|

நன்றியுடன் 21 நாட்கள் Day – 7

Day – 7 (07- டிசம்பர், 2023)

நீரே மெய்தெய்வம் என்று உணர வைத்ததற்காக நன்றி

இந்த தளத்தில் வாசித்துக் கொண்டு இருப்போம் என்றால், நாம் இயேசுவை ஏற்றுக் கொண்டவர்களாகத்தான் இருப்போம். இயேசுவே மேசியா என்பதை அறிந்தவர்கள் நாம். கல்லோ மண்ணோ தெய்வம் அல்ல, நம் தேவனுக்கு உருவம் கிடையாது, ஆனால் நம் தேவன் நமக்குள் வசிக்கிறார். அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்குள்ளும் வாழ்கிறார், ஒவ்வொருவருடனும் பேசுகிறார், அற்புதங்களைச் செய்கிறார். இதெல்லாம் நமக்குத் தெரியும். இப்பொழுது கொஞ்சம் சிந்திப்போமா?

ஒருவேளை இயேசுவை அறியாத குடும்பத்தில் நாம் பிறந்து இருந்தால், இப்போது என்ன செய்து கொண்டிருப்போம்? இயேசுவை மறுதலிக்கிற வைராக்கியமுள்ள வீட்டில் பிறந்திருந்தால் நம் நிலை என்ன? நம்மை நேசித்து, நம் பாவங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டு, நமக்காக பரிசுத்த ஆவியானவரை கொடுத்து, நமக்காக இன்றும் அற்புதங்களைச் செய்து வருகிற நம் தேவனை நாம் அறியாது இருந்தால், எவ்வளவு பரிதபிக்கப்பட்டவர்கள் நாம்!

தேவனை அறியாத குடும்பத்தில் பிறந்து, தேவனை ஏற்றுக்கொண்டு, வீட்டை விட்டு வெளியே வந்து, தேவனைப் பற்றி வைராக்கியமாய் பிரசங்கிக்க நாம் ஒன்றும் சாது சுந்தர் சிங் அல்ல. அப்படிப்பட்ட கிருபை சிலர் மேல் இருக்கிறது, அதற்காக நன்றி சொல்வோம். ஆனால் நாம் அப்படிப்பட்டவர்களாய் இருந்திருப்போமா என்பது கேள்விக்குறி தான். இன்று நாம் இயேசுவை ஏற்றுக் கொள்ள எந்த தடையும் இல்லை. நம் குடும்பத்தாரும் இயேசுவை ஏற்றுக் கொண்டுள்ளனர். அதற்காகவே நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். ஒருவேளை, இயேசுவை அறியாத குடும்பத்தில் பிறந்து, கர்த்தருக்காய் வைராக்கியமுள்ளவராய் நீங்கள் இருந்தால், உங்களை தேவன் எவ்வளவு நேசிக்கிறார் என்பது உங்களுக்கே தெரியும்.

நம் ஒவ்வொருவர் மேலும் தேவன் எவ்வளவு கிருபையாயிருக்கிறார் என்பதற்கு, நாம் அவரை ஏற்றுக் கொண்டதே சாட்சி. ஒருவேளை அவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், நரகத்தை நோக்கி செல்லும் கூட்டத்தில் நாமும் ஒருவர். ஒருவர் கிறிஸ்தவனாக பிறப்பதால் மட்டும் பரலோகம் செல்ல முடியாது. கர்த்தரை ஏற்றுக்கொண்டால் மட்டுமே செல்ல முடியும். இன்று நாம் கர்த்தரை ஏற்றுக்கொள்ளக் கூடிய சூழல் தேவன் உருவாக்கி தந்ததற்காக நன்றி சொல்வோம்.

பெயர் கிறிஸ்தவராக பிறந்து, இயேசுவை ஏற்றுக் கொள்ளாமல் மரித்தவர்கள் அனேகர். கிறிஸ்தவம் என்பதை மதமாக்கி, அதில் வைராக்கியமாய் இருந்து மரித்தவர்கள் அனேகர். நாம் இயேசுவை ஏற்றுக் கொண்டுள்ளோம், தேவனோடு உறவாடுகிறோம். அவரது பிள்ளையாய் வாழ்கிறோம். இந்த கிருபைக்காக நன்றி சொல்வோம்.

Similar Posts

  • |

    விசுவாச அறிக்கை புது வீடு

    எபிரெயர் 3:4 ஏனெனில், எந்த வீடும் ஒருவனால் உண்டாக்கப்படும்; எல்லாவற்றையும் உண்டுபண்ணினவர் தேவன். Thiru Viviliam ஏனெனில், ஒவ்வொரு வீட்டையும் கட்டி எழுப்ப ஒருவர் இருப்பது போல, எல்லாவற்றையும் கட்டி எழுப்புகிறவர் ஒருவர் இருக்கிறார்; அவர் கடவுளே. எல்லாவற்றையும் உண்டு பண்ணின தேவன், தற்போது எங்களுக்கென ஒரு வீட்டைக் கொடுத்ததற்காக நன்றி சொல்லுகிறோம். மத்தேயு 7:24,25 24.ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 2

    Day – 2 (02- டிசம்பர், 2023) நல்ல குடும்பத்துக்காக நன்றி இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள். இன்று நாம் நன்றி சொல்ல இருப்பது நம் குடும்பத்திற்காக. தேவன் நமக்கு குடும்பத்தை தந்திருக்கிறார். நன்றி சொல்வது நம் கடமை. நாம் எப்போதுமே இருப்பதை உணராமல், இல்லாததை நினைத்தே கவலைப்படுபவர்கள். ஒருவேளை, கணவரின் சம்பளம் குறைவு என்றால் அல்லது, கணவர் குடிக்கிறார் என்றால், மனைவி எப்போதும் ஏதாவது சொல்லிக் கொண்டே இருக்கிறார் என்றால், இவரைப் போய் திருமணம் செய்து விட்டோமே…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 21

    Day – 21 (21- டிசம்பர், 2023) கடைசி கால எழுப்புதலுக்காக நன்றி கடைசி கால எழுப்புதல் என்பது சுக்கோத் அனுபவம். அது ஆவியில் நடக்கிற அனுபவம். மூன்றாம் பெந்தெகோஸ்தே, Joy anointing என்றெல்லாம் அழைக்கப்படுகிறது என்று பண்டிகைகள் பற்றிய பதிவில் அறிந்தோம். இந்த கடைசி கால எழுப்புதலில் என்ன நடக்கும்? ஜனங்கள் கூட்டம்கூட்டமாக இரட்சிக்கப்படுவார்கள். அனேக அற்புத அடையாளங்கள் நடக்கும். மறுரூப அனுபவம் நடக்கும். இன்னும் பல காரியங்கள் சொல்லலாம். ஆனால், இன்று கூட ஆங்காங்கே…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 20

    Day – 20 (20- டிசம்பர், 2023) அபிஷேகத்துக்காக நன்றி அப்பா, என் மீதுள்ள உம் அபிஷேகத்துக்காக நன்றி. இந்த 2023ல் எத்தனையோ முறை சோர்ந்து போயிருக்கிறேன், மனம் தளர்ந்து போயிருக்கிறேன், பாவத்தில் விழுந்திருக்கிறேன், வேதத்தை மறந்து ஓடியிருக்கிறேன், உம்மிடம் பேச நேரம் கொடுக்காமல் போயிருக்கிறேன், துணிகரமாக சில காரியங்கள் செய்திருக்கிறேன். உம்மை மறுதலித்திருக்கிறேன், ஊழியர்களை குறை சொல்லி இருக்கிறேன், தேவனுடைய ராஜ்யத்துக்கான வேலையில் ஈடுபடவில்லை, தேவையற்ற வெட்டி கதைகளில் நேரம் செலவழித்தேன், அடுத்தவரை பொறாமையுடன் பார்த்தேன்,…

  • |

    விசுவாச அறிக்கை Intro

    விசுவாச அறிக்கை நமது அமைச்சர், திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு, ஏதோ ஒரு பிரச்சனை என்றால், நம்மை போல சாதாரண குடிமக்கள் பயப்படுவது போல அவர் பயப்படுவாரா என்பது சந்தேகமே. ஏனென்றால், அவரது அப்பா, தமிழ் நாட்டின் முதலமைச்சர். ஒரு முதலமைச்சரின் மகன் பயமில்லாமல் வாழ முடியுமானால், ஒரு ராஜாவின் மகன் பயமில்லாமல் வாழ முடியுமென்றால், தேவாதி தேவனின் பிள்ளைகள் நாம் எப்படி வாழ வேண்டும். ஆனால், அப்படிப்பட்ட வாழ்வு வாழ்கிறோமா என்பது சந்தேகமே! அநேக சபைகளில் விசுவாச…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 6

    Day – 6 (06- டிசம்பர், 2023) விபத்து நடக்காமல் காத்தீர் நன்றி இன்றைய கால கட்டத்தில், தெருவில் நடந்து சென்றால் கூட accident நடக்கிறது. நாம் சரியாக வண்டி ஓட்டி சென்றால் கூட, முன்னால் சென்று கொண்டு இருக்கும் வண்டி, சடன்பிரேக் போட்டால் அவ்வளவு தான். நமக்கு ஆக்ஸிடன்ட். எந்தவொரு பாதுகாப்பும் இல்லாத நிலையில்தான் வெளியே செல்கிறோம். இப்பொழுது சிந்தித்து பார்க்கலாம். நம் பிள்ளைகளோ, பேரக்குழந்தைகளோ, அனுதினமும் பள்ளிக்கு அல்லது கல்லூரிக்கு சென்று வருகிறார்கள். இந்த…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *