|

இஸ்ரேல்-37 (தானியேல் 7ம் அதிகாரம்)

இங்கு மிருகம் என்பது ராஜ்யம் அதாவது ராஜ்யத்தைக் (கவர்மெண்ட்) குறிக்கிறது. முதலில் பார்க்கும் மிருகம் சிங்கம். அது நேபுகாத் நேச்சார் ராஜாவைக் குறிக்கிறது. சிங்கம் என்பது பெருமையானவைகளை பேசும் வாய். நேபுகாத் நேச்சார் பெருமையானவைகளை பேசினார் என்பதை வேதத்தில் இருந்தே அறியலாம். கழுகைப் போல வேட்டையாடியவர், ஆனால் அவரிடம் இருந்து இறகுகள் பிடுங்கப்பட்டது. பின்னர் தாழ்மையான இருதயம் அவருக்கு கொடுக்கப்பட்டது. அதாவது “நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா” என்று சொன்ன போது, அவர் மாட்டைப்போல புல்லை மேய்ந்தார். Boanthropy என்ற நோயால் பாதிக்கப்பட்டார் என்று பாபிலோன் சாம்ராஜ்யத்தில் படித்தோம் அல்லவா, அச்சம்பவத்தைக் குறிக்கிறது.

பாபிலோனிய சாம்ராஜ்யம் பற்றி  விரிவாக படிக்க

https://rhematamil.org/israel-babylonian-kingdom

அடுத்த மிருகம் கரடி. கரடி என்பது மேதிய பெர்சிய சாம்ராஜ்யத்தைக் குறிக்கிறது. கரடி என்பது, சிங்கத்தை விட மெதுவாகவும், வலிமையாகவும், மேலும் நசுக்கக்கூடியதாகவும் இருக்கிறது – மேலும் இந்த கரடிக்கு வெற்றியின் மீது கொந்தளிப்பான பசி இருக்கும். (எழுந்திருந்து, நிறைய சதைகளை தின்றுவிடும்!) அப்படித்தான் கோரேஸ் ராஜாவும். மெதுவாக முன்னேறி சென்று, பாபிலோனை யுத்தங்கள் இன்றி, வெளியே இருந்த ஆற்றின் நீரை வேறு இடத்துக்கு மாற்றி விட்டு, பாபிலோனை பிடித்தார் என்று பார்த்தோம்.அந்த தன்மையைக் குறிக்கிறது.

கரடி ஒரு பக்கமாய் சாய்ந்து இருந்தது என்று குறிப்பிடுவது, ஒரு கால் மற்றொரு காலை விட சிறியது என்பதைக் குறிக்கும். அதாவது பெர்சியர்கள், மேதியர்களை விட சிறிய அரசர் என்று காட்டுகிறது. அதனுடைய வாயிலே 3 எலும்புகளை கவ்வி நிற்பது, 3 பெரிய சாம்ராஜ்யங்களான, எகிப்து, அசீரியா மற்றும் பாபிலோனைப் பிடித்ததைக் குறிக்கிறது.

மேதிய பெர்சிய சாம்ராஜ்யம் பற்றி விரிவாக படிக்க

https://rhematamil.org/israel-median-persian-kingdom

அசீரியா சாம்ராஜ்யம் பற்றி விரிவாக படிக்க

https://rhematamil.org/israel-assyrian-kingdom

அடுத்த மிருகம் சிவிங்கி. சிறுத்தையைப் போல வேகமாக அலெக்சாண்டர் உலகத்தைப் பிடித்ததைக் குறிக்கிறது. வெறும் 12 ஆண்டுகளுக்குள்ளாக உலகில் 70 சதவீத இடத்தை அவர் பிடித்ததைக் குறிக்கிறது. சிங்கம் விழுங்குகிறது, கரடி நசுக்குகிறது, சிறுத்தை அதன் இரையின் மீது பாய்கிறது. ஒவ்வொரு மிருகத்துக்கும் ஒரு குணம் உண்டு. நான்கு தலை என்பது, 33 வயதில் அவர் இறந்த பிறகு, அவர் ராஜ்யம் 4 தளபதிகளுக்கு (Casander, Lysimachus, Seleucus, and Ptolemy) பிரித்துக் கொடுக்கப்பட்டதைக் காட்டுகிறது.

கிரேக்க சாம்ராஜ்யம் பற்றி விரிவாகப் படிக்க

https://rhematamil.org/israel-kingdom-of-greece

நான்காம் மிருகம் என்பது, ரோம சாம்ராஜ்யத்தைக் குறிக்கிறது. அது கொடிய ஆட்சி என்பதை அம்மிருகம் காட்டுகிறது. அம்மிருகம் இதுதான் என்று ஏதோ ஒரு மிருகத்துடன் ஒப்பிட முடியவில்லை. நம் இயேசு நாதர் பிறப்பு, இறப்பு எல்லாம் ரோம சாம்ராஜ்ய காலத்தில் தான். இயேசுவின் மரணமான சிலுவை மரணத்தைக் கொண்டு வந்தவர்கள் ரோமர்கள்.

ரோம சாம்ராஜ்யத்தைப் பற்றி விரிவாகப் படிக்க

https://rhematamil.org/israel-roman-kingdom

அதன் தலையில் 10 கொம்பு என்பது 10 ராஜாவைக் குறிக்கிறது. மிருகம் என்பது கவர்மெண்ட் மற்றும் கொம்பு என்பது ராஜாவையும் குறிக்கும். 10 ராஜாக்களை தனக்கு கீழே வைத்து ஆட்சி செய்த ஒருங்கிணைந்த ரோம பேரரசைக் குறிக்கிறது என ஒரு சாராரும், இன்னொரு சாரார், வர இருக்கும் ஒரு உலக அரசைக் குறிக்கிறது என்றும் சொல்வார்கள். (European Unionல், கிட்டத்தட்ட 27 நாடுகள் இருந்தாலும், முடிவெடுக்கும் அதிகாரம் 10 நாடுகளுக்கு மட்டுமே உள்ளது. European Union பற்றிய பதிவில் தொடர்ந்து பார்க்கலாம்) 10 நாடுகள் சேர்ந்து உலகை ஆண்டாலும், 3 நாடுகள் அதிலிருந்து பிரியப் போவது (அல்லது பிரிந்தது) நிச்சயம்.

தானியேல் 2ம் அதிகாரத்தில் நேபுகாத் நேச்சார் கண்ட கனவில் கூட, நான்காவது சாம்ராஜ்யம் இரும்பைப் போல கொடிதாயிருக்கும். இப்போது தானியேல் 7ம் அதிகாரத்தில், தானியேல் கண்ட தரிசனத்தில், இரும்பு பற்கள் இருக்கின்றன. அவ்வளவு கொடுமையான சாம்ராஜ்யம் ரோம சாம்ராஜ்யம்.

சிறிய கொம்பு என்பது, உலகையே ஆளும் அந்தி கிறிஸ்துவாக இருக்கலாம் என கூறுகிறார்கள். அவன் தேவனுக்கு விரோதமாகப் பேசுவான். பரிசுத்தவான்களை ஒடுக்குவான். பிரமாணங்களை மாற்ற நினைப்பான் என வேதம் கூறுகிறது.

ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும் செல்லும் என கூறுகிறது. “time, times and half a time”என ஆங்கிலத்தில் உள்ளது.

காலம் – ஒரு வருடம்

காலங்கள் – இரண்டு வருடம்

அரைக்காலம் – அரை வருடம்

(1+2+0.5=3.5)வருடங்கள்.

எனவே, காலமும், காலங்களும், அரைக்காலமும் என்பது மூன்றரை வருடத்தைக் குறிக்கிறது.

(வெளிப்படுத்தின விசேஷம் 11ம் அதிகார தரிசனத்தில், 42 மாதம் மற்றும் 1260 நாட்கள் என்பதும், மூன்றரை வருடங்களைக் குறிக்கும். வெளி 11ம் அதிகாரம் பார்க்கும்போது, அதையும் பார்க்கலாம்.)

11ம் வசனம் வைத்து பார்த்தால், நான்காம் மிருகம் மட்டும் அழிக்கப்பட்டது. மற்ற 3 மிருகங்கள் இன்னும் அழிக்கப்படவில்லை. அவைகள் வெளிப்படுத்துதல் 13ல் மீண்டும் வரும். வரும் பதிவுகளில் தொடர்ச்சியாகப் பார்க்கலாம்.

 

Similar Posts

  • |

    விடுதலை-2 (பாஸ்டர்.விளாட் அவர்களின் வாழ்க்கை)

    பாஸ்டர்.விளாட் அவர்களின் வாழ்க்கை இந்த பதிவில், ஏற்கனவே இந்த பாவத்தில் மூழ்கி, மீண்டு வந்த பாஸ்டர்.விளாட் (Pastor.Vlad) அவர்கள் அனுபவத்தை பார்க்கலாம். “இது ஆபாச படம் பார்ப்பவர்களுக்கு தானே, எனக்கு இல்லையே” என்று தயவுசெய்து எண்ண வேண்டாம். யாரோ ஒருவருக்கு அறிவுரை சொல்லும் சூழல் வந்தால் உபயோகப்படும். நமது ஆவிக்குரிய வளர்ச்சிக்கும் உதவும் என்பதில் சந்தேகமில்லை. விளாட் உக்ரைனில் பிறந்தவர். நல்ல தேவ பக்தியான குடும்பத்தில் பிறந்தவர். அவரது வீட்டுக்குள் நல்ல அழகான அன்பான குடும்ப வாழ்க்கை…

  • |

    Day 183 (02-07-2025)

    Scripture Portion: 2 kings 1-4 2 இராஜாக்கள் 1 1ஆகாப் மரணமடைந்தபின், மோவாபியர் இஸ்ரவேலுக்கு விரோதமாய்க் கலகம்பண்ணிப் பிரிந்து போனார்கள். 2அகசியா சமாரியாவிலிருக்கிற தன் மேல்வீட்டிலிருந்து கிராதியின் வழியாய் விழுந்து, வியாதிப்பட்டு: இந்த வியாதி நீங்கிப் பிழைப்பேனா என்று எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூ இடத்தில் போய் விசாரியுங்கள் என்று ஆட்களை அனுப்பினான். 3கர்த்தருடைய தூதன் திஸ்பியனாகிய எலியாவை நோக்கி: நீ எழுந்து, சமாரியாவுடைய ராஜாவின் ஆட்களுக்கு எதிர்ப்படப்போய்: இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீங்கள் எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூ…

  • |

    Day 27 (27-01-2025)

    Scripture Portion: Genesis 43-45 ஆதியாகமம் 43 1தேசத்திலே பஞ்சம் கொடிதாயிருந்தது. 2எகிப்திலிருந்து அவர்கள் கொண்டுவந்த தானியம் செலவழிந்தபோது, அவர்கள் தகப்பன் அவர்களை நோக்கி: நீங்கள் திரும்பப் போய், நமக்குக் கொஞ்சம் தானியம் வாங்கிக்கொண்டு வாருங்கள் என்றான். 3அதற்கு யூதா: உங்கள் சகோதரன் உங்களோடேகூட வராவிட்டால், நீங்கள் என் முகத்தைக் காண்பதில்லை என்று அந்த மனிதன் எங்களுக்குச் சத்தியமாய்ச் சொன்னான். 4எங்கள் சகோதரனை நீர் எங்களோடேகூட அனுப்பினால், நாங்கள் போய், உமக்குத் தானியம் வாங்கிக்கொண்டு வருவோம். 5அனுப்பாவிட்டால்….

  • |

    Day 90 (31-03-2025)

    Scripture Portion: Judges 3-5 நியாயாதிபதிகள் 3 1கானான் தேசத்தில் நடந்த சகல யுத்தங்களையும் அறியாதிருந்த இஸ்ரவேலராகிய அனைவரையும் சோதிப்பதற்காகவும், 2இஸ்ரவேல் புத்திரரின் சந்ததியாரும் அதற்குமுன் யுத்தஞ்செய்ய அறியாதிருந்தவர்களும் அவைகளை அறியும்படி பழக்குவிப்பதற்காகவும் கர்த்தர் விட்டுவைத்த ஜாதிகள் யாரென்றால்: 3பெலிஸ்தரின் ஐந்து அதிபதிகளும், சகல கானானியரும், சீதோனியரும், பாகால்எர்மோன் துவக்கி ஆமாத்திற்குள் பிரவேசிக்கும்வரைக்கும் லீபனோனின் மலைகளிலே குடியிருக்கிற ஏவியருமே. 4கர்த்தர் மோசேயைக்கொண்டு தங்கள் பிதாக்களுக்கு விதித்த கற்பனைகளுக்கு இஸ்ரவேலர் கீழ்ப்படிவார்களோ என்று அறியும்படி, இஸ்ரவேலரை அவர்களாலே சோதிப்பதற்காக அவர்கள் விடப்பட்டிருந்தார்கள். 5இப்படி…

  • |

    Day 223 (11-08-2025)

    Scripture Portion: Jeremiah 14-17 எரேமியா 14 1மழைத்தாழ்ச்சியைக் குறித்து எரேமியாவுக்கு உண்டான கர்த்தருடைய வசனம்: 2யூதா துக்கிக்கிறது, அதின் வாசல்கள் பெலனற்றுக் கிடக்கிறது; தரைமட்டும் குனிந்து, கரிகறுத்துத் திரிகிறார்கள்; எருசலேமின் கூக்குரல் எழும்புகிறது. 3அவர்களில் பிரபலமானவர்கள் தங்கள் சிறுவர்களைத் தண்ணீருக்கு அனுப்புகிறார்கள்; இவர்கள் பள்ளங்களுக்குப்போய்த் தண்ணீரைக்காணாமல் வெறும் பாத்திரங்களோடே திரும்பிவருகிறார்கள்; வெட்கி நாணி, தங்கள் தலையை மூடிக்கொள்ளுகிறார்கள். 4தேசத்தின்மேல் மழை இல்லாததினால் தரை வெடித்திருக்கிறது; பயிர் செய்கிறவர்கள் வெட்கி, தங்கள் தலையை மூடிக்கொள்ளுகிறார்கள். 5வெளியின் பெண்மானும் குட்டிபோட்டு, புல்லில்லாததினால்…

  • |

    Day 210 (29-07-2025)

    Scripture Portion: Isaiah 49-53 ஏசாயா 49 1தீவுகளே, எனக்குச் செவிகொடுங்கள்; தூரத்திலிருக்கிற ஜனங்களே, கவனியுங்கள்; தாயின் கர்ப்பத்திலிருந்ததுமுதல் கர்த்தர் என்னை அழைத்து, நான் என் தாயின் வயிற்றில் இருக்கையில் என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தினார். 2அவர் என் வாயைக் கூர்மையான பட்டயமாக்கி, தமது கரத்தின் நிழலினால் என்னை மறைத்து, என்னைத் துலக்கமான அம்பாக்கி, என்னைத் தமது அம்பறாத்தூணியிலே மூடிவைத்தார். 3அவர் என்னை நோக்கி: நீ என் தாசன்; இஸ்ரவேலே, நான் உன்னில் மகிமைப்படுவேன் என்றார். 4அதற்கு நான்: விருதாவாய் உழைக்கிறேன்,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *