|

நன்றியுடன் 21 நாட்கள் Day – 7

Day – 7 (07- டிசம்பர், 2023)

நீரே மெய்தெய்வம் என்று உணர வைத்ததற்காக நன்றி

இந்த தளத்தில் வாசித்துக் கொண்டு இருப்போம் என்றால், நாம் இயேசுவை ஏற்றுக் கொண்டவர்களாகத்தான் இருப்போம். இயேசுவே மேசியா என்பதை அறிந்தவர்கள் நாம். கல்லோ மண்ணோ தெய்வம் அல்ல, நம் தேவனுக்கு உருவம் கிடையாது, ஆனால் நம் தேவன் நமக்குள் வசிக்கிறார். அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்குள்ளும் வாழ்கிறார், ஒவ்வொருவருடனும் பேசுகிறார், அற்புதங்களைச் செய்கிறார். இதெல்லாம் நமக்குத் தெரியும். இப்பொழுது கொஞ்சம் சிந்திப்போமா?

ஒருவேளை இயேசுவை அறியாத குடும்பத்தில் நாம் பிறந்து இருந்தால், இப்போது என்ன செய்து கொண்டிருப்போம்? இயேசுவை மறுதலிக்கிற வைராக்கியமுள்ள வீட்டில் பிறந்திருந்தால் நம் நிலை என்ன? நம்மை நேசித்து, நம் பாவங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டு, நமக்காக பரிசுத்த ஆவியானவரை கொடுத்து, நமக்காக இன்றும் அற்புதங்களைச் செய்து வருகிற நம் தேவனை நாம் அறியாது இருந்தால், எவ்வளவு பரிதபிக்கப்பட்டவர்கள் நாம்!

தேவனை அறியாத குடும்பத்தில் பிறந்து, தேவனை ஏற்றுக்கொண்டு, வீட்டை விட்டு வெளியே வந்து, தேவனைப் பற்றி வைராக்கியமாய் பிரசங்கிக்க நாம் ஒன்றும் சாது சுந்தர் சிங் அல்ல. அப்படிப்பட்ட கிருபை சிலர் மேல் இருக்கிறது, அதற்காக நன்றி சொல்வோம். ஆனால் நாம் அப்படிப்பட்டவர்களாய் இருந்திருப்போமா என்பது கேள்விக்குறி தான். இன்று நாம் இயேசுவை ஏற்றுக் கொள்ள எந்த தடையும் இல்லை. நம் குடும்பத்தாரும் இயேசுவை ஏற்றுக் கொண்டுள்ளனர். அதற்காகவே நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். ஒருவேளை, இயேசுவை அறியாத குடும்பத்தில் பிறந்து, கர்த்தருக்காய் வைராக்கியமுள்ளவராய் நீங்கள் இருந்தால், உங்களை தேவன் எவ்வளவு நேசிக்கிறார் என்பது உங்களுக்கே தெரியும்.

நம் ஒவ்வொருவர் மேலும் தேவன் எவ்வளவு கிருபையாயிருக்கிறார் என்பதற்கு, நாம் அவரை ஏற்றுக் கொண்டதே சாட்சி. ஒருவேளை அவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், நரகத்தை நோக்கி செல்லும் கூட்டத்தில் நாமும் ஒருவர். ஒருவர் கிறிஸ்தவனாக பிறப்பதால் மட்டும் பரலோகம் செல்ல முடியாது. கர்த்தரை ஏற்றுக்கொண்டால் மட்டுமே செல்ல முடியும். இன்று நாம் கர்த்தரை ஏற்றுக்கொள்ளக் கூடிய சூழல் தேவன் உருவாக்கி தந்ததற்காக நன்றி சொல்வோம்.

பெயர் கிறிஸ்தவராக பிறந்து, இயேசுவை ஏற்றுக் கொள்ளாமல் மரித்தவர்கள் அனேகர். கிறிஸ்தவம் என்பதை மதமாக்கி, அதில் வைராக்கியமாய் இருந்து மரித்தவர்கள் அனேகர். நாம் இயேசுவை ஏற்றுக் கொண்டுள்ளோம், தேவனோடு உறவாடுகிறோம். அவரது பிள்ளையாய் வாழ்கிறோம். இந்த கிருபைக்காக நன்றி சொல்வோம்.

Similar Posts

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 17

    Day – 17 (17- டிசம்பர், 2023) சோதனையில் வெற்றி தந்தீர் நன்றி 1 கொரிந்தியர் 10:13 மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார். Tamil Easy Reading Version எல்லா மனிதர்களுக்கும் வரும் சோதனைகளே உங்களுக்கும் வரும். ஆனால் நீங்கள் தேவனை நம்பமுடியும். நீங்கள் தாங்க இயலாத அளவு சோதனைகளை…

  • |

    விசுவாச அறிக்கை (நீதிமன்ற வழக்கு)

    விசுவாச அறிக்கை (நீதிமன்ற வழக்கு) இன்றைக்கு அனேக கிறிஸ்தவர்களின் கவலை நீதிமன்ற வழக்கு. ஒருவர் தவறு செய்திருந்தால் நீதிமன்றம் செல்ல வேண்டும் என்ற காலம் மாறி, தவறு செய்யாதவர்கள் கூட நீதிமன்றம் செல்லும் நிலை வந்துவிட்டது. தவறு செய்யாதவர்கள் இதனால், அதிக கவலைக்கு உள்ளாகி விடுகின்றனர். விரக்திக்கே சென்று விடுகின்றனர். நமது கஷ்டமான நேரத்தில், நம் வாயால் என்ன அறிக்கையிடுகிறோம் என்பதே நம் கிறிஸ்தவ வாழ்க்கை நிலையைக் காட்டுகிறது. மரணமோ, ஜீவனோ, அது நம் நாவில்தான் இருக்கிறது….

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 6

    Day – 6 (06- டிசம்பர், 2023) விபத்து நடக்காமல் காத்தீர் நன்றி இன்றைய கால கட்டத்தில், தெருவில் நடந்து சென்றால் கூட accident நடக்கிறது. நாம் சரியாக வண்டி ஓட்டி சென்றால் கூட, முன்னால் சென்று கொண்டு இருக்கும் வண்டி, சடன்பிரேக் போட்டால் அவ்வளவு தான். நமக்கு ஆக்ஸிடன்ட். எந்தவொரு பாதுகாப்பும் இல்லாத நிலையில்தான் வெளியே செல்கிறோம். இப்பொழுது சிந்தித்து பார்க்கலாம். நம் பிள்ளைகளோ, பேரக்குழந்தைகளோ, அனுதினமும் பள்ளிக்கு அல்லது கல்லூரிக்கு சென்று வருகிறார்கள். இந்த…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 20

    Day – 20 (20- டிசம்பர், 2023) அபிஷேகத்துக்காக நன்றி அப்பா, என் மீதுள்ள உம் அபிஷேகத்துக்காக நன்றி. இந்த 2023ல் எத்தனையோ முறை சோர்ந்து போயிருக்கிறேன், மனம் தளர்ந்து போயிருக்கிறேன், பாவத்தில் விழுந்திருக்கிறேன், வேதத்தை மறந்து ஓடியிருக்கிறேன், உம்மிடம் பேச நேரம் கொடுக்காமல் போயிருக்கிறேன், துணிகரமாக சில காரியங்கள் செய்திருக்கிறேன். உம்மை மறுதலித்திருக்கிறேன், ஊழியர்களை குறை சொல்லி இருக்கிறேன், தேவனுடைய ராஜ்யத்துக்கான வேலையில் ஈடுபடவில்லை, தேவையற்ற வெட்டி கதைகளில் நேரம் செலவழித்தேன், அடுத்தவரை பொறாமையுடன் பார்த்தேன்,…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 13

    Day – 13 (13- டிசம்பர், 2023) ஆவிக்குரிய ஆசீர்வாதங்களுக்காக நன்றி நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். எபேசியர் 1 -3 Praised be ADONAI, Father of our Lord Yeshua the Messiah, who in the Messiah has blessed us with every spiritual blessing in heaven. கர்த்தர் நம்மை ஆவிக்குரிய சகல ஆசீர்வாதங்களாலும் ஆசீர்வதித்திருக்கிறார்….

  • |

    விசுவாச அறிக்கை புது வீடு

    எபிரெயர் 3:4 ஏனெனில், எந்த வீடும் ஒருவனால் உண்டாக்கப்படும்; எல்லாவற்றையும் உண்டுபண்ணினவர் தேவன். Thiru Viviliam ஏனெனில், ஒவ்வொரு வீட்டையும் கட்டி எழுப்ப ஒருவர் இருப்பது போல, எல்லாவற்றையும் கட்டி எழுப்புகிறவர் ஒருவர் இருக்கிறார்; அவர் கடவுளே. எல்லாவற்றையும் உண்டு பண்ணின தேவன், தற்போது எங்களுக்கென ஒரு வீட்டைக் கொடுத்ததற்காக நன்றி சொல்லுகிறோம். மத்தேயு 7:24,25 24.ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *