one year plan

  • |

    Day 3 (03-01-2025)

    Scripture Portion: Genesis 8-11 ஆதியாகமம் 8 1தேவன் நோவாவையும், அவனுடனே பேழையிலிருந்த சகல காட்டு மிருகங்களையும், சகல நாட்டு மிருகங்களையும் நினைத்தருளினார்; தேவன் பூமியின்மேல் காற்றை வீசப்பண்ணினார், அப்பொழுது ஜலம் அமர்ந்தது. 2ஆழத்தின் ஊற்றுக்கண்களும், வானத்தின் மதகுகளும் அடைபட்டன; வானத்து மழையும் நின்றுபோயிற்று. 3ஜலம் பூமியிலிருந்து நாளுக்குநாள் வற்றிக்கொண்டே வந்தது; நூற்றைம்பது நாளுக்குப்பின்பு ஜலம் வடிந்தது. 4ஏழாம் மாதம் பதினேழாம் தேதியிலே பேழை அரராத் என்னும் மலைகளின்மேல் தங்கிற்று. 5பத்தாம் மாதம் மட்டும் ஜலம் வடிந்துகொண்டே…

  • |

    Day – 2 (02-01-2025)

    Scripture Portion: Genesis 4-7 ஆதியாகமம் – 4 1ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, காயீனைப் பெற்று, கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன் என்றாள். 2பின்பு அவனுடைய சகோதரனாகிய ஆபேலைப் பெற்றாள்; ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனானான், காயீன் நிலத்தைப் பயிரிடுகிறவனானான். 3சிலநாள் சென்றபின்பு, காயீன் நிலத்தின் கனிகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தான். 4ஆபேலும் தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளின் கொழுமையானவைகளிலும் சிலவற்றைக் கொண்டுவந்தான். ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கிகரித்தார். 5காயீனையும் அவன் காணிக்கையையும் அவர் அங்கிகரிக்கவில்லை. அப்பொழுது காயீனுக்கு மிகவும்…

  • |

    Day -1 (01-01-2025)

    Scripture Portion: Genesis 1-3 ஆதியாகமம் 1 1ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். 2பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார். 3தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார். வெளிச்சம் உண்டாயிற்று. 4வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார். 5தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று. 6பின்பு தேவன்; ஜலத்தின்…

  • 2025ல் வேத வாசிப்பு அட்டவணை (கால வரிசை வாசிப்பு திட்டம்)

    கர்த்தருடைய பெரிதான கிருபையால், அடுத்த வருடத்துக்குள் அடியெடுத்து வைக்க இருக்கிறோம். நமக்கு தெரிந்த எத்தனையோ பேர், இன்று இல்லை. புதிய வருடத்தை காணாமலே சென்று விட்டார்கள். இன்றும் நாம் உயிருடன் இருப்பது கர்த்தருடைய கிருபையே. இந்த புதிய வருடத்தில், வேதத்தை 2025ல் ஒருமுறை வாசித்து முடிக்க ஒரு அட்டவணை வெளியிடுகிறோம். எத்தனையோ வேத வாசிப்பு அட்டவணையை நீங்கள் பார்த்திருக்கலாம். இந்த அட்டவணை அதிலிருந்து கொஞ்சம் வேறுபாடானது. நாம் பார்த்த அட்டவணைகள், வரிசையாக புத்தகங்களின் வரிசையில் இருக்கும். இங்கோ…