|

இஸ்ரேல்-37 (தானியேல் 7ம் அதிகாரம்)

இங்கு மிருகம் என்பது ராஜ்யம் அதாவது ராஜ்யத்தைக் (கவர்மெண்ட்) குறிக்கிறது. முதலில் பார்க்கும் மிருகம் சிங்கம். அது நேபுகாத் நேச்சார் ராஜாவைக் குறிக்கிறது. சிங்கம் என்பது பெருமையானவைகளை பேசும் வாய். நேபுகாத் நேச்சார் பெருமையானவைகளை பேசினார் என்பதை வேதத்தில் இருந்தே அறியலாம். கழுகைப் போல வேட்டையாடியவர், ஆனால் அவரிடம் இருந்து இறகுகள் பிடுங்கப்பட்டது. பின்னர் தாழ்மையான இருதயம் அவருக்கு கொடுக்கப்பட்டது. அதாவது “நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா” என்று சொன்ன போது, அவர் மாட்டைப்போல புல்லை மேய்ந்தார். Boanthropy என்ற நோயால் பாதிக்கப்பட்டார் என்று பாபிலோன் சாம்ராஜ்யத்தில் படித்தோம் அல்லவா, அச்சம்பவத்தைக் குறிக்கிறது.

பாபிலோனிய சாம்ராஜ்யம் பற்றி  விரிவாக படிக்க

https://rhematamil.org/israel-babylonian-kingdom

அடுத்த மிருகம் கரடி. கரடி என்பது மேதிய பெர்சிய சாம்ராஜ்யத்தைக் குறிக்கிறது. கரடி என்பது, சிங்கத்தை விட மெதுவாகவும், வலிமையாகவும், மேலும் நசுக்கக்கூடியதாகவும் இருக்கிறது – மேலும் இந்த கரடிக்கு வெற்றியின் மீது கொந்தளிப்பான பசி இருக்கும். (எழுந்திருந்து, நிறைய சதைகளை தின்றுவிடும்!) அப்படித்தான் கோரேஸ் ராஜாவும். மெதுவாக முன்னேறி சென்று, பாபிலோனை யுத்தங்கள் இன்றி, வெளியே இருந்த ஆற்றின் நீரை வேறு இடத்துக்கு மாற்றி விட்டு, பாபிலோனை பிடித்தார் என்று பார்த்தோம்.அந்த தன்மையைக் குறிக்கிறது.

கரடி ஒரு பக்கமாய் சாய்ந்து இருந்தது என்று குறிப்பிடுவது, ஒரு கால் மற்றொரு காலை விட சிறியது என்பதைக் குறிக்கும். அதாவது பெர்சியர்கள், மேதியர்களை விட சிறிய அரசர் என்று காட்டுகிறது. அதனுடைய வாயிலே 3 எலும்புகளை கவ்வி நிற்பது, 3 பெரிய சாம்ராஜ்யங்களான, எகிப்து, அசீரியா மற்றும் பாபிலோனைப் பிடித்ததைக் குறிக்கிறது.

மேதிய பெர்சிய சாம்ராஜ்யம் பற்றி விரிவாக படிக்க

https://rhematamil.org/israel-median-persian-kingdom

அசீரியா சாம்ராஜ்யம் பற்றி விரிவாக படிக்க

https://rhematamil.org/israel-assyrian-kingdom

அடுத்த மிருகம் சிவிங்கி. சிறுத்தையைப் போல வேகமாக அலெக்சாண்டர் உலகத்தைப் பிடித்ததைக் குறிக்கிறது. வெறும் 12 ஆண்டுகளுக்குள்ளாக உலகில் 70 சதவீத இடத்தை அவர் பிடித்ததைக் குறிக்கிறது. சிங்கம் விழுங்குகிறது, கரடி நசுக்குகிறது, சிறுத்தை அதன் இரையின் மீது பாய்கிறது. ஒவ்வொரு மிருகத்துக்கும் ஒரு குணம் உண்டு. நான்கு தலை என்பது, 33 வயதில் அவர் இறந்த பிறகு, அவர் ராஜ்யம் 4 தளபதிகளுக்கு (Casander, Lysimachus, Seleucus, and Ptolemy) பிரித்துக் கொடுக்கப்பட்டதைக் காட்டுகிறது.

கிரேக்க சாம்ராஜ்யம் பற்றி விரிவாகப் படிக்க

https://rhematamil.org/israel-kingdom-of-greece

நான்காம் மிருகம் என்பது, ரோம சாம்ராஜ்யத்தைக் குறிக்கிறது. அது கொடிய ஆட்சி என்பதை அம்மிருகம் காட்டுகிறது. அம்மிருகம் இதுதான் என்று ஏதோ ஒரு மிருகத்துடன் ஒப்பிட முடியவில்லை. நம் இயேசு நாதர் பிறப்பு, இறப்பு எல்லாம் ரோம சாம்ராஜ்ய காலத்தில் தான். இயேசுவின் மரணமான சிலுவை மரணத்தைக் கொண்டு வந்தவர்கள் ரோமர்கள்.

ரோம சாம்ராஜ்யத்தைப் பற்றி விரிவாகப் படிக்க

https://rhematamil.org/israel-roman-kingdom

அதன் தலையில் 10 கொம்பு என்பது 10 ராஜாவைக் குறிக்கிறது. மிருகம் என்பது கவர்மெண்ட் மற்றும் கொம்பு என்பது ராஜாவையும் குறிக்கும். 10 ராஜாக்களை தனக்கு கீழே வைத்து ஆட்சி செய்த ஒருங்கிணைந்த ரோம பேரரசைக் குறிக்கிறது என ஒரு சாராரும், இன்னொரு சாரார், வர இருக்கும் ஒரு உலக அரசைக் குறிக்கிறது என்றும் சொல்வார்கள். (European Unionல், கிட்டத்தட்ட 27 நாடுகள் இருந்தாலும், முடிவெடுக்கும் அதிகாரம் 10 நாடுகளுக்கு மட்டுமே உள்ளது. European Union பற்றிய பதிவில் தொடர்ந்து பார்க்கலாம்) 10 நாடுகள் சேர்ந்து உலகை ஆண்டாலும், 3 நாடுகள் அதிலிருந்து பிரியப் போவது (அல்லது பிரிந்தது) நிச்சயம்.

தானியேல் 2ம் அதிகாரத்தில் நேபுகாத் நேச்சார் கண்ட கனவில் கூட, நான்காவது சாம்ராஜ்யம் இரும்பைப் போல கொடிதாயிருக்கும். இப்போது தானியேல் 7ம் அதிகாரத்தில், தானியேல் கண்ட தரிசனத்தில், இரும்பு பற்கள் இருக்கின்றன. அவ்வளவு கொடுமையான சாம்ராஜ்யம் ரோம சாம்ராஜ்யம்.

சிறிய கொம்பு என்பது, உலகையே ஆளும் அந்தி கிறிஸ்துவாக இருக்கலாம் என கூறுகிறார்கள். அவன் தேவனுக்கு விரோதமாகப் பேசுவான். பரிசுத்தவான்களை ஒடுக்குவான். பிரமாணங்களை மாற்ற நினைப்பான் என வேதம் கூறுகிறது.

ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும் செல்லும் என கூறுகிறது. “time, times and half a time”என ஆங்கிலத்தில் உள்ளது.

காலம் – ஒரு வருடம்

காலங்கள் – இரண்டு வருடம்

அரைக்காலம் – அரை வருடம்

(1+2+0.5=3.5)வருடங்கள்.

எனவே, காலமும், காலங்களும், அரைக்காலமும் என்பது மூன்றரை வருடத்தைக் குறிக்கிறது.

(வெளிப்படுத்தின விசேஷம் 11ம் அதிகார தரிசனத்தில், 42 மாதம் மற்றும் 1260 நாட்கள் என்பதும், மூன்றரை வருடங்களைக் குறிக்கும். வெளி 11ம் அதிகாரம் பார்க்கும்போது, அதையும் பார்க்கலாம்.)

11ம் வசனம் வைத்து பார்த்தால், நான்காம் மிருகம் மட்டும் அழிக்கப்பட்டது. மற்ற 3 மிருகங்கள் இன்னும் அழிக்கப்படவில்லை. அவைகள் வெளிப்படுத்துதல் 13ல் மீண்டும் வரும். வரும் பதிவுகளில் தொடர்ச்சியாகப் பார்க்கலாம்.

 

Similar Posts

  • |

    Day 343 (09-12-2025)

    Scripture Portion: Romans 8-10 ரோமர் 8 1ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை. 2கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே. 3அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார். 4மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார். 5அன்றியும்…

  • |

    Day 316 (12-11-2025)

    Scripture Portion: Matthew 27, Mark 15 மத்தேயு 27 1விடியற்காலமானபோது, சகல பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும், இயேசுவைக் கொலைசெய்யும்படி, அவருக்கு விரோதமாக ஆலோசனைபண்ணி, 2அவரைக் கட்டி, கொண்டுபோய், தேசாதிபதியாகிய பொந்தியுபிலாத்துவினிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள். 3அப்பொழுது, அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், அவர் மரணாக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதைக் கண்டு, மனஸ்தாபப்பட்டு, அந்த முப்பது வெள்ளிக்காசைப் பிரதான ஆசாரியரிடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் திரும்பக்கொண்டுவந்து: 4குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவஞ்செய்தேன் என்றான். அதற்கு அவர்கள்: எங்களுக்கென்ன, அது உன்பாடு என்றார்கள். 5அப்பொழுது, அவன்…

  • |

    Day 336 (02-12-2025)

    Scripture Portion: 1 Corinthians 12-14 1 கொரிந்தியர் 12 1அன்றியும், சகோதரரே, ஆவிக்குரிய வரங்களைக்குறித்து நீங்கள் அறியாதிருக்க எனக்கு மனதில்லை. 2நீங்கள் அஞ்ஞானிகளாயிருந்தபோது ஏவப்பட்டபடியே, ஊமையான விக்கிரகங்களிடத்தில் மனதைச் செலுத்தினீர்களென்று உங்களுக்குத் தெரியுமே. 3ஆதலால், தேவனுடைய ஆவியினாலே பேசுகிற எவனும் இயேசுவைச் சபிக்கப்பட்டவனென்று சொல்லமாட்டானென்றும், பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக்கூடாதென்றும், உங்களுக்குத் தெரிவிக்கிறேன். 4வரங்களில் வித்தியாசங்கள் உண்டு, ஆவியானவர் ஒருவரே. 5ஊழியங்களிலேயும் வித்தியாசங்கள் உண்டு, கர்த்தர் ஒருவரே. 6கிரியைகளிலேயும் வித்தியாசங்கள் உண்டு, எல்லாருக்குள்ளும் எல்லாவற்றையும் நடப்பிக்கிற…

  • |

    Day 331 (27-11-2025)

    Scripture Portion: 1 Thessalonians 1-5, 2 Thessalonians 1-3 1 தெசலோனிக்கேயர் 1 1பவுலும், சில்வானும், தீமோத்தேயும், பிதாவாகிய தேவனுக்குள்ளும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள்ளும் இருக்கிற தெசலோனிக்கேயர் சபைக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. 2தேவனுக்குப் பிரியமான சகோதரரே, உங்கள் விசுவாசத்தின் கிரியையையும், உங்கள் அன்பின் பிரயாசத்தையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்மேலுள்ள உங்கள் நம்பிக்கையின் பொறுமையையும், நம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நாங்கள் இடைவிடாமல் நினைவுகூர்ந்து, 3நீங்கள் தெரிந்துகொள்ளப்பட்டவர்களென்று நாங்கள் அறிந்து, 4எங்கள் ஜெபங்களில் இடைவிடாமல் உங்களைக்குறித்து விண்ணப்பம்பண்ணி,…

  • |

    பண்டிகைகள்-7 (முதல் மூன்று பண்டிகைகள்)

    பஸ்கா, புளிப்பில்லா அப்ப பண்டிகை, முதற்கனி பண்டிகை உபாகமம் 16:16 வருஷத்தில் மூன்றுதரம் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையிலும், வாரங்களின் பண்டிகையிலும், கூடாரப்பண்டிகையிலும், உன் ஆண்மக்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து காணப்படக்கடவர்கள். II நாளாகமம் 8:13 ஒவ்வொரு நாளின் கட்டளைக்குந்தக்கதாய் மோசேயுடைய கற்பனையின்படியே ஓய்வுநாட்களிலும் மாதப்பிறப்புகளிலும், வருஷத்தில் மூன்றுதரம் ஆசரிக்கிற பண்டிகைகளாகிய புளிப்பில்லாத அப்பப்பண்டிகையிலும், வாரங்களின் பண்டிகையிலும், கூடாரப்பண்டிகையிலும், கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தினான். தேவன் இஸ்ரவேலருக்கு கொடுத்த பண்டிகைகளில், மூன்று பண்டிகையில் தேவன் ஜனங்களை ஆலயத்துக்கு வரச் சொன்னார். அந்த…

  • |

    Day 213 (01-08-2025)

    Scripture Portion: Isaiah 64-66 ஏசாயா 64 1ஆ, உமது நாமத்தைச் சத்துருக்களுக்குத் தெரியப்பண்ணுவதற்கும், ஜாதிகள் உம்முடைய சந்நிதிக்கு முன் தத்தளிப்பதற்கும், 2தேவரீர் வானங்களைக் கிழித்திறங்கி, உருக்கும் அக்கினி எரியுமாப்போலவும், அக்கினி தண்ணீரைப் பொங்கப்பண்ணுமாப்போலவும், பர்வதங்கள் உமக்கு முன்பாக உருகும்படி செய்யும். 3நாங்கள் எதிர்பார்த்திராத பயங்கரமான காரியங்களை நீர் செய்தபோது, நீர் இறங்கினீர், உமது சந்நிதியில் பர்வதங்கள் உருகிப்போயின. 4தேவனே, உமக்குக் காத்திருக்கிறவர்களுக்கு நீர் செய்பவைகளை, நீரேயல்லாமல் உலகத்தோற்றமுதற்கொண்டு ஒருவரும் கேட்டதுமில்லை, செவியால் உணர்ந்ததுமில்லை, அவைகளைக் கண்டதுமில்லை….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *