|

நன்றியுடன் 21 நாட்கள் Day – 5

Day – 5 (05- டிசம்பர், 2023)

குறைவுகளை நிறைவாக்கினீர் நன்றி

இந்த வருடம் முழுவதும் நம்மை போஷித்தார், ஆதலால் தேவனுக்கு நன்றி சொல்வோம் என்று சபையில் ஊழியர்கள் சொல்லும்போது, அந்த நேரத்தில் கூட, “ஆண்டவரே என் குறையை மாற்றும்” என்று ஜெபிப்பவர்கள் உண்டு. அல்லது, அடுத்த வருடம் இதே ஜெபத்தில் நானும் நன்றி சொல்கிற அளவு உயர வேண்டும் என்று ஜெபிப்பவர்களும் உண்டு. ஆனால் இன்று, நாம் இருக்கிற இந்த நிலைக்கு, நன்றி சொல்ல வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார்.

என்றாவது ஒரு நாள், இன்று சாப்பிடவே வழி இல்லை என்று திகைத்து நின்று இருக்கிறோமா? இல்லையே. கர்த்தர் ஏதேனும் ஒன்றை நமக்கு கொடுத்து போஷித்துக் கொண்டு இருக்கிறார் அல்லவா. நமக்கு கடன் இருக்கலாம், பாரங்கள் இருக்கலாம். அது தேவசித்தம் அல்ல என்றாலும் கர்த்தர் இன்று வரை நம்மை கைவிடவில்லையே. நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.

ஒரு பூகம்பத்தில், எல்லாம் மாறியது. பல கட்டிடங்களுக்கு சொந்தக்காரர், நடுத்தெருவுக்கு வந்தார். எல்லாம் இழந்தார். நமக்கு அப்படி இல்லையே! நம் தேவன் நம்மை ஆசீர்வதிக்க மட்டும்தான் விரும்புகிறார். ஒருவேளை இன்று கஷ்டத்தில் இருந்தால் கூட, நம்மை அவர் போஷித்த விதத்தை எண்ணிப்பார்த்து நன்றி சொல்வது நம் கடமை. ஒவ்வொன்றாக எண்ணிப்பார்த்து, நமக்கு நிறைவை கொடுத்ததற்காக நன்றி சொல்வோம்.

தெரு ஓரத்தில் இருப்பவர்களைப் பார்த்தால், நாம் தங்குவதற்கு, வாடகை வீடு என்றாலும் சிறு வீடு உள்ளதே என்று நன்றி சொல்லலாம். சைக்கிள் கூட இல்லாதவர்கள் இருக்கிறார்கள், நமக்கு சைக்கிள் இருக்கிறது, அல்லது பைக் இருக்கிறது, அல்லது கார் இருக்கிறது. நன்றி சொல்லலாமே. உடுத்த நல்ல ஆடை இருக்கிறது. காலில் போட செருப்பு, ஷூ இருக்கிறது. இன்னும் யோசித்தால் எவ்வளவோ ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் நாம். நம்மிடம் இருப்பதற்காக நன்றி சொல்வோம் இல்லாதவைகளை பற்றிய கவலையை மறப்போம். 

இன்று (04-12-23) புயல் மழையில், எத்தனையோ தேவ பிள்ளைகளின் வீட்டில் தண்ணீர் வந்தது. ஆனால் கர்த்தர் கைவிடவில்லை. ஏதோ ஒரு விதத்தில் அதிசயமாக நடத்தினார். நன்றி சொல்லலாமே. கர்த்தர் கைவிட மாட்டார் என்று விசுவாசிக்கிற தேவபிள்ளைகளுக்கு, சூழ் நிலை சாதகமாக இல்லை என்றாலும், கைவிட மாட்டார்.

இயேசு சிலுவையில் மரித்தது, நம் வியாதி, தரித்திரம், பாவம், சாபம் எல்லாவற்றையும் மாற்றுவதற்கு தான். நாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். இல்லாததை  எண்ணி கவலைப்படுவதை விட, இருப்பதை நினைத்து கர்த்தரை துதிக்கலாமே.

Similar Posts

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 11

    Day – 11 (11- டிசம்பர், 2023) நல்ல சபை தந்தீர் நன்றி நாம் இன்று நன்றி சொல்லப்போவது, தேவன் நமக்கு கொடுத்த சபைக்காக. சபை என்பது வெறும் கட்டடம் அல்ல. இயேசுவின் சரீரம். இயேசு தலையாகவும், நாம் அவரது சரீரத்தின் அங்கமாகவும் இருப்பதுதான் சபை. நம் எல்லாருக்கும் ஒரே வேலை இருப்பது இல்லை. நம் உடலில், ஒவ்வொரு உறுப்புகளுக்கும் ஒரு வேலை இருப்பதுபோல, சபையில் ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஒரு வேலை இருக்கும். ஆனால் நம் எல்லாருக்கும்…

  • |

    விசுவாச அறிக்கை (நீதிமன்ற வழக்கு)

    விசுவாச அறிக்கை (நீதிமன்ற வழக்கு) இன்றைக்கு அனேக கிறிஸ்தவர்களின் கவலை நீதிமன்ற வழக்கு. ஒருவர் தவறு செய்திருந்தால் நீதிமன்றம் செல்ல வேண்டும் என்ற காலம் மாறி, தவறு செய்யாதவர்கள் கூட நீதிமன்றம் செல்லும் நிலை வந்துவிட்டது. தவறு செய்யாதவர்கள் இதனால், அதிக கவலைக்கு உள்ளாகி விடுகின்றனர். விரக்திக்கே சென்று விடுகின்றனர். நமது கஷ்டமான நேரத்தில், நம் வாயால் என்ன அறிக்கையிடுகிறோம் என்பதே நம் கிறிஸ்தவ வாழ்க்கை நிலையைக் காட்டுகிறது. மரணமோ, ஜீவனோ, அது நம் நாவில்தான் இருக்கிறது….

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 7

    Day – 7 (07- டிசம்பர், 2023) நீரே மெய்தெய்வம் என்று உணர வைத்ததற்காக நன்றி இந்த தளத்தில் வாசித்துக் கொண்டு இருப்போம் என்றால், நாம் இயேசுவை ஏற்றுக் கொண்டவர்களாகத்தான் இருப்போம். இயேசுவே மேசியா என்பதை அறிந்தவர்கள் நாம். கல்லோ மண்ணோ தெய்வம் அல்ல, நம் தேவனுக்கு உருவம் கிடையாது, ஆனால் நம் தேவன் நமக்குள் வசிக்கிறார். அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்குள்ளும் வாழ்கிறார், ஒவ்வொருவருடனும் பேசுகிறார், அற்புதங்களைச் செய்கிறார். இதெல்லாம் நமக்குத் தெரியும். இப்பொழுது கொஞ்சம் சிந்திப்போமா?…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 18

    Day – 18 (18- டிசம்பர், 2023) அரசியல் தலைவர்களுக்காக நன்றி நமக்கு தேவன் கொடுத்த அரசியல் தலைவர்களுக்காக நன்றி சொல்லப்போகிறோம். திமுக அல்லது அதிமுக என்ற கட்சிகளுக்காக அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு முன்பாக அதிமுக ஆட்சியில் இருந்து, இப்போது திமுக ஆட்சியில் இருக்கிறது. எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், கிறிஸ்தவர்கள் ஆங்காங்கே தாக்கப்பட்டாலும், இன்றும் நம் தமிழ் நாட்டில் ஓரளவு சுவிசேஷம் அறிவிக்கப்படுகிறது அல்லவா! நன்றி சொல்வோம். உண்மையில், இப்போது தமிழ்…

  • |

    சுகத்திற்கான விசுவாச அறிக்கைகள்

    நியாயப்பிரமாண காலத்தில், நான் செய்த தவறுக்கு எனக்கு தண்டனை உண்டு. அதனால் எனக்கு வியாதி, தரித்திரம், சாபம் எல்லாம் வந்தது. சரியாகச் சொல்ல வேண்டுமானால், ஆதாம் செய்த தவறினால் உலகத்துக்கே சாபம் வந்தது. அது உண்மையாக இருக்குமானால், அதேபோல பிந்தின ஆதாமாகிய இயேசுவால், உலகத்தின் எல்லா சாபமும், வியாதியும், தரித்திரமும் மாறிவிட்டது. இப்பொழுது நான் கிருபைக்குள்ளாக வந்து விட்டேன். என் பலவீனங்கள் எல்லாம் அவர் சுமந்து தீர்த்து விட்டார். நான் சுமக்க தேவை இல்லை. நான் விடுதலை…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் (Day – 1)

      Day – 1 (01- டிசம்பர், 2023) உயிரோடு இருப்பதற்காக நன்றி இந்த வருடத்தின் முடிவுக்கு வந்துவிட்டோம். கர்த்தருக்கு நன்றி சொல்வது நமது கடமை. இயேசுவே, நீங்க கொடுத்த ஜீவனுக்காக நன்றி என்று பலமுறை சொல்லி இருப்போம். இன்று அதை யோசித்து பார்த்து நன்றி சொல்லலாமா? என் அனுபவத்தில், கடந்த வருடம் நவம்பர் மாதம் என் தோழியின் பிறந்த நாளுக்கு எல்லாரும் வாழ்த்து அனுப்பினார்கள், Whatsapp Groupல். அப்போது திடீரென கேள்விப்பட்ட செய்தி, அவள் இறந்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *