|

இஸ்ரேல்-41 (வெளி 17ம் அதிகாரம்)

வெளிப்படுத்தின விசேஷம் 17ம் அதிகாரம்

இதை எழுதியவர் அப்போஸ்தலனாகிய யோவான். அவரது காலத்தில், ஐந்து பேர் விழுந்தார்கள். ஒருவன் இருக்கிறான். இன்னொருவன் வரவேண்டும் என்று கூறுகிறார். விழுந்த ஐந்து பேர் யார் என்று பார்த்தால், யோவான் காலத்தில் இதற்கு முன் இருந்த ஐந்து சாம்ராஜ்யம். எகிப்து, அசீரியா, பாபிலோன், மேதிய பெர்சிய ராஜ்யம், கிரேக்க சாம்ராஜ்யம். இந்த ஐந்தும் விழுந்தது. ஒருவன் இருக்கிறான் என்பது யோவான் காலத்தில் இருந்த ரோம சாம்ராஜ்யத்தை குறிக்கிறது.

இன்னொருவன் வரவேண்டும். வந்து கொஞ்ச காலம் தரித்திருக்க வேண்டும் என்பது, ஒருங்கிணைந்த ரோம சாம்ராஜ்யம் அல்லது போப்‌ சாம்ராஜ்யத்தைக் குறிக்கிறது. எல்லா சாம்ராஜ்யமும் 400 வருடங்களுக்கு குறைவாக இருந்தது. போப் ரோம சாம்ராஜ்யம் மட்டுமே, கிட்டத்தட்ட 1260 வருடங்கள் ஆட்சி செய்துள்ளனர்.

1. எகிப்து (கிமு1400-1000) 400வருடங்கள்

2. அசீரியா (கிமு1000-700) 300 வருடங்கள்

3. பாபிலோன் (கிமு 700-538) 250 வருடங்கள்

4. மேதிய பெர்சியர் (கிமு538-333) 200 வருடங்கள்

5. கிரேக்கு (கிமு333-64) 250 வருடங்கள்

6. ரோம் (கிமு 64- கிபி 538)

7. ஒருங்கிணைந்த ரோம சாம்ராஜ்யம் (538- 1798) 1260 வருடங்கள்

8. அதிலிருந்து எட்டாவது தோன்றும்.

ஏழாவது சாம்ராஜ்யத்தில் இருந்து எட்டாவது தோன்றும். அந்த பத்து நாடுகள் பிரிந்து போனாலும், அவர்கள் வேர் தான். அடுத்த சாம்ராஜ்யமாக வந்த ஆங்கிலோ சாக்சன் என்ற இங்கிலாந்து அந்த பத்து நாடுகளில் ஒன்று தான். அடுத்த சாம்ராஜ்யமாக வந்த அமெரிக்க சாம்ராஜ்யம், ஓரளவு வேர் என்றே கூறலாம். 1560ல் ஸ்பெயினில் இருந்து நிறைய யூதர்கள் அமெரிக்காவில் குடியேறினார்கள். ஸ்பெயின் ரோம சாம்ராஜ்யத்தின் வேர். ஆனால் அமெரிக்கா, இங்கிலாந்து எல்லாம் எட்டாவது சாம்ராஜ்யம் கிடையாது.

கடைசியாக எட்டாவது சாம்ராஜ்யம் என்பது அந்திக்கிறிஸ்து ஆட்சியைக் குறிக்கும். தற்போதைய வேதவல்லுநர்கள் கருத்துப்படி, European union மூலமாக உலகம் முழுவதுக்கும் ஒரே ராஜ வருவார், அவர்தான் அந்திக்கிறிஸ்து. European union நாடுகள் இணைந்து ஒற்றுமையாக, ஒருவருக்கு ஆட்சிப்பொறுப்பை கொடுப்பர். அவர்தான் அந்திக்கிறிஸ்துவாக வருவார். கர்த்தருக்கு சித்தமானால், European union பற்றிய சில காரியங்களை படிக்கலாம்.

நாம் ஏற்கனவே பல முறை எல்லா சாம்ராஜ்யங்களையும் பற்றி பார்த்ததால், இங்கே விளக்கமாக தரவில்லை. ஒருவேளை நீங்கள் புதிதாக இந்த பதிவை படித்தால், முந்தைய பதிவுகளில் ஒவ்வொரு சாம்ராஜ்யம் பற்றிய விளக்கமும் இருக்கும். இப்பொழுது இஸ்ரவேலை பற்றி படித்துக்கொண்டிருக்கிறோம். இஸ்ரவேலின் சாகசங்கள், வரும் காலத்தில் தொடர்ச்சியாக பார்க்கலாம்.

Similar Posts

  • |

    Day 325 (21-11-2025)

    Scripture Portion: Acts 13-14 அப்போஸ்தலர் 13 1அந்தியோகியா பட்டணத்திலுள்ள சபையிலே பர்னபாவும், நீகர் என்னப்பட்ட சிமியோனும், சிரேனே ஊரானாகிய லூகியும், காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோதுடனேகூட வளர்க்கப்பட்ட மனாயீனும், சவுலும், தீர்க்கதரிசிகளாயும் போதகர்களாயும் இருந்தார்கள். 2அவர்கள் கர்த்தருக்கு ஆராதனைசெய்து, உபவாசித்துக்கொண்டிருக்கிறபோது: பர்னபாவையும் சவுலையும் நான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களைப் பிரித்துவிடுங்கள் என்று பரிசுத்த ஆவியானவர் திருவுளம்பற்றினார். 3அப்பொழுது உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை அனுப்பினார்கள். 4அப்படியே அவர்கள் பரிசுத்த ஆவியினால் அனுப்பப்பட்டுச் செலூக்கியா பட்டணத்துக்கு வந்து, கப்பல்…

  • |

    Day 140 (20-05-2025)

    Scripture Portion: Psalm 5,38, 41-42 சங்கீதம் 5 (நெகினோத் என்னும் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.) 1கர்த்தாவே, என் வார்த்தைகளுக்குச் செவிகொடும், என் தியானத்தைக் கவனியும். 2நான் உம்மிடத்தில் விண்ணப்பம் பண்ணுவேன்; என் ராஜாவே, என் தேவனே, என் வேண்டுதலின் சத்தத்தைக் கேட்டருளும். 3கர்த்தாவே, காலையிலே என் சத்தத்தைக் கேட்டருளுவீர்; காலையிலே உமக்கு நேரே வந்து ஆயத்தமாகி, காத்திருப்பேன். 4நீர் துன்மார்க்கத்தில் பிரியப்படுகிற தேவன் அல்ல; தீமை உம்மிடத்தில் சேர்வதில்லை. 5வீம்புக்காரர் உம்முடைய கண்களுக்கு முன்பாக…

  • |

    இஸ்ரேல்-26 (சாலொமோன்)

    சாலொமோன் தாவீதுக்குப் பிறகு சாலமோன் இஸ்ரவேல் தேசத்தை அரசாளுகிறார். சாலமோன் ராஜாவாகும்போது ஆவிக்குரிய வாழ்க்கையில் நன்றாகத்தான் இருந்தார். தேவன் அவனிடம், உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டபோது, ஞானத்தைக் கேட்டவர் சாலமோன். நன்கு வேதத்தை படித்தவர்களிடம், “தேவனைப் பற்றி உங்களது கற்பனை வாழ்வு எது?” என்று கேட்டால், தாவீதைப்போல் ஆண்டவரிடம் உறவு கொள்வது எங்கள் கற்பனை வாழ்வு என்று கூறுவார்கள். அந்த தாவீதின் மகன்தான் சாலமோன். நமக்கு ஒரு தரிசனம் கிடைப்பதே அரிது. ஆனால் சாலமோனிடம் தேவனே…

  • இஸ்ரேல்-17 (தாவீது – 1)

    தாவீது நியாயாதிபதிகள் காலம் முடிவடைந்த பிறகு, ராஜாக்களின் காலம் ஆரம்பித்தது. ஆதாம் பழம் சாப்பிட்டது தவறா? கீழ்ப்படியாதது தவறா? என்று ஏற்கனவே பார்த்தோம். அதேபோல தான், சவுல் ராஜாவும், தேவனுக்கு கீழ்ப்படியவில்லை என்பதே தேவ கோபத்துக்கு காரணமாக இருந்தது. எனவே சாமுவேல் மூலமாக தாவீதை ராஜாவாக அபிஷேகம் செய்கிறார். அதற்கு பின்பு, சவுலின் மேல், பொல்லாத ஆவி இறங்கும்போது, தாவீது சுரமண்டலம் வாசிப்பார், சவுல் சரியாகிவிடுவார். எனவே சவுல், தாவீதை மிகவும் நேசித்தார். 21.அப்படியே தாவீது சவுலிடத்தில்…

  • |

    Day 297 (24-10-2025)

    Scripture Portion: John 9: 1-41, 10: 1-21 யோவான் 9 1அவர் அப்புறம் போகையில் பிறவிக்குருடனாகிய ஒரு மனுஷனைக் கண்டார். 2அப்பொழுது அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன் செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள். 3இயேசு பிரதியுத்தரமாக: அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும்பொருட்டு இப்படிப் பிறந்தான். 4பகற்காலமிருக்குமட்டும் நான்…

  • |

    Day 231 (19-08-2025)

    Scripture Portion: 2 kings 24-25, 2chronicles 36 2 இராஜாக்கள் 24 1அவன் நாட்களிலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் வந்தான்; யோயாக்கீம் மூன்று வருஷம் அவனைச் சேவித்து, பின்பு அவனுக்கு விரோதமாகக் கலகம்பண்ணினான். 2அப்பொழுது கர்த்தர் கல்தேயரின் தண்டுகளையும், சீரியரின் தண்டுகளையும், மோவாபியரின் தண்டுகளையும், அம்மோன் புத்திரரின் தண்டுகளையும் அவன்மேல் வரவிட்டார்; தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரரைக்கொண்டு கர்த்தர் சொன்ன வார்த்தையின்படியே அவர் அவைகளை யூதாவை அழிக்கும்படிக்கு வரவிட்டார். 3மனாசே தன் எல்லாச் செய்கைகளினாலும் செய்த பாவங்களினிமித்தம் யூதாவைத் தமது சமுகத்தை விட்டு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *