|

நன்றியுடன் 21 நாட்கள் Day – 9

Day – 9 (09- டிசம்பர், 2023)

அடிமைதனம் வராமல் காத்தீர் நன்றி

இன்றைக்கு முக்கியமான ஒரு காரியத்துக்காக நன்றி சொல்லப் போகிறோம். ஆண்டவரே, நான் ஒரு பாவி என்பதை நாம் ஈஸியாக ஒத்துக் கொள்வோம். இயேசுவின் இரத்தம் என்னைக் கழுவி விட்டது, நான் இப்பொழுது நீதிமான் என்பதை நாம் அறிந்தாலும்கூட, பல சமயங்களில் நம்மை பாவியாகவே நினைத்துக் கொள்கிறோம். முதலாவது தேவனுக்கு, நம்மை நீதிமான் ஆக்கியதற்காக நன்றி சொல்வோம்.

நாம் எல்லாரும் மனிதர்கள், நம்மால் ஒருவரை மன்னிப்பது எளிதான காரியம் அல்ல. அப்படியே நாம் ஒருவரை மன்னித்தாலும், நம் உயிர் இருக்குமளவும், அந்த நபரை, அவர் செய்த காரியத்தைச் சொல்லி குத்திக் கிழிப்போம். உன்னை மன்னித்ததே என் பெருந்தன்மை என்று நம்மையும் அறியாமல், நம் மனதுள் பதிய வைத்திருப்போம். ஏனென்றால் நாம் மனிதர்கள்தான். ஈஸியாக மறக்க முடியாதுதான். ஆனால் இயேசு அப்படிப்பட்டவர் அல்ல, அவர் தேவ குமாரன். நம் பாவத்தை மன்னிக்க வந்தவர். நாம் அவரை ஏற்றுக்கொண்ட போதே பழைய பாவங்களை மன்னித்து விட்டார். அதை நாம் மனதுள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்காக நன்றி சொல்ல வேண்டும்.

ஒருமுறை கவுன்சிலிங் எடுக்கிற ஒரு மன நல ஆலோசகர் பேட்டியை கேட்டுக் கொண்டிருந்தேன். ஒரு 4 வயது குழந்தையின் தந்தை, 3 மணி நேரத்துக்கு ஒருமுறை ஆபாச படம் பார்க்கிறார், அதிலிருந்து வெளியே வருவதற்காக கவுன்சிலிங் வந்தார் என்று அதைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தார். அது ஒரு அடிமைத்தனம்.  நாமும் ஏதோ ஒரு காரியத்துக்கு அடிமையாக இருக்கலாம். ஒருவேளை நம் அடிமைத்தனம், டிவி பார்ப்பதாக இருக்கலாம், ஒருவேளை செல்போன் பார்ப்பதாக இருக்கலாம், சோசியல் மீடியாவாக இருக்கலாம், தூக்கமாக இருக்கலாம், சாப்பாடாக இருக்கலாம், வெட்டிப்பேச்சாக இருக்கலாம், புறம் பேசுதலாக இருக்கலாம், ஏதோ ஒரு காரியம் நம்மையும் அடிமையாக வைத்திருக்கலாம்.

ஆனால் யோசித்துப் பாருங்கள், அதிகமாக Facebook பார்க்கிறேன், இனி அதைப் பார்ப்பதை குறைக்க வேண்டும், அதிகமாக Youtube பார்க்கிறேன், குறைக்க வேண்டும் என்று நாமாகவே யாரும் கூறாமல், எத்தனை நாட்கள் தீர்மானம் எடுத்திருப்போம்? அது எப்படி உணர்வு வந்தது? பரிசுத்த ஆவியானவர் நமக்குள் கிரியை செய்ததால் தானே! அப்படியானால், நாம் எவ்வளவு பெரிய பாக்கியம் பெற்றவர்கள்! நாம் பாவியாகவே இருந்தாலும், ஆவியானவர் நமக்குள் கிரியை செய்கிறார் என்பதற்காக நன்றி சொல்ல வேண்டும்.

இந்த வருடத்தில், நமக்கு எதிராக தூக்கத்தை வைத்தே, கர்த்தரின் சித்தத்தை தடை செய்யும்படி சாத்தான் ஏதோ ஒன்றை வைத்திருப்பான். அல்லது போனை வைத்தே நம்மை அடிமையாக்கும்படி பெரிய திட்டம் போட்டு இருந்திருப்பான். ஆனால் நமக்கே தெரியாமல், அதை அனைத்தையும் கர்த்தர் உடைத்துப் போட்டார். (காணாததை விசுவாசிப்பது தான் கிறிஸ்தவ வாழ்க்கை) அதனால்தான் அவர் ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களைச் செய்கிறவர். எப்பொழுது எல்லாம் நாம் உணர்வு பெற்று, இனி இந்த காரியம் செய்யக்கூடாது என்று நினைத்தோமோ, பின்னால் ஆவிக்குரிய காரணம் இருக்கும், கர்த்தர் செயல்பட்டிருப்பார், சாத்தான் திட்டம் நொறுங்கி போயிருக்கும்.

அதற்கு பின்னரும் நாம் தவறி இருப்போம், அதே காரியம் செய்திருப்போம், ஆனால் அது பிரச்சனை இல்லை. அன்று சாத்தானுடைய பெரிய திட்டத்தை உடைத்துப் போட்டார் அல்லவா! அதற்காக நன்றி சொல்வோம். நம் தேவன் வெறும் ஒருநாள் மட்டும் செயல்படுகிற தேவன் அல்ல, எனவே நிச்சயமாக நாம் விடுவிக்கப்பட வேண்டிய காரியத்திலிருந்து நிரந்தர விடுதலை பெற கர்த்தர் உதவுவார். நீர் என்னை விடுவிப்பதற்காக நன்றி என்று மனதார சொல்லலாமே!

இயேசு அவருடைய இரத்தத்தால் நம்மைக் கழுவி, நீதிமான் ஆக்கியதற்காக நன்றி சொல்வோம். பரிசுத்த ஆவியானவர், நமக்குள் உணர்வைக் கொடுத்ததற்காக நன்றி சொல்வோம். சாத்தானுடைய திட்டங்களை நமக்கு தெரியாமலேயே, தேவன் உடைத்து போட்டதற்காக நன்றி சொல்வோம். நம்மை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்ததற்காக நன்றி சொல்வோம்.

Similar Posts

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 14

    Day – 14 (14- டிசம்பர், 2023) புதிய ஆரம்பங்களுக்காக நன்றி இன்றைய தினத்தில் நாம் நன்றி சொல்ல இருப்பது, நம் வாழ்வில் நடந்த புதிய ஆரம்பங்களுக்காக. என் வாழ்வில் புதிய ஆரம்பம் என்று என்ன நடந்தது? அப்படியே தான் போய்க்கொண்டிருக்கிறது என்று நாம் நினைக்கலாம். நம் வாழ்வில் என்ன புதிய ஆரம்பங்கள் நடந்தது என்று யோசித்து, அதற்காக நன்றி சொல்லப் போகிறோம். தேவன் நமக்கு புதிய இருதயத்தை தந்தார் அல்லவா! சிலர் மீது அவர்கள் செய்த…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 18

    Day – 18 (18- டிசம்பர், 2023) அரசியல் தலைவர்களுக்காக நன்றி நமக்கு தேவன் கொடுத்த அரசியல் தலைவர்களுக்காக நன்றி சொல்லப்போகிறோம். திமுக அல்லது அதிமுக என்ற கட்சிகளுக்காக அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு முன்பாக அதிமுக ஆட்சியில் இருந்து, இப்போது திமுக ஆட்சியில் இருக்கிறது. எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், கிறிஸ்தவர்கள் ஆங்காங்கே தாக்கப்பட்டாலும், இன்றும் நம் தமிழ் நாட்டில் ஓரளவு சுவிசேஷம் அறிவிக்கப்படுகிறது அல்லவா! நன்றி சொல்வோம். உண்மையில், இப்போது தமிழ்…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 13

    Day – 13 (13- டிசம்பர், 2023) ஆவிக்குரிய ஆசீர்வாதங்களுக்காக நன்றி நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். எபேசியர் 1 -3 Praised be ADONAI, Father of our Lord Yeshua the Messiah, who in the Messiah has blessed us with every spiritual blessing in heaven. கர்த்தர் நம்மை ஆவிக்குரிய சகல ஆசீர்வாதங்களாலும் ஆசீர்வதித்திருக்கிறார்….

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 19

    Day – 19 (19- டிசம்பர், 2023) இரட்சிப்புக்காக நன்றி தேவன் இந்த உலகத்தை மனிதனிடம் கொடுத்து, பலுகி பெருகுங்கள் என்றும், எல்லாவற்றையும் ஆண்டு கொள்ளுங்கள் என்றும் கூறினார். சாத்தான் சதியால், கீழ்ப்படியாமை வந்து, தேவனோடு இருந்து நெருங்கிய தொடர்பை துண்டித்துப் போட்டது. அதன் பின்னர், இந்த உலகத்தின் அதிபதியாக சாத்தான் இருந்து நம்மை ஆண்டு வந்தான். ஒரு கூட்ட ஜனங்கள் மட்டும் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு, இஸ்ரேல் என்னும் இனமாக வாழ்ந்தார்கள். அவர்களாலும் சாத்தானை ஜெயிக்க முடியவில்லை….

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 7

    Day – 7 (07- டிசம்பர், 2023) நீரே மெய்தெய்வம் என்று உணர வைத்ததற்காக நன்றி இந்த தளத்தில் வாசித்துக் கொண்டு இருப்போம் என்றால், நாம் இயேசுவை ஏற்றுக் கொண்டவர்களாகத்தான் இருப்போம். இயேசுவே மேசியா என்பதை அறிந்தவர்கள் நாம். கல்லோ மண்ணோ தெய்வம் அல்ல, நம் தேவனுக்கு உருவம் கிடையாது, ஆனால் நம் தேவன் நமக்குள் வசிக்கிறார். அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்குள்ளும் வாழ்கிறார், ஒவ்வொருவருடனும் பேசுகிறார், அற்புதங்களைச் செய்கிறார். இதெல்லாம் நமக்குத் தெரியும். இப்பொழுது கொஞ்சம் சிந்திப்போமா?…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள்Day – 10

    Day – 10 (10- டிசம்பர், 2023) தற்கொலை எண்ணங்களுக்கு விலக்கினீர் செய்தி தாளில் வாசித்த செய்திகளை திரும்பி பார்க்கலாம்.  அப்பா அம்மா ரீசார்ஜ் பண்ணி தராததால், மாணவன் தற்கொலை. நம் காலத்தில், நாம் கேட்ட எல்லாம் நம் பெற்றோர் தந்தார்களா? இல்லையே. ஆனால் நமக்கு தற்கொலை எண்ணம் வரவில்லையே. அதற்காக நன்றி சொல்வோம். வேலையில் அதிக பணிச்சுமை காரணமாக தற்கொலை என்று பார்க்கிறோமே. நமக்கு வேலை சுமையாக இல்லையா? அதிலும் நீங்கள் ஒரு பெண் என்றால்,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *