இஸ்ரேல்-11 (மோசேயின் மனைவி)

மோசேயின் மனைவி

இந்த மோசே தான், ஆண்டவரிடமிருந்து கற்பனைகளை பெற்றுக் கொண்டு வந்தவர். பிற ஜாதிகளிடம் கலக்கக்கூடாது என்று மக்களுக்கு உத்தரவு கொடுத்தவர். ஆண்டவரிடமிருந்து கட்டளை பெற்று மக்களை வழிநடத்தியவர். இதே மோசே என்ன தவறு செய்கிறார்? எத்தியோப்பிய ஸ்திரீயை விவாகம் செய்து கொள்கிறார். வழிநடத்திய அவரே தவறு செய்ததால் மிரியாமுக்கு கோபம் வருகிறது. மிரியாமும் ஆரோனும் அவர் மேல் கோபம் கொள்கிறார்கள். ஆனால் அடுத்த நொடியே ஆண்டவருக்கு மிரியாமின் மேல் கோபம் வருகிறது. உலகப் பிரகாரமாக பார்த்தால் இதில் என்ன நியாயம் இருக்கிறது என்று தோன்றும். ஆனால் ஆண்டவரின் பார்வை வேறு மனிதர்களின் பார்வை வேறு. எல்லா விஷயத்திலும் மனிதர்கள் பார்க்கிற படி ஆண்டவர் பார்க்க மாட்டார். மோசேயை தவறாகப் பேசிய காரணத்தினால் ஆண்டவர் மிரியாமுக்கு குஷ்டரோகத்தை கட்டளையிட்டார். ஆனால் மோசேயும் வேறு தேசத்தை சேர்ந்த ஸ்திரீயை விவாகம் பண்ணியது தவறு தானே. ஆண்டவருடைய செயல்களை புரிந்து கொள்ளவே முடியாது. மிரியாமுக்கு, ஏழு நாட்கள் அவள் புறம்பாக இருக்க வேண்டிய நிலை வந்தது. ஆனால் அதே இடத்தில் மோசேயின் கீழ் அடங்கியிருந்தவர் யோசுவா.

இந்த பகுதியில் மோசேக்கு இன்னொரு மனைவி இருந்ததாக எழுதினோம். எத்தனை பேரால் அதை ஏற்றுக்கொள்ள முடிந்தது என்பது தெரியவில்லை. ஆனால் வரலாற்று ஆசிரியர்கள் கருத்துக்களை சமர்ப்பிக்க வேண்டியது எங்கள் பொறுப்பு.

முதல் கருத்து:

இக்கருத்து பரவலாக கூறப்பட்டாலும், ஏற்றுக்கொள்ள கூடியதா என்பது தெரியவில்லை. அதாவது, மோசேக்கு மூன்று மனைவிகள் இருந்ததாக கூறுகிறார்கள் சிலர். வேதத்தில் மோசேயின் மாமன் என்று இரண்டு இடத்தில், இரு வேறு பெயர்கள் கூறப்பட்டிருக்கும்.

இவ்விரு வசனங்களின்படி, மோசேக்கு எத்திரோ என்கிற மாமனாரும், ரெகுவேல் என்கிற மாமனாரும் மீதியான் தேசத்தில் இருந்ததாகவும்,  ஆகவே மீதியானிய பெண்கள் இருவரை மோசே திருமணம் செய்திருந்ததாகவும், அதன்பின் வருகிற வழியில் எத்தியோப்பிய தேசத்து பெண்ணை திருமணம் செய்ததாகவும் கூறுகிறார்கள். எனவே இந்த கருத்தின்படி மோசேக்கு மூன்று மனைவிகள்.

இரண்டாவது கருத்து

மோசே ஒரே ஒருவரைத் தான் திருமணம் செய்தார். அது சிப்போராள் என்று கூறுவார்கள். மோசே வாழ்ந்த எகிப்துக்கு கீழ்ப்பக்கத்தில்தான் எத்தியோப்பியா (கூஷ்) இருக்கிறது. ஆனால் மோசே திருமணம் செய்த பெண் எத்தியோப்பிய தேசத்தை சார்ந்தவர்.  சிப்போராளோ, மீதியான் தேசத்தை சார்ந்தவர்.

எனவே மோசேக்கு ஒரு மனைவி தான் என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் வேத அறிஞர்கள்.

மூன்றாவது கருத்து

The Hebrew clause עַל-אֹדוֹת הָאִשָּׁה הַכֻּשִׁית אֲשֶׁר לָקָח: כִּי-אִשָּׁה כֻשִׁית, לָקָח. (‘because of the Cushite woman which he married’ (literally took), ‘for he had married a Cushite woman’) strongly implies a recent marriage.

நேரடியான மொழிபெயர்ப்பில், தற்போது நடந்த திருமணத்தைக் குறித்து மிரியாம் சண்டை போட்டதாக தெரிகிறது.

நான்காவது கருத்து

மிரியாம் சிறு வயதிலேயே, மோசேயை நாணற்பெட்டியில் விடும்போது, எகிப்து பார்வோனின் குமாரத்தியிடம் சென்று, பிள்ளையை வளர்க்க, தன் தாயையே ஏற்பாடு செய்தவர். அவ்வளவு பாசமான மிரியாம், மோசே 40 வருடங்கள் திருமணம் செய்து வாழ்ந்து வந்த, சிப்போராளைப் பார்த்து இப்படி பேச அவசியம் இல்லை. 40 வருடம் கடந்து, பின்னர் மோசேயிடம் நீ திருமணம் செய்தது தவறு என்று கூற முடியாது. எனவே மோசே அப்போதுதான் திருமணம் செய்தார் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.

மறைமுக காரணம்

சிப்போராள் மீதியான் தேசத்தை சேர்ந்தவர்.

எனவே மீதியான் என்பது ஆபிரகாமின் வம்சம். அதாவது சேமின் சந்ததி. ஆனால் எத்தியோப்பியர்கள் என்பது கூஷ் இன மக்கள் என்று ஆங்கில வேதத்தில் உள்ளது. கூஷ் காமின் சந்ததி. கூஷ் நிம்ரோத்தைப் பெற்றான் என்ற வசனத்தின் விளக்கம் ஏற்கனவே பதிவிடப்பட்டது. எனவே எத்தியோப்பிய ஸ்திரீ காம் இனத்தை சேர்ந்தவர்.

நோவாவின் ஆசீர்வாதம், கானான் எல்லாருக்கும் அடிமையாய் இருப்பான் என்பது. சேமின் சந்ததியை தான் தேவன் ஆசீர்வதித்தார். எனவே தான் காம் சந்ததியை மிரியாம் வெறுத்ததாக கூறுவர்.

இதில் இன்னொரு சுவாரஸ்யமான விளக்கம் என்னவெனில், காம் இன மக்களை, மிரியாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், தேவன் அவர்களை ஏற்றுக்கொண்டார் என்பதன் அடையாளமாக எத்தியோப்பிய ஸ்திரீ உள்ளே வந்ததாக அறிஞர்கள் கருதுகிறார்கள். புறஜாதிகளையும் நான் ஏற்றுக்கொள்வேன் என்று தேவன் மறைமுகமாக கூறிய தருணமாக இது பார்க்கப்படுகிறது.

இஸ்ரவேலர் அழிக்க வந்த சந்ததி இவர்களே. கானான் தேசத்தில் இருந்த இந்த மக்களை வென்று தான் இஸ்ரவேலர் தங்கள் தேசத்தை சுதந்தரித்துக் கொண்டார்கள். அதாவது நோவாவின் ஆசீர்வாதம் அங்கே நிறைவேறியது. 

 

Similar Posts

  • |

    Day 114 (24-04-2025)

    Scripture Portion: Psalm 43-45, 49, 84-85, 87 சங்கீதம் 43 1தேவனே, நீர் என் நியாயத்தை விசாரித்து, பக்தியில்லாத ஜாதியாரோடு எனக்காக வழக்காடி, சூதும் அநியாயமுமான மனுஷனுக்கு என்னைத் தப்புவியும். 2என் அரணாகிய தேவன் நீர்; ஏன் என்னைத் தள்ளிவிடுகிறீர்? சத்துருவினால் ஒடுக்கப்பட்டு நான் ஏன் துக்கத்துடனே திரியவேண்டும்? 3உமது வெளிச்சத்தையும் உமது சத்தியத்தையும் அனுப்பியருளும்; அவைகள் என்னை நடத்தி, உமது பரிசுத்த பர்வதத்திற்கும் உமது வாசஸ்தலங்களுக்கும் என்னைக் கொண்டு போவதாக. 4அப்பொழுது நான் தேவனுடைய…

  • |

    இஸ்ரேல்

    இஸ்ரவேலின் தேவனுடைய நாமத்தில் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் என்று வேதத்தில் வாசிக்கும் போதெல்லாம், இஸ்ரவேலைப் பற்றி அதிகமாக படிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்படும். ஏன் அவர் இஸ்ரவேலின் தேவன்? இந்தியாவின் தேவனாக ஏன் அவர் இருந்திருக்கக் கூடாது? பிற மதத்தினர் சொல்வது போல வெளிநாட்டு கடவுளை வணங்கிக் கொண்டிருக்கிறேனா? இது போன்ற எண்ணங்கள் எனக்கு பள்ளிப்பருவத்திலே அதிகமாக வந்தது உண்டு. எவ்வளவு அதிகமாக வேதத்தை வாசிக்கிறேனோ, அவ்வளவு அதிகமாக இதைப் பற்றியும்…

  • இஸ்ரேல்-18 (பரிசுத்த வித்து)

    பரிசுத்த வித்து இஸ்ரேல் தேசத்தின் கடந்த காலங்களை, வேதப்பிரகாரமாகவும், சரித்திர ரீதியிலும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இடையிடையே, பரிசுத்த வித்து, என்ற ஒன்றையும் சேர்த்து பார்த்தோம். அந்த பரிசுத்த வித்து, எப்படி பயணம் செய்தது? யார் மூலமாக அடுத்த தலைமுறைக்கு வந்தது என்பதையும் பார்த்தோம். அதையே கொஞ்சம் விரிவாக இன்று பார்க்கலாம். முதலாவது தேவன் ஏன் ஆதாமை உருவாக்கினார்? மல்கியா 2:15 அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பரிபூரணமாயிருந்ததே; பின்னை ஏன் ஒருவனைப்படைத்தார்? தேவபக்தியுள்ள, சந்ததியைப் பெறும்படிதானே…

  • |

    இஸ்ரேல்-3 (தனிச்சிறப்புகள்)

    யூதர்கள் என்று அழைக்கப்படுகிற, இன்றைய இஸ்ரவேலர்களின் வளர்ச்சி பற்றி இப்பதிவில் காணலாம். யூதர்களைப் பற்றி தமிழ் மக்களின் கருத்து: யூதர்கள் இனவெறி பிடித்தவர்கள். தங்கள் தெய்வம் மட்டுமே உண்மையான தெய்வம் என்று கருதுபவர்கள். தங்கள் தெய்வத்துக்காக, தங்கள் தேசத்துக்காக எந்த எல்லைக்கும் போகிறவர்கள். உலகை ஆளுகை செய்கிறவர்கள். இல்லுமினாட்டிகள். உலகினை ஆளப்பிறந்தவர்கள் யூதர்கள் என்ற திமிர் பிடித்தவர்கள். பழிவாங்குபவர்கள். மோசமானவர்கள். வந்தேறிகள். இரத்த வெறி பிடித்தவர்கள். பாலஸ்தீன தேசத்தைப் பிடித்துக்கொண்டு, பாலஸ்தீனியர்களை சுட்டுக் கொல்பவர்கள் இதெல்லாம் YouTube…

  • |

    Day 217 (05-08-2025)

    Scripture Portion: 2 kings22-23, 2 chronicles 34-35 2 இராஜாக்கள் 22 1யோசியா ராஜாவாகிறபோது, எட்டு வயதாயிருந்து, முப்பத்தொரு வருஷம் எருசலேமில் அரசாண்டான்; போஸ்காத் ஊரானாகிய அதாயாவின் குமாரத்தியான அவன் தாயின் பேர் எதிதாள். 2அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து, தன் தகப்பனாகிய தாவீதின் வழியிலெல்லாம் வலது இடதுபுறம் விலகாமல் நடந்தான். 3ராஜாவாகிய யோசியாவின் பதினெட்டாம் வருஷத்திலே, ராஜா மெசுல்லாமின் குமாரனாகிய அத்சலியாவின் மகன் சாப்பான் என்னும் சம்பிரதியைக் கர்த்தரின் ஆலயத்துக்கு அனுப்பி: 4நீ பிரதான ஆசாரியனாகிய இல்க்கியாவினிடத்தில் போய், கர்த்தருடைய ஆலயத்துக்குக்…

  • |

    Day 357 (23-12-2025)

    Scripture Portion: Hebrews 11-13 எபிரெயர் 11 1விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. 2அதினாலே முன்னோர்கள் நற்சாட்சி பெற்றார்கள். 3விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையினால் உண்டாக்கப்பட்டதென்றும், இவ்விதமாய், காணப்படுகிறவைகள் தோன்றப்படுகிறவைகளால் உண்டாகவில்லையென்றும் அறிந்திருக்கிறோம். 4விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான்; அதினாலே அவன் நீதிமானென்று சாட்சிபெற்றான்; அவனுடைய காணிக்கைகளைக் குறித்து தேவனே சாட்சிகொடுத்தார்; அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான். 5விசுவாசத்தினாலே ஏனோக்கு மரணத்தைக் காணாதபடிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டபடியினாலே,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *