|

பண்டிகைகள்–13 (எக்காள பண்டிகை part 4)

எக்காளம்

தமிழ் வேதத்தில் எக்காளம் என்றும் பூரிகைகள் என்றும் தனித்தனி பெயர்கள் இருந்தன. இரண்டும் ஒன்று தானா? என்று தேடிப் படித்தால், இரண்டும் வேறு வேறு என்பதை அறியலாம். எக்காளம் என்பது (shofar) என்றும், பூரிகை என்பது Trumpet என்றும் அறியலாம். ஆட்டின் கொம்பில் எக்காளம் தயாரிப்பது Shofar அதாவது எக்காளம் என்றும், வெள்ளியினால் பூரிகை செய்வது, Trumpet என்றும் அழைக்கப்படுகிறது.

நாள் தொடங்கும்போது, அதாவது இரவில் ஆரம்பிக்கும் இந்த பண்டிகையில், அடுத்த நாள் காலையில் தொடர்ச்சியாக 100 முறை எக்காளம் ஊதுவார்கள். நாம் ஏற்கனவே பார்த்தபடி, இந்த சீசனில் மாதுளை முக்கியமானது. இந்த பண்டிகையில் ஆப்பிளை தேனில் முக்கி சாப்பிட்டாலும், மாதுளை யூதர்களுக்கு முக்கியமானது. இது மாதுளையின் சீசன் என்பதாலும், மாதுளை யூத கலாச்சாரத்தில் முக்கியமானது என்பதாலும், மாதுளையை சாப்பிடுவர். மாதுளை ஏன் முக்கியமானது?

முதலாவது, தேவன் இஸ்ரவேலருக்கு கொடுத்த தேசமே, மாதளம்செடி உள்ள தேசம் என்று கூறியிருக்கிறார். இரண்டாவதாக, ஆசாரியருக்கு உடுத்த வேண்டிய உடையில், அடிப்பக்கத்தில், மணியும், மாதளம்பழமும் தொங்க வேண்டும் என்று தேவன் கூறினார். அதுவும் போக, யூதர்களின் நம்பிக்கையின் படி, மாதளம் பழத்தில், 613 விதைகள் இருக்குமாம். தேவன் இஸ்ரவேலருக்கு, 10 கற்பனைகள் கொடுத்தது போல, நியாயப்பிரமாணம் 613 கொடுத்தார். எனவே மாதுளை முக்கியமானது. ஆனால் உண்மையில் மாதுளையில், 200 முதல் 1200 வரை விதைகள் இருக்கும். 613 என்பது அறிவியல் பூர்வ உண்மை கிடையாது. ஆனால், யூதர்களின் பாரம்பரிய நம்பிக்கை, 613 விதைகள் தான் இருக்கும் என்பது. 

மாதுளையை சாப்பிடுவதற்கு முன்னர், இந்த ஜெபத்தை சொல்வார்களாம். ஒரு நல்ல பாரம்பரிய யூதன், ஒரு நாளைக்கு 70 முறை ஜெபம் செய்வான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஒருவேளை, இப்படி அனேக ஜெபங்கள் மனப்பாடமாக சிறுவயதிலிருந்தே சொல்வதால், 70 முறை என்பது அவருக்கு எளிதாக இருக்கும் போல.

கிதியோன்

கிதியோனை பராக்கிரமசாலி என்று தேவன் கூறினாலும், தேவனுக்கே 2 முறை Test வைத்து, சோதித்த பின்னர் தான், யுத்தத்துக்கு தயாரானார் கிதியோன். அப்படிப்பட்ட கிதியோனிடம், கையில் பானை, வழிக்கு Snacks, ஒரு எக்காளம் மட்டும் போதும், யுத்தத்துக்கு போ என்று தேவன் கூறினால், உடனே நம்பி போய்விடுவாரா? பின் எப்படி கிதியோன் போனார்? தேவன் மீது நம்பிக்கை என்றே வைத்துக் கொள்ளலாம். எக்காளத்தை ஏன் ஊதச் சொன்னார்? இருப்பதே 300 பேர். அதையும் 100, 100ஆக பிரித்து, நாங்கள் 100 பேர் எக்காளம் ஊதும்போது, நீங்களும் ஊத வேண்டும் என்று கூறினார்.

ஒரு இஸ்ரவேலன் இவ்வளவு விசுவாசமாயிருக்கிறான் என்றால், அதன் பின்னால் ஒரு வாக்குத்தத்தம் உள்ளது என்று அர்த்தம். அப்படி என்ன வார்த்தையை நம்பி போருக்கு எக்காளத்துடன் கிதியோன் போயிருப்பார்?

தேவன் ஏற்கனவே வாக்கு கொடுத்திருந்தார், நீங்கள் எக்காளம் ஊதினால், நான் உங்களை நினைவு கூறுவேன். உங்கள் பகைஞரிலிருந்து விடுதலை தருவேன் என்று. என்வே தான் கிதியோன், தேவனுடைய வார்த்தையை நம்பி போனார். வெற்றியும் பெற்றார்.

கிதியோன் ஏதோ ஒரு நாளில் எக்காளம் ஊதும்போது, மிகப்பெரிய வெற்றியை பெற்றார். இந்த எக்காள பண்டிகை என்பது, எக்காளம் ஊதி, சத்தமிட்டு சந்தோசமாயிருங்கள் என்று தேவன் கூறியிருக்கிறார். இது தேவன் நியமித்த நாள். அப்படியானால் இந்த நாளில் எக்காளம் ஊதும்போது, நாம் தேவனுடைய சமூகத்தில் நினைவுகூறப்படுவோம் என்பது உண்மைதானே!

எரிகோ கோட்டை

எரிகோ கோட்டையை மக்கள் பிடிக்க முக்கிய காரணம், ஆசாரியர் எக்காளம் ஊதும்போது, ஜனங்கள் சத்தமாய் ஆர்ப்பரித்தார்கள். எக்காளம் என்பது, தேவ சமூகத்தில் நினவு கூற பயன்படும் ஒரு Powerful Weapon. கிதியோனுடன் இருந்து மக்கள், எரிகோ கோட்டையின் வெளியே இருந்து மக்கள், மகா சத்தமாய் ஆர்ப்பரித்தார்கள். நாம் எல்லா இடத்திலும் அமைதியாக காட்டிக்கொள்ள அவசியம் இல்லை. தேவனை புகழ எந்த இடத்தில் சந்தர்ப்பம் கிடைக்கிறதோ, அங்கே சத்தமாய் தேவனை மகிமைப்படுத்தலாம். பெரிய வெற்றியும் பெறலாம்.

இதுவரை நான்கு பண்டிகைகள் படித்தோம். ஒவ்வொன்றும் இயேசுவின் காலத்தில் துல்லியமாக நிறைவேறியது. பஸ்கா பண்டிகையில் இயேசு பஸ்கா ஆடாக பலியானார். புளிப்பில்லாத அப்ப பண்டிகையில், இயேசு பாவமில்லாதவராக அடக்கம் பண்ணப்பட்டார். முதற்கனி பண்டிகையில், இயேசு உயித்தெழுதலின் முதற்பலனானார். பெந்தெகோஸ்தே பண்டிகையில், பரிசுத்த ஆவியானவர் அருளப்பட்டார். இப்போது ஐந்தாவது பண்டிகையான, எக்காள பண்டிகை பார்த்தோம். ஆனால், இப்பண்டிகையின் காலத்தில் தான் நாம் இருக்கிறோம். இன்னும் இந்த தரிசனங்கள் நிறைவேறவில்லை. இயேசு கடைசி எக்காளம் தொனிக்கும்போது இந்த உலகுக்கு வருவதை, அதாவது இயேசுவின் இரண்டாம் வருகையை இப்பண்டிகை குறிக்கிறது. இயேசு சீக்கிரமாய் வரப்போகிறார். நாமும் ஆயத்தமாகலாம், பிறரையும் ஆயத்தப்படுத்துவோம். ஆறாவது பண்டிகை பற்றி வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

Similar Posts

  • |

    Day 324 (20-11-2025)

    Scripture Portion: Acts 11-12 அப்போஸ்தலர் 11 1புறஜாதியாரும் தேவவசனத்தை ஏற்றுக்கொண்டார்களென்று யூதேயாவிலிருக்கிற அப்போஸ்தலரும் சகோதரரும் கேள்விப்பட்டார்கள். 2பேதுரு எருசலேமுக்குத் திரும்பி வந்தபோது, விருத்தசேதனமுள்ளவர்கள் அவனை நோக்கி: 3விருத்தசேதனமில்லாத மனுஷரிடத்தில் நீர் போய், அவர்களோடே போஜனம்பண்ணினீர் என்று, அவனோடே வாக்குவாதம்பண்ணினார்கள். 4அதற்குப் பேதுரு காரியத்தை முதலிலிருந்து வரிசையாய் அவர்களுக்கு விவரிக்கத் தொடங்கி: 5நான் யோப்பா பட்டணத்தில் ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தபோது ஞானதிருஷ்டியடைந்து, ஒரு தரிசனத்தைக் கண்டேன்; அதென்னவென்றால், நாலு முனைகளும் கட்டப்பட்ட பெரிய துப்பட்டியைப்போல ஒரு கூடு வானத்திலிருந்து என்னிடத்தில்…

  • |

    Day 317 (13-11-2025)

    Scripture Portion: Luke 23, John 18-19 லூக்கா 23 1அவர்களுடைய கூட்டத்தாரெல்லாரும் எழுந்திருந்து, அவரைப் பிலாத்துவினிடத்திற்குக் கொண்டுபோய்: 2இவன் தன்னைக் கிறிஸ்து என்னப்பட்ட ராஜாவென்றும், ராயருக்கு வரிகொடுக்க வேண்டுவதில்லையென்றும் சொல்லி, ஜனங்களைக் கலகப்படுத்தக் கண்டோம் என்று அவர்மேல் குற்றஞ்சாட்டத் தொடங்கினார்கள். 3பிலாத்து அவரை நோக்கி: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். அவர் அவனுக்குப் பிரதியுத்தரமாக; நீர் சொல்லுகிறபடிதான் என்றார். 4அப்பொழுது பிலாத்து பிரதான ஆசாரியர்களையும் ஜனங்களையும் நோக்கி: இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும்…

  • |

    Day 78 (19-03-2025)

    Scripture Portion: Deuteronomy 24-27 உபாகமம் 24 1ஒருவன் ஒரு ஸ்திரீயை விவாகம்பண்ணிக்கொண்டபின்பு, அவளிடத்தில் இலச்சையான காரியத்தைக் கண்டு, அவள்மேல் பிரியமற்றவனானால், அவன் தள்ளுதலின் சீட்டை எழுதி, அவள் கையிலே கொடுத்து, அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பிவிடலாம். 2அவள் அவனுடைய வீட்டைவிட்டுப் போனபின்பு, வேறொருவனுக்கு மனைவியாகலாம். 3அந்த இரண்டாம் புருஷனும் அவளை வெறுத்து, தள்ளுதலின் சீட்டை எழுதி, அவள் கையிலே கொடுத்து, அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பிவிட்டாலும், அவளை விவாகம்பண்ணின அந்த இரண்டாம் புருஷன் இறந்துபோனாலும், 4அவள்…

  • |

    Day 62 (03-03-2025)

    Scripture Portion: Numbers 18-20 எண்ணாகமம் 18 1பின்பு கர்த்தர் ஆரோனை நோக்கி: நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் உன் தகப்பன் வம்சத்தாரும் பரிசுத்த ஸ்தலத்தைப்பற்றிய அக்கிரமத்தைச் சுமக்கவேண்டும்; நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் உங்கள் ஆசாரிய ஊழியத்தைப்பற்றிய அக்கிரமத்தைச் சுமக்க வேண்டும். 2உன் தகப்பனாகிய லேவியின் கோத்திரத்தாரான உன் சகோதரரையும் உன்னோடே கூடியிருக்கவும் உன்னிடத்திலே சேவிக்கவும் அவர்களைச் சேர்த்துக்கொள்; நீயும் உன் குமாரருமோ சாட்சியின் கூடாரத்துக்குமுன் ஊழியம் செய்யக்கடவீர்கள். 3அவர்கள் உன் காவலையும் கூடாரம் அனைத்தின் காவலையும் காக்கக்கடவர்கள்;…

  • |

    Day 73 (14-03-2025)

    Scripture Portion: Deuteronomy 8-10 உபாகமம் 8 1நீங்கள் பிழைத்துப் பெருகி, கர்த்தர் உங்கள் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்திலே பிரவேசித்து, அதைச் சுதந்தரிக்கும்படி நான் இன்று உங்களுக்கு விதிக்கிற எல்லாக் கட்டளைகளின்படியும் செய்யச் சாவதானமாயிருப்பீர்களாக. 2உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிறுமைப்படுத்தும்படிக்கும், தம்முடைய கட்டளைகளை நீ கைக்கொள்வாயோ கைக்கொள்ளமாட்டாயோ என்று அவர் உன்னைச் சோதித்து, உன் இருதயத்திலுள்ளதை நீ அறியும்படிக்கும், உன்னை இந்த நாற்பது வருஷமளவும் வனாந்தரத்திலே நடத்திவந்த எல்லா வழியையும் நினைப்பாயாக. 3அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி,…

  • |

    Day 60 (01-03-2025)

    எண்ணாகமம் 14 1அப்பொழுது சபையார் எல்லாரும் கூக்குரலிட்டுப் புலம்பினார்கள்; ஜனங்கள் அன்று இராமுழுதும் அழுதுகொண்டிருந்தார்கள். 2இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்தார்கள். சபையார் எல்லாரும் அவர்களை நோக்கி: எகிப்துதேசத்திலே செத்துப்போனோமானால் நலமாயிருக்கும்; இந்த வனாந்தரத்திலே நாங்கள் செத்தாலும் நலம். 3நாங்கள் பட்டயத்தால் மடியும்படிக்கும், எங்கள் பெண்ஜாதிகளும் பிள்ளைகளும் கொள்ளையாகும்படிக்கும், கர்த்தர் எங்களை இந்த தேசத்துக்குக் கொண்டு வந்தது என்ன? எகிப்துக்குத் திரும்பிப் போகிறதே எங்களுக்கு உத்தமம் அல்லவோ என்றார்கள். 4பின்பு அவர்கள்: நாம் ஒரு தலைவனை ஏற்படுத்திக்கொண்டு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *