|

நன்றியுடன் 21 நாட்கள் Day – 4

Day – 4 (04- டிசம்பர், 2023)

பலவீனத்தில் பெலன் தந்ததற்காக நன்றி

இந்த நன்றிக்கு நான் எழுதவே தேவையில்லை. ஒவ்வொருவரும், 1000 நன்றியை வரிசையாக சொல்லலாம். நம் குடும்பத்தில் அவ்வளவு பலவீனங்கள் வந்திருக்கிறது. நம் பெற்றோருக்கு, நம் பிள்ளைகளுக்கு என்று யாரோ ஒருவர் சுகவீனமாய் இருந்திருப்பார்கள். ஆனால் தேவன் பெலனைக் கொடுத்தார் அல்லவா! அதற்காக நன்றி சொல்வோம். என் அனுபவத்தில், இந்த 2023 ஆரம்பிக்கும் போது, ஜனவரி மாதத்தில் ஒருவர் மாற்றி ஒருவர் மருத்துவமனைக்கு சென்றோம். என்ன இவ்வளவு மோசமாக இந்த வருடம் ஆரம்பிக்கிறதே என்று கலங்கிய நாட்களும் உண்டு. தேவன் எங்களை நடத்தினார். இம்மட்டும் இருக்க பெலன் கொடுத்தார். ஊழியத்தை தந்தார். தேவனுக்கு நன்றி சொல்வது நம் கடமை.

இந்த வருடத்தில், தேவன் எவ்வளவோ அற்புதம் செய்திருப்பார். மரணத்தின் விளிம்பில் இருந்து பாதுகாத்து இருப்பார். பல வருடங்கள் கேட்டுக்கொண்டே இருந்த அற்புதம் நடந்திருக்கும். யோசித்து நன்றி சொல்லலாம். நாம் பாவி என்பதால் மட்டும்  பெலவீனம் வரவில்லை, பிசாசினால் மட்டும் பெலவீனம் வரவில்லை, தேவனுடைய மகிமை வெளிப்படும்படிக்கு கூட பெலவீனம் வந்திருக்கலாம். இப்போது என்ன செய்ய வேண்டும்? தேவனுடைய மகிமை வெளிப்படும்படிக்கு, நாம் சாட்சி சொல்ல வேண்டும். ஏதோ பெரிய கூட்டத்தில் மட்டும் அல்ல, அருகிலிருக்கும் நண்பர்களுக்கு சொன்னால் கூட, தேவ நாமம் மகிமைப்படும்.

எத்தனையோ காய்ச்சல்கள் வந்தன. இளம் மருத்துவரே காய்ச்சலில் உயிரிழந்தாரே. நமக்கு, நம் வீட்டில் உள்ளவர்களுக்கும் எத்தனையோ முறை சளி, காய்ச்சல் வந்ததே. ஆனால் இன்றும் நாம் உயிரோடு இருக்கிறோமே. நன்றி சொல்வோம்.

இந்த வருடத்தில், எவ்வளவோ மருத்துவர்களிடம் சென்றிருக்கலாம். முறையான சிகிச்சை நமக்கு கிடைத்தது. அதே சமயத்தில், மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் உயிரிழப்பு என்று எத்தனை செய்திகள் கேட்டிருப்போம். நாம் எவ்வளவோ மருந்துகள் சாப்பிட்டிருப்போம். சுகம் கிடைத்தது. அதே சமயத்தில், காலாவதியான மருந்து சாப்பிட்டதால் பலி என்று எத்தனை செய்தி கேட்டோம். நாம் இன்று நலமுடன் இருக்கிறோமே. ஒருவேளை இன்றும் நமக்கு பலவீனம் இருக்கலாம். இன்றும் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கலாம். ஆனால் இதை வாசிக்கிற அளவு பலன் இருக்கிறதே. இதுவே பெரிய கிருபை அல்லவா! நன்றி சொல்லலாமா?

Similar Posts

  • |

    விசுவாச அறிக்கை (நீதிமன்ற வழக்கு)

    விசுவாச அறிக்கை (நீதிமன்ற வழக்கு) இன்றைக்கு அனேக கிறிஸ்தவர்களின் கவலை நீதிமன்ற வழக்கு. ஒருவர் தவறு செய்திருந்தால் நீதிமன்றம் செல்ல வேண்டும் என்ற காலம் மாறி, தவறு செய்யாதவர்கள் கூட நீதிமன்றம் செல்லும் நிலை வந்துவிட்டது. தவறு செய்யாதவர்கள் இதனால், அதிக கவலைக்கு உள்ளாகி விடுகின்றனர். விரக்திக்கே சென்று விடுகின்றனர். நமது கஷ்டமான நேரத்தில், நம் வாயால் என்ன அறிக்கையிடுகிறோம் என்பதே நம் கிறிஸ்தவ வாழ்க்கை நிலையைக் காட்டுகிறது. மரணமோ, ஜீவனோ, அது நம் நாவில்தான் இருக்கிறது….

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 9

    Day – 9 (09- டிசம்பர், 2023) அடிமைதனம் வராமல் காத்தீர் நன்றி இன்றைக்கு முக்கியமான ஒரு காரியத்துக்காக நன்றி சொல்லப் போகிறோம். ஆண்டவரே, நான் ஒரு பாவி என்பதை நாம் ஈஸியாக ஒத்துக் கொள்வோம். இயேசுவின் இரத்தம் என்னைக் கழுவி விட்டது, நான் இப்பொழுது நீதிமான் என்பதை நாம் அறிந்தாலும்கூட, பல சமயங்களில் நம்மை பாவியாகவே நினைத்துக் கொள்கிறோம். முதலாவது தேவனுக்கு, நம்மை நீதிமான் ஆக்கியதற்காக நன்றி சொல்வோம். நாம் எல்லாரும் மனிதர்கள், நம்மால் ஒருவரை…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 20

    Day – 20 (20- டிசம்பர், 2023) அபிஷேகத்துக்காக நன்றி அப்பா, என் மீதுள்ள உம் அபிஷேகத்துக்காக நன்றி. இந்த 2023ல் எத்தனையோ முறை சோர்ந்து போயிருக்கிறேன், மனம் தளர்ந்து போயிருக்கிறேன், பாவத்தில் விழுந்திருக்கிறேன், வேதத்தை மறந்து ஓடியிருக்கிறேன், உம்மிடம் பேச நேரம் கொடுக்காமல் போயிருக்கிறேன், துணிகரமாக சில காரியங்கள் செய்திருக்கிறேன். உம்மை மறுதலித்திருக்கிறேன், ஊழியர்களை குறை சொல்லி இருக்கிறேன், தேவனுடைய ராஜ்யத்துக்கான வேலையில் ஈடுபடவில்லை, தேவையற்ற வெட்டி கதைகளில் நேரம் செலவழித்தேன், அடுத்தவரை பொறாமையுடன் பார்த்தேன்,…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் (Day – 1)

      Day – 1 (01- டிசம்பர், 2023) உயிரோடு இருப்பதற்காக நன்றி இந்த வருடத்தின் முடிவுக்கு வந்துவிட்டோம். கர்த்தருக்கு நன்றி சொல்வது நமது கடமை. இயேசுவே, நீங்க கொடுத்த ஜீவனுக்காக நன்றி என்று பலமுறை சொல்லி இருப்போம். இன்று அதை யோசித்து பார்த்து நன்றி சொல்லலாமா? என் அனுபவத்தில், கடந்த வருடம் நவம்பர் மாதம் என் தோழியின் பிறந்த நாளுக்கு எல்லாரும் வாழ்த்து அனுப்பினார்கள், Whatsapp Groupல். அப்போது திடீரென கேள்விப்பட்ட செய்தி, அவள் இறந்து…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 7

    Day – 7 (07- டிசம்பர், 2023) நீரே மெய்தெய்வம் என்று உணர வைத்ததற்காக நன்றி இந்த தளத்தில் வாசித்துக் கொண்டு இருப்போம் என்றால், நாம் இயேசுவை ஏற்றுக் கொண்டவர்களாகத்தான் இருப்போம். இயேசுவே மேசியா என்பதை அறிந்தவர்கள் நாம். கல்லோ மண்ணோ தெய்வம் அல்ல, நம் தேவனுக்கு உருவம் கிடையாது, ஆனால் நம் தேவன் நமக்குள் வசிக்கிறார். அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்குள்ளும் வாழ்கிறார், ஒவ்வொருவருடனும் பேசுகிறார், அற்புதங்களைச் செய்கிறார். இதெல்லாம் நமக்குத் தெரியும். இப்பொழுது கொஞ்சம் சிந்திப்போமா?…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 18

    Day – 18 (18- டிசம்பர், 2023) அரசியல் தலைவர்களுக்காக நன்றி நமக்கு தேவன் கொடுத்த அரசியல் தலைவர்களுக்காக நன்றி சொல்லப்போகிறோம். திமுக அல்லது அதிமுக என்ற கட்சிகளுக்காக அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு முன்பாக அதிமுக ஆட்சியில் இருந்து, இப்போது திமுக ஆட்சியில் இருக்கிறது. எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், கிறிஸ்தவர்கள் ஆங்காங்கே தாக்கப்பட்டாலும், இன்றும் நம் தமிழ் நாட்டில் ஓரளவு சுவிசேஷம் அறிவிக்கப்படுகிறது அல்லவா! நன்றி சொல்வோம். உண்மையில், இப்போது தமிழ்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *