|

இஸ்ரேல்-35 (சாம்ராஜ்யங்கள் சுருக்கம்)

இதுவரை நாம் பார்த்த காரியங்களின் தொகுப்பு தான் இப்பதிவு. வேதத்தில் உள்ள தீர்க்கதரிசன நிறைவேறுதலை இனி பார்க்க இருக்கிறோம். அதற்கான ஒரு சின்ன அறிமுக தொகுப்பு தான் இந்த பதிவு. இதுவரை நாம் பார்த்த ஒவ்வொரு ராஜ்யமும், வேதத்தில் தீர்க்கதரிசனமாக கூறப்பட்டுள்ளது. அந்த காரியங்களை தொடர்ச்சியாக நாம் பார்க்க இருக்கிறோம்.

இதுவரையில் நாம் பிரதானமான ராஜ்யங்களைப் பற்றிப் பார்த்தோம். முதலில் ராஜ்யம் ‌அமைத்தவர் நிம்ரோத். தேவனுக்கு எதிராக எப்படி மக்களை ஒன்று கூட்டினார் என்று பார்த்தோம். “கர்த்தருக்கு முன் பலத்த வேட்டைக்காரன்” என வேதம் ஏன் அவரைக் குறித்து கூறுகிறது என பார்த்தோம். அவர் மனைவி சிம்ராஸ் மூலம் வேசித்தனம், சிலை வழிபாடு பரவியது.

அடுத்ததாக எகிப்தியர்கள் இஸ்ரவேலரை அடிமைப்படுத்தினர். கர்த்தர் அவர்களைக் கொடுமைப்படுத்துவதற்காக எகிப்தியரிடம் அடிமையாக்கவில்லை. ஆபிரகாமுக்கு பின்னர், கானான் தேசத்திலேயே அவர்கள் வாழ்ந்து இருந்தார்களானால், வெறும் கானானியராகவே வாழ்ந்திருப்பார்கள். எனவே தான் அவர்களை தேவன் எகிப்துக்கு அழைத்துச்சென்றார். எகிப்தில், அவர்களை சுதந்திரமாக வாழ விட்டிருந்தால், அவர்களும் எகிப்தியராகவே வாழ்ந்திருப்பார்கள். எனவே தான் அடிமையாக அவர்களை விட்டார். எந்த எகிப்தியனும் அடிமையை திருமணம் செய்ய மாட்டான். அப்படி அவர்களை பொத்தி பாதுகாத்து, 70 பேராக போனவர்களை, 30 இலட்சம் பேராக பெருக்கி, இஸ்ரவேலர் என்ற இனத்தை உருவாக்கினார் தேவன். எகிப்தியர், அவர்கள் காலங்களில், பிறக்கும் ஆண் குழந்தைகளைக் கூட கொன்று ஆட்சி செய்துள்ளனர் எகிப்தியர்கள். ஆனாலும் யோசுவா மற்றும், மோசேயின் மூலமாக, கானானியர்களின் தேசத்தைப் பிடித்து இஸ்ரவேல் தேசம் உருவானது.

இஸ்ரேல் தேசம் உருவான பின்னர், நியாயாதிபதிகள் ஆட்சி நடந்தது. அவர்களுக்கு தேவனே ராஜாவாக இருந்தார். ஆனால் மக்கள், தங்களுக்கு ராஜா வேண்டும் என்று கேட்டதால், இஸ்ரேல் தேசத்துக்கு சவுல், தாவீது, சாலமோன் ராஜாவாகினர். சாலொமோனுடைய குமாரனுடைய நாட்களில், தேசம் வடதேசம் இஸ்ரேல் என்றும், தென்தேசம் யூதேயா என்றும் பிரிக்கப்பட்டது. இஸ்ரேல் தலைநகர் சமாரியா. யூதேயா தலைநகர் எருசலேம்.

முதல் சாம்ராஜ்யம் அசிரிய சாம்ராஜ்யம். அசீரியர்கள் இஸ்ரேல் தேசமாகிய வடதேசத்தில் இருந்தவர்களை, பல தேசங்களில் கொண்டு அகதிகளாக வாழ வைத்தார்கள். இன்றைக்கும் தெலைந்து போன பத்து கோத்திரங்கள் The lost 10 Tribes என்று அவர்களைக் கூறுகிறோம். அசீரிய சாம்ராஜ்யத்தில் மக்களை எவ்வாறெல்லாம் கொடுமைப் படுத்தினார்கள், மக்களின் தலைகளை வெட்டி குவியலாக வைத்தார்கள், கண்களை பிடுங்கி அவர்கள் கெஞ்சலை ரசித்தார்கள், என்றெல்லாம் நாம் பார்த்தோம்.

அடுத்ததாக பாபிலோன் சாம்ராஜ்யம். ராஜபுத்திரர்களை அடிமைகளாக சிறைப்பிடித்து சென்றார்கள். அவர்கள் பெயரை மாற்றி, உண்ணும் உணவை மாற்றி, மொழியை மாற்றி, பாபிலோனில் அடிமைகளாக வைத்தார்கள். பாபிலோன் சாம்ராஜ்யத்தில் எருசலேம் தேவாலய பரிசுத்த பாத்திரங்களை எடுத்து, அதில் பெல்ஷாத்சார் ராஜாவும், அவனுடைய மனைவியும், அவனுடைய வைப்பாட்டிகளும் மது ஊற்றிக் குடித்தார்கள். யூதர்களின் மத நம்பிக்கையை இழிவுபடுத்தினார்கள். பாபிலோன் சாம்ராஜ்யத்தில் கூட யூதர்கள் துன்புறுத்தப்பட்டார்கள், கொல்லப்பட்டார்கள். உயிருக்குப் பயந்து பிற தேசங்களில் அகதிகளாகப் போனார்கள்.

மூன்றாவதாக மேதிய பெர்சிய சாம்ராஜ்யம். மேதியர்களும், பெர்சியர்களும் இணைந்து கூட்டாட்சி செய்தார்கள். பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் மூலம் தோவாலயம் கட்டப்பட அனுமதி அளிக்கப்பட்டது. கோரேஸ்க்கு பிறகு வந்த மன்னர்கள், யூதர்களின் எதிரிகள் கூறிய பேச்சைக் கேட்டு, தேவாலய கட்டுமான பணிக்குத் தடை விதித்தார்கள். பலவித இன்னலுக்குப் பிறகு தேவாலயம் கட்டி முடிக்கப்பட்டது.

நான்காவதாக, கிரேக்க சாம்ராஜ்யம். அலெக்ஸாண்டர் மகாராஜா, உலகின் 75 சதவீத நாடுகளைப் பிடித்தார். அவருக்கு பின், அவருடைய நான்கு தளபதிகளின் கீழ் தேசம் நான்காகப் பிரிக்கப்பட்டது. அந்தியோகஸ் எஃபிபானஸ் என்ற ராஜா, கிரேக்க கலாச்சாரத்தை எருசலேமில் பரப்ப தீவிரமாக இருந்தார். யூத மக்களை, ஓய்வுநாள் கலாச்சாரத்தை கைவிட சொல்லி துன்புறுத்தினார். ஓய்வுநாளில், யூதர்களை வேலை செய்ய சொல்லிக் கட்டாயப்படுத்தினார். யூத குழந்தைகளுக்கு விருத்தசேதனம் செய்தால், அந்தக் குழந்தையைக் கொன்றார். விருத்தசேதனத்துக்கு தடை கொண்டு வந்தார். எருசலேம் தேவாலயத்தில், கிரேக்க தெய்வமாகிய சீயஸ் சிலையை நிறுவி, ஒவ்வொரு யூதனையும் பணிந்து கொள்ளச் சொல்லி கட்டாயப்படுத்தினான். பணியாத யூதர்களைக் கொன்று குவித்தான். தன்னை எதிர்த்த யூதர்களை, ஓய்வுநாளில் போர் தொடுத்து, கொன்று குவித்தான். பழைய ஏற்பாட்டு யூதர்களைப் பொறுத்தவரை, ஓய்வுநாளில் போர் செய்யக்கூடாது. தேவாலய பலிபீடத்தின் மீது, அசுத்த மிருகமான பன்றியை, தான் பலியிட்டது மட்டுமல்லாது, யூதர்களையும் பலியிடச் சொல்லி கட்டாயப்படுத்தினான். மக்கபேயர் எழும்பி சுத்திகரிப்பின் நாட்கள் நிறைவேற்றி, வெற்றி பெறும் வரை யூதர்கள் மகா தீங்குக்கு உள்ளானார்கள்.

ஐந்தாவது ரோம சாம்ராஜ்யத்தில், யூதர்கள் அடைந்த துயர் சொல்ல முடியாதது. இயேசுவை சிலுவையில் அறைய ஒப்புக்கொடுத்தவர்கள் யூதர், சிலுவையில்அறைந்தவர்கள் ரோமர். அவருடைய சீஷர் ஒவ்வொருவரும் எப்படி மரித்தார்கள் என்று அறிந்தாலே, ரோமர்களின் கொடுங்கோல் ஆட்சியை அறியலாம். எருசலேம் என்ற பெயர், இஸ்ரேல் என்ற பெயர் வரலாற்றில் இருக்கக்கூடாது என்று, இஸ்ரேலுக்கு பெயர் மாற்றம் செய்து,‌ஒரு இஸ்ரவேலன் கூட இல்லாத அளவுக்கு அடித்து‌ துரத்தியவர்கள் ரோமர். புதிதாக முளைத்த கிறிஸ்தவ மதத்தையும் எதிர்த்து, கிறிஸ்தவர்களுக்கும் எதிராக வந்தவர்கள் ரோமர்.

இவ்வாறு யூதர்கள் ஒவ்வொரு ராஜ்யத்திலும் அடைந்த துயரங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

அதன் பின்னர் ஆங்கிலேய ஆட்சி, அதைத் தொடர்ந்து அமெரிக்கா ஆட்சி. அடுத்ததாக European Union என்று எதிர்பார்க்கிறார்கள். கடைசியாக வரும் அந்தி கிறிஸ்து ஒருவேளை அந்த EU ஆட்சியில் இருந்தே வரலாம். வரும் காரியங்கள் ஆண்டவரே அறிவார். அந்தி கிறிஸ்துவின் ஆட்சியில், கிறிஸ்தவர்கள் துன்பப்பட்டாலும், யூதர்களே அதிகமாக பாடு அனுபவிக்க போகிறவர்கள். ஏனெனில் கிறிஸ்தவர்கள் இரகசிய வருகையில் எடுத்துக்கொள்ளப் படுவார்கள். இயேசுவை ஏற்றுக்கொள்ளாத யூதர்களே அந்த நாட்களில் பாடனுபவிப்பார்கள்.

வேதாகம தரிசனங்கள்

இதுவரையில் வேதத்தில் பல பகுதிகளைப் படித்திருப்போம். இப்போது வரலாறு முழுவதையும் நாம் ஓரளவுக்கு அறிந்து கொண்டதால், இனி வேதத்தை படிக்கும்போது ஒரு தெளிவு கிடைக்கும். வேதாகமத்தில் கடைசி நாட்களில் நடக்கப்போகிற நிகழ்வுகளைக் குறித்து அநேக தரிசனங்கள் கூறப்பட்டிருக்கிறது. அவையெல்லாம் தனித்தனியாக படிக்க வேண்டியவை. மிகச் சுருக்கமாக அந்த தரிசனங்கள் எப்படி நிறைவேறின என்பதை வரும் பதிவுகளில் பார்க்க இருக்கிறோம்.

1. தானியேல் 2ம் அதிகாரம்

2. தானியேல் 7ம் அதிகாரம்

3. தானியேல் 9ம் அதிகாரம்

4. வெளிப்படுத்தின விசேஷம் 13ம் அதிகாரம்

5. வெளிப்படுத்தின விசேஷம் 17ம் அதிகாரம்

வரும் பதிவுகளில் தொடர்ச்சியாக பார்க்கலாம்.

Similar Posts

  • |

    Day 236 (24-08-2025)

    Scripture Portion: Jeremiah 51-52 எரேமியா 51 1கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் பாபிலோனுக்கு விரோதமாகவும், எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்களின் மத்தியில் குடியிருந்தவர்களுக்கு விரோதமாகவும் அழிக்கும் காற்றை எழும்பப்பண்ணி, 2தூற்றுவாரைப் பாபிலோனுக்கு அனுப்புவேன்; அவர்கள் அதைத்தூற்றி, வெறுமையாக்கிப்போடுவார்கள்; ஆபத்து நாளிலே அதற்கு விரோதமாய்ச் சூழ்ந்து கொண்டிருப்பார்கள். 3வில்லை நாணேற்றுகிறவனுக்கு விரோதமாகவும், தன் கவசத்தில் பெருமைபாராட்டுகிறவனுக்கு விரோதமாகவும், வில்வீரன் தன் வில்லை நாணேற்றக்கடவன்; அதின் வாலிபரைத் தப்பவிடாமல் அதின் சேனையை எல்லாம் சங்காரம்பண்ணுங்கள். 4குத்திப்போடப்பட்டவர்கள் கல்தேயரின் தேசத்திலும், கொலை…

  • |

    Day 161 (10-06-2025)

    Scripture Portion: Proverbs 22-24 நீதிமொழிகள் 22 1திரளான ஐசுவரியத்தைப்பார்க்கிலும் நற்கீர்த்தியே தெரிந்து கொள்ளப்படத்தக்கது; பொன் வெள்ளியைப் பார்க்கிலும் தயையே நலம். 2ஐசுவரியவானும் தரித்திரனும் ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள்; அவர்கள் அனைவரையும் உண்டாக்கினவர் கர்த்தர். 3விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்; பேதைகள் நெடுகப்போய் தண்டிக்கப்படுகிறார்கள். 4தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம். 5மாறுபாடுள்ளவனுடைய வழியிலே முள்ளுகளும் கண்ணிகளுமுண்டு; தன் ஆத்துமாவைக் காக்கிறவன் அவைகளுக்குத் தூரமாய் விலகிப்போவான். 6பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை…

  • |

    Day 333 (29-11-2025)

    Scripture Portion: 1 Corinthians 1-4 1 கொரிந்தியர் 1 1தேவனுடைய சித்தத்தினாலே இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்பட்டவனாகிய பவுலும், சகோதரனாகிய சொஸ்தெனேயும், 2கொரிந்துவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களாயுமிருக்கிற தேவனுடைய சபைக்கும், எங்களுக்கும் தங்களுக்கும் ஆண்டவராயிருக்கிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தை எங்கும் தொழுதுகொள்ளுகிற அனைவருக்கும் எழுதுகிறதாவது: 3நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. 4கிறிஸ்துவைப்பற்றிய சாட்சி உங்களுக்குள்ளே ஸ்திரப்படுத்தப்பட்டபடியே, 5நீங்கள் இயேசுகிறிஸ்துவுக்குள்ளாய் எல்லா உபதேசத்திலும் எல்லா அறிவிலும், மற்றெல்லாவற்றிலும், சம்பூரணமுள்ளவர்களாக்கப்பட்டிருக்கிறபடியால், 6அவர் மூலமாய் உங்களுக்கு…

  • |

    Day 20 (20-01-2025)

    Scripture Portion: Genesis 25-26 ஆதியாகமம் 25 1ஆபிரகாம் கேத்தூராள் என்னும் பேர்கொண்ட ஒரு ஸ்திரீயையும் விவாகம்பண்ணியிருந்தான். 2அவள் அவனுக்குச் சிம்ரானையும், யக்‌ஷானையும், மேதானையும், மீதியானையும், இஸ்பாக்கையும், சூவாகையும் பெற்றாள். 3யக்‌ஷான் சேபாவையும், தேதானையும் பெற்றான்; தேதானுடைய குமாரர் அசூரீம், லெத்தூசீம், லெயூமீம் என்பவர்கள். 4மீதியானுடைய குமாரர் ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா என்பவர்கள்; இவர்கள் எல்லாரும் கேத்தூராளின் பிள்ளைகள். 5ஆபிரகாம் தனக்கு உண்டான யாவையும் ஈசாக்குக்குக் கொடுத்தான். 6ஆபிரகாமுக்கு இருந்த மறுமனையாட்டிகளின் பிள்ளைகளுக்கோ ஆபிரகாம்…

  • |

    வேதாகம பெண்கள்- 4 (யோவன்னாள்)

    Joanna/ Johannah – யோவன்னாள் வேத பகுதி: இரண்டே வசனங்களில் வருபவர் இந்த யோவன்னாள். ஆனால், இவருடைய பங்கு மிக முக்கியமானது. கதை பின்புலம்: இயேசு வாழ்ந்த நாட்களில் அவருடன் ஊழியம் செய்த பெண்களின் பெயரில் இந்த யோவன்னாளின் பெயரும் வருகிறது. எனவே, இயேசுவை கண்குளிர பார்த்து, அவருடன் பேசும் அனுபவம் பெற்றவர் இவர். “தங்கள் ஆஸ்திகளால் அவருக்கு ஊழியம் செய்தவர்கள்” என்ற listல் இவர் பெயரும் உள்ளதால், மனமுவந்து கொடுத்து, ஊழியத்தை தாங்கிய ஒரு பெண்…

  • |

    Day 358 (24-12-2025)

    Scripture Portion: 2 Timothy 1-4  2 தீமோத்தேயு 1 1கிறிஸ்து இயேசுவினால் உண்டாயிருக்கிற ஜீவனைப்பற்றிய வாக்குத்தத்தத்தின்படி, தேவனுடைய சித்தத்தினாலே, இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாயிருக்கிற பவுல், 2பிரியமுள்ள குமாரனாகிய தீமோத்தேயுவுக்கு எழுதுகிறதாவது: பிதாவாகிய தேவனாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினாலும் கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக. 3நான் இரவும் பகலும் இடைவிடாமல் என் ஜெபங்களில் உன்னை நினைத்து, உன் கண்ணீரை ஞாபகம்பண்ணி, சந்தோஷத்தால் நிறையப்படும்படிக்கு உன்னைக் காண வாஞ்சையாயிருந்து, 4உன்னிலுள்ள மாயமற்ற விசுவாசத்தை நினைவுகூருகிறதினால், என் முன்னோர்கள் முதற்கொண்டு சுத்தமனச்சாட்சியோடே ஆராதித்துவரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *