|

இஸ்ரேல்–36 (தானியேல் 2ம் அதிகாரமும் ராஜ்யங்களும்)

வேதத்தில் காணப்படும் அனேக தரிசனங்கள் நிறைவேறி விட்டன. நம்மில் ஒரு சிலர் அதைப் பற்றி அறியாமலே வேதம் வாசிக்கலாம். சில காரியங்களை நாம் வரும் பதிவுகளில் படிக்கலாம். பழைய ஏற்பாடு, இஸ்ரவேலருக்காக எழுதப்பட்டதால், இஸ்ரவேலில் அநேக தீர்க்கதரிசனங்கள் நிறைவேறி இருக்கின்றன. இஸ்ரேல்-35 பதிவில், இதுவரை பார்த்த எல்லா ராஜ்யம் பற்றியும் சுருக்கமாக, இவ்வளவு நாட்கள் படித்தை பதிவிட்டேன். அதை படித்தால் இப்பதிவு புரிந்து கொள்ள உபயோகமாக இருக்கும். அதாவது, இஸ்ரேல் எந்தெந்த சாம்ராஜ்யங்களின் கீழ் அடிமைப்பட்டது என பார்த்தோம். அசீரிய சாம்ராஜ்யம், பாபிலோனிய சாம்ராஜ்யம், மேதிய பெர்சிய சாம்ராஜ்யம், கிரேக்க சாம்ராஜ்யம், ரோம சாம்ராஜயம், ஒருங்கிணைந்த ரோம சாம்ராஜ்யம் என பல சாம்ராஜ்யங்களின் கீழ் இஸ்ரவேலர் இருந்தனர். இஸ்ரேல் என்ற தேசம் கிபி 70ல் அழிக்கப்பட்டு, பின்னர் கிபி 1900களில் மீண்டும் உருவாக்கப்பட்டு, 1948ல் சுதந்திர நாடாக உருவானது.

தானியேல் 2ம் அதிகாரம்

தானியேல் 2ம் அதிகாரத்தில் நேபுகாத்நேச்சார் ஒரு கனவு காண்கிறார். அந்த அதிகாரத்தை வாசித்துப் பார்த்தால் புரியும். அவரது கனவை கீழே வாசிக்கலாம்.

இது என்ன தரிசனம்? நிஜமாகவே இப்படி எல்லாம் கனவு காண முடியுமா என்று தான் தோன்றுகிறது அல்லவா! தானியேல் பார்க்கும் தரிசனத்தில், பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, களிமண், ஒரு கல் எல்லாம் பார்க்கிறார். இவை எல்லாம் ஒவ்வொரு ராஜ்யத்தைக் குறிக்கிறது. மேலே உள்ள படத்தில் விவரமாக பார்க்கலாம்.

தானியேல் ராஜாவிடம், நீர் பார்த்த தலை, தங்கம் ஆக இருந்தது உம்முடைய ராஜ்யம். அதாவது பாபிலோனிய சாம்ராஜ்யம். உமக்கு பின், நீர் பார்த்த வெள்ளி, உமக்கு அடுத்து வரும் சாம்ராஜ்யம் என்று கூறி இருப்பார். இதை வெளிப்படுத்தும் போது, தானியேலுக்கே சரியாக விளங்கி இருக்குமா என்பது தெரியாது. ஆனால் இப்பொழுது நம்முடைய காலத்தில் அவை நிறைவேறி முடிந்து விட்டதால், நம்மால், எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

நேபுகாத் நேச்சாரைத் தொடர்ந்து, மூன்று பெரிய சாம்ராஜ்யங்கள் வந்தன. மேதிய பெர்சிய சாம்ராஜ்யம், கிரேக்க சாம்ராஜ்யம், ரோம சாம்ராஜ்யம். அவைகள் நேபுகாத் நேச்சார் கனவில் கண்டதைப் போல, அந்தந்த குணங்களைக் கொண்டிருந்தன. பாபிலோனுக்கு ஏன் தங்கம் கொடுக்கப்பட்டது (தங்க தலை) என்றால், நேபுகாத் நேச்சார் நல்ல ஒரு அதிகாரம், ஆளுகை நிறைந்த ராஜாவாக இருந்தார். அவருக்குப் பிறகு வந்த ராஜ்யங்கள், அவரைக் காட்டிலும் அதிக வருடங்கள் நிலைத்திருந்தாலும், நேபுகாத் நேச்சாரை விட தாழ்ந்தவையாகவே இருந்தன.

முதலில் தங்கமாக இருப்பது, பாபிலோனிய சாம்ராஜ்யம். அது ஒரு முழுமையான சாம்ராஜ்யம். அடுத்து மார்பு மற்றும் புயம் பகுதியில் உள்ள வெள்ளி, மேதிய பெர்சிய சாம்ராஜ்யத்தைக் குறிக்கிறது. அடுத்ததாக உள்ள வெண்கல வயிறு மற்றும் தொடை, கிரேக்க சாம்ராஜ்யத்தைக் குறிக்கிறது. வெண்கலம் என்பது பித்தளை. அது இன்னும் குறைந்த மதிப்புடையது. அலெக்சாண்டர் மகாராஜா தான் இந்த படத்தில் உள்ள ராஜ்யத்தில், அதிக அளவு நாடுகளை அரசாண்டவர். அதாவது உலகையே ஆண்டவர் என்ற பெருமை உடையவர். இரும்பு கால் என்பது கொடுமையான ரோம சாம்ராஜ்யத்தைக் குறிக்கிறது. அதாவது, சிலுவை மரணம் போன்ற கடுமையான தண்டனை கொண்டு வந்த, இராணுவ கொடுங்கோல் ஆட்சி தான் ரோம். பாதி இரும்பு மற்றும் பாதி களிமண் கலந்த பாதம், வர இருக்கும் அந்தி கிறிஸ்து சாம்ராஜ்யத்தைக் குறிக்கிறது.

இந்த தரிசனங்கள் இஸ்ரேலைப் பற்றி மட்டுமே குறிப்பதால், இவை சரியாக இஸ்ரேலுடன் பொருந்துகிறது. ரோம சாம்ராஜ்யத்தைக் கடந்த பின்னர், தரிசனத்தின்படி வரப் போகிற கொடுமையான சாம்ராஜ்யம், அந்தி கிறிஸ்துவின் ஆட்சி.

அந்திக் கிறிஸ்துவின் ஆட்சியில், முதலில் இஸ்ரவேலர்கள் (யூதர்கள்) அவனுடன் இணைந்து இருப்பார்கள். ஆனால் களிமண் இரும்போடு ஒட்டாதது போல அவர்கள் கலந்து இருக்க முடியாது. கடைசியாக இஸ்ரவேலரை கொடுமைப் படுத்த போகும் ராஜ்யம், அந்தி கிறிஸ்துவின் ஆட்சி. ஏனெனில் அவர்களில் அனேகர் இன்னும் இயேசுவை ஏற்றுக் கொள்ளவில்லை.

இங்கே நேபுகாத் நேச்சார் கண்ட தரிசனத்தின்படி, ரோம சாம்ராஜ்யத்துக்கு அடுத்து உடனே அந்திக்கிறிஸ்துவின் ஆட்சி. அதன்பின் ஒரு கல் வந்து எல்லா ராஜ்யத்தையும் அடித்து நொறுக்குகிறது. அவர் தான் (அந்தக்கல்) மூலைக்கல்லாகிய நம் இயேசு. என்றைக்கும் அழியாத ராஜ்யம் என்றால், அது நம் ஆண்டவரின் ஆயிரம் வருட அரசாட்சி. ஆண்டவரின் 1000 வருட அரசாட்சி இந்த பூமியில் நடக்க போகிறது என்னும் விசுவாசத்தோடு நாம் காத்து இருக்கிறோம்.

நாம் உயிரோடு இருந்தால், மறுரூபமாகி அவருடன் செல்வோம். மரித்திருந்தால், உயிர்த்தெழுந்து அவரோடு செல்வோம். இது இஸ்ரவேலருக்கு மட்டும் அல்ல. அவரை ஏற்றுக் கொண்ட நம் எல்லாருக்கும் பொதுவானது. ஒரு நாள் இயேசு ராஜாவாக வரப் போகிறார். அவருடன் நாமும் இணைந்து வந்து ஆட்சி செய்ய போகிறோம். அந்த உலகில், சண்டை இல்லை. வறுமை இல்லை. வியாதி இல்லை. அன்பு மட்டுமே சூழ்ந்த உலகம். என்றைக்கும் அழியாத ராஜ்யம் அவரின் ராஜ்யம்.

சுவாரஸ்யமான விசயம்

தானியேல் இந்த தரிசனத்தை நேபுகாத் நேச்சாருக்கு சொன்ன பின்னர் தான், நேபுகாத் நேச்சார் ராஜா, “அது என்ன தலை மட்டும் நான்? எல்லாமே நானாக மட்டுமே இருக்க வேண்டும்” என்று பெருமையோடு, முழு தங்கத்திலான சிலை செய்து, எல்லாரும் தன்னை பணிந்து கொள்ளும்படி சொன்னது. ஆனால் என்றைக்கும் ராஜ்யபாரம் செய்யப் போகிற நம் ஆண்டவர், நான்காவது நபராக தீச்சூளைக்குள் வந்து, ராஜாவை மண்டியிட செய்தார். அடுத்தடுத்த தரிசன நிறைவேறுதலை வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

Similar Posts

  • |

    Day 246 (03-09-2025)

    Scripture Portion: Ezekiel 22-23 எசேக்கியேல் 22 1பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 2இப்போதும் மனுபுத்திரனே, இரத்தஞ்சிந்தின நகரத்துக்காக நீ வழக்காடுவாயோ? வழக்காட மனதானால், நீ அதின் அருவருப்புகளையெல்லாம் அதற்குத் தெரியக்காட்டி, 3அதை நோக்கி: கர்த்தருடைய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், உன் காலம் வரத்தக்கதாக உன் நடுவிலே இரத்தஞ்சிந்துகிறதும், உன்னைத் தீட்டுப்படுத்தத்தக்கதாக உனக்கே விரோதமாய் நரகலான விக்கிரகங்களை உண்டுபண்ணுகிறதுமான நகரமே, 4நீ சிந்தின உன் இரத்தத்தினால் நீ குற்றஞ்சுமந்ததாகி, நீ உண்டுபண்ணின உன் நரகலான விக்கிரகங்களால் நீ தீட்டுப்பட்டு, உன்…

  • |

    Day 135 (15-05-2025)

    Scripture Portion: 2 Samuel 13-15 2 சாமுவேல் 13 1இதற்குப்பின்பு தாவீதின் குமாரனாகிய அப்சலோமுக்குத் தாமார் என்னும் பேருள்ள சவுந்தரியமுள்ள ஒரு சகோதரி இருந்தாள்; அவள் மேல் தாவீதின் குமாரன் அம்னோன் மோகங்கொண்டான். 2தன் சகோதரியாகிய தாமாரினிமித்தம் ஏக்கங்கொண்டு வியாதிப்பட்டான்; அவள் கன்னியாஸ்திரீயாயிருந்தாள்; அவளுக்குப் பொல்லாப்புச் செய்ய, அம்னோனுக்கு வருத்தமாய்க் கண்டது. 3அம்னோனுக்குத் தாவீதுடைய தமையன் சிமியாவின் குமாரனாகிய யோனதாப் என்னும் பேருள்ள ஒரு சிநேகிதன் இருந்தான்; அந்த யோனதாப் மகா தந்திரவாதி. 4அவன் இவனைப்…

  • |

    Day 295 (22-10-2025)

    Scripture Portion: Matthew 18 மத்தேயு 18 1அவ்வேளையிலே சீஷர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பரலோகராஜ்யத்தில் எவன் பெரியவனாயிருப்பான் என்று கேட்டார்கள். 2இயேசு ஒரு பிள்ளையைத் தம்மிடத்தில் அழைத்து, அதை அவர்கள் நடுவே நிறுத்தி: 3நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 4ஆகையால் இந்தப் பிள்ளையைப்போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோகராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான். 5இப்படிப்பட்ட ஒரு பிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான். 6என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில்…

  • |

    Day 98 (08-04-2025)

    Scripture Portion: 1 Samuel 1-3 1 சாமுவேல் 1 1எப்பிராயீம் மலைதேசத்திலிருக்கிற சோப்பீம் என்னப்பட்ட ராமதாயீம் ஊரானாகிய ஒரு மனுஷன் இருந்தான்; அவனுக்கு எல்க்கானா என்று பேர்; அவன் எப்பிராயீமியனாகிய சூப்புக்குப் பிறந்த தோகுவின் குமாரனாகிய எலிகூவின் மகனான எரோகாமின் புத்திரன். 2அவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள்; ஒருத்தி பேர் அன்னாள், மற்றவள் பேர் பெனின்னாள்; பெனின்னாளுக்குப் பிள்ளைகள் இருந்தார்கள்; அன்னாளுக்கோ பிள்ளை இல்லை. 3அந்த மனுஷன் சீலோவிலே சேனைகளின் கர்த்தரைப் பணிந்துகொள்ளவும் அவருக்குப் பலியிடவும் வருஷந்தோறும் தன்…

  • |

    Day 362 (28-12-2025)

    Scripture Portion: Revelation 1-5 வெளிப்படுத்தின விசேஷம் 1 1சீக்கிரத்தில் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, தேவன் இயேசுகிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், இவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தினதுமான விசேஷம். 2இவன் தேவனுடைய வசனத்தைக்குறித்தும், இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சாட்சியைக்குறித்தும், தான் கண்ட யாவற்றையும் சாட்சியாக அறிவித்திருக்கிறான். 3இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது. 4யோவான் ஆசியாவிலுள்ள ஏழு சபைகளுக்கும் எழுதுகிறதாவது: இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமானவராலும், அவருடைய சிங்காசனத்திற்கு…

  • |

    Day 347 (13-12-2025)

    Scripture Portion: Acts 24-26 அப்போஸ்தலர் 24 1ஐந்து நாளைக்குப்பின்பு பிரதானஆசாரியனாகிய அனனியா மூப்பர்களோடும் தெர்த்துல்லு என்னும் ஒரு நியாயசாதுரியனோடும் கூடப்போனான், அவர்கள் பவுலுக்கு விரோதமாய்த் தேசாதிபதியினிடத்தில் பிராதுபண்ணினார்கள். 2அவன் அழைக்கப்பட்டபோது, தெர்த்துல்லு குற்றஞ்சாட்டத்தொடங்கி: 3கனம்பொருந்திய பேலிக்ஸே, உம்மாலே நாங்கள் மிகுந்த சமாதான சவுக்கியத்தை அநுபவிக்கிறதையும், உம்முடைய பராமரிப்பினாலே இந்தத் தேசத்தாருக்குச் சிறந்த நன்மைகள் நடக்கிறதையும் நாங்கள் எப்பொழுதும் எங்கும் மிகுந்த நன்றியறிதலுடனே அங்கிகாரம்பண்ணுகிறோம். 4உம்மை நான் அநேக வார்த்தைகளினாலே அலட்டாதபடிக்கு, நாங்கள் சுருக்கமாய்ச் சொல்வதை நீர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *