|

நன்றியுடன் 21 நாட்கள் Day – 5

Day – 5 (05- டிசம்பர், 2023)

குறைவுகளை நிறைவாக்கினீர் நன்றி

இந்த வருடம் முழுவதும் நம்மை போஷித்தார், ஆதலால் தேவனுக்கு நன்றி சொல்வோம் என்று சபையில் ஊழியர்கள் சொல்லும்போது, அந்த நேரத்தில் கூட, “ஆண்டவரே என் குறையை மாற்றும்” என்று ஜெபிப்பவர்கள் உண்டு. அல்லது, அடுத்த வருடம் இதே ஜெபத்தில் நானும் நன்றி சொல்கிற அளவு உயர வேண்டும் என்று ஜெபிப்பவர்களும் உண்டு. ஆனால் இன்று, நாம் இருக்கிற இந்த நிலைக்கு, நன்றி சொல்ல வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார்.

என்றாவது ஒரு நாள், இன்று சாப்பிடவே வழி இல்லை என்று திகைத்து நின்று இருக்கிறோமா? இல்லையே. கர்த்தர் ஏதேனும் ஒன்றை நமக்கு கொடுத்து போஷித்துக் கொண்டு இருக்கிறார் அல்லவா. நமக்கு கடன் இருக்கலாம், பாரங்கள் இருக்கலாம். அது தேவசித்தம் அல்ல என்றாலும் கர்த்தர் இன்று வரை நம்மை கைவிடவில்லையே. நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.

ஒரு பூகம்பத்தில், எல்லாம் மாறியது. பல கட்டிடங்களுக்கு சொந்தக்காரர், நடுத்தெருவுக்கு வந்தார். எல்லாம் இழந்தார். நமக்கு அப்படி இல்லையே! நம் தேவன் நம்மை ஆசீர்வதிக்க மட்டும்தான் விரும்புகிறார். ஒருவேளை இன்று கஷ்டத்தில் இருந்தால் கூட, நம்மை அவர் போஷித்த விதத்தை எண்ணிப்பார்த்து நன்றி சொல்வது நம் கடமை. ஒவ்வொன்றாக எண்ணிப்பார்த்து, நமக்கு நிறைவை கொடுத்ததற்காக நன்றி சொல்வோம்.

தெரு ஓரத்தில் இருப்பவர்களைப் பார்த்தால், நாம் தங்குவதற்கு, வாடகை வீடு என்றாலும் சிறு வீடு உள்ளதே என்று நன்றி சொல்லலாம். சைக்கிள் கூட இல்லாதவர்கள் இருக்கிறார்கள், நமக்கு சைக்கிள் இருக்கிறது, அல்லது பைக் இருக்கிறது, அல்லது கார் இருக்கிறது. நன்றி சொல்லலாமே. உடுத்த நல்ல ஆடை இருக்கிறது. காலில் போட செருப்பு, ஷூ இருக்கிறது. இன்னும் யோசித்தால் எவ்வளவோ ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் நாம். நம்மிடம் இருப்பதற்காக நன்றி சொல்வோம் இல்லாதவைகளை பற்றிய கவலையை மறப்போம். 

இன்று (04-12-23) புயல் மழையில், எத்தனையோ தேவ பிள்ளைகளின் வீட்டில் தண்ணீர் வந்தது. ஆனால் கர்த்தர் கைவிடவில்லை. ஏதோ ஒரு விதத்தில் அதிசயமாக நடத்தினார். நன்றி சொல்லலாமே. கர்த்தர் கைவிட மாட்டார் என்று விசுவாசிக்கிற தேவபிள்ளைகளுக்கு, சூழ் நிலை சாதகமாக இல்லை என்றாலும், கைவிட மாட்டார்.

இயேசு சிலுவையில் மரித்தது, நம் வியாதி, தரித்திரம், பாவம், சாபம் எல்லாவற்றையும் மாற்றுவதற்கு தான். நாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். இல்லாததை  எண்ணி கவலைப்படுவதை விட, இருப்பதை நினைத்து கர்த்தரை துதிக்கலாமே.

Similar Posts

  • |

    விசுவாச அறிக்கை – நான் நீதிமான்

    நீதிமான் நான் பாவி என்று நினைக்கும் வரை, என்னால் அவரிடம் நெருங்க முடியாது. அவர் எனக்காய் ஜீவனை தந்து, என்னை நீதிமான் ஆக்கிவிட்டார். நான் இப்பொழுது நீதிமான். ஐந்து நிமிடத்திற்கு முன் நான் பாவம் செய்திருந்தாலும், அவர் இரத்தம் இருப்பதால், என் மன்னிப்பை ஏற்றுக்கொண்டு, அவர் என்னை மன்னித்து விட்டார். நான் இப்பொழுதும் நீதிமான் தான். மோசேயின் நியாயப்பிரமாணத்தினாலே, ஒருவன் எவைகளினின்று விடுதலையாகி, நீதிமானாகக்கூடாதிருந்ததோ, விசுவாசிக்கிறவனாகிய நான், அவைகளினின்று, இயேசுவாலே, விடுதலையாகி, நீதிமான் ஆக்கப்பட்டேன். (அப் 13-39)…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 20

    Day – 20 (20- டிசம்பர், 2023) அபிஷேகத்துக்காக நன்றி அப்பா, என் மீதுள்ள உம் அபிஷேகத்துக்காக நன்றி. இந்த 2023ல் எத்தனையோ முறை சோர்ந்து போயிருக்கிறேன், மனம் தளர்ந்து போயிருக்கிறேன், பாவத்தில் விழுந்திருக்கிறேன், வேதத்தை மறந்து ஓடியிருக்கிறேன், உம்மிடம் பேச நேரம் கொடுக்காமல் போயிருக்கிறேன், துணிகரமாக சில காரியங்கள் செய்திருக்கிறேன். உம்மை மறுதலித்திருக்கிறேன், ஊழியர்களை குறை சொல்லி இருக்கிறேன், தேவனுடைய ராஜ்யத்துக்கான வேலையில் ஈடுபடவில்லை, தேவையற்ற வெட்டி கதைகளில் நேரம் செலவழித்தேன், அடுத்தவரை பொறாமையுடன் பார்த்தேன்,…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 11

    Day – 11 (11- டிசம்பர், 2023) நல்ல சபை தந்தீர் நன்றி நாம் இன்று நன்றி சொல்லப்போவது, தேவன் நமக்கு கொடுத்த சபைக்காக. சபை என்பது வெறும் கட்டடம் அல்ல. இயேசுவின் சரீரம். இயேசு தலையாகவும், நாம் அவரது சரீரத்தின் அங்கமாகவும் இருப்பதுதான் சபை. நம் எல்லாருக்கும் ஒரே வேலை இருப்பது இல்லை. நம் உடலில், ஒவ்வொரு உறுப்புகளுக்கும் ஒரு வேலை இருப்பதுபோல, சபையில் ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஒரு வேலை இருக்கும். ஆனால் நம் எல்லாருக்கும்…

  • |

    விசுவாச அறிக்கை (நீதிமன்ற வழக்கு)

    விசுவாச அறிக்கை (நீதிமன்ற வழக்கு) இன்றைக்கு அனேக கிறிஸ்தவர்களின் கவலை நீதிமன்ற வழக்கு. ஒருவர் தவறு செய்திருந்தால் நீதிமன்றம் செல்ல வேண்டும் என்ற காலம் மாறி, தவறு செய்யாதவர்கள் கூட நீதிமன்றம் செல்லும் நிலை வந்துவிட்டது. தவறு செய்யாதவர்கள் இதனால், அதிக கவலைக்கு உள்ளாகி விடுகின்றனர். விரக்திக்கே சென்று விடுகின்றனர். நமது கஷ்டமான நேரத்தில், நம் வாயால் என்ன அறிக்கையிடுகிறோம் என்பதே நம் கிறிஸ்தவ வாழ்க்கை நிலையைக் காட்டுகிறது. மரணமோ, ஜீவனோ, அது நம் நாவில்தான் இருக்கிறது….

  • |

    சுகத்திற்கான விசுவாச அறிக்கைகள்

    நியாயப்பிரமாண காலத்தில், நான் செய்த தவறுக்கு எனக்கு தண்டனை உண்டு. அதனால் எனக்கு வியாதி, தரித்திரம், சாபம் எல்லாம் வந்தது. சரியாகச் சொல்ல வேண்டுமானால், ஆதாம் செய்த தவறினால் உலகத்துக்கே சாபம் வந்தது. அது உண்மையாக இருக்குமானால், அதேபோல பிந்தின ஆதாமாகிய இயேசுவால், உலகத்தின் எல்லா சாபமும், வியாதியும், தரித்திரமும் மாறிவிட்டது. இப்பொழுது நான் கிருபைக்குள்ளாக வந்து விட்டேன். என் பலவீனங்கள் எல்லாம் அவர் சுமந்து தீர்த்து விட்டார். நான் சுமக்க தேவை இல்லை. நான் விடுதலை…

  • |

    விசுவாச அறிக்கை Intro

    விசுவாச அறிக்கை நமது அமைச்சர், திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு, ஏதோ ஒரு பிரச்சனை என்றால், நம்மை போல சாதாரண குடிமக்கள் பயப்படுவது போல அவர் பயப்படுவாரா என்பது சந்தேகமே. ஏனென்றால், அவரது அப்பா, தமிழ் நாட்டின் முதலமைச்சர். ஒரு முதலமைச்சரின் மகன் பயமில்லாமல் வாழ முடியுமானால், ஒரு ராஜாவின் மகன் பயமில்லாமல் வாழ முடியுமென்றால், தேவாதி தேவனின் பிள்ளைகள் நாம் எப்படி வாழ வேண்டும். ஆனால், அப்படிப்பட்ட வாழ்வு வாழ்கிறோமா என்பது சந்தேகமே! அநேக சபைகளில் விசுவாச…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *