|

இஸ்ரேல்-44 (ஆறு நாள் யுத்தம்)

ஆறு நாள் யுத்தம் (Operation Focus) 1967

இப்பதிவை வாசிப்பதை விட, இந்த காணொலியில் இஸ்ரேல் ஜெயித்த வரலாறை கேட்பது மிகவும் நன்றாக இருக்கும். நேரம் இருந்தால் இஸ்ரேலின் இந்த வெற்றியை தமிழில் கேட்டு இரசிக்கலாமே!

https://www.youtube.com/watch?v=zzCsCs8TxBc&t=62s

இஸ்ரேலின் வீரதீர சாகசங்களில் ஒன்று, ஆறுநாள் யுத்தம். அது என்ன ஆறு நாள் யுத்தம்? இஸ்ரேலில் எதிரி நாடுகளான அரபு நாடுகள், மீண்டும் ஒரு யுத்தத்தை அறிவித்தது. எகிப்து, ஈராக், ஜோர்தான் சிரியா ராணுவம் இணைந்து ஒரு யுத்தத்தை அறிவித்தது. இஸ்ரேலை முற்றிலுமாக அழிப்பது அவர்களின் நோக்கம். சுமார் 1,40,000 படை வீரர்கள் இஸ்ரேலை சூழ நின்றனர். 2500 யுத்ததாங்கிகள் இஸ்ரேலை எந்த நேரத்திலும் தாக்க தயாராக எல்லையில் நின்றது. 959 யுத்த விமானங்கள், 1100 கவச வாகனங்கள், 1000 ஆட்லரிகள், எகிப்து மற்றும் ஜோர்டானின் சக்தி வாய்ந்த குண்டுகள், எல்லாம் இஸ்ரேலுக்கு எதிராக தயாராக இருந்தது. ஒரே நேரத்தில் எல்லாம் தாக்கினால், இஸ்ரேலின் சாம்பல் கூட மிஞ்சாது. உலக வரைபடத்தில் இனி இஸ்ரேல் என்ற பெயர் இருக்காது என்று அரபு நாடுகள் ஆர்ப்பரிக்க, மற்ற உலகநாடுகள் இஸ்ரேலையே நோக்கிப் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

ஆனால் அரபு நாடுகள் அறியாத உண்மை, இஸ்ரேலுக்கு துணையாக இருப்பது Mossad. ஒரு யுத்தம் இஸ்ரேல் ஆரம்பிக்கிறது என்றால், அதற்கு முன்பாக மொசாட் எவ்வளவு வேலை செய்யும் என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

1967 ஜீன் 5 காலை 7.45மணிக்கு, அவர்கள் திட்டப்படி, மிகக் குறைந்த அளவில் இருந்த இஸ்ரேலிய விமானங்கள், மூன்று தொகுதிகளாக பிரிக்கப்பட்டது.

• முதல் தொகுதி, பிற நாட்டு எல்லைக்குள் சென்று, அங்கிருக்கும் போர் விமானத்தை அழிக்க வேண்டும்.

• இரண்டாம் தொகுதி இஸ்ரேலர்களின் தாக்குதலுக்கு தப்பி, எகிப்து சீரியா விமானங்கள் வானில் பறக்க வரும்போது, வானில் வைத்து அவர்களை அழிக்க வேண்டும்.

• மூன்றாம் தொகுதி, எதிரி நாடுகளின் விமான தளங்கள், விமான ஓடுதளத்தை சேதப்படுத்த வேண்டும்.

ஒருவேளை எதிரி நாட்டு விமானம் பறக்க் கூடிய சூழல் இருந்தால், இஸ்ரேலுக்கு அது ஆபத்து என்பதால், இப்படி திட்டம் போட்டு அதை செயல்படுத்தினர்.

அதே நேரத்தில் கீழே நிலப்பரப்பில், இஸ்ரேல் படையை விட 3 மடங்கு பெரிய அரபு படைகள், எதிர் திசையில் சீனாய் வனாந்தரத்தில், எந்த நேரத்திலும் பாய்வதற்கு தயாராக இருந்தது. அரபு நாடுகள் தாக்க ஆரம்பித்தால், இஸ்ரேலின் படை இருந்த இடம் தெரியாமல் போய்விடும். இஸ்ரேல் முதல் தாக்குதலை நிகழ்த்தி, அரபு நாடுகளை குழப்பி விடுவது தான் இஸ்ரேலின் திட்டம்.

திடீரென இஸ்ரேல் படைகள் முன்னேறி வரவும், என்ன நடக்கிறது என்று எதிரி படைகள் யோசிப்பதற்கு முன்பாகவே, எகிப்திய படைகளின் மீது தாக்குதலை ஆரம்பித்தது இஸ்ரேல். முன்னேறி வருவது மட்டுமல்லாமல், சுற்றி வளைத்து தாக்கியடிப்பது தான் இஸ்ரேலின் திட்டம்.

சீனாய் பாலைவனத்தில் திடீர் திடீரென நுழைந்த இஸ்ரேலிய விமானங்கள், எகிப்திய ஆயுதக் களஞ்சியம் மற்றும் போருக்கான கட்டளை மையத்தை குறிபார்த்து தாக்குதல் நடத்தியது. காசாவில் நிலைகொண்டிருந்த எகிப்திய கமோண்டாக்கள் சுற்றி வளைக்கப்பட்டு பிடிக்கப்பட்டனர். இஸ்ரேல் படை, முன்னால் இருந்து தாக்குகிறதா? பக்கவாட்டில் இருந்து தாக்குகிறதா? அல்லது பின்னால் இருந்து தாக்குகிறதா? என்று திணறினர் எதிரி படைவீரர்கள். கமண்டாக்கள் பிடிக்கப்பட்டதால், கட்டளையும் எதுவும் வரவில்லை எதிரி படைவீரர்களுக்கு. ஒரு கட்டத்தில் சாரையாக பின்வாங்கிய எகிப்திய படைவீரர்கள் மீது, இஸ்ரேலிய விமானம் சக்தி வாய்ந்த குண்டுகளைப் போட்டது. தோல்வியை ஒத்துக்கொண்டதாக ஒப்பந்த கையெழுத்து இட்டார் எகிப்திய தளபதி மேஜர் ஜெனரல் அப்துல் முனா. காசா இஸ்ரேல் வசம் வந்தது.

திடுதிப்பென்று எருசலேமுக்குள் நுழைந்தது இஸ்ரேல் படை. அதுவரை எருசலேம் இஸ்ரேலுக்கு சொந்தமாகவில்லை. இந்த புதிய தாக்குதல் யுக்தியால் ஜோர்டான் படை திணறியது. ஜோர்டானின் கட்டுப்பாட்டில் இருந்த எருசலேம், இஸ்ரேலின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. பல ஜோர்டான் படைவீரரை கைது செய்து கொண்டு சென்றது இஸ்ரேல். அதில் பல ஜோர்டான் இராணுவ வீரர்கள், ராணுவ உடையில் இல்லாமல் இருந்தது, இஸ்ரவேலர் அந்தப் பட்டணத்துக்குள் நுழைந்த வேகத்தைக் காட்டுகிறது. மேற்கு கரை நோக்கி பீரங்கியைத் திருப்பிய இஸ்ரேல் கடுமையாக ஜோர்டானிடம் சண்டை இட்டது. சரித்திர பிரதேசமான பெத்லகேம் எரிகோ பட்டணங்களும் இஸ்ரேல் வசம் வந்தது. ஜோர்டான் படைக்குத் தலைமை தாங்கிய மன்னன் ஹூசைன், குரல் தளுதளுக்க, ஊடகம் முன்னிலையில் தோல்வியை ஏற்றுக் கொண்டது, அரபு உலகத்தை அதிரச் செய்தது. இந்த யுத்தத்தின் மூலமாக எருசலேம் இஸ்ரேலுக்கு கிடைத்து விட்டது. அருமையான தீர்க்கதரிசனம் நிறைவேறியது.

6 அந்நாளிலே யூதாவின் தலைவரை விறகுகளுக்குள்ளே எரிகிற அக்கினி அடுப்புக்கும், வைக்கோல் கட்டுகளுக்குள்ளே எரிகிற தீவட்டிக்கும் ஒப்பாக்குவேன். அவர்கள் வலதுபுறமும் இடதுபுறமுமாகப் புறப்பட்டு, சுற்றிலும் இருக்கிற எல்லா ஜனங்களையும் பட்சிப்பார்கள். எருசலேம் திரும்பவும் தன் ஸ்தானமாகிய எருசலேமிலே குடியேற்றப்பட்டிருக்கும்.

சகரியா 12:6

இஸ்ரேல் சுதந்திர நாடாக உருவாகும்போது, 1948ல் அதன் தலைநகர் டெல்அவிவ். 2018ம் ஆண்டு வரை இஸ்ரேலின் தலைநகர் Tel Aviv.

இப்பதிவில் இஸ்ரேல் பெற்ற வெற்றி பகிரப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு முன்னே மொசாட் செய்த சூழ்ச்சிகள், எதனால் இஸ்ரேல் வெற்றி பெற்றது என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

Similar Posts

  • |

    Day 41 (10-02-2025)

    Scripture Portion: Exodus 33-35 யாத்திராகமம் 33 1கர்த்தர் மோசேயை நோக்கி: நீயும், எகிப்துதேசத்திலிருந்து நீ அழைத்துக்கொண்டு வந்த ஜனங்களும் இவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டு. உன் சந்ததிக்குக் கொடுப்பேன் என்று நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுக்கொடுத்த பாலும் தேனும் ஓடுகிற தேசத்துக்குப் போங்கள். 2நான் ஒரு தூதனை உங்களுக்கு முன்பாக அனுப்பி, கானானியனையும் எமோரியனையும் ஏத்தியனையும் பெரிசியனையும் ஏவியனையும் எபூசியனையும் துரத்திவிடுவேன். 3ஆனாலும், வழியிலே நான் உங்களை நிர்மூலம்பண்ணாதபடிக்கு, நான் உங்கள் நடுவே செல்லமாட்டேன், நீங்கள் வணங்காக்கழுத்துள்ள ஜனங்கள்…

  • |

    Day 109 (19-04-2025)

    Scripture Portion: 1 Samuel 28-31 Psalm 18 1 சாமுவேல் 28 1அந்நாட்களிலே பெலிஸ்தர் இஸ்ரவேலின்மேல் யுத்தம்பண்ண, தங்கள் சேனைகளைப் போருக்குக் கூட்டினார்கள்; அப்பொழுது ஆகீஸ் தாவீதை நோக்கி: நீயும் உன் மனுஷரும் எவ்விதத்திலும் என்னோடேகூட யுத்தத்துக்கு வரவேண்டும் என்று அறியக்கடவாய் என்றான். 2தாவீது ஆகீசைப் பார்த்து: உம்முடைய அடியான் செய்யப்போகிறதை நீர் நிச்சயமாய் அறிந்துகொள்வீர் என்றான்; அப்பொழுது ஆகீஸ் தாவீதை நோக்கி: இதற்காக உன்னை எந்நாளும் எனக்கு மெய்காவலனாக வைப்பேன் என்றான். 3சாமுவேல் இதற்கு…

  • |

    Day 314 (10-11-2025)

    Scripture Portion: Luke 22, John 13 லூக்கா 22 1பஸ்கா என்னப்பட்ட புளிப்பில்லாத அப்பப்பண்டிகை சமீபமாயிற்று. 2அப்பொழுது பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் அவரைக் கொலைசெய்யும்படி யோசித்து, ஜனங்களுக்குப் பயப்பட்டபடியினால், எவ்விதமாய் அப்படிச்செய்யலாமென்று வகைதேடினார்கள். 3அப்பொழுது பன்னிருவரில் ஒருவனாகிய ஸ்காரியோத்தென்னும் மறுபேர்கொண்ட யூதாசுக்குள் சாத்தான் புகுந்தான். 4அவன் பிரதான ஆசாரியர்களிடத்திலும் சேனைத்தலைவர்களிடத்திலும் போய், அவரைக் காட்டிக்கொடுக்கும் வகையைக்குறித்து அவர்களோடே ஆலோசனைபண்ணினான். 5அவர்கள் சந்தோஷப்பட்டு, அவனுக்குப் பணங்கொடுக்க உடன்பட்டார்கள். 6அதற்கு அவன் சம்மதித்து, ஜனக்கூட்டமில்லாத வேளையில் அவரை அவர்களுக்குக்…

  • |

    Day 177 (26-06-2025)

    Scripture Portion: 1 kings 15:25-34, 16: 1-34, 2Chronicles 17 1 இராஜாக்கள் 15 : (25-34) 25யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் இரண்டாம் வருஷத்திலே யெரொபெயாமின் குமாரனாகிய நாதாப் இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி, இரண்டு வருஷம் இஸ்ரவேலின்மேல் ராஜ்யபாரம்பண்ணினான். 26அவன் கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, தன் தகப்பன் வழியிலும், அவன் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின அவனுடைய பாவத்திலும் நடந்தான். 27இசக்கார் வம்சத்தானாகிய அகியாவின் குமாரனான பாஷா, அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, நாதாபும் இஸ்ரவேலனைத்தும் பெலிஸ்தருக்கு இருந்த கிபெத்தோனை முற்றிக்கைபோட்டிருக்கையில், பாஷா…

  • |

    Day 5 (05-01-2025)

    Scripture Portion: Job 6-9 யோபு 6 1யோபு பிரதியுத்தரமாக: 2என் சஞ்சலம் நிறுக்கப்பட்டு, என் நிர்ப்பந்தம் எல்லாம் தராசிலே வைக்கப்பட்டால் நலமாயிருக்கும். 3அப்பொழுது அது கடற்கரை மணலைப்பார்க்கிலும் பாரமாயிருக்கும்; ஆகையால் என் துக்கம் சொல்லிமுடியாது. 4சர்வவல்லவரின் அம்புகள் எனக்குள் தைத்திருக்கிறது; அவைகளின் விஷம் என் உயிரைக் குடிக்கிறது; தேவனால் உண்டாகும் பயங்கரங்கள் எனக்கு முன்பாக அணியணியாய் நிற்கிறது. 5புல்லிருக்கிற இடத்திலே காட்டுக்கழுதை கத்துமோ? தனக்குத் தீவனமிருக்கிற இடத்திலே எருது கதறுமோ? 6ருசியில்லாத பதார்த்தத்தை உப்பில்லாமல் சாப்பிடக்கூடுமோ?…

  • |

    Day 205 (24-07-2025)

    Scripture Portion: Isaiah 35-36 ஏசாயா 35 1வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போல செழிக்கும். 2அது மிகுதியாய்ச் செழித்து பூரித்து ஆனந்தக்களிப்புடன் பாடும்; லீபனோனின் மகிமையும், கர்மேல் சாரோன் என்பவைகளின் அலங்காரமும் அதற்கு அளிக்கப்படும்; அவர்கள் கர்த்தருடைய மகிமையையும், நமது தேவனுடைய மகத்துவத்தையும் காண்பார்கள். 3தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள். 4மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன் கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்;…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *