இஸ்ரேல்-20 ( தாவீது – இஸ்ரவேலர் பாளையமிறங்கிய வரிசை)

தாவீது -3 (இஸ்ரவேலர் பாளையமிறங்கிய வரிசை)

ஆதாம் கீழ்ப்படியாததால், (சாகவே சாவான்)ஜீவனை இழந்தான். எனவே மனிதன் முழுமையாக கீழ்ப்படிந்து, அதன் மூலம் இழந்த ஜீவனை மறுபடி பெற்றுக்கொள்ளும்படி, தேவன் நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தார். ஆனால், அப்போதும் மனிதர்களால், கீழ்ப்படிய முடியவில்லை. பொய் சொல்லக்கூடாது என்று தேவன் சொல்லி இருக்க, மனிதன் சுலபமாக பொய் சொல்லி பாவம் செய்து விட்டான். அதை சரிசெய்ய வேண்டுமானால், ஏதோ ஒன்று செய்ய வேண்டும். தேவன், ஆசரிப்பு கூடாரம் என்ற ஒன்றை, மோசேக்கு காண்பித்து, ஆசரிப்பு கூடாரம் அமைத்து, அதில் பலிகள் கொடுக்கச் சொன்னார். அதோடு ஆசரிப்புக்கூடாரம் என்பது, தேவன் வாசம் பண்ணும் இடம். அந்த ஆசரிப்பு கூடாரத்தை வனாந்திர பயணத்தின்போது, தங்கும் இடத்தில், நடுவாக அமைத்து, அதை சுற்றிலும் இஸ்ரவேலரின் கூடாரங்கள் இருக்க வேண்டும் என்று தேவன் கட்டளை கொடுத்தார். சரியாகச் சொல்ல வேண்டுமானால், தேவன் இஸ்ரவேலரின் நடுவே வாசம் பண்ண விரும்பி, அவர்கள் நடுவே வாசம் பண்ணினார்.

முதலாவது, மோசே பாளையத்துக்கு புறம்பாக, ஆசரிப்பு கூடாரத்தை நிறுவி, அங்கே போய் கர்த்தருடன் பேசினார். யாத்திராகமம் 33: 7-11ல் மோசே, ஆசரிப்பு கூடாரத்துக்குள் சென்று, கர்த்தருடன் பேசுவது கூறப்பட்டிருக்கும். இந்த ஆசரிப்பு கூடாரத்தில் தான், யோசுவா ஆசரிப்புக் கூடாரத்தை விட்டு பிரியாதிருந்தார். இங்கு தான், மோசேயோடு கர்த்தர் முகமுகமாக பேசினார் என்று பார்க்கலாம்.

தேவன் மோசேயைக் கூப்பிட்டு, ஜனங்கள் நடுவில், நான் வசிக்கும்படி, ஒரு ஸ்தலம் உருவாக்க வேண்டும். நான் உனக்கு காட்டுகிற மாதிரியின்படி மட்டுமே அதை உருவாக்க வேண்டும் என்று கூறினார். அதுதான் ஆசரிப்பு கூடாரம்.

அதற்கு பின்னர்தான், மோசே அந்த வேலைகளை எல்லாம் சரியாக செய்து முடித்தார். ஆசரிப்பு கூடாரத்தை நடுவில் அமைத்து, மற்ற 12 கோத்திர மக்களும் எப்படி அதைச் சுற்றிலும் தங்க வேண்டும் என்பதை, எண்ணாகமம் 2,3 அதிகாரங்களில் கூறி இருக்கிறார். 20 வயது முதல், 50 வரையுள்ள ஆண்கள், ஒவ்வொரு கோத்திரத்திலும் எத்தனை பேர் என்று, தேவன் கணக்கு எடுக்க சொன்ன வேதத்தின் முதல் சென்செஸ் அது.

ஆசரிப்பு கூடாரத்தை ஒட்டி, உடனடியாக வேறு கோத்திர ஜனங்களை தங்க தேவன் அனுமதிக்கவில்லை. ஆசரிப்பு கூடாரத்தை பாதுகாக்கும் பணியை லேவியருக்குக் கொடுத்தார். லேவியர்களான, கோகாத் புத்திரர், கெர்சோன் புத்திரர், மெராரி புத்திரர் மூன்று பக்கங்களிலும், வாசலுக்கு எதிராக, மோசேயும் ஆரோனும் இருக்க வேண்டும். இவர்கள் தான் மற்ற மக்கள் ஆசரிப்பு கூடாரத்துக்கு அருகில் வராதபடிக்கு பாதுகாக்க வேண்டும். இந்த லேவியர்களுமே, ஆசரிப்பு கூடாரத்தில், பரிசுத்த ஸ்தலம், மகா பரிசுத்த ஸ்தலத்திலுள்ள பொருட்களை பார்க்க கூடாது.

கோகாத்தியரின் வேலை

வனாந்திரத்தில், ஒரு இடத்திலிருந்து கிளம்ப வேண்டுமானால், முதலில் மேகம் மேலே எழும்பும். உடனே, ஆரோனும் அவர் குமாரனும், முதலாவது பரிசுத்த ஸ்தலம், மகா பரிசுத்த ஸ்தலத்தின் பொருட்களை மூட வேண்டும். அதன் பின்னர், கோகாத் புத்திரர் அவைகளை, தூக்கி செல்ல வேண்டும். கோகாத் புத்திரர் எந்த பொருளையும் பார்க்க கூடாது. தூக்கி செல்வது மட்டுமே அவர்கள் வேலை.

கெர்சோனியரின் வேலை

அதேபோல, தொங்கும் திரைகள், திரைச்சீலை ஆசரிப்பு கூடார வாசல் மறைவு எல்லாவற்றையும் தூக்கிச் செல்வது கெர்சோன் புத்திரர் பணி.

மெராரியரின் வேலை

மெராரி புத்திரர், பலகை, தூண், தாழ்ப்பாள், வெண்கல பாதங்கள் போன்றவற்றை சுமந்து செல்ல வேண்டும். இது மெராரி புத்திரர் பணி.

இப்படி நேர்த்தியாக, யார் ஆசரிப்பு கூடாரத்தை சுற்றிலும் இருக்க வேண்டும்? யார் எதை சுமக்க வேண்டும் என்பதை தேவன் கூறினார். இவ்வளவு நேர்த்தியாக தேவன் ஆசரிப்பு கூடாரத்தை செய்ய சொல்லி, ஜனங்களின் நடுவில் வாசம் செய்தார். தேவன் ஜனங்களின் நடுவே வாசம் செய்தார் என்பதால், நாம் ஆசரிப்பு கூடாரம் நடுவில் இருந்ததாகவும், ஜனங்கள் அதை சுற்றிலும் வசித்ததாகவும் நினைப்போம். ஆனால், உண்மை அது அல்ல. வேதத்தை ஆராய்கிற வேத ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன என்றால், கீழ்க்கண்ட படத்தில் உள்ளது போல, அவர்கள் பாளையமிறங்கினார்களாம்.

பொதுவாக, சுற்றிலும் இருந்தார்கள் என்றால், வடக்கு, கிழக்கு திசையில் மட்டுமல்லாது, வட கிழக்கு திசையிலும்(சுற்றி வட்டமாக) இருந்தார்கள் என்று நினைப்போம். அது தவறானது. அவர்கள் ஒருவர் பின் ஒருவராக இருந்தார்கள் என்று வேத அறிஞர்கள் கூறுகிறார்கள்.

சரியாக இப்படித்தான் பாளையமிறங்கியிருக்கிறார்கள். கிழக்கு திசையில், செபுலோன், இசக்கார், யூதா கோத்திரம் இருந்தால், அதற்கு தலையாக யூதா கோத்திரம் இருந்து நடத்தி வந்திருக்கிறார்கள். எனவே யூதா, தாண், ரூபன், எப்ராயீம் என்ற கோத்திரங்கள் தலைவர்களாய் இருந்திருக்கிறார்கள்.  முதலில் எந்த கோத்திரம் செல்ல வேண்டும் என்பது முதற்கொண்டு தேவன் வழி நடத்தி இருக்கிறார் என்பதை கீழ்க்கண்ட வசனங்களில் பார்க்கலாம்.

தேவன் சொல்லியபடி தான், மோசே ஆசரிப்பு கூடாரத்தை செய்தார். தேவன் கூறியபடி தான், மக்களை, கோத்திரம் கோத்திரமாக பாளையமிறங்கச் செய்தார். நாம் ஏற்கனவே, பண்டிகைகள் பற்றிய பதிவில், இஸ்ரவேலர் எகிப்திலிருந்து கானான் வரும்வரையும் எது செய்தாலும், அது ஒரு தீர்க்கதரிசன செயல் என்று பார்த்தோம். இங்கே, அவர்கள் பாளையமிறங்கி இருந்தது கூட, சிலுவை போன்ற அமைப்பில். பரலோகத்திலிருந்து கீழே நோக்கி பார்த்தால், இஸ்ரவேல் ஜனங்கள் சிலுவை போன்ற அமைப்பில் தான் இருந்திருப்பார்கள்.

நாம் தாவீதையும், உடன்படிக்கை பெட்டியையும் பார்த்துக்கொண்டு வருகிறோம். இடையில், ஏன் இந்த பதிவு என்றால், ஆசரிப்பு கூடாரம், உடன்படிக்கை பெட்டியை தேவன் எவ்வளவு பத்திரமாய் பாதுகாத்து கொண்டு வருகிறார் என்பதற்காகத்தான்.

கோகாத் புத்திரர் பரிசுத்த பொருட்களான, உடன்படிக்கை பெட்டி, குத்து விளக்கு, அப்ப மேசை, தூப பீடம், பலிபீடம், தண்ணீர் தொட்டி, கத்தரி, கரண்டிகள், பாத்திரங்கள் என்று, ஆசரிப்பு கூடாரத்தின் முக்கியமான பொருட்களை தூக்கினாலும், அவைகளை ஆரோன் குடும்பத்தார் மூடும்போது கூட பார்க்க கூடாதாம். பார்த்தால் செத்து விடுவார்களாம். அவ்வளவு பயங்கரமானது உடன்படிக்கை பெட்டி. அதேபோல, அவ்வளவு பரிசுத்தமானது ஆசரிப்பு கூடாரம்.

இந்த ஆசரிப்பு கூடாரத்தை இஸ்ரவேலர், எங்கே வைத்தார்கள்? உடன்படிக்கை பெட்டிக்கு உரிய கனத்தைக் கொடுத்தார்களா? என்பதுதான் வரும் பதிவுகளில் பார்க்க இருக்கிறோம். தாவீது என்ன செய்தார்? ஏன் தாவீது முக்கியமானவர் என்பதையும் வரும் பதிவுகளில் காணலாம்.

Similar Posts

  • |

    Day 182 (01-07-2025)

    Scripture Portion: Obadiah Psalm 82-83 ஒபதியா 1 1ஒபதியாவின் தரிசனம்; கர்த்தராகிய ஆண்டவர் ஏதோமைக் குறித்துச் சொல்லுகிறது என்னவென்றால்: எழும்புங்கள், அதற்கு விரோதமாக யுத்தம்பண்ண எழும்புவோம் வாருங்கள் என்று அறிவிக்க ஸ்தானாபதி ஜாதிகளிடத்தில் அனுப்பப்படும் செய்தியைக் கர்த்தர் சொல்லக்கேட்டோம். 2இதோ, நான் உன்னை ஜாதிகளில் சிறுகப்பண்ணினேன்; நீ மெத்தவும் அசட்டை பண்ணப்பட்டிருக்கிறாய். 3கன்மலை வெடிப்புகளாகிய உன் உயர்ந்த ஸ்தானத்திலே குடியிருந்து, என்னைத் தரையிலே விழத்தள்ளுகிறவன் யார் என்று உன் இருதயத்தில் சொல்லுகிறவனே, உன் இருதயத்தின் அகந்தை உன்னை மோசம்போக்குகிறது. 4நீ கழுகைப்போல…

  • |

    Day 263 (20-09-2025)

    Scripture Portion: Haggai 1-2 ஆகாய் 1 1ராஜாவாகிய தரியு அரசாண்ட இரண்டாம் வருஷம் ஆறாம் மாதம் முதலாந்தேதியிலே, கர்த்தருடைய வார்த்தை ஆகாய் என்னும் தீர்க்கதரிசியின் மூலமாய் செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேல் என்னும் யூதாவின் தலைவனுக்கும், யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனுக்கும் உண்டாகி, அவர் சொன்னது என்னவென்றால்: 2இந்த ஜனங்கள் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கு ஏற்றகாலம் இன்னும் வரவில்லை என்கிறார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 3ஆனாலும் ஆகாய் என்னும் தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர் சொல்லுகிறார்: 4இந்த வீடு பாழாய்க்கிடக்கும்போது, நீங்கள்…

  • |

    Day 250 (07-09-2025)

    Scripture Portion: Ezekiel 35-37 எசேக்கியேல் 35 1கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 2மனுபுத்திரனே, நீ உன் முகத்தை சேயீர்மலைக்கு நேராகத் திருப்பி அதற்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்து, 3அதற்குச் சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், சேயீர்மலையே, இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து, என் கையை உனக்கு விரோதமாக நீட்டி, உன்னைப் பாழும் அவாந்தரவெளியுமாக்குவேன். 4உன் பட்டணங்களை வனாந்தரமாக்கிப்போடுவேன்; நீ பாழாய்ப்போவாய்; நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வாய். 5நீ பழைய பகையை வைத்து, இஸ்ரவேல் புத்திரருடைய அக்கிரமம் நிறைவேறுகையில் அவர்களுக்கு…

  • |

    Day 100 (10-04-2025)

    Scripture Portion: 1 Samuel 9-12 1 சாமுவேல் 9 1பென்யமீன் கோத்திரத்தாரில் கீஸ் என்னும் பேருள்ள மகா பராக்கிரமசாலியான ஒரு மனுஷன் இருந்தான்; அவன் பென்யமீன் கோத்திரத்தானாகிய அபியாவின் மகனான பெகோராத்திற்குப் பிறந்த சேரோரின் புத்திரனாகிய அபீயேலின் குமாரன். 2அவனுக்குச் சவுல் என்னும் பேருள்ள சவுந்தரியமான வாலிபனாகிய ஒரு குமாரன் இருந்தான்; இஸ்ரவேல் புத்திரரில் அவனைப்பார்க்கிலும் சவுந்தரியவான் இல்லை; எல்லா ஜனங்களும் அவன் தோளுக்குக் கீழாயிருக்கத்தக்க உயரமுள்ளவனாயிருந்தான். 3சவுலின் தகப்பனாகிய கீசுடைய கழுதைகள் காணாமற்போயிற்று; ஆகையால்…

  • |

    Day 158 (07-06-2025)

    Scripture Portion: Proverbs 13-15 நீதிமொழிகள் 13 1ஞானமுள்ள மகன் தகப்பனுடைய போதகத்தைக் கேட்கிறான்; பரியாசக்காரனோ கடிந்துகொள்ளுதலுக்குச் செவிகொடான். 2மனுஷன் தன் வாயின் பலனால் நன்மையைப் புசிப்பான்; துரோகிகளின் ஆத்துமாவோ கொடுமையைப் புசிக்கும். 3தன் வாயைக் காக்கிறவன் தன் பிராணனைக் காக்கிறான்; தன் உதடுகளை விரிவாய்த் திறக்கிறவனோ கலக்கமடைவான். 4சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது; ஜாக்கிரதையுள்ளவர்களுடைய ஆத்துமாவோ புஷ்டியாகும். 5நீதிமான் பொய்ப்பேச்சை வெறுக்கிறான்; துன்மார்க்கனோ வெட்கமும் இலச்சையும் உண்டாக்குகிறான். 6நீதி உத்தமமார்க்கத்தானைத் தற்காக்கும்; துன்மார்க்கமோ பாவியைக்…

  • |

    Day 44 (13-02-2025)

    Scripture Portion: Leviticus 1-4 லேவியராகமம் 1 1கர்த்தர் ஆசரிப்புக் கூடாரத்திலிருந்து மோசேயைக் கூப்பிட்டு, அவனை நோக்கி: 2நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால், உங்களில் ஒருவன் கர்த்தருக்குப் பலிசெலுத்த வந்தால், மாட்டுமந்தையிலாவது ஆட்டுமந்தையிலாவது ஒரு மிருகத்தைத் தெரிந்தெடுத்து, பலிசெலுத்தவேண்டும். 3அவன் செலுத்துவது மாட்டுமந்தையிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலியானால், அவன் பழுதற்ற ஒரு காளையைச் செலுத்துவானாக; கர்த்தருடைய சந்நிதியில் தான் அங்கிகரிக்கப்படும்படி, அவன் அதை ஆசரிப்புக்கூடார வாசலில் கொண்டுவந்து, 4அது தன் பாவநிவிர்த்திக்கென்று அங்கிகரிக்கப்படும்படி தன் கையை அதின் தலையின்மேல் வைத்து, 5கர்த்தருடைய சந்நிதியில் அந்தக்காளையைக்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *