1 எத்தியோப்பியா தேசத்து ஸ்திரீயை மோசே விவாகம்பண்ணியிருந்தபடியினால், மிரியாமும் ஆரோனும் அவன் விவாகம்பண்ணின எத்தியோப்பியா தேசத்து ஸ்திரீயினிமித்தம் அவனுக்கு விரோதமாய்ப் பேசி:
எண்ணாகமம் 12:1
இந்த மோசே தான், ஆண்டவரிடமிருந்து கற்பனைகளை பெற்றுக் கொண்டு வந்தவர். பிற ஜாதிகளிடம் கலக்கக்கூடாது என்று மக்களுக்கு உத்தரவு கொடுத்தவர். ஆண்டவரிடமிருந்து கட்டளை பெற்று மக்களை வழிநடத்தியவர். இதே மோசே என்ன தவறு செய்கிறார்? எத்தியோப்பிய ஸ்திரீயை விவாகம் செய்து கொள்கிறார். வழிநடத்திய அவரே தவறு செய்ததால் மிரியாமுக்கு கோபம் வருகிறது. மிரியாமும் ஆரோனும் அவர் மேல் கோபம் கொள்கிறார்கள். ஆனால் அடுத்த நொடியே ஆண்டவருக்கு மிரியாமின் மேல் கோபம் வருகிறது. உலகப் பிரகாரமாக பார்த்தால் இதில் என்ன நியாயம் இருக்கிறது என்று தோன்றும். ஆனால் ஆண்டவரின் பார்வை வேறு மனிதர்களின் பார்வை வேறு. எல்லா விஷயத்திலும் மனிதர்கள் பார்க்கிற படி ஆண்டவர் பார்க்க மாட்டார். மோசேயை தவறாகப் பேசிய காரணத்தினால் ஆண்டவர் மிரியாமுக்கு குஷ்டரோகத்தை கட்டளையிட்டார். ஆனால் மோசேயும் வேறு தேசத்தை சேர்ந்த ஸ்திரீயை விவாகம் பண்ணியது தவறு தானே. ஆண்டவருடைய செயல்களை புரிந்து கொள்ளவே முடியாது. மிரியாமுக்கு, ஏழு நாட்கள் அவள் புறம்பாக இருக்க வேண்டிய நிலை வந்தது. ஆனால் அதே இடத்தில் மோசேயின் கீழ் அடங்கியிருந்தவர் யோசுவா.
இந்த பகுதியில் மோசேக்கு இன்னொரு மனைவி இருந்ததாக எழுதினோம். எத்தனை பேரால் அதை ஏற்றுக்கொள்ள முடிந்தது என்பது தெரியவில்லை. ஆனால் வரலாற்று ஆசிரியர்கள் கருத்துக்களை சமர்ப்பிக்க வேண்டியது எங்கள் பொறுப்பு.
முதல் கருத்து:
இக்கருத்து பரவலாக கூறப்பட்டாலும், ஏற்றுக்கொள்ள கூடியதா என்பது தெரியவில்லை. அதாவது, மோசேக்கு மூன்று மனைவிகள் இருந்ததாக கூறுகிறார்கள் சிலர். வேதத்தில் மோசேயின் மாமன் என்று இரண்டு இடத்தில், இரு வேறு பெயர்கள் கூறப்பட்டிருக்கும்.
எண்ணாகமம் 10:29 அப்பொழுது மோசே தன் மாமனாகிய ரெகுவேல் என்னும் மீதியானனுடைய குமாரனான ஓபாவை நோக்கி: உங்களுக்குத் தருவேன் என்று கர்த்தர் சொன்ன ஸ்தலத்துக்கு நாங்கள் பிரயாணம்போகிறோம்; நீயும் எங்களோடேகூட வா, உனக்கு நன்மைசெய்வோம்; கர்த்தர் இஸ்ரவேலுக்கு நல்ல வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார் என்றான்.
யாத்திராகமம் 18:5 மோசேயின் மாமனாகிய எத்திரோ மோசேயின் குமாரரோடும் அவன் மனைவியோடுங்கூட, அவன் பாளயமிறங்கியிருந்த தேவ பர்வதத்தினிடத்தில் வனாந்தரத்துக்கு வந்து:
இவ்விரு வசனங்களின்படி, மோசேக்கு எத்திரோ என்கிற மாமனாரும், ரெகுவேல் என்கிற மாமனாரும் மீதியான் தேசத்தில் இருந்ததாகவும், ஆகவே மீதியானிய பெண்கள் இருவரை மோசே திருமணம் செய்திருந்ததாகவும், அதன்பின் வருகிற வழியில் எத்தியோப்பிய தேசத்து பெண்ணை திருமணம் செய்ததாகவும் கூறுகிறார்கள். எனவே இந்த கருத்தின்படி மோசேக்கு மூன்று மனைவிகள்.
இரண்டாவது கருத்து
மோசே ஒரே ஒருவரைத் தான் திருமணம் செய்தார். அது சிப்போராள் என்று கூறுவார்கள். மோசே வாழ்ந்த எகிப்துக்கு கீழ்ப்பக்கத்தில்தான் எத்தியோப்பியா (கூஷ்) இருக்கிறது. ஆனால் மோசே திருமணம் செய்த பெண் எத்தியோப்பிய தேசத்தை சார்ந்தவர். சிப்போராளோ, மீதியான் தேசத்தை சார்ந்தவர்.
15. பார்வோன் அந்தக் காரியத்தைக் கேள்விப்பட்டபோது, மோசேயைக் கொலைசெய்ய வகைதேடினான். மோசே பார்வோனிடத்தினின்று தப்பியோடி, மீதியான் தேசத்தில் போய்த் தங்கி, ஒரு துரவண்டையிலே உட்கார்ந்திருந்தான்.
யாத்திரகாமம் 2- 15
எனவே மோசேக்கு ஒரு மனைவி தான் என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் வேத அறிஞர்கள்.
மூன்றாவது கருத்து
The Hebrew clause עַל-אֹדוֹת הָאִשָּׁה הַכֻּשִׁית אֲשֶׁר לָקָח: כִּי-אִשָּׁה כֻשִׁית, לָקָח. (‘because of the Cushite woman which he married’ (literally took), ‘for he had married a Cushite woman’) strongly implies a recent marriage.
நேரடியான மொழிபெயர்ப்பில், தற்போது நடந்த திருமணத்தைக் குறித்து மிரியாம் சண்டை போட்டதாக தெரிகிறது.
நான்காவது கருத்து
மிரியாம் சிறு வயதிலேயே, மோசேயை நாணற்பெட்டியில் விடும்போது, எகிப்து பார்வோனின் குமாரத்தியிடம் சென்று, பிள்ளையை வளர்க்க, தன் தாயையே ஏற்பாடு செய்தவர். அவ்வளவு பாசமான மிரியாம், மோசே 40 வருடங்கள் திருமணம் செய்து வாழ்ந்து வந்த, சிப்போராளைப் பார்த்து இப்படி பேச அவசியம் இல்லை. 40 வருடம் கடந்து, பின்னர் மோசேயிடம் நீ திருமணம் செய்தது தவறு என்று கூற முடியாது. எனவே மோசே அப்போதுதான் திருமணம் செய்தார் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.
மறைமுக காரணம்
சிப்போராள் மீதியான் தேசத்தை சேர்ந்தவர்.
1 ஆபிரகாம் கேத்தூராள் என்னும் பேர் கொண்ட ஒரு ஸ்திரீயையும் விவாகம்பண்ணியிருந்தான்.
2 அவள் அவனுக்குச் சிம்ரானையும், யக்ஷானையும், மேதானையும், மீதியானையும், இஸ்பாக்கையும், சூவாகையும் பெற்றாள்.
ஆதியாகமம் 25-1,2
எனவே மீதியான் என்பது ஆபிரகாமின் வம்சம். அதாவது சேமின் சந்ததி. ஆனால் எத்தியோப்பியர்கள் என்பது கூஷ் இன மக்கள் என்று ஆங்கில வேதத்தில் உள்ளது. கூஷ் காமின் சந்ததி. கூஷ் நிம்ரோத்தைப் பெற்றான் என்ற வசனத்தின் விளக்கம் ஏற்கனவே பதிவிடப்பட்டது. எனவே எத்தியோப்பிய ஸ்திரீ காம் இனத்தை சேர்ந்தவர்.
நோவாவின் ஆசீர்வாதம், கானான் எல்லாருக்கும் அடிமையாய் இருப்பான் என்பது. சேமின் சந்ததியை தான் தேவன் ஆசீர்வதித்தார். எனவே தான் காம் சந்ததியை மிரியாம் வெறுத்ததாக கூறுவர்.
இதில் இன்னொரு சுவாரஸ்யமான விளக்கம் என்னவெனில், காம் இன மக்களை, மிரியாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், தேவன் அவர்களை ஏற்றுக்கொண்டார் என்பதன் அடையாளமாக எத்தியோப்பிய ஸ்திரீ உள்ளே வந்ததாக அறிஞர்கள் கருதுகிறார்கள். புறஜாதிகளையும் நான் ஏற்றுக்கொள்வேன் என்று தேவன் மறைமுகமாக கூறிய தருணமாக இது பார்க்கப்படுகிறது.
கானான் தன் மூத்த மகனாகிய சீதோனையும், கேத்தையும்,
எபூசியரையும், எமோரியரையும், கிர்காசியரையும்,
ஏவியரையும், அர்கீயரையும், சீநியரையும்,
அர்வாதியரையும், செமாரியரையும், காமாத்தியரையும், பெற்றான்; பின்பு கானானியரின் வம்சத்தார் எங்கும் பரவினார்கள்.
ஆதியாகமம் 10 – 15,16,17
இஸ்ரவேலர் அழிக்க வந்த சந்ததி இவர்களே. கானான் தேசத்தில் இருந்த இந்த மக்களை வென்று தான் இஸ்ரவேலர் தங்கள் தேசத்தை சுதந்தரித்துக் கொண்டார்கள். அதாவது நோவாவின் ஆசீர்வாதம் அங்கே நிறைவேறியது.
இஸ்ரவேலின் தேவனுடைய நாமத்தில் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் என்று வேதத்தில் வாசிக்கும் போதெல்லாம், இஸ்ரவேலைப் பற்றி அதிகமாக படிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்படும். ஏன் அவர் இஸ்ரவேலின் தேவன்? இந்தியாவின் தேவனாக ஏன் அவர் இருந்திருக்கக் கூடாது? பிற மதத்தினர் சொல்வது போல வெளிநாட்டு கடவுளை வணங்கிக் கொண்டிருக்கிறேனா? இது போன்ற எண்ணங்கள் எனக்கு பள்ளிப்பருவத்திலே அதிகமாக வந்தது உண்டு. எவ்வளவு அதிகமாக வேதத்தை வாசிக்கிறேனோ, அவ்வளவு அதிகமாக இதைப் பற்றியும்…
பரிசுத்த வித்து இஸ்ரேல் தேசத்தின் கடந்த காலங்களை, வேதப்பிரகாரமாகவும், சரித்திர ரீதியிலும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இடையிடையே, பரிசுத்த வித்து, என்ற ஒன்றையும் சேர்த்து பார்த்தோம். அந்த பரிசுத்த வித்து, எப்படி பயணம் செய்தது? யார் மூலமாக அடுத்த தலைமுறைக்கு வந்தது என்பதையும் பார்த்தோம். அதையே கொஞ்சம் விரிவாக இன்று பார்க்கலாம். முதலாவது தேவன் ஏன் ஆதாமை உருவாக்கினார்? மல்கியா 2:15 அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பரிபூரணமாயிருந்ததே; பின்னை ஏன் ஒருவனைப்படைத்தார்? தேவபக்தியுள்ள, சந்ததியைப் பெறும்படிதானே…
யூதர்கள் என்று அழைக்கப்படுகிற, இன்றைய இஸ்ரவேலர்களின் வளர்ச்சி பற்றி இப்பதிவில் காணலாம். யூதர்களைப் பற்றி தமிழ் மக்களின் கருத்து: யூதர்கள் இனவெறி பிடித்தவர்கள். தங்கள் தெய்வம் மட்டுமே உண்மையான தெய்வம் என்று கருதுபவர்கள். தங்கள் தெய்வத்துக்காக, தங்கள் தேசத்துக்காக எந்த எல்லைக்கும் போகிறவர்கள். உலகை ஆளுகை செய்கிறவர்கள். இல்லுமினாட்டிகள். உலகினை ஆளப்பிறந்தவர்கள் யூதர்கள் என்ற திமிர் பிடித்தவர்கள். பழிவாங்குபவர்கள். மோசமானவர்கள். வந்தேறிகள். இரத்த வெறி பிடித்தவர்கள். பாலஸ்தீன தேசத்தைப் பிடித்துக்கொண்டு, பாலஸ்தீனியர்களை சுட்டுக் கொல்பவர்கள் இதெல்லாம் YouTube…