|

பண்டிகைகள்-9 (பெந்தேகோஸ்தே 2)

பெந்தெகோஸ்தே பண்டிகை – Part 2

மூன்று பண்டிகைக்கு தேவன் நேரில் வரச் சொன்னார் என்பதை அடிக்கடி பார்த்துக்கொண்டு இருக்கிறோம். பஸ்கா, பெந்தெகோஸ்தே, சுக்கோத் என்னும் அந்த மூன்று பண்டிகையும், மூன்று அனுபவங்களைக் குறிக்கும் என்பதையும் பார்த்தோம். முதலாவது எகிப்தை விட்டு வெளியே வந்த அனுபவம். அதைத்தான் பஸ்கா என்று கொண்டாடுகிறார்கள். நமக்கும், அது  பாவத்திலிருந்து வெளியே வருகிற அனுபவம். பாவத்திலிருந்து வந்தபின்பு Red Sea Cross பண்ணும் வரை, பார்வோன் பின் தொடர்வான். சிலர் உள்ளே போவார்கள், சிலர் அப்படியே பின்வாங்கி விடுவார்கள். அடுத்து வனாந்திரம் தான். வனாந்திரத்தில், வெறும் மண் தான் இருக்கும், உணவு இருக்காது. ஆனால் இஸ்ரவேலருக்கு வானத்திலிருந்து மன்னா கொடுக்கப்பட்டது. நம் வாழ்விலும் இப்படி ஒரு தருணம் வரும். வனாந்திரமான வாழ்க்கை, நம்மால் எதுவும் செய்ய முடியாது என்பதை உணரும்போது, வானத்தை நோக்கி பார்க்க வேண்டும். அந்நேரத்தில் இரண்டு வகையாக மக்கள் மாறி விடுவர். ஒரு கூட்டத்தார், “நான் தேவனிடம் வந்து விட்டேன். அவர் பார்த்துக் கொள்வார்” என்று பிரச்சனைகளுக்கு மத்தியில் விசுவாச ஜீவியம் நடத்துவர். இன்னொரு கூட்டத்தாரோ, “நான் தேவனிடம் நெருங்கி என்ன பயன்? எல்லாவற்றையும் இழந்துவிட்டேனே” என்று சொல்லி, மறுதலித்து போய் விடுவர். நாம் எந்த கூட்டத்தில் இருக்கிறோம் என்பது முக்கியம். இதெல்லாம் கடந்தால் தான் இரண்டாவது அனுபவத்துக்குள் வர முடியும். தேவனே சீனாய் மலைக்கு வந்து, பேசிய அனுபவம்.

இதெல்லாம் கடந்த பின்னர்தான் இஸ்ரவேலருக்கு சீனாய் மலை அனுபவம். சீனாய் மலையில் மக்களிடம் பேச, தேவன் இறங்கி வந்தார். பெந்தெகோஸ்தே நாளில் மக்களிடம் ஆவியானவர் இறங்கி வந்தார். தேவன் சீனாய் மலைக்கு இறங்கி வந்து பேசினார், என்ன பேசினார்? அவர் இஸ்ரவேலர் நடுவில் தங்கியிருக்க விரும்பினார். அநேக நேரங்களில் நாம் தேவனை, “நீர் கடவுள். அங்கேயே இரும்” என்று நம் கற்பனைக்கு எட்டாத உயரத்தில் தூக்கி வைத்து விடுகிறோம். ஆனால் அவரோ, நம் நடுவில் வசிக்க விரும்புகிறார். பெந்தேகோஸ்தே நாளில் ஆவியானவர் வந்தார்? என்ன செய்தார்? நம்மை ஆலயமாக மாற்றி விட்டார். நமக்குள் நிரந்தரமாக வசிக்கிறார். ஏன் நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டது என்று முந்திய பதிவில் பார்த்தோம். ஏன் ஆவியானவர் கொடுக்கப்பட்டார்?

 

உலகம் முழுவதும் சாட்சியாயிருப்பதற்கு ஆவியானவர் தேவை.

உண்மையாய் தொழுதுகொள்ள ஆவியானவர் தேவை

3.1 கொரிந்தியர் 12ம் அதிகாரத்திலுள்ள ஆவிக்குரிய வரங்களை பெற்றுக்கொள்ள ஆவியானவர் தேவை.

அபிஷேகம் பெற்றுக்கொள்ள ஆவியானவர் தேவை.

இப்படி எத்தனையோ காரியங்கள் இருக்கிறது, ஆவியானவர் கற்றுக் கொடுப்பதற்கு. இந்த பெந்தெகோஸ்தே அனுபவம்(HolySpirit) என்பது, சபை(Church), அபிஷேகம்(Anointing), 9 வரங்கள்(9 Gifts), 5 வகையான ஊழியர்கள்(5 fold ministry) என்று எடுத்துக் கொள்ளலாம். இதற்கு அடுத்த மூன்றாவது ஒரு அனுபவம் வரப்போகிறது. அதுதான் சுக்கோத் அனுபவம். அக்கினி ஞானஸ்நான அனுபவம்.  கடைசி கால அபிஷேக அனுபவம். எழுப்புதல் அனுபவம். அந்த கடைசி கால அபிஷேக அனுபவம் நோக்கி ஊழியர்கள் பயணம் செய்கின்றனர்.

ஒவ்வொரு அனுபவமும் ஒரு அப்டேட் தான். இரட்சிப்பின் updated version, அபிஷேகம், வரம். அதாவது பெந்தெகோஸ்தே அனுபவம். அநேகர், அன்னிய பாஷை உண்டா? அபிஷேகம் உண்டா? என்று  அங்கேயே பின்வாங்கி விடுகின்றனர். ஆனால் அதற்கும் அடுத்த update கடைசி கால எழுப்புதல் அபிஷேகத்துக்குள் நாம் நுழைந்து விட்டோம். இன்னும் அன்னியபாஷை குழப்பம் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தால் நாம் சீனாய் மலை அனுபவத்துக்குள்ளேயே இன்னும் வரவே இல்லை என்று அர்த்தம். பின் எப்போது சீயோன் அனுபவத்துக்குச் செல்வது? இரட்சிப்பு இல்லாமல், அபிஷேகம் பெற முடியாது. அபிஷேக அனுபவம் இல்லாமல், கடைசி கால அபிஷேகம் பெற்றுக் கொள்ள முடியாது. இரட்சிப்பின் அப்டேட் அபிஷேகம், அபிஷேகத்தின் அப்டேட் கடைசி கால எழுப்புதல்.

அநேக பெரியவர்கள் செய்யும் தவறு, கடைசி கால சந்ததி, கடைசி கால அபிஷேகம், எழுப்புதல் என்பது வாலிபர்களுக்கு என்று நினைத்துக் கொள்கிறார்கள். அது தவறானது. எழுப்புதல் என்பது, மூன்றாவது அனுபவம். அது எந்த வயதினருக்கும் வரலாம். எனவே இது நமக்கு இல்லை என்று இருந்து விடாதீர்கள். மோசே 80 வயதில் தான் ஊழியம் ஆரம்பித்தார். இப்பொழுதும் நமக்கு காலம் இருக்கிறது. சீயோன் மலை அனுபவம் நம் மேல் வர காத்திருப்போம்.

சீனாய் மலை, சீயோன் மலை அனுபவம் பற்றி கீழ்க்கண்ட வசனங்களில் பார்க்கலாம். நாம் சீயோன் அனுபவத்துக்கு சொந்தமானவர்கள்.  பழைய பரிசுத்தவானக்ளுக்கு கிடைக்காத பாக்கியம் நமக்கு உள்ளது. வேதத்தை எவ்வளவு தியானிக்கிறோமோ, அவ்வளவு தெரிந்து கொள்ளலாம்.

21ம் வசனம் வரை சீனாய் மலை அனுபவம். பின்னர் சீயோன் மலை, அதைப்பற்றி, சுக்கோத் என்னும் கூடாரப்பண்டிகை படிக்கும்போது தெரிந்து கொள்ளலாம்.

பெந்தெகோஸ்தே பண்டிகையை யூதர்கள் எப்படி கொண்டாடுகிறார்கள்?

  1. Counting the Omer

பஸ்காவிலிருந்து பெந்தெகோஸ்தே வரை உள்ள நாட்கள் 50 நாட்கள் என்று பார்த்தோம் அல்லவா! அந்த நாட்களை ஒவ்வொன்றாக கணக்கிடுவதற்கு, Counting the Omer என்று அழைக்கிறார்கள். இஸ்ரவேலரின் நாள் மாலை 6 மணிக்கு தான் ஆரம்பிக்கும் என்று, முதல் பதிவில் படித்தோம். இந்த ஓமரை கணக்கிட ஆரம்பிப்பதும் மாலை 6 மணிக்கு தான்.  ஓமர் என்பது வேதத்தில் உள்ள ஒரு அளவீடு(measurement). எப்பாவில் பத்தில் ஒரு பங்கு தான் ஓமர். வேத காலத்தில், ஒரு ஓமர் பார்லி பயிர், தினமும் ஆலயத்துக்கு எடுத்து வைத்து, பெந்தெகோஸ்தே நாளின்போது, அதை அசைவாட்டும் காணிக்கையாக படைப்பார்கள்.

இன்றைய நாட்களில் ஒரு மனப்பாட ஆசீர்வாதத்தை தினமும் கூறி நாட்களை எண்ணுவர்.

Blessed are you, Lord our God, King of the Universe, who has sanctified Us with His commandments and commanded Us to count the Omer.

இந்த ஆசீர்வாதத்தை கூறி, அடுத்த வாக்கியமாக, நாட்களையும் வாரங்களையும் கணக்கிடுவர்.

முதல் நாளில் – Today is the One day of the Omer

எட்டாவது நாளில் – Today is eight days, which is One week and One day of the Omer.

பக்திமயமான யூதர்கள், இந்த 50 நாட்களில் எந்த வேலையும் செய்ய மாட்டார்கள். கிபி132ல் பிளேக் மற்றும் ரோமர்களால் யூதர்கள் மொத்தமாக துரத்தப்பட்டதை  எண்ணி, அந்த நாட்களை துக்க நாட்களாக ஆசரிப்பர்.

  • Bikkurim

தேவாலயம் (Holy Temple) இருந்த காலத்தில், ஆலயத்துக்கு முதற்கனி கொண்டு வந்தார்கள். இப்பொழுது ஆலயம் இல்லை என்பதால், 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், Bikkurim Bringing Ceremony ஆரம்பித்தார்கள். ஒரு கூடை நிறைய பழம் வைத்துக்கொண்டு, நடனம் ஆடி, பாடல் பாடி, ஊர்வலம் போவார்கள்.

  • Give Offering to the Lord

Tamil Easy Reading Version
உபாகமம் 16-16 “வருடத்திற்கு மூன்றுமுறை உங்களது ஆண் ஜனங்கள் அனைவரும் தவறாது உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் கூடவேண்டும். அவர்கள் அனைவரும், புளிப்பில்லாத அப்பப் பண்டிகைக்கும், வாரங்களின் பண்டிகைக்கும், அடைக்கல கூடாரங்களின் பண்டிகைக்கும் கண்டிப்பாக வரவேண்டும். ஒவ்வொருவரும் வரும் பொழுது, கர்த்தருக்குரிய அன்பளிப்புகளை எடுத்துவர வேண்டும்.

எனவே இந்த நாட்களில், சிறப்பான காணிக்கையை, ஆலயத்துக்கு அல்லது உதவி தேவைப்படுபவர்களுக்கு, கொடுப்பார்கள்.

  • Give a Wave Offering

இரண்டு அப்பம் என்பது, 2 கற்பலகை அல்லது, 2 ஏற்பாடைக் (பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என்பது, பழைய உடன்படிக்கை, புதிய உடன்படிக்கை) குறிக்கிறது. இப்பொழுது இரண்டு அப்பங்களை வீட்டின் தலைவர் எடுத்து, குடும்பத்துக்கான அசைவாட்டும் காணிக்கையாக அசைவாட்டுவர். இது கர்த்தர் எங்களை போஷிக்கிறார் என்று உலகுக்கு அவர்கள் வெளிப்படுத்துவதைப் போல உள்ளது.

  • Bless the Poor

பெந்தெகோஸ்தே பண்டிகையைப் பற்றி பேசும்போது தேவன் இந்த வார்த்தைகளைக் கூறினார். எனவே இந்த நாட்களில் ஏழைகளுக்கு உதவுவதை ஒரு பாரம்பரியமாக வைத்துள்ளனர்.

  • Read the Book of Ruth

மேலே கூறிய அதே வசனத்தின் படி, போவாஸ் ரூத்துக்கு செய்ததால், இந்த நாட்களில் ரூத் புத்தகம் அதிகமாக தியானிக்கப்படுகிறது. மேலும் ரூத் என்கிற புறஜாதி பெண், இஸ்ரவேலில் சேர்க்கப்பட்டது போல, பெந்தெகோஸ்தே நாளில் புறஜாதிகளாகிய நாமும் கிறிஸ்துவண்டை சேர்க்கப்பட்டதை நினைவுகூர்ந்து, இப்புத்தகத்தை அதிகமாக தியானிப்பர். அப்படி தியானிப்பதற்கு அதில் என்ன இருக்கிறது?

மோவாபியர் மற்றும் அம்மோனியர் பத்து தலைமுறை வரை உள்ளே வரக்கூடாது என்று தேவன் கூறினார். யார் இவர்கள்?

தங்கள் தகப்பன் மூலம் குழந்தை பெற்றதால், தேவன் அவர்களை பத்து தலைமுறைக்கு தள்ளி வைத்தார். ஆச்சரியம் என்ன என்றால், ஆபிரகாமிலிருந்து போவாஸ் 11வது தலைமுறை. எனவே லோத்துக்கும் அது 11வது தலைமுறை. 10 தலைமுறை முடிந்து சாபத்தை போக்குபவளாய் உள்ளே நுழைந்தவள் தான் ரூத். அதேபோல போவாஸ் பற்றி தியானித்தால், போவாஸ் இயேசுவுக்கு முன்னோடி. புறஜாதிகளை சேர்த்துக் கொண்டவன். இப்படி ஒவ்வொரு காரியங்களையும் அவர்கள் தியானிப்பர்.

  • Eat Dairy Food

தேவன் இஸ்ரவேலரை, பாலும் தேனும் ஓடும் தேசத்துக்கு கூட்டி வந்தார். அதை நினைவுகூறும் விதமாக பால் உணவுகளை உண்ணுவர்.  மேலும் இப்பண்டிகை ஓய்வு நாளில் வருவதால், ஓய்வு நாள் விதிக்காக, அவர்கள் பால் பொருட்களை(Cheese, Cake, Casseroles) மட்டும் சாப்பிடுவர்.

ஐந்தாவது பண்டிகை பற்றி அடுத்த பதிவில் காணலாம்.

Similar Posts

  • |

    Day 343 (09-12-2025)

    Scripture Portion: Romans 8-10 ரோமர் 8 1ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை. 2கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே. 3அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார். 4மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார். 5அன்றியும்…

  • |

    Day 330 (26-11-2025)

    Scripture Portion: Acts 17, 18:1-18 அப்போஸ்தலர் 17 1அவர்கள் அம்பிபோலி பட்டணத்தையும் அப்பொலோனியா பட்டணத்தையும் கடந்து, தெசலோனிக்கே பட்டணத்துக்கு வந்தார்கள்; அங்கே யூதருக்கு ஒரு ஜெப ஆலயம் இருந்தது. 2பவுல் தன் வழக்கத்தின்படியே அவர்களிடத்தில் போய், மூன்று ஓய்வு நாட்களில் வேதவாக்கியங்களின் நியாயங்களை எடுத்து அவர்களுடனே சம்பாஷித்து, 3கிறிஸ்து பாடுபடவும் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவும் வேண்டியதென்றும், நான் உங்களுக்கு அறிவிக்கிற இந்த இயேசுவே கிறிஸ்து என்றும் காண்பித்து, திருஷ்டாந்தப்படுத்தினான். 4அவர்களில் சிலரும், பக்தியுள்ள கிரேக்கரில் திரளான ஜனங்களும்,,…

  • |

    Day 27 (27-01-2025)

    Scripture Portion: Genesis 43-45 ஆதியாகமம் 43 1தேசத்திலே பஞ்சம் கொடிதாயிருந்தது. 2எகிப்திலிருந்து அவர்கள் கொண்டுவந்த தானியம் செலவழிந்தபோது, அவர்கள் தகப்பன் அவர்களை நோக்கி: நீங்கள் திரும்பப் போய், நமக்குக் கொஞ்சம் தானியம் வாங்கிக்கொண்டு வாருங்கள் என்றான். 3அதற்கு யூதா: உங்கள் சகோதரன் உங்களோடேகூட வராவிட்டால், நீங்கள் என் முகத்தைக் காண்பதில்லை என்று அந்த மனிதன் எங்களுக்குச் சத்தியமாய்ச் சொன்னான். 4எங்கள் சகோதரனை நீர் எங்களோடேகூட அனுப்பினால், நாங்கள் போய், உமக்குத் தானியம் வாங்கிக்கொண்டு வருவோம். 5அனுப்பாவிட்டால்….

  • |

    Day 71 (12-03-2025)

    Scripture Portion: Deuteronomy 3-4 உபாகமம் 3 1பின்பு நாம் திரும்பி, பாசானுக்குப் போகிற வழியாய்ப் போனோம்; பாசானின் ராஜாவாகிய ஓக் தன்னுடைய சகல ஜனங்களோடும் நம்மோடே எதிர்த்து யுத்தம்பண்ணும்படி புறப்பட்டு, எத்ரேயிக்கு வந்தான். 2அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: அவனுக்குப் பயப்படவேண்டாம்; அவனையும் அவனுடைய ஜனங்கள் எல்லாரையும் அவன் தேசத்தையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்; எஸ்போனிலே குடியிருந்த எமோரியரின் ராஜாவாகிய சீகோனுக்கு நீ செய்தது போல, அவனுக்கும் செய்வாய் என்றார். 3அப்படியே நம்முடைய தேவனாகிய கர்த்தர் பாசானின் ராஜாவாகிய ஓகையும் அவனுடைய…

  • |

    Day 188 (07-07-2025)

    Scripture Portion: Jonah 1-4 யோனா 1 1அமித்தாயின் குமாரனாகிய யோனாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர்: 2நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு விரோதமாகப் பிரசங்கி; அவர்களுடைய அக்கிரமம் என் சமுகத்தில் வந்து எட்டினது என்றார். 3அப்பொழுது யோனா கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி, தர்ஷீசுக்கு ஓடிப்போகும்படி எழுந்து, யோப்பாவுக்குப் போய், தர்ஷீசுக்குப்போகிற ஒரு கப்பலைக்கண்டு, கூலிகொடுத்து, தான் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகும்படி, அவர்களோடே தர்ஷீசுக்குப் போகக் கப்பல் ஏறினான். 4கர்த்தர் சமுத்திரத்தின்மேல் பெருங்காற்றை வரவிட்டார்; அதினால் கடலிலே கப்பல் உடையுமென்று நினைக்கத்தக்க பெரிய…

  • |

    Day 363 (29-12-2025)

    Scripture Portion: Revelation 6-11 வெளிப்படுத்தின விசேஷம் 6 1ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளில் ஒன்றை உடைக்கக்கண்டேன். அப்பொழுது நான்கு ஜீவன்களில் ஒன்று என்னை நோக்கி: நீ வந்து பார் என்று இடிமுழக்கம்போன்ற சத்தமாய்ச் சொல்லக்கேட்டேன். 2நான் பார்த்தபோது, இதோ, ஒரு வெள்ளைக்குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் வில்லைப் பிடித்திருந்தான்; அவனுக்கு ஒரு கிரீடங்கொடுக்கப்பட்டது; அவன் ஜெயிக்கிறவனாகவும் ஜெயிப்பவனாகவும் புறப்பட்டான். 3அவர் இரண்டாம் முத்திரையை உடைத்தபோது, இரண்டாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லக்கேட்டேன். 4அப்பொழுது சிவப்பான வேறொரு குதிரை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *