் வந்து குடியேறினர். எனவே அமெரிக்காவில் யூதர்களும், கிறிஸ்தவர்களும் குடிபெயர்ந்தனர்.

The Men Who Built America என்ற documentryல், உலகத்தையே இப்போது ஆண்டு கொண்டிருக்கிற பெரும்பான்மையான யூதக் குடும்பங்களே, அமெரிக்காவை உருவாக்கினார்கள் என்று அறியலாம்.

1948ல் இஸ்ரேலைக் கைவிட்டது இங்கிலாந்து என கடந்த பதிவில் பார்த்தோம். ஆனால் அப்போதிலிருந்து இஸ்ரேலுக்கு ஆதரவாக இருப்பது அமெரிக்கா தான். வெறும் குட்டி நாடாக இஸ்ரேல் இருக்கும் போது, சுற்றியுள்ள அரபு நாடுகள் கூட்டமாக எதிர்த்தபோது, இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா சைன் பண்ணியது. அதற்குப் பின்னர்தான், அமெரிக்கா வல்லரசாக மாறியது. ஆனால் அதே அமெரிக்காவின் வீழ்ச்சி, வல்லரசாகி பின்னர் 70 ஆண்டுகளில் நடந்தது.

இங்கிலாந்து 1948ல் இஸ்ரவேலுக்கு சுதந்திரம் கொடுத்து விட்டு ஓடிப்போனது. அப்போது இஸ்ரேலின் தலைநகர் டெல்-அவிவ் (Tel-Aviv). 1949ல் இஸ்ரேல் எருசலேமை “Israel’s eternal capital” என்று அறிவித்தது. எருசலேம் அப்போது யூதர்கள் வசம் கிடையாது. அதன்பின்னர் 1967ல் எருசலேமை ஒரு போரில் இஸ்ரவேலர் கைப்பற்றினர். அதுவரையில் எருசலேம் ஜோர்தான் வசம் இருந்தது. யூதர்கள் எருசலேமுக்குள் செல்வதற்கு தடையும் இருந்தது.

1967ல் எருசலேமை இஸ்ரேலின் தலைநகராக இஸ்ரேல் அறிவித்தது. ஒரு நாடு தான், தன்னுடைய தலைநகர் எது என்று அறிவிக்க வேண்டும். ஆனால் இஸ்ரேலின் அந்த முடிவை மற்ற நாடுகள் எதிர்த்தனர். தலைநகர் எதுவோ, அங்கே தான் எல்லா நாடுகளின் embassy இருக்கும். மற்ற நாடுகள், டெல்-அவிவ் லிருந்து தங்கள் தலைநகரை எருசலேமுக்கு மாற்றாமல் எதிர்ப்பை தெரிவித்தனர்.

1995ல் அமெரிக்கா Jerusalem Embassy Act of 1995ல், அமெரிக்க தூதரகத்தை (embassy) எருசலேமுக்கு மாற்ற வேண்டும் என sign செய்தது. ஆனால் அதன்பின் ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் ஒருமுறை ஜனாதிபதியால், விலக்கு(தள்ளுபடி) sign போடப்படும். அதற்கு காரணமாக சொல்வது என்னவென்றால், National Security/ Bad things will happen. அமெரிக்காவில் யூதர்களின் எண்ணிக்கை அதிகம். எனவே அரசியல் தலைவர்கள், ஒவ்வொரு தேர்தலிலும் யூதர்களுக்கு வாக்குறுதி கொடுப்பார்கள்; “நான் ஜனாதிபதியானால், எருசலேமை இஸ்ரவேலின் தலைநகர் ஆக்குவேன்” என்று. ஆனால் அதை செய்ய மாட்டார்கள். அவர்களால் செய்ய முடியாது.

Donald Trump ஒரு பிசினஸ்மேன். அவர் அரசியல்வாதி அல்ல. அவரை எதிர்த்து போட்டியிட நின்றவர் Hilari Clinton. அவர்கள் அரசியலில் பயங்கர அனுபவம் உள்ளவர். டிரம்ப் அந்த தேர்தலில் ஜெயிப்பார் என்பதை யாரும் துளியும் நம்பியிருக்க மாட்டார்கள். டிரம்ப்பும் வாக்கு கொடுத்தார், எருசலேமை தலைநகர் ஆக்குவேன் என்று.

2017 டிசம்பரில், ஆச்சரியமாக டிரம்ப் ஜெயித்து விட்டார். “நீங்கள் வாக்கு கொடுத்தது போல, எருசலேமை இஸ்ரவேலின் தலைநகர் ஆக்குவீர்களா?” என்று அவரிடம் கேட்கப்பட்டது. சாதாரணமாக தேர்தலில் ஜெயிப்பவர்கள் எல்லாரும், “நாங்கள் கூடி ஆலோசித்து செய்வோம்” என்பார்கள். செய்ய மாட்டார்கள். டிரம்ப்போ, “நான் பதவி ஏற்றதும் செய்வேன்” என்றார். உலகநாடுகள் எல்லாரும் ஒன்றாக கூடி டிரம்ப்பை எதிர்த்தார்கள். அரபு நாடுகளுக்கு கோபம் வந்தது. ஆனால் டிரம்ப் தன் முடிவில் உறுதியாக இருந்தார்.

ஆனால், பூமியிலுள்ள அனைத்து நாடுகளும் எருசலேமிற்கு எதிராகச் சண்டையிடக் கூடுவார்கள். சகரியா 12-3

சகரியா 2ம் அதிகாரத்தில் உள்ள தீர்க்கதரிசனம் நிறைவேறியது.

ஜனவரி,20, 2018ல் டிரம்ப் பதவி ஏற்க வேண்டும். அவர் பதவி ஏற்ற பிறகு எதிர்க்க முடியாதென்று, ஜனவரி 15ல் 70 நாடுகள் ஒன்றாகக் கூடி, “எருசலேம் இஸ்ரவேலின் தலைநகர் ஆகக்கூடாது” என ஐநா சபையில் தீர்மானம் பண்ணினார்கள். டிரம்ப் அதற்கு பதிலடியாக, “20ஆம் தேதிக்கு பிறகு புதிய ஐநாவை பார்ப்பீர்கள்” என்று கூறிவிட்டார்.

இந்த இடத்தில் டிரம்ப்புக்கு பதிலாக, வேறு யாரேனும் ஜனாதிபதியாக இருந்தால், “நம் நாட்டின் பொருளாதாரம் என்ன ஆவது?” என யோசிப்பார்கள். டிரம்ப் அப்படி எல்லாம் யோசிக்கவில்லை. பிசினஸ் போல நினைத்து அதிரடி முடிவை எடுத்து விட்டார்.

ஐநா சபை, அடுத்த முயற்சியாக, UNESCO வைக் கையிலெடுத்து காரியம் சாதிக்க நினைத்தது. UNESCO ஒரு நகரத்தை கையில் எடுத்தால், வேறு யாரும் அதில் எதுவும் செய்ய முடியாது. UNESCO “நாங்கள் எருசலேமைக் கையகப்படுத்துகிறோம். ஏனெனில் எருசலேம் மிகவும் முக்கியமான இடம்” என்று அறிவித்தது. டிரம்ப் அசராமல், “நாங்கள் UNESCOவை கலைக்கிறோம்” என்று சொல்லி விட்டார். ஏனெனில் UNESCOக்கு மொத்த பண உதவியும் அமெரிக்கா தான் செய்து கொண்டிருந்தது.

கடைசி முயற்சியாக, World Courtஐ எடுத்தார்கள். World Court சொல்வதை எந்த நாடாக இருந்தாலும் கேட்க வேண்டும். “இஸ்ரேல் பாலஸ்தீனியர்களை வஞ்சிக்கிறது… … … இஸ்ரேல் PMஇடம் விசாரிக்க வேண்டும்” என World Court சொல்லியது. டிரம்ப் பதில், “அது ஒரு வேஸ்ட் ஆர்கனைசேஷன். World Courtன் நீதிபதிகள் யாரும் இனி அமெரிக்காவுக்குள் நுழையக்கூடாது” என அதிரடி உத்தரவு போட்டார். அந்த கேஸ் என்ன ஆனது என்பது அதன்பின் யாருக்கும் தெரியாது.

மே 14,2018ல் டிரம்ப் கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த அரசியல் விளையாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, எருசலேமை இஸ்ரவேலின் தலைநகர் ஆக்கினார். உண்மையில், எருசலேம் 1967லே இஸ்ரேலால் தலைநகர் என்று அறிவிக்கப்பட்டது. மற்ற நாடுகள் அதை ஏற்றுக் கொள்ளாமல் இருந்தனர். அமெரிக்கா ஏற்றுக்கொண்டதாக அறிவித்தாலும், தன் தூதரகத்தை டெல்-அவிவில் இருந்து எருசலேமுக்கு மாற்றவில்லை. ஆனால் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து, எருசலேமுக்கு தன் நாடாகிய அமெரிக்காவின் தலைநகரைக் கொண்டு சென்றவர் டிரம்ப்.

எருசலேம் திரும்பவும் தன் ஸ்தானமாகிய எருசலேமிலே குடியேற்றப்பட்டிருக்கும்.

சகரியா 12-6

அமெரிக்காவின் வீழ்ச்சி

1931ல் டாலர் பொதுப்பணமாக ஏற்றுக்கொள்ளப் பட்டது. மற்ற 185 நாடுகளும், அமெரிக்காவின் டாலரை வைத்துதான் மதிப்பிடப்பட்டது. அவ்வளவு வல்லரசான நாடு அமெரிக்கா. அமெரிக்காவில் இருந்த உலக வர்த்தக மையம் (WTC World Trade centre) 2001ல் கீழே விழுந்தது. அது தீவிரவாத தாக்குதலாக இருந்தாலும், கர்த்தருடைய கரம் எடுக்கப்பட்டதே அதன் வீழ்ச்சிக்கு காரணம்.

• ஜனாதிபதி கிளிண்டன் காலத்தில், இராணுவத்தில் ஓரினச் சேர்க்கை அனுமதிக்கப்பட்டது

• ஜனாதிபதி ஜார்ஜ் W புஷ் காலத்தில், One Christianity உருவாக்க வேண்டும் என்று, அப்போதிருந்த போப்‌அரசரை அழைத்து, பல கிறித்தவ அமைப்புகள் இணைந்து, வெள்ளை மாளிகையில் கையெழுத்து இட்டார்கள்

• John F Kennedy காலத்தில், பள்ளிகளில் வேதம் மறுக்கப்பட்டது. அதுவரை பள்ளியில் ஒரு பாடமாக சொல்லிக் கொடுக்கப்பட்ட வேதம், தடை செய்யப்பட்டது.

• அதன்பின் கலிஃபோர்னியா மாகாணத்தில், பரிசுத்த வேதாகமம் என்பது படிக்கக் கூடிய புத்தகம் அல்ல என்று தடை செய்யப்பட்டது.

• பிள்ளைகளை எக்காரணம் கொண்டும் கண்டிக்கக்கூடாது. 15 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் சுயாதீனமாக விட வேண்டும் என்று சட்டங்கள் இயற்றப்பட்டது

• பள்ளிகளில் துப்பாக்கிச்சூடு அதிகமாகியதால், 2015ல் ஒபாமா ஒரு அறிவிப்பு கொடுத்தார். சிலர் மாத்திரம் துப்பாக்கி வைத்திருப்பதால் தான் இந்தப் பிரச்சினை. எனவே இனி எல்லாருமே துப்பாக்கி உபயோகப்‌படுத்துங்கள் என்று அவர் அறிவிப்பு, உலகையே அதிரச் செய்தது.

Donald Trump ஜனாதிபதியாகி, எருசலேமை தலைநகராக அறிவிக்க வேண்டியிருந்தது. அதுவும் நடந்து முடிந்துவிட்டதால், இப்போது அமெரிக்கா வீழ்ச்சியின் விளிம்பில் இருக்கிறது. தற்போது உலகக்கடனில் அமெரிக்கா 26% கடன், டாலருக்கு பதிலாக யூரோ என்று அமெரிக்கா வீழ்ச்சி ஏற்கனவே ஆரம்பித்து விட்டது. இப்போது நிறைய இடங்களில் டாலருக்கு பதிலாக யூரோ தான் பயன்படுத்தப் படுகிறது.

Similar Posts

  • |

    Day 256 (13-09-2025)

    Scripture Portion: Joel 1-3 யோவேல் 1 1பெத்துவேலின் குமாரனாகிய யோவேலுக்கு உண்டான கர்த்தருடைய வசனம். 2முதியோரே, இதைக் கேளுங்கள்; தேசத்தின் சகல குடிகளே, செவிகொடுங்கள்; உங்கள் நாட்களிலாவது உங்கள் பிதாக்களின் நாட்களிலாவது இப்படிப்பட்டது சம்பவித்ததுண்டா? 3இதின் செய்தியை உங்கள் பிள்ளைகளுக்குத் தெரிவியுங்கள்; இதை உங்கள் பிள்ளைகள் தங்கள் பிள்ளைகளுக்கும், அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும் சந்ததியாருக்கும் தெரிவிக்கக்கடவர்கள். 4பச்சைப்புழு விட்டதை வெட்டுக்கிளி தின்றது; வெட்டுக்கிளி விட்டதைப் பச்சைக்கிளி தின்றது; பச்சைக்கிளி விட்டதை முசுக்கட்டைப்பூச்சி தின்றது. 5வெறியரே, விழித்து அழுங்கள்; திராட்சரசம்…

  • |

    Day 269 (26-09-2025)

    Scripture Portion: Nehemiah 1-5 நெகேமியா 1 1அகலியாவின் குமாரனாகிய நெகேமியாவின் நடபடிகள்: இருபதாம் வருஷம் கிஸ்லேயு மாதத்தில் நான் சூசான் என்னும் அரமனையில் இருக்கும்போது சம்பவித்தது என்னவென்றால், 2என் சகோதரரில் ஒருவனாகிய ஆனானியும், வேறே சில மனுஷரும் யூதாவிலிருந்து வந்தார்கள்; அவர்களிடத்தில் நான் சிறையிருப்பில் மீந்து தப்பின யூதரின் செய்தியையும், எருசலேமின் செய்தியையும் விசாரித்தேன். 3அதற்கு அவர்கள்: சிறையிருப்பில் மீந்திருக்கிறவர்கள் அந்தத் தேசத்திலே மகா தீங்கையும் நிந்தையையும் அநுபவிக்கிறார்கள்; எருசலேமின் அலங்கம் இடிபட்டதும், அதின் வாசல்கள்…

  • |

    Day 140 (20-05-2025)

    Scripture Portion: Psalm 5,38, 41-42 சங்கீதம் 5 (நெகினோத் என்னும் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.) 1கர்த்தாவே, என் வார்த்தைகளுக்குச் செவிகொடும், என் தியானத்தைக் கவனியும். 2நான் உம்மிடத்தில் விண்ணப்பம் பண்ணுவேன்; என் ராஜாவே, என் தேவனே, என் வேண்டுதலின் சத்தத்தைக் கேட்டருளும். 3கர்த்தாவே, காலையிலே என் சத்தத்தைக் கேட்டருளுவீர்; காலையிலே உமக்கு நேரே வந்து ஆயத்தமாகி, காத்திருப்பேன். 4நீர் துன்மார்க்கத்தில் பிரியப்படுகிற தேவன் அல்ல; தீமை உம்மிடத்தில் சேர்வதில்லை. 5வீம்புக்காரர் உம்முடைய கண்களுக்கு முன்பாக…

  • |

    Day 260 (17-09-2025)

    Scripture Portion: Daniel 10-12 தானியேல் 10 1பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் அரசாண்ட மூன்றாம் வருஷத்திலே பெல்தெஷாத்சார் என்று பெயரிடப்பட்ட தானியேலுக்கு ஒரு காரியம் வெளியாக்கப்பட்டது; அந்தக் காரியம் சத்தியமும் நீடிய யுத்தத்துக்கு அடுத்ததுமாயிருக்கிறது; அந்தக் காரியத்தை அவன் கவனித்து, தரிசனத்தின் பொருளை அறிந்துகொண்டான். 2அந்த நாட்களில் தானியேலாகிய நான் மூன்று வாரமுழுவதும் துக்கித்துக்கொண்டிருந்தேன். 3அந்த மூன்று வாரங்களாகிய நாட்கள் நிறைவேறுமட்டும் ருசிகரமான அப்பத்தை நான் புசிக்கவுமில்லை, இறைச்சியும் திராட்சரசமும் என் வாய்க்குள் போகவுமில்லை, நான் பரிமளதைலம்…

  • |

    விடுதலை-2 (பாஸ்டர்.விளாட் அவர்களின் வாழ்க்கை)

    பாஸ்டர்.விளாட் அவர்களின் வாழ்க்கை இந்த பதிவில், ஏற்கனவே இந்த பாவத்தில் மூழ்கி, மீண்டு வந்த பாஸ்டர்.விளாட் (Pastor.Vlad) அவர்கள் அனுபவத்தை பார்க்கலாம். “இது ஆபாச படம் பார்ப்பவர்களுக்கு தானே, எனக்கு இல்லையே” என்று தயவுசெய்து எண்ண வேண்டாம். யாரோ ஒருவருக்கு அறிவுரை சொல்லும் சூழல் வந்தால் உபயோகப்படும். நமது ஆவிக்குரிய வளர்ச்சிக்கும் உதவும் என்பதில் சந்தேகமில்லை. விளாட் உக்ரைனில் பிறந்தவர். நல்ல தேவ பக்தியான குடும்பத்தில் பிறந்தவர். அவரது வீட்டுக்குள் நல்ல அழகான அன்பான குடும்ப வாழ்க்கை…

  • |

    Day 306 (02-11-2025)

    Scripture Portion: Luke 18: 15-43, 19: 1-48 லூக்கா 18 (15-43) 16இயேசுவோ அவர்களைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டு: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள், அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது. 17எவனாகிலும் சிறு பிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அதில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 18அப்பொழுது தலைவன் ஒருவன் அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான். 19அதற்கு இயேசு: நீ என்னை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *