இஸ்ரேல்-21 (தாவீது – உடன்படிக்கை பெட்டி பயணம் -1)

தாவீது -3 (உடன்படிக்கை பெட்டியின் பயணம்-1)

முந்தைய பதிவில், ஆசரிப்பு கூடாரம், உடன்படிக்கை பெட்டி போன்றவை, எவ்வளவு பரிசுத்தமானவை என்று பார்த்தோம். ஆசரிப்பு கூடாரத்தை சுற்றி, லேவியர்கள் மட்டும்தான் வசிக்க முடியும். கோகாத் புத்திரர் லேவியராக இருந்தாலும், அவர்கள் மட்டுமே பரிசுத்த பொருட்களை தூக்கி செல்ல முடிந்தாலும், அவர்கள் சுமப்பதற்கு மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், பரிசுத்த பொருட்களை ஆரோன் குடும்பத்தார் மூடுவதைக் கூட கோகாத் புத்திரர் பார்க்ககூடாது என்று பார்த்தோம்.

இரு வருடத்துக்கு முன்பு, நான் என் தோழியிடம் ஒரு சந்தேகம் கேட்டேன், “ஏன் உடன்படிக்கை பெட்டியை தொட்டால் மரணம்? ஏன் லேவியரைத் தவிர யாரும் ஆசரிப்பு கூடாரத்துக்குள் செல்லக்கூடாது?” என்று கேட்டேன். எனக்கு இதெல்லாம் பயங்கர குழப்பம். அதிலும், ‘ஊசா என்பவர், பெட்டி விழக்கூடாது என்பதற்காக தொட்டார், அவரைப்போய் தேவன் அடித்து விட்டாரே’ என்று எனக்கு குழப்பமாக இருக்கும்.

“Father God (பிதா) மேலிருந்து பார்க்கும்போது, ஃபர்ஸ்ட் அவங்க கண்ணுக்கு மனுஷனுடைய பாவங்கள் தான் தெரியுமாம். ஏன்னா, அவர் நீதியுள்ள தேவன். அவரால், பாவத்தை சகிக்க முடியாது. அதனால்தான் இரத்தம் தேவைப்பட்டது. பிரதான ஆசாரியன் கூட, அந்த ஆட்டுக்குட்டி இரத்தத்துல, கொஞ்ச செகண்ட்ஸ் தான் மகா பரிசுத்த ஸ்தலம்குள்ள போக முடியும். எந்த இரத்தமும் இல்லாம, ஊசா தொட்டாருல, அதனால தான் செத்துட்டாரு. நமக்கு Jesus Blood இருக்குது. இப்போ Father God நம்மள பார்த்தா, நம்மகிட்ட உள்ள Jesus Blood தான் ஃபர்ஸ்ட் அவர் கண்ணுக்கு தெரியும். அந்த Blood, நம்ம Sin எல்லாம் cover பண்ணிரும். அதனாலதான் நாம் அவர்கிட்ட சுலபமா போக முடியும்” என்று பதில் கூறினாள்.

இந்த வசனத்தின் அர்த்தம் இப்பொழுதுதான் புரிந்தது. நாம் எவ்வளவு அருமையான காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், எவ்வளவு பாக்கியம் பெற்றவர்கள் என்பது குறித்து இன்றும் படிக்க, என்னை உற்சாகப்படுத்தியது, என் தோழியின் பதில் தான்.

வனாந்திரத்தில் முதலில் மோசே, தேவன் காட்டிய மாதிரியின்படி, ஆசரிப்பு கூடாரம் கட்டினார். 40 வருடம் வனாந்திர பயணத்தில், மேகம் மேலே எழும்பும்போது, ஆசரிப்பு கூடாரத்தைக் கழட்டி, பயணம் செய்வார்கள். மேகம் நிற்கும்போது, ஆசரிப்பு கூடாரத்தை திரும்பக் கட்டுவார்கள். கழட்டி கழட்டி, திரும்ப கட்டுவார்கள். அடுத்து யோசுவாவின் காலம்.  யோசுவா-12ம் அதிகாரத்தில் பார்த்தால், மொத்தமாக 31 ராஜாக்களை முறியடித்து, கோத்திரங்களுக்கு தேசத்தை பங்கு போடுகிறார்கள். இப்போது, ஆசரிப்பு கூடாரத்தை வைக்க வேண்டும். இதுவரை, கழட்டி, கழட்டி, திரும்ப கட்டப்பட்ட ஆசரிப்பு கூடாரம், முதன்முறையாக நிலையான ஒரு இடத்தில் வைக்க வேண்டும். எங்கே வைப்பது?

மோசே இஸ்ரவேல் ஜனங்களிடம், ஆசரிப்பு கூடாரம் எங்கே வைக்க வேண்டும் என்பது பற்றி பேசினார். உபாகமம் 12ம் அதிகாரத்தில் அது குறிக்கப்பட்டுள்ளது.

மோசே ஆசரிப்பு கூடாரத்தை வைக்க, தேவன் தெரிந்து கொண்ட ஒரு இடம் இருக்கிறது என்று கூறினார். ஆனால், அந்த இடம் எது என்று கூறவில்லை. இப்போது, யோசுவா, தேசத்தை பிரித்து 12 கோத்திரங்களுக்கு கொடுத்து விட்டார். ஆனால் ஆசரிப்பு கூடாரம் எங்கே வைக்க வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியவில்லை.

  1. சீலோ(யோசுவா 18-1)

மக்கள் ஒன்றுகூடி, சீலோ என்னும் இடத்தில் ஆசரிப்பு கூடாரத்தை நிறுவினார்கள் என்று பார்க்கிறோம். அதுதான் தேவன் சொன்ன இடமா? நமக்கு தெரியாது, வேதத்தில் அப்படி சொல்லப்படவில்லை. யோசுவாவுக்கு அடுத்து, நியாயாதிபதிகள் காலம் முடிந்தது.

கிட்டத்தட்ட 450 வருட காலம் முடிந்துவிட்டது. அவ்விடத்தில் தொடர்ந்து ஆராதனை(பலிகள்) நடந்துகொண்டே இருக்கிறது. அந்த சீலோ ஆலயத்தில் தான், அன்னாள் அவ்விடத்தில் வந்து  குழந்தைக்காக வேண்டிக்கொண்டாள். சாமுவேலை அவ்விடத்தில் கொண்டுவந்து, ஏலியிடம் விட்டார். இந்த சாமுவேல் சீலோவில் இருக்கும்போது தான், தேவன் “சாமுவேலே சாமுவேலே” என்று கூப்பிட்டு பேசினார். அவ்வளவு முக்கியத்துவம் பெற்றது சீலோ என்கிற இடம்.

சாமுவேல் வளர்ந்து தீர்க்கதரிசி ஆகிவிட்டார். கர்த்தர் சீலோவிலே ஒரு தீர்க்கதரிசியை உருவாக்கி விட்டார். இப்போது, இஸ்ரவேலுக்கு விரோதமாக பெலிஸ்தர் வருகிறார்கள். ஆனால் பெலிஸ்தர் 4000 இஸ்ரவேலரைக் கொன்று விட்டார்கள். “யுத்தத்தில் நமக்கு ஏன் தோல்வி” என்று யோசித்த மூப்பர்கள், ‘இதுவரை வனாந்திரத்தில் யுத்தத்துக்கு உடன்படிக்கை பெட்டியை தூக்கி போனார்கள். அதனால் ஜெயித்தோம். இன்று உடன்படிக்கை பெட்டி இல்லை, அதனால் தோற்று விட்டோம். நாம் போய், உடன்படிக்கை பெட்டியை தூக்கிக் கொண்டு, நாளை யுத்தத்துக்கு வருவோம். வெற்றி பெற்றுவிடலாம்’ என்று சொல்லி அடுத்த நாள், பெட்டியை தூக்கிக்கொண்டு போய் விட்டார்கள்.

உடன்படிக்கை பெட்டியை யார் தொட்டாலும் மரணம். இஸ்ரவேலர் எப்படி தூக்கி சென்றார்கள்? ஆசரிப்பு கூடார அமைப்பிலேயே பெட்டி வைக்கப்பட்டிருந்ததால், அப்படியே, லேவியரை வைத்தே பெட்டியை தூக்கி வந்திருப்பார்கள் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். அடுத்து பெலிஸ்தர் பெட்டியை எடுத்து செல்லும்போதும், பெலிஸ்தருக்கு எதுவும் ஆகவில்லை. எப்படி? தேவனுடைய செயல் இது! நமக்கு புரியவில்லை என்றாலும், அவருடைய செயலுக்கு பின்னால், காரணங்கள் இருக்கும்.

  • எபெனேசர்(1 சாமுவேல் 4-3)

பெட்டியை மூப்பர்கள், யுத்தம் நடக்கும் இடமான எபெனேசருக்கு கொண்டு சென்றார்கள். இஸ்ரவேலர், பெட்டி வந்ததும் சந்தோஷமாக ஆர்ப்பரிக்க, சத்தம் கேட்டு பெலிஸ்தர் நடுங்குகிறார்கள். ஆனால் இந்த யுத்தத்தில் இஸ்ரவேலர் தோற்று போனார்கள். பெட்டி இல்லாதிருந்த நேற்று கூட, 4000பேர் தான் இறந்தார்கள். இன்றோ, 30,000 பேர் இறந்து விட்டார்கள். பெலிஸ்தர் பெட்டியைத் தூக்கி கொண்டு போய்விட்டார்கள்.

  • அஸ்தோத்(1 சாமுவேல் 5-1)

பெலிஸ்தர் பெட்டியைக்கொண்டுபோய் அஸ்தோத் என்னும் இடத்தில், தாகோனின் கோயிலில் கொண்டு வைத்தார்கள். தாகோன் நின்று கொண்டிருக்கிற இடத்தில் கர்த்தருடைய பெட்டி இருக்கிறது. அந்த பெட்டியின் மூடியான கிருபாசனத்தில் இருந்து தான், தேவன் மோசேயோடு பேசினார் என்று பார்த்தோம். அவர் மகிமையை 2 கேருபீன்கள் மூடி இருக்கும். உண்மையாக சொல்ல வேண்டுமானால், அது தேவன் வாசம்பண்ணும் இடம். நம் தேவன் அங்கிருக்கிறார். தாகோன் தேவனுக்கு முன்பாக, முகங்குப்புற விழுந்து கிடந்தது(1சாமு 5-3). அதை நேராக எடுத்து வைத்து சென்றவர்கள், மறுநாள் வந்து பார்க்கிறார்கள். இன்றும் தேவனுக்கு முன்பாக, தாகோன் முகங்குப்புற கிடக்கிறது. அதோடு, தாகோனின் கை, தலை எல்லாம் உடைந்து வாசற்படியில் கிடந்தது.(1 சாமு 5-4). உடனே அங்கிருந்து, கர்த்தருடைய பெட்டியை எடுத்துக்கொண்டு, காத் என்னும் வேறொரு இடத்தில்  வைத்தார்கள்.

  • காத்(1 சாமுவேல் 5-8)

பெலிஸ்தர் பெட்டியை காத் என்னும் பெலிஸ்தரின் தேசத்திலுள்ள இடத்திலேயே, இடமாற்றம் செய்தார்கள். கர்த்தருடைய பெட்டி, அவருடைய தேசத்தில் இருந்தால் தான் அது ஆசீர்வாதம். வேறே தேசத்தில் இருந்தால் அது சாபம். ஏழு மாதங்கள் பெட்டி அங்கே இருந்தது. கர்த்தர் அங்கு இருந்தவர்களை மூல வியாதியினால் வாதித்தார்.(1 சாமுவேல் 5-9). செத்துபோகாமல் இருந்தவர்கள் போட்ட கூக்குரல் வானபரியந்தம் எட்டியதாம்(1 சாமுவேல் 5-12). அப்படியானால், நிறையபேர் செத்துவிட்டார்கள் என்று தானே அர்த்தம்.

  • எக்ரோன் (1 சாமுவேல் 5-10)

பெட்டியை பெலிஸ்தர் தேசத்திலே உள்ள, எக்ரோனுக்கு அனுப்பி விடலாம் என்று, காத் ஊரார் அனுப்புகிறார்கள். ஆனால், எக்ரோன் மனுஷர் பெட்டிக்கு பயந்து, ஊருக்குள்ளே பெட்டியை அனுமதிக்கவில்லை. “பெட்டியை எப்படி இஸ்ரவேலுக்கே திரும்பி அனுப்பலாம்” என்று பெலிஸ்தர் பூசாரிகளிடம் கேட்டனர். பூசாரி, சில பரிகாரங்கள் கூறிவிட்டு, (அதாவது பொன் சுண்டெலி போன்ற பரிகாரம்) பின் வருமாறு கூறுகிறார்.

அப்படியே பெலிஸ்தர் அங்கிருந்து பெட்டியை அனுப்பி விட்டனர். பெலிஸ்தர் தேசத்தில் அஸ்தோத், காத், எக்ரோன் ஊருக்கு பெட்டி பயணப்பட்டது.

  • பெத்ஷிமேஸ்

பூசாரி சொன்னபடியே, பெட்டி பெத்ஷிமேஸ்க்கு நேராக போய்விட்டது. இப்போது, பெலிஸ்தர் தெரிந்திருப்பார்கள், அவர்களுக்கு மூல நோய் வந்ததற்கு காரணம் உடன்படிக்கை பெட்டி என்று. பெட்டி இப்போது, இஸ்ரவேலுக்குள் வந்துவிட்டது.

பெட்டி இஸ்ரவேலுக்கு திரும்பி விட்டது. ஆனால் தேவகோபம் மக்கள் மீது வந்தது. ஏன்? பெட்டி வந்த  சந்தோஷத்தில், பெட்டிக்குரிய கனத்தை மறந்து, இந்த பெட்டிக்குள் என்ன இருக்கும் என்று ஆர்வக்கோளாறில், உள்ளே திறந்து பார்த்துவிட்டனர். அதை சுமக்கும் கோகாத் வம்சம் கூட, அதை கண்ணால் பார்க்க கூடாது என்று தேவன் கூறியிருந்தார். ஆனால், இப்போது மக்கள் துணிந்து பெட்டியை திறக்கவே செய்துவிட்டனர். மக்கள் பெட்டியை திறக்கவும், உள்ளிருந்து பயங்கரமாக தேவ மகிமை வெளிப்பட்டதாகவும், அவர் மகிமைக்கு முன் பாவம் நிற்க முடியாமல், சுற்றி இருந்த 50000 பேர் மரித்து விட்டதாகவும் கூறுகிறார்கள்.

பெலிஸ்தர் யுத்தத்தில் முதல் நாளில் 4000 பேர் இறந்தனர். இரண்டாவது நாளில், யுத்தத்தில் 30,000 பேர் இறந்தார்கள். ஏழு மாதம் கழித்து, இன்று பெட்டி திரும்பி வந்துள்ளது. ஆனால், 50,070 பேர் இறந்து விட்டார்கள்.  இன்று நாம் கூட, இப்படித்தான் துணிகரமாக செய்கிறோம். சில சமயங்களில், நம் தேவன் தானே என்று அசட்டை செய்து விடுகிறோம், இயேசுவின் இரத்தம் என்ற ஒன்று தான், நாம் எவ்வளவு பாவம் செய்தாலும், ஆலயத்துக்குள் சென்றவுடன் மரணம் வராமல் நம்மை பாதுகாத்துக் கொண்டிருக்கிறது என்பதை உணராமல் அலைகிறோம்.

இப்போது இஸ்ரவேலரை எண்ணிப்பாருங்கள். அவர்கள் தேவன் திரும்பி வந்து விட்டார். பெட்டி வந்து விட்டது. ஆனால் பெட்டியை சுற்றி 50,000 பிணம் இருக்கிறது. மக்களுக்கு எப்படி இருக்கும்? அவர்கள் கீரியாத் யாரீம் ஊர் மக்களை அழைத்து, பெட்டியை தூக்கி கொண்டு போகச் சொல்லி விட்டார்கள். கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், தேவன் அங்கு இல்லை. ஆனால் சீலோவில் ஆராதனைகள் (அதாவது காலை பலி, மாலை பலி) நடந்துகொண்டே இருக்கிறது.

  • கீரியாத் யாரீம் (அபினதாப் வீடு)

கீரியாத் யாரீமுக்கு கொண்டு வந்த இஸ்ரவேலர், அங்கே யார் தலையில் தள்ளலாம் என்று பார்த்து, அபினதாப் என்னும் ஒருவன் வீட்டில் கொண்டுவந்து வைத்து விட்டார்கள். அவன் குமாரன் எலெயாசரை ஆசாரியனாக பரிசுத்தப்படுத்தி, அங்கேயே கர்த்தரை விட்டுப் போய்விட்டார்கள். இப்படியே 20 வருடம் போய் விட்டது.

இந்த 20 வருடமும், பெட்டியை இஸ்ரவேலர் சீலோவுக்கு எடுத்து செல்லவில்லை. ஆனால் சீலோவில், ஆசரிப்பு கூடாரமான அந்த ஆலயத்தில், பலிகள், பண்டிகைகள் எல்லாம் நடந்தது. எவ்வளவு பரிதாபம் அல்லவா? இன்று அனேக ஆலயத்தில் இயேசு இருக்கிறாரா என்பதே தெரியாமல், வழிபாடுகள், சிலை வழிபாடுகள் எல்லாம் நடக்கிறது, ஆனால் அங்கு நம் தேவன் இருக்கிறாரா, என்றால் கேள்விக்குறியே.

  • இஸ்ரவேலர்களின் முதல் முயற்சி

20 வருடம் பெட்டி இல்லை என்று கவலைப்பட்ட இஸ்ரவேலர், சாமுவேலிடம் வந்து கேட்கிறார்கள். சாமுவேல் அவர்களுக்கு, ஒரு நாள் உபவாச ஜெபம் செய்ய சொல்கிறார். அவர்கள் மிஸ்பாவில் ஜெபிக்கும் நாளில், பெலிஸ்தர் மறுபடியும் ஒரு யுத்தத்துக்கு வந்து விட்டார்கள். இப்போது, “பெட்டி திரும்ப வர வேண்டும்” என்ற ஜெபம் மாறி, “பெலிஸ்தர் கைக்கு விலக்கும்” என்று மாறி விட்டது. அந்த யுத்தத்தில் இஸ்ரவேலர் மிகப்பெரிய வெற்றி பெற்றார்கள். அவ்வளவு தான், அந்த வெற்றியின் சந்தோஷத்தில், அவரவர் வீட்டுக்கு போய் விட்டார்கள். பெட்டி, அபினதாப் வீட்டிலேயே இருக்கிறது.

அந்த இடத்தில் அவர்களுடைய ஒரு நாள் உபவாச ஜெபத்துக்கு பதில் வந்தது. ஒருவேளை, பெட்டியை திரும்பக் கொண்டுபோக ஜெபித்திருந்தால், அவர்களுடைய தேவனை அவர்கள் கொண்டு போயிருப்பார்கள். ஆனால், போராட்டம் வந்ததும், “தேவனே நீர் அபினதாப் வீட்டிலேயே இரும், எங்களை பெலிஸ்தரிடம் இருந்து பாதுகாரும்” என்று ஜெபித்தார்கள். நாமும் இன்று, “இயேசுவே, நீர் எங்கேயோ இருந்து கொள்ளும், எனக்கு இந்த உதவியை மட்டும் செய்யும்” என்று நம் காரியத்தை மட்டும் கேட்கிறோம். நமக்கு தேவை அவர் தான். அவர் நம்மோடு இருந்தால், எல்லாமே சரியாகி விடும்.

சாமுவேல் வாழ்க்கை முடிந்து விட்டது. சவுல் 40 வருட ராஜ்ய காலம் முடிந்து விட்டது. பெட்டி மட்டும், அபினதாப் வீட்டிலேயே இருந்தது. தோராயமாக கணக்கு செய்தால், பெட்டி 20 வருடம் இருந்தபோது, அந்த ஒரு நாள் உபவாச ஜெபம் யுத்தம் வந்தபோது, சவுல் ராஜாவாகவில்லை. அதன் பின் சவுலின் ராஜ்ய காலம் 40 வருடம். தாவீது 30 வயதில் ராஜாவாகி, 40 வருடம் ராஜாவாக இருந்தார், அதில் 7 வருடம் எபிரோன், 33 வருடம் இஸ்ரேல். எனவே அந்த 7 வருடம் கணக்கிட்டால், 67 வருடம். (20+40+7=67) கிட்டத்தட்ட 67 வருடங்கள், பெட்டி, ஆலயத்தில் இல்லை. அபினதாப் வீட்டில் இருந்தது. பின்னர் தாவீது மூலம் மீண்டும் சரியான இடத்துக்கு வந்தது. தாவீது பெட்டியை கொண்டு வரும்போது, மரணம் வந்ததா? பெட்டியை சீலோவில் வைத்தாரா? வேறு இடத்தில் வைத்தாரா? வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

Similar Posts

  • |

    Day 317 (13-11-2025)

    Scripture Portion: Luke 23, John 18-19 லூக்கா 23 1அவர்களுடைய கூட்டத்தாரெல்லாரும் எழுந்திருந்து, அவரைப் பிலாத்துவினிடத்திற்குக் கொண்டுபோய்: 2இவன் தன்னைக் கிறிஸ்து என்னப்பட்ட ராஜாவென்றும், ராயருக்கு வரிகொடுக்க வேண்டுவதில்லையென்றும் சொல்லி, ஜனங்களைக் கலகப்படுத்தக் கண்டோம் என்று அவர்மேல் குற்றஞ்சாட்டத் தொடங்கினார்கள். 3பிலாத்து அவரை நோக்கி: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். அவர் அவனுக்குப் பிரதியுத்தரமாக; நீர் சொல்லுகிறபடிதான் என்றார். 4அப்பொழுது பிலாத்து பிரதான ஆசாரியர்களையும் ஜனங்களையும் நோக்கி: இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும்…

  • |

    Day 67 (08-03-2025)

    Scripture Portion: Numbers 31-32 எண்ணாகமம் 31 1கர்த்தர் மோசேயை நோக்கி: 2இஸ்ரவேல் புத்திரர் நிமித்தம் மீதியானியரிடத்தில் பழிவாங்குவாயாக; அதன் பின்பு உன் ஜனத்தாரிடத்தில் சேர்க்கப்படுவாய் என்றார். 3அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: கர்த்தர் நிமித்தம் மீதியானியரிடத்தில் பழிவாங்கும்பொருட்டு, உங்களில் அவர்கள்மேல் யுத்தத்திற்குப் போகத்தக்கதாக மனிதரைப் பிரித்தெடுங்கள். 4இஸ்ரவேலுடைய எல்லாக் கோத்திரங்களிலும் ஒவ்வொரு கோத்திரத்தில் ஆயிரம்பேரை யுத்தத்திற்கு அனுப்பவேண்டும் என்றான். 5அப்படியே இஸ்ரவேலராகிய அநேகம் ஆயிரங்களில், ஒவ்வொரு கோத்திரத்தில் ஆயிரமாயிரம் பேராகப் பன்னீராயிரம்பேர் யுத்தசன்னத்தராய் நிறுத்தப்பட்டார்கள். 6மோசே அவர்களையும் ஆசாரியனாகிய எலெயாசாரின்…

  • |

    Day 325 (21-11-2025)

    Scripture Portion: Acts 13-14 அப்போஸ்தலர் 13 1அந்தியோகியா பட்டணத்திலுள்ள சபையிலே பர்னபாவும், நீகர் என்னப்பட்ட சிமியோனும், சிரேனே ஊரானாகிய லூகியும், காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோதுடனேகூட வளர்க்கப்பட்ட மனாயீனும், சவுலும், தீர்க்கதரிசிகளாயும் போதகர்களாயும் இருந்தார்கள். 2அவர்கள் கர்த்தருக்கு ஆராதனைசெய்து, உபவாசித்துக்கொண்டிருக்கிறபோது: பர்னபாவையும் சவுலையும் நான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களைப் பிரித்துவிடுங்கள் என்று பரிசுத்த ஆவியானவர் திருவுளம்பற்றினார். 3அப்பொழுது உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை அனுப்பினார்கள். 4அப்படியே அவர்கள் பரிசுத்த ஆவியினால் அனுப்பப்பட்டுச் செலூக்கியா பட்டணத்துக்கு வந்து, கப்பல்…

  • |

    Day 26 (26-01-2025)

    Scripture Portion: Genesis 41-42 ஆதியாகமம் 41 1இரண்டு வருஷம் சென்றபின்பு, பார்வோன் ஒரு சொப்பனம் கண்டான்; அது என்னவென்றால், அவன் நதியண்டையிலே நின்றுகொண்டிருந்தான். 2அப்பொழுது அழகும் புஷ்டியுமான ஏழு பசுக்கள் நதியிலிருந்து ஏறிவந்து புல் மேய்ந்தது. 3அவைகளின்பின் அவலட்சணமும் கேவலமுமான வேறே ஏழு பசுக்கள் நதியிலிருந்து ஏறிவந்து, நதி ஓரத்தில் மற்ற பசுக்களண்டையிலே நின்றது. 4அவலட்சணமும் கேவலமுமான பசுக்கள் அழகும் புஷ்டியுமான ஏழு பசுக்களையும் பட்சித்துப்போட்டது; இப்படிப் பார்வோன் கண்டு விழித்துக்கொண்டான். 5மறுபடியும் அவன் நித்திரைசெய்து,…

  • |

    Day 200 (19-07-2025)

    Scripture Portion: 2 kings 18:1-8, 2 Chronicles 29-31, Psalm 48 2 இராஜாக்கள் 18: 1-8 1இஸ்ரவேலின் ராஜாவாகிய ஏலாவின் குமாரன் ஓசெயாவின் மூன்றாம் வருஷத்திலே ஆகாஸ் என்னும் யூதாவுடைய ராஜாவின் குமாரனாகிய எசேக்கியா ராஜாவானான். 2அவன் ராஜாவாகிறபோது, இருபத்தைந்து வயதாயிருந்து, எருசலேமிலே இருபத்தொன்பது வருஷம் அரசாண்டான்; சகரியாவின் குமாரத்தியாகிய அவன் தாயின் பேர் ஆபி. 3அவன் தன் தகப்பனாகிய தாவீது செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான். 4அவன் மேடைகளை அகற்றி, சிலைகளைத் தகர்த்து, விக்கிரகத்தோப்புகளை…

  • |

    Day 50 (19-02-2025)

    Scripture Portion: Leviticus 19-21 லேவியராகமம் 19 1பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: 2நீ இஸ்ரவேல் புத்திரரின் சபை அனைத்தோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்கள் தேவனும் கர்த்தருமாகிய நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள். 3உங்களில் அவனவன் தன்தன் தாய்க்கும் தன்தன் தகப்பனுக்கும் பயந்திருக்கவும், என் ஓய்வு நாட்களை ஆசரிக்கவும்கடவீர்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர். 4விக்கிரகங்களை நாடாமலும், வார்ப்பிக்கப்பட்ட தெய்வங்களை உங்களுக்கு உண்டாக்காமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர். 5நீங்கள் சமாதானபலியைக் கர்த்தருக்குச் செலுத்தினால், அதை மனோற்சாகமாய்ச் செலுத்துங்கள். 6நீங்கள் அதைச் செலுத்துகிற…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *