இஸ்ரேல்-11 (மோசேயின் மனைவி)

மோசேயின் மனைவி

இந்த மோசே தான், ஆண்டவரிடமிருந்து கற்பனைகளை பெற்றுக் கொண்டு வந்தவர். பிற ஜாதிகளிடம் கலக்கக்கூடாது என்று மக்களுக்கு உத்தரவு கொடுத்தவர். ஆண்டவரிடமிருந்து கட்டளை பெற்று மக்களை வழிநடத்தியவர். இதே மோசே என்ன தவறு செய்கிறார்? எத்தியோப்பிய ஸ்திரீயை விவாகம் செய்து கொள்கிறார். வழிநடத்திய அவரே தவறு செய்ததால் மிரியாமுக்கு கோபம் வருகிறது. மிரியாமும் ஆரோனும் அவர் மேல் கோபம் கொள்கிறார்கள். ஆனால் அடுத்த நொடியே ஆண்டவருக்கு மிரியாமின் மேல் கோபம் வருகிறது. உலகப் பிரகாரமாக பார்த்தால் இதில் என்ன நியாயம் இருக்கிறது என்று தோன்றும். ஆனால் ஆண்டவரின் பார்வை வேறு மனிதர்களின் பார்வை வேறு. எல்லா விஷயத்திலும் மனிதர்கள் பார்க்கிற படி ஆண்டவர் பார்க்க மாட்டார். மோசேயை தவறாகப் பேசிய காரணத்தினால் ஆண்டவர் மிரியாமுக்கு குஷ்டரோகத்தை கட்டளையிட்டார். ஆனால் மோசேயும் வேறு தேசத்தை சேர்ந்த ஸ்திரீயை விவாகம் பண்ணியது தவறு தானே. ஆண்டவருடைய செயல்களை புரிந்து கொள்ளவே முடியாது. மிரியாமுக்கு, ஏழு நாட்கள் அவள் புறம்பாக இருக்க வேண்டிய நிலை வந்தது. ஆனால் அதே இடத்தில் மோசேயின் கீழ் அடங்கியிருந்தவர் யோசுவா.

இந்த பகுதியில் மோசேக்கு இன்னொரு மனைவி இருந்ததாக எழுதினோம். எத்தனை பேரால் அதை ஏற்றுக்கொள்ள முடிந்தது என்பது தெரியவில்லை. ஆனால் வரலாற்று ஆசிரியர்கள் கருத்துக்களை சமர்ப்பிக்க வேண்டியது எங்கள் பொறுப்பு.

முதல் கருத்து:

இக்கருத்து பரவலாக கூறப்பட்டாலும், ஏற்றுக்கொள்ள கூடியதா என்பது தெரியவில்லை. அதாவது, மோசேக்கு மூன்று மனைவிகள் இருந்ததாக கூறுகிறார்கள் சிலர். வேதத்தில் மோசேயின் மாமன் என்று இரண்டு இடத்தில், இரு வேறு பெயர்கள் கூறப்பட்டிருக்கும்.

இவ்விரு வசனங்களின்படி, மோசேக்கு எத்திரோ என்கிற மாமனாரும், ரெகுவேல் என்கிற மாமனாரும் மீதியான் தேசத்தில் இருந்ததாகவும்,  ஆகவே மீதியானிய பெண்கள் இருவரை மோசே திருமணம் செய்திருந்ததாகவும், அதன்பின் வருகிற வழியில் எத்தியோப்பிய தேசத்து பெண்ணை திருமணம் செய்ததாகவும் கூறுகிறார்கள். எனவே இந்த கருத்தின்படி மோசேக்கு மூன்று மனைவிகள்.

இரண்டாவது கருத்து

மோசே ஒரே ஒருவரைத் தான் திருமணம் செய்தார். அது சிப்போராள் என்று கூறுவார்கள். மோசே வாழ்ந்த எகிப்துக்கு கீழ்ப்பக்கத்தில்தான் எத்தியோப்பியா (கூஷ்) இருக்கிறது. ஆனால் மோசே திருமணம் செய்த பெண் எத்தியோப்பிய தேசத்தை சார்ந்தவர்.  சிப்போராளோ, மீதியான் தேசத்தை சார்ந்தவர்.

எனவே மோசேக்கு ஒரு மனைவி தான் என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் வேத அறிஞர்கள்.

மூன்றாவது கருத்து

The Hebrew clause עַל-אֹדוֹת הָאִשָּׁה הַכֻּשִׁית אֲשֶׁר לָקָח: כִּי-אִשָּׁה כֻשִׁית, לָקָח. (‘because of the Cushite woman which he married’ (literally took), ‘for he had married a Cushite woman’) strongly implies a recent marriage.

நேரடியான மொழிபெயர்ப்பில், தற்போது நடந்த திருமணத்தைக் குறித்து மிரியாம் சண்டை போட்டதாக தெரிகிறது.

நான்காவது கருத்து

மிரியாம் சிறு வயதிலேயே, மோசேயை நாணற்பெட்டியில் விடும்போது, எகிப்து பார்வோனின் குமாரத்தியிடம் சென்று, பிள்ளையை வளர்க்க, தன் தாயையே ஏற்பாடு செய்தவர். அவ்வளவு பாசமான மிரியாம், மோசே 40 வருடங்கள் திருமணம் செய்து வாழ்ந்து வந்த, சிப்போராளைப் பார்த்து இப்படி பேச அவசியம் இல்லை. 40 வருடம் கடந்து, பின்னர் மோசேயிடம் நீ திருமணம் செய்தது தவறு என்று கூற முடியாது. எனவே மோசே அப்போதுதான் திருமணம் செய்தார் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.

மறைமுக காரணம்

சிப்போராள் மீதியான் தேசத்தை சேர்ந்தவர்.

எனவே மீதியான் என்பது ஆபிரகாமின் வம்சம். அதாவது சேமின் சந்ததி. ஆனால் எத்தியோப்பியர்கள் என்பது கூஷ் இன மக்கள் என்று ஆங்கில வேதத்தில் உள்ளது. கூஷ் காமின் சந்ததி. கூஷ் நிம்ரோத்தைப் பெற்றான் என்ற வசனத்தின் விளக்கம் ஏற்கனவே பதிவிடப்பட்டது. எனவே எத்தியோப்பிய ஸ்திரீ காம் இனத்தை சேர்ந்தவர்.

நோவாவின் ஆசீர்வாதம், கானான் எல்லாருக்கும் அடிமையாய் இருப்பான் என்பது. சேமின் சந்ததியை தான் தேவன் ஆசீர்வதித்தார். எனவே தான் காம் சந்ததியை மிரியாம் வெறுத்ததாக கூறுவர்.

இதில் இன்னொரு சுவாரஸ்யமான விளக்கம் என்னவெனில், காம் இன மக்களை, மிரியாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், தேவன் அவர்களை ஏற்றுக்கொண்டார் என்பதன் அடையாளமாக எத்தியோப்பிய ஸ்திரீ உள்ளே வந்ததாக அறிஞர்கள் கருதுகிறார்கள். புறஜாதிகளையும் நான் ஏற்றுக்கொள்வேன் என்று தேவன் மறைமுகமாக கூறிய தருணமாக இது பார்க்கப்படுகிறது.

இஸ்ரவேலர் அழிக்க வந்த சந்ததி இவர்களே. கானான் தேசத்தில் இருந்த இந்த மக்களை வென்று தான் இஸ்ரவேலர் தங்கள் தேசத்தை சுதந்தரித்துக் கொண்டார்கள். அதாவது நோவாவின் ஆசீர்வாதம் அங்கே நிறைவேறியது. 

 

Similar Posts

  • |

    Day 58 (27-02-2025)

    Scripture Portion: Numbers 8-10 எண்ணாகமம் 8 1 கர்த்தர் மோசேயை நோக்கி: 2நீ ஆரோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நீ விளக்குகளை ஏற்றும்போது ஏழு விளக்குகளும் விளக்குத்தண்டிற்கு நேரே எரியவேண்டும் என்று சொல் என்றார். 3 கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்ட பிரகாரம் ஆரோன் செய்து, விளக்குத்தண்டிற்கு நேரே ஒழுங்காக அதின் விளக்குகளை ஏற்றினான். 4இந்தக் குத்துவிளக்கு, அதின் பாதமுதல் பூக்கள்வரைக்கும் பொன்னினால் அடிப்புவேலையாய்ச் செய்யப்பட்டிருந்தது; மோசேக்குக் காண்பித்த மாதிரியின்படியே அவன் குத்துவிளக்கை உண்டாக்கினான். 5பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: 6நீ இஸ்ரவேல் சந்ததியாரினின்று லேவியரைப் பிரித்தெடுத்து,…

  • இஸ்ரேல்-7 (இஸ்ரேல் – நோவா)

    நோவா தேவன் மனுக்குலத்தை மீட்பதற்காக ஒரு திட்டத்தைக் கொடுத்தார். பெண்ணிடம் இருந்து பிறக்கும் பிள்ளை, சாத்தானை ஜெயிக்கும் என்பதே அந்த திட்டம். சாத்தான் அந்த திட்டத்துக்கு எதிராக போராடி, முதலில் பரிசுத்த வித்து இருந்த ஆபேலைக் கொன்றான். பின்னர், வித்து யாரிடம் இருக்கிறது என்பது தெரியாததால் முழு மனிதகுலத்தையும் அசுத்தமாக்க முடிவு செய்து, தேவ புத்திரர்களை மனுஷ குமாரத்திகளுடன் கலக்க விட்டான். நோவா காலம் வரை இந்த பரிசுத்த வித்து மறைந்து இருந்தது. ஆதாமுக்கு அனேக பிள்ளைகள்…

  • |

    Day 142 (22-05-2025)

    Scripture Portion: Psalm 95, 97-99 சங்கீதம் 95 1கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடி, நம்முடைய இரட்சணியக் கன்மலையைச் சங்கீர்த்தனம் பண்ணக்கடவோம் வாருங்கள். 2துதித்தலுடனே அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து, சங்கீதங்களால் அவரை ஆர்ப்பரித்துப் பாடக்கடவோம். 3கர்த்தரே மகா தேவனும், எல்லா தேவர்களுக்கும் மகாராஜனுமாயிருக்கிறார். 4பூமியின் ஆழங்கள் அவர் கையில் இருக்கிறது; பர்வதங்களின் உயரங்களும் அவருடையவைகள். 5சமுத்திரம் அவருடையது, அவரே அதை உண்டாக்கினார்; வெட்டாந்தரையையும் அவருடைய கரம் உருவாக்கிற்று. 6நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக நாம் பணிந்து குனிந்து முழங்காற்படியிடக்கடவோம் வாருங்கள். 7அவர்…

  • |

    Day 72 (13-03-2025)

    Scripture Portion: Deuteronomy 5-7 உபாகமம் 5 1மோசே இஸ்ரவேலர் எல்லாரையும் அழைப்பித்து, அவர்களை நோக்கி: இஸ்ரவேலரே, நான் இன்று உங்கள் காதுகள் கேட்கச் சொல்லும் கட்டளைகளையும் நியாயங்களையும் கேளுங்கள்; நீங்கள் அவைகளின்படியே செய்யும்படிக்கு அவைகளைக் கற்றுக் கைக்கொள்ளக்கடவீர்கள். 2நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஓரேபிலே நம்மோடே உடன்படிக்கைபண்ணினார். 3அந்த உடன்படிக்கையைக் கர்த்தர் நம்முடைய பிதாக்களுடன் பண்ணாமல், இந்நாளில் இங்கே உயிரோடிருக்கிற நம்மெல்லாரோடும் பண்ணினார். 4கர்த்தர் மலையிலே அக்கினியின் நடுவிலிருந்து முகமுகமாய் உங்களோடே பேசினார். 5கர்த்தருடைய வார்த்தையை உங்களுக்கு அறிவிக்கும்படி, அக்காலத்திலே நான் கர்த்தருக்கும், உங்களுக்கும் நடுவாக நின்றேன்;…

  • |

    Day 343 (09-12-2025)

    Scripture Portion: Romans 8-10 ரோமர் 8 1ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை. 2கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே. 3அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார். 4மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார். 5அன்றியும்…

  • |

    Day 65 (06-03-2025)

    Scripture Portion: Numbers 26-27 எண்ணாகமம் 26 1அந்த வாதை தீர்ந்தபின்பு, கர்த்தர் மோசேயையும் ஆரோனின் குமாரனும் ஆசாரியனுமாகிய எலெயாசாரையும் நோக்கி: 2இஸ்ரவேல் புத்திரரின் சமஸ்த சபையாரையும் அவர்கள் பிதாக்களுடைய வம்சத்தின்படி இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட இஸ்ரவேலிலே யுத்தத்திற்குப் புறப்படத்தக்கவர்கள் எல்லாரையும் எண்ணுங்கள் என்றார். 3அப்பொழுது மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் எரிகோவின் அருகே இருக்கும் யோர்தானுக்கு இப்பாலே மோவாபின் சமனான வெளிகளிலே அவர்களோடே பேசி: 4கர்த்தர் மோசேக்கும் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேல் புத்திரருக்கும் கட்டளையிட்டிருக்கிறபடியே, இருபது வயதுமுதற்கொண்டிருக்கிறவர்களை எண்ணுங்கள் என்றார்கள்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *