இஸ்ரேல்-23 (தாவீது – 5 (இராட்சதர்கள்)

தாவீது –5

தாவீது சுதந்தரித்த எல்லை – இராட்சதர்கள் யார்?

இஸ்ரவேல் என்ற நாடு, ஆபிரகாம் என்கிற ஒரு மனிதனின், குடும்பம் என்பது நமக்கு தெரியும். தேவன் ஆபிரகாமுக்கு 3 வித ஆசீர்வாதங்கள் கொடுத்தார் என்பது வேதத்தில் உள்ளது.

1. இந்த தேசத்தை உனக்கு கொடுத்தேன் என்று ஒரு நிலத்தைக் கொடுத்தார். (Land)

2. உன் சந்ததி ஒரு நாடாக உருவாகுவார்கள் என்று தேச ஜனங்கள் வாக்களித்தார். (People)

3. உனக்கும் உனக்கு பின் வரும் சந்ததிக்கும் நித்திய உடன்படிக்கை ஏற்படுத்துவேன் (பரிசுத்த வித்து -Seed)

பரிசுத்த வித்து எப்படி ஆதாமிலிருந்து பயணம் செய்தது என்று, ஏற்கனவே பார்த்தோம். அதேபோல, யாக்கோபின் பிள்ளைகள் 70 பேராக எகிப்துக்கு சென்றார்கள், அங்கே அடிமையாக இருந்தபடியால், எகிப்தியரோடு கலக்காமல், தனியாக எபிரேயர் என்ற இனமாக உருவாகி, கிட்டத்தட்ட 30லட்சம் பேராக திரும்பி வந்தார்கள். எனவே, ஆபிரகாமுக்கு வாக்களித்த ஒரு தேச ஜனங்களும் கிடைத்தார்கள். ஆபிரகாமுக்கு தேவன் ஒரு எல்லை வாக்களித்திருந்தார்.

God to Abraham – 10 Tribes

அதேபோல மோசேக்கும் ஒரு வாக்குத்தத்தத்தை தேவன் வாக்கு கொடுத்தார். கானான் தேசத்தில் இந்த ஜனங்களை எல்லாம் நீங்கள் வெற்றி பெற்று தேசத்தை சுதந்தரிப்பீர்கள் என்றார்.

God to Moses – 6 Tribes

யார் இந்த கானானியர்? நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம், ஏனோக்கின் புத்தகத்தின்படி(Book of Enoch), நோவாவின் காலத்தில், 120 தேவபுத்திரர் மனுஷ குமாரத்திகளுடன் கலந்ததால், இராட்சத இனம் (The Anakim and Nephilim) உருவானது. அந்த இராட்சதர், மற்ற மனுஷருடன் கலக்கும்போது, இராட்சதர்கள் உருவானார்கள். இந்த 120 இராட்சதர்களும், அவர்களுக்குள் கலக்கும்போது, ஒரிஜினல் இராட்சதர்(Giants) உருவானார்கள், அவர்களை ஏனாக்கின்(Anak) புத்திரர் “Anakim” என்று அழைத்தார்கள். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், இரண்டு வகையான இராட்சதர்கள் இருந்தார்கள். ஒன்று, ஒரிஜினல் இராட்சதர் ஏனாக்கின் புத்திரர் Anakim, மற்றொன்று, கலப்பின இராட்சதர்கள் Nephilim. இந்த இராட்சத இனம்தான் கானான் முழுவதும் நிரம்பி இருந்தது. ஆபிரகாமின் சந்ததி இவர்களுடன் கலந்து, தங்கள் பரிசுத்த வித்தைக் கெடுக்கக்கூடாது என்பதற்காகத்தான், தேவன் அவர்களை எகிப்துக்கு கொண்டு சென்று பாதுகாத்தார். இப்போது மீண்டும் இந்த தேசத்துக்கு அழைத்துவரும்போது, அந்த இராட்சதர்களை துரத்திவிட்டு தான் உள்ளே செல்ல வேண்டும். மோசேக்கு வாக்கு கொடுக்கும்போது, தேவன் சொல்கிற அத்தனை தேசமும் இராட்சதர்கள் இருக்கும் பட்டணம். ஆனாலும் மோசே தேவனை நம்பி ஜனங்களை அழைத்து வந்துவிட்டார். இப்போது ஒவ்வொரு கோத்திரத்தில் ஒருவராக, 12 பேரை அனுப்பி, தேசத்தை சுற்றி பார்க்கும்படி மோசே அனுப்பிகிறார். யோசுவா, காலேப் தவிர மற்ற 10 பேரும் என்ன சொன்னார்கள் என்பதை கீழே பார்க்கலாம்.

அவர்கள் பார்வைக்கு வெட்டுக்கிளி என்பது நாம் சாதாரணமாக வாசித்து போயிருப்போம். ஆனால் உண்மையில் அவர்கள் அப்படித்தான் இருந்தார்களாம். ஏனோக்கின் புத்தகத்தில் 300 Cubits உயரம் இருந்தார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது. 1 cubit is 18 inches (46 cm) என்றால், அவர்கள் 450 feet (140 m) இருந்திருப்பார்கள். முதலாவது இதைப்பற்றி படிக்கும்போது, என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அது எப்படி அவ்வளவு உயரம் இருக்க முடியும் என்று யோசித்தேன். ஒருமுறை ஏதோ ஒரு செய்தியில், பண்டைய மனிதர்கள் மிகவும் உயரமாக இருந்ததாகவும், வரவர மனிதனின் உயரம் குறைந்து 6 அடிக்கு வந்ததாகவும் படித்தேன். 450 அடியில் மனிதன் இருந்திருப்பானா என்பது இன்னமும் எனக்கு குழப்பமே. ஒருவேளை, அவன் 15 அடி உயரமாக இருந்திருக்கலாம் என்பதை ஏற்றுக்கொண்டேன். அதுவும் வேத வசனங்களை வைத்துதான்.

இங்கு ஒரு இராட்சத பட்டணத்தின் ராஜாவைப்பற்றி வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அவன் கட்டில் இரும்பினால் செய்யப்பட்டதாம் (அவ்வளவு weight). ஒன்பது முழ நீள கட்டிலாம் (அவ்வளவு Height). இங்கு 9 முழ நீளம் என்பது தவறான மொழிபெயர்ப்பு. 9 Cubits, அதாவது 13 அடி நீளம். எனவே இந்த இராட்சத ராஜா 12 அடி உயரமாக இருந்திருக்கலாம். நாம் 6 அடி, அவர் 12 அடி என்றால் கூட, அவர் பார்வைக்கு இஸ்ரவேலர் வெட்டுக்கிளிகள் தானே. உண்மையில் அங்கிருந்தவர்கள் இராட்சதர்கள் தானா? வேதத்தின் வசனங்கள் என்ன சொல்கிறது?

11.அவர்களும் ஏனாக்கியரையொத்த இராட்சதர் என்று எண்ணப்பட்டார்கள்; மோவாபியரோ அவர்களை ஏமியர் என்று சொல்லுகிறார்கள்.

20. அதுவும் இராட்சதருடைய தேசமாக எண்ணப்பட்டது; முற்காலத்தில் இராட்சதர் அதிலே குடியிருந்தார்கள், அம்மோனியர் அவர்களைச் சம்சூமியர் என்று சொல்லுகிறார்கள்.

உபாகமம் 2

ஆக வேதத்தின்படியும், இராட்சதர்கள் இருந்தார்கள், இராட்சத தேசம் இருந்தது என்பதை அறியலாம்.

மோசே இஸ்ரவேலரிடம் கடைசியாக பேசியது தான், உபாகமம் புத்தகத்தில் இருக்கும். அதில் ஆதி முதல் தேவன் தங்களை நடத்திவந்த விதம் குறித்து கூறினார். அவர் கூறியதில் ஒரு பழமொழி பேசியிருப்பார், ஏனாக் புத்திரருக்கு முன்பாக நிற்பவன் யார் என்று. அப்படி பழமொழி சொல்லும் அளவுக்கு அந்த இராட்சதர்கள் மிகவும் பெரியவர்கள்.

தேவன் இவர்களை ஜெயிப்பாய் என்று கூறினார். ஆனால் சுற்றி பார்த்த 10 பேர் மாற்றி சொன்னார்கள். எனவே தேவன், யோசுவா காலேப் தவிர வேறொருவரும் கானான் போவதில்லை என்பார்.

காலேப் போய் வந்த தேசத்தை அவனுக்கு கொடுப்பேன் என்று, தேவன் இங்கு வாக்குத்தத்தம் கொடுக்கிறார். இப்போது 40 வருடம் வனாந்திர பயணம். மோசேயும் மரித்து விட்டார். அடுத்து யோசுவா நடத்தி வந்தார். இப்போது யோசுவா 14ம் அதிகாரத்தில், தேசத்தை பங்கு போடுகின்றனர். ஆனால் எபிரோன் பக்கமே போகவில்லை. ஏனெனில் இன்னும் எபிரோன் சுதந்தரிக்கவேயில்லை. அப்போது காலேப் வந்து யோசுவாவிடம் பேசுகிறார். எனக்கு வாக்கு பண்ணியபோது 40 வயது. இப்போது எனக்கு 85 வயது. ஆனாலும் அதே பலத்தோடு இருக்கிறேன். நான் போய் சுதந்தரித்துக்கொள்கிறேன் என்று கேட்கிறார். இதனால்தான் தேவன் காலேபை வேறே ஆவி உள்ளவர் என்று கூறுகிறார். எனக்கு, வாக்கு கிடைத்து விட்டது, தேவன் தருவார் என்று சும்மா உட்காராமல், அதை சுதந்தரிக்க நினைக்கிறார். அப்பட்டணத்தில் ஏனாக்கியர் இருக்கிறார்கள் என்பது காலேபுக்கு தெரியும், ஆனாலும் அதை போய் சுதந்தரித்தார்.

தேவன் ஆபிரகாமுக்கு கொடுத்த எல்லை எல்லாம் இஸ்ரவேலர் வசம் வந்ததா என்றால், இன்னும் இல்லை. முக்கியமான பட்டணமாகிய (எருசலேம்) எபூசியர் பட்டணம் இன்னும் பிடிக்கப்படவில்லை. அந்த எபூசியர் பட்டணத்தை பிடித்தவர்தான் தாவீது. அதுபோல, கானானிலிருந்த எல்லா இராட்சதரையும் அழித்தவர் தாவீது. அடுத்த பதிவில் அதைப்பற்றி பார்க்கலாம். தாவீது வீழ்த்திய காத் ஊரானாகிய கோலியாத் கூட, இராட்சதன் தான், அவனும் 9 அடி உயரமுள்ளவன். பிற புராணங்களில் எப்படி இராட்சதர் பற்றி கூறுவார்கள் என்பது எனக்கு தெரியாது, ஆனால் வேத இராட்சதர்கள் மனித இனம்தான். அவர்களின் எலும்புகூடு அனேக இடங்களில் கிடைத்துள்ளது.

Similar Posts

  • |

    Day 75 (16-03-2025)

    Scripture Portion: Deuteronomy 14-16 உபாகமம் 14 1நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பிள்ளைகள்; செத்தவனுக்காகக் கீறிக்கொள்ளாமலும், உங்கள் கண்களுக்கு இடையிலே சவரம்பண்ணாமலும் இருப்பீர்களாக. 2நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தமான ஜனங்கள்; பூமியின் மீதெங்குமுள்ள எல்லா ஜனங்களிலும் உங்களையே கர்த்தர் தமக்குச் சொந்த ஜனங்களாயிருக்கத் தெரிந்துகொண்டார். 3அருவருப்பானதொன்றையும் புசிக்க வேண்டாம். 4நீங்கள் புசிக்கத்தகும் மிருகங்களாவன: மாடும், செம்மறியாடும், வெள்ளாடும், 5மானும், வெளிமானும், கலைமானும், வரையாடும், புள்ளிமானும், சருகுமானும், புல்வாயுமே. 6மிருகங்களில் விரிகுளம்புள்ளதாயிருந்து, குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருக்கிறதும், அசைபோடுகிறதுமான சகல மிருகங்களையும் நீங்கள் புசிக்கலாம்; 7அசைபோடுகிறவைகளிலும்,…

  • இஸ்ரேல்-19 ( தாவீது -உடன்படிக்கை பெட்டி மேலோட்டம்)

    தாவீது -2 (உடன்படிக்கை பெட்டி மேலோட்டம்) ஏற்கனவே தாவீதைப் பற்றி, பத்சேபாள் பதிவிலும், தாவீது முதல் பதிவிலும் பார்த்தோம். தாவீது 17 வயது வரை பெத்லகேமில் இருந்தார், 22 வயது வரை கிபியாவில் சவுலுடன் இருந்தார், 30 வயது வரை அதுல்லாம் குகைகளில் முறுமுறுக்கிறவர்கள், கடன்பட்டவர்கள், ஓடிவந்தவர்களோடு இருந்து, அவர்களுக்கு யுத்தம் சொல்லிக்கொடுத்தார். 37 வயது வரை எப்ரோனிலிருந்து யூதா கோத்திரத்தை ஆட்சி செய்தார். பின் உயிரோடிருந்த 70வயது வரை எருசலேமில் இருந்தார் என்று பார்த்தோம். தாவீது…

  • |

    இஸ்ரேல்-3 (தனிச்சிறப்புகள்)

    யூதர்கள் என்று அழைக்கப்படுகிற, இன்றைய இஸ்ரவேலர்களின் வளர்ச்சி பற்றி இப்பதிவில் காணலாம். யூதர்களைப் பற்றி தமிழ் மக்களின் கருத்து: யூதர்கள் இனவெறி பிடித்தவர்கள். தங்கள் தெய்வம் மட்டுமே உண்மையான தெய்வம் என்று கருதுபவர்கள். தங்கள் தெய்வத்துக்காக, தங்கள் தேசத்துக்காக எந்த எல்லைக்கும் போகிறவர்கள். உலகை ஆளுகை செய்கிறவர்கள். இல்லுமினாட்டிகள். உலகினை ஆளப்பிறந்தவர்கள் யூதர்கள் என்ற திமிர் பிடித்தவர்கள். பழிவாங்குபவர்கள். மோசமானவர்கள். வந்தேறிகள். இரத்த வெறி பிடித்தவர்கள். பாலஸ்தீன தேசத்தைப் பிடித்துக்கொண்டு, பாலஸ்தீனியர்களை சுட்டுக் கொல்பவர்கள் இதெல்லாம் YouTube…

  • |

    Day 57 (26-02-2025)

    Scripture Portion: Numbers 7 எண்ணாகமம் 7 1மோசே வாசஸ்தலத்தை ஸ்தாபனம்பண்ணி, அதையும் அதின் எல்லாப் பணிமுட்டுகளையும், பலிபீடத்தையும் அதின் எல்லாப் பணிமுட்டுகளையும் அபிஷேகம்பண்ணி, பரிசுத்தப்படுத்தி முடித்த நாளில், 2தங்கள் பிதாக்களுடைய வம்சத்தலைவரும், எண்ணப்பட்டவர்களின் விசாரிப்புக்கு வைக்கப்பட்ட கோத்திரப் பிரபுக்களுமாகிய இஸ்ரவேலின் பிரபுக்கள் காணிக்கைகளைச் செலுத்தினார்கள். 3தங்கள் காணிக்கையாக, ஆறு கூண்டு வண்டில்களையும், பன்னிரண்டு மாடுகளையும் இரண்டிரண்டு பிரபுக்களுக்கு ஒவ்வொரு வண்டிலும், ஒவ்வொரு பிரபுக்கு ஒவ்வொரு மாடுமாக, கர்த்தருக்குச் செலுத்த வாசஸ்தலத்திற்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள். 4அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: 5நீ அவர்களிடத்தில்…

  • |

    Day 155 (04-06-2025)

    Scripture Portion: Proverbs 4-6 நீதிமொழிகள் 4 1பிள்ளைகளே, நீங்கள் தகப்பன் போதகத்தைக் கேட்டு, புத்தியை அடையும்படி கவனியுங்கள். 2நான் உங்களுக்கு நற்போதகத்தைத் தருகிறேன்; என் உபதேசத்தை விடாதிருங்கள். 3நான் என் தகப்பனுக்குப் பிரியமான குமாரனும், என் தாய்க்கு மிகவும் அருமையான ஒரே பிள்ளையுமானவன். 4அவர் எனக்குப் போதித்துச் சொன்னது: உன் இருதயம் என் வார்த்தைகளைக் காத்துக்கொள்ளக்கடவது; என் கட்டளைகளைக் கைக்கொள், அப்பொழுது பிழைப்பாய். 5ஞானத்தைச் சம்பாதி, புத்தியையும் சம்பாதி; என் வாயின் வார்த்தைகளை மறவாமலும் விட்டு…

  • |

    Day 271 (28-09-2025)

    Scripture Portion: Nehemiah 8-10 நெகேமியா 8 1ஜனங்கள் எல்லாரும் தண்ணீர் வாசலுக்கு முன்னான வீதியிலே ஒருமனப்பட்டுக் கூடி, கர்த்தர் இஸ்ரவேலுக்குக் கற்பித்த மோசேயின் நியாயப்பிரமாணப் புஸ்தகத்தைக் கொண்டுவரவேண்டுமென்று வேதபாரகனாகிய எஸ்றாவுக்குச் சொன்னார்கள். 2அப்படியே ஏழாம் மாதம் முதல் தேதியில் ஆசாரியனாகிய எஸ்றா நியாயப்பிரமாணத்தைப் புருஷரும் ஸ்திரீகளும், கேட்டு அறியத்தக்க அனைவருமாகிய சபைக்கு முன்பாகக் கொண்டுவந்து, 3தண்ணீர் வாசலுக்கு முன்னான வீதிக்கு எதிரேயிருந்து காலமே தொடங்கி மத்தியானமட்டும் புருஷருக்கும் ஸ்திரீகளுக்கும், கேட்டு அறியத்தக்க மற்றவர்களுக்கும் முன்பாக அதை வாசித்தான்; சகல…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *