|

பண்டிகைகள்–12 (எக்காள பண்டிகை part 3)

இஸ்ரவேலரின் கொண்டாட்டம்

வேதத்தின் ஐந்தாவது பண்டிகை எக்காள பண்டிகை. அதுவே இஸ்ரவேலரின் வருட பிறப்பாகவும் உள்ளது. ஏழாம் மாதம் முதல் தேதியில் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆனால் இன்றைய இஸ்ரவேலர் இப்பண்டிகையை இரண்டு நாட்கள் கொண்டாடுகின்றனர். நாம் ஏற்கனவே பார்த்தபடி, இஸ்ரவேலரின் நாள் நிலா வரும் போது ஆரம்பிக்கும். பொதுவாக, இஸ்ரேலரின் புது வருட பண்டிகையான Rosh Hashannah, எல்லா வருடமும் அமாவாசை நாளில் தான் வரும். யூதர்களுக்கு, அமாவாசை என்பது, new moon day, அதாவது புதிய நிலாவின் ஒரு சிறிய பகுதி தெரிய வேண்டும். இந்த நாளில்தான் சிறிய வெள்ளி தெரியும் என்பதைக் கணிக்க முடியாததால், 2 நாட்கள் இப்பண்டிகையை கொண்டாடுகிறார்கள். New Beginning என்பதால், நிலாவும் புதிதாக ஆரம்பிக்க வேண்டும் போல. பொதுவாக இந்துக்கள் தான், நிலாவில் பிறை பார்க்க வேண்டும் என்று காத்திருப்பதை பார்த்திருப்போம், முஸ்லீம்கள் ரம்ஜான் கொண்டாட பிறை தெரிய வேண்டும் என்று கூறுவதை கேட்டிருப்போம். ஆனால் யூதர்கள் கூட, பிறையை கணக்கில் வைத்து பண்டிகை கொண்டாடுகிறார்கள் என்பது புதிது தான்.

இப்படி பல காரியங்களை கூறுவார்கள். ஏன் அப்படி சொல்கிறார்கள்?

தேவன் ஆதாமை தன் கைகளால் படைத்து விட்டார். ஆனால் மனிதன் பிணம்போல  தான் இருக்கிறான். எப்பொழுது ஆதாமுக்கு உயிர் வந்தது?

தேவன் ஊதியதால் தான் மனிதனுக்கு உயிர் வந்தது. பொம்மை போல மனிதன் ஜீவனற்று கிடந்தான், ஆண்டவர் ஊதினார், உயிர் வந்தது. ஊதியதால் ஒரு புதிய ஆரம்பம்.

எசேக்கியேல் 37ல், உலர்ந்த எலும்புகளைப் பார்த்து தீர்க்கதரிசனம் உரைக்கச் சொல்வார். நரம்பும் மாம்சமும் உருவாகி விட்டது. ஆனால் ஆவி இல்லை.

மாம்சம் உருவாகி விட்டாலும், உயிரடைய வேண்டுமானால், ஊதவேண்டும் என்று தேவன் சொன்னார். ஊதினால்தான், புதிய ஆரம்பம் உருவானது. எனவே ஊதும்போது, ஏதோ ஒரு ஆவிக்குரிய மாற்றம் உருவாகும் என்று இஸ்ரவேலர் நினைக்கிறார்கள். ஊதும்போது, பரலோகம் அசையும், உடனே பதில் வரும் என்று நினைக்கிறார்கள்.

இஸ்ரவேலர் எப்படி கொண்டாடுகிறார்கள்?

  1. Teshuvah கொண்டாடுவார்கள்

முந்தின பதிவில் பார்த்தபடி, 40 நாட்கள் Teshuvah மனந்திரும்புதலின் நாட்கள் என்று கொண்டாடுவார்கள். தங்களை தாங்களே ஆராயும் நேரமாக இந்த நாட்களை பயன்படுத்திக் கொள்வார்கள்.

  • எக்காளம் ஊதுவார்கள்

தேவன் கொண்டாடச் சொல்லிய எக்காள பண்டிகை என்பதாலும், Teshuvah நாட்களில் தினமும் எக்காளம் ஊதும் வழக்கம் இருப்பதாலும், எக்காளம் ஊதுவார்கள்.

  • சபை கூடும் நாள்

அருகிலுள்ள சபையில் சென்று வேதம் தியானிப்பார்கள். செல்ல வாய்ப்பு இல்லை என்றால், குடும்பமாக, நண்பர்களாக இணைந்து, Local Bible Study செய்வார்கள். ஆபிரகாம் ஈசாக்கை பலியிட சென்றபோது, ஆட்டுக்குட்டியை பலியிட்டவர், மீதமிருந்த ஆட்டின் கொம்பை எடுத்து, வாயில் வைத்து ஊதி ஆண்டவருக்கு நன்றி சொன்னதாகவும், அதிலிருந்து தான் எக்காளம் ஊதும் கலாச்சாரம் வந்ததாகவும் யூதர்கள் கருதுகிறார்கள். எனவே இப்பண்டிகையில், ஆபிரகாம் ஈசாக்கை பலியிடச் சென்ற நிகழ்வைப் பற்றி தியானிப்பர்.

  • Teshilch Ceremony

Rosh Hashannah அன்று யூதர்கள், சிறு bread துண்டுகளை கையில் எடுத்துக் கொண்டு, அருகிலிருக்கும் நீர்தேக்கங்களுக்கு சென்று, சபையாக அந்த துண்டுகளை உள்ளே எறிந்து விடுவர்.

தேவன் பாவங்களை மன்னித்து விட்டார் என்பதற்கு அடையாளமாகவும், சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டுவிட்டார் என்பதற்கு அடையாளமாகவும், பிரெட் துண்டுகளை தண்ணீரில் வீசுவர். இதன் பின்னர், தங்களுக்கு புதிய ஆரம்பம் வந்து விட்டது என்று விசுவாசித்து, New Year Resolution புது வருட தீர்மானங்கள் எடுப்பார்கள்.

  • விருந்து

ஆப்பிளை தேனில் முக்கி சாப்பிடுவதுதான், Rosh Hashannah வின் சிறப்பு. வருகிற புத்தாண்டு இனிமையாக இருக்கும் என்கிற நம்பிக்கையில் சாப்பிடுவர். Shana Tovah என்று ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவிப்பார்கள். அதற்கு Have a Good Year என்று அர்த்தம்.

Similar Posts

  • இஸ்ரேல்-23 (தாவீது – 5 (இராட்சதர்கள்)

    தாவீது –5 தாவீது சுதந்தரித்த எல்லை – இராட்சதர்கள் யார்? இஸ்ரவேல் என்ற நாடு, ஆபிரகாம் என்கிற ஒரு மனிதனின், குடும்பம் என்பது நமக்கு தெரியும். தேவன் ஆபிரகாமுக்கு 3 வித ஆசீர்வாதங்கள் கொடுத்தார் என்பது வேதத்தில் உள்ளது. 1. இந்த தேசத்தை உனக்கு கொடுத்தேன் என்று ஒரு நிலத்தைக் கொடுத்தார். (Land) 2. உன் சந்ததி ஒரு நாடாக உருவாகுவார்கள் என்று தேச ஜனங்கள் வாக்களித்தார். (People) 3. உனக்கும் உனக்கு பின் வரும் சந்ததிக்கும் நித்திய உடன்படிக்கை ஏற்படுத்துவேன்…

  • |

    Day 264 (21-09-2025)

    Scripture Portion: Zechariah 1-7 சகரியா 1 1தரியு அரசாண்ட இரண்டாம் வருஷம் எட்டாம் மாதத்திலே இத்தோவின் மகனான பெரகியாவின் குமாரனாகிய சகரியாவுக்கு உண்டான கர்த்தருடைய வார்த்தை: 2கர்த்தர் உங்கள் பிதாக்களின்மேல் கடுங்கோபமாயிருந்தார். 3ஆகையால் நீ அவர்களை நோக்கி: சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: என்னிடத்தில் திரும்புங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; அப்பொழுது நான் உங்களிடத்துக்குத் திரும்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 4உங்கள் பிதாக்களைப் போலிராதேயுங்கள்; முந்தின தீர்க்கதரிசிகள் அவர்களை நோக்கி: உங்கள் பொல்லாத வழிகளையும், உங்கள் பொல்லாத கிரியைகளையும் விட்டுத் திரும்புங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று…

  • |

    Day 101 (11-04-2025)

    Scripture Portion: 1 Samuel 13-14 1 சாமுவேல் 13 1சவுல் ராஜ்யபாரம்பண்ணி, ஒரு வருஷமாயிற்று; அவன் இஸ்ரவேலை இரண்டாம் வருஷம் அரசாண்டபோது, 2இஸ்ரவேலில் மூவாயிரம்பேரைத் தனக்குத் தெரிந்துகொண்டான்; அவர்களில் இரண்டாயிரம்பேர் சவுலோடேகூட மிக்மாசிலும் பெத்தேல் மலையிலும், ஆயிரம்பேர் யோனத்தானோடேகூடப் பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவிலும் இருந்தார்கள்; மற்ற ஜனங்களை அவரவர் கூடாரங்களுக்கு அனுப்பிவிட்டான். 3யோனத்தான் கேபாவிலே தாணையம் இருந்த பெலிஸ்தரை முறிய அடித்தான்; பெலிஸ்தர் அதைக் கேள்விப்பட்டார்கள்; ஆகையினால் இதை எபிரெயர் கேட்கக்கடவர்கள் என்று சவுல் தேசமெங்கும்…

  • |

    Day 336 (02-12-2025)

    Scripture Portion: 1 Corinthians 12-14 1 கொரிந்தியர் 12 1அன்றியும், சகோதரரே, ஆவிக்குரிய வரங்களைக்குறித்து நீங்கள் அறியாதிருக்க எனக்கு மனதில்லை. 2நீங்கள் அஞ்ஞானிகளாயிருந்தபோது ஏவப்பட்டபடியே, ஊமையான விக்கிரகங்களிடத்தில் மனதைச் செலுத்தினீர்களென்று உங்களுக்குத் தெரியுமே. 3ஆதலால், தேவனுடைய ஆவியினாலே பேசுகிற எவனும் இயேசுவைச் சபிக்கப்பட்டவனென்று சொல்லமாட்டானென்றும், பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக்கூடாதென்றும், உங்களுக்குத் தெரிவிக்கிறேன். 4வரங்களில் வித்தியாசங்கள் உண்டு, ஆவியானவர் ஒருவரே. 5ஊழியங்களிலேயும் வித்தியாசங்கள் உண்டு, கர்த்தர் ஒருவரே. 6கிரியைகளிலேயும் வித்தியாசங்கள் உண்டு, எல்லாருக்குள்ளும் எல்லாவற்றையும் நடப்பிக்கிற…

  • |

    Day 206 (25-07-2025)

    Scripture Portion: Isaiah 37-39, Psalm 76 ஏசாயா 37 1ராஜாவாகிய எசேக்கியா அதைக்கேட்டபோது, தன் வஸ்திரங்களைக் கிழித்து, இரட்டு உடுத்திக்கொண்டு, கர்த்தருடைய ஆலயத்தில் பிரவேசித்து, 2அரமனை விசாரிப்புக்காரனாகிய எலியாக்கீமையும், சம்பிரதியாகிய செப்னாவையும், ஆசாரியர்களின் மூப்பரையும், ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசியினிடத்திற்கு இரட்டு உடுத்தவர்களாக அனுப்பினான். 3இவர்கள் அவனை நோக்கி: இந்த நாள் நெருக்கமும், கண்டிதமும், தூஷணமும் அநுபவிக்கிற நாள்; பிள்ளைப்பேறு நோக்கியிருக்கிறது; பெறவோ பெலன் இல்லை. 4ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படி, அசீரியா ராஜாவாகிய தன் ஆண்டவனால் அனுப்பப்பட்ட…

  • |

    Day 242 (30-08-2025)

    Scripture Portion: Ezekiel 13-15 எசேக்கியேல் 13 1கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 2மனுபுத்திரனே, தீர்க்கதரிசனம் சொல்லுகிற இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகளுக்கு விரோதமாக நீ தீர்க்கதரிசனம் உரைத்து, தங்கள் இருதயத்தில் இருக்கிறதையே எடுத்துத் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவர்களோடே நீ சொல்ல வேண்டியது என்னவென்றால்: கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள். 3கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: தாங்கள் ஒன்றும் தரிசியாதிருந்தும், தங்களுடைய ஆவியின் ஏவுதலைப் பின்பற்றுகிற மதிகெட்ட தீர்க்கதரிசிகளுக்கு ஐயோ! 4இஸ்ரவேலே, உன் தீர்க்கதரிசிகள் வனாந்தரங்களிலுள்ள நரிகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள், 5நீங்கள் கர்த்தருடைய நாளிலே யுத்தத்தில் நிலைநிற்கும்படிக்கு, திறப்புகளில் ஏறினதுமில்லை; இஸ்ரவேல் வம்சத்தாருக்காகச்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *