|

நன்றியுடன் 21 நாட்கள் Day – 6

Day – 6 (06- டிசம்பர், 2023)

விபத்து நடக்காமல் காத்தீர் நன்றி

இன்றைய கால கட்டத்தில், தெருவில் நடந்து சென்றால் கூட accident நடக்கிறது. நாம் சரியாக வண்டி ஓட்டி சென்றால் கூட, முன்னால் சென்று கொண்டு இருக்கும் வண்டி, சடன்பிரேக் போட்டால் அவ்வளவு தான். நமக்கு ஆக்ஸிடன்ட். எந்தவொரு பாதுகாப்பும் இல்லாத நிலையில்தான் வெளியே செல்கிறோம். இப்பொழுது சிந்தித்து பார்க்கலாம்.

நம் பிள்ளைகளோ, பேரக்குழந்தைகளோ, அனுதினமும் பள்ளிக்கு அல்லது கல்லூரிக்கு சென்று வருகிறார்கள். இந்த வருடம் முழுவதும் கர்த்தர் பாதுகாத்தார். நன்றி சொல்லலாமா? சென்னையில், பள்ளி வாகனத்தில் பள்ளிக்கு சென்ற குழந்தை, பள்ளியில் வைத்தே, பள்ளி வாகனத்தின் டயரில் சிக்கி உயிரிழந்ததை செய்தியில் பார்த்து இருப்போம். அந்த குழந்தை பாவி, நாம் நீதிமான்களா? இல்லையே. ஆனாலும் கூட, கர்த்தர் நம் பிள்ளைகளை பாதுகாத்துக் கொண்டிருக்கிறாரே. எவ்வளவு நன்றி சொல்ல வேண்டும்.

பெண்களோ, ஆண்களோ, அனுதினமும் வேலைக்கு சென்று வரும் சூழல் உள்ளது. ஒவ்வொரு நாளும், நாம் நடந்து செல்லும்போது, பைக்கில் காரில் செல்லும்போது பாதுகாத்தாரே. சென்னையில், ரோட்டில் பெருக்கி கொண்டிருந்த மாநகராட்சி பெண்ணை, ஒரு கார் இடித்து, அவர் மேலேறி, அந்த இடத்திலேயே அந்த பெண் மரித்தாரே. எவ்வளவு கொடுமை அல்லவா! இன்றும் நாம் உயிரோடு இருக்கிறோம். நாம் ஒன்றும் நல்ல ஓட்டுனர் அல்ல. ஆனால் இன்று உயிரோடு இருந்து, இதை படித்துக் கொண்டிருக்கிறோமே. நன்றி சொல்வோம்.

வீட்டிலிருக்கும்போது கூட பாதுகாப்பு கிடையாது. திடீரென தீ விபத்து, சிலிண்டர் வெடிப்பு என்று எவ்வளவோ விபத்துக்கள் நடந்து கொண்டிருக்கின்றன. நாம் நலமுடன் இருக்கிறோம். மின்சாரம் பாய்ந்து சாவு என்று வாசிக்கிறோம். நாம் எவ்வளவு மின் உபகரணங்கள் உபயோகித்துக் கொண்டிருக்கிறோம். தூங்கி எழுந்து, பால் பாக்கெட் எடுக்க ஃப்ரிட்ஜ் திறந்த பெண் மீது மின்சாரம் பாய்ந்தது என்ற செய்தி அதிர்ச்சியைத் தந்தது. நாமும் தினமும் அதேதான் செய்து கொண்டு இருக்கிறோம். கர்த்தர் நம்மை காத்தாரே. திடீரென திருடர் வீட்டில் நுழைந்து கொலை கொள்ளை நடக்கிறது. கர்த்தர் இன்றும் நம்மை பாதுகாத்துக் கொண்டு இருக்கிறார். தேவனுக்கு நன்றி சொல்லலாமா?

ஒருமுறை ஒரு செய்திதாளில் வந்த செய்தியைப் படித்தேன். நாக்ர்கோவிலில், தினமும் அதிகாலை ஜெபிக்கும் தாய், அன்றும் வழக்கம் போல பிரார்த்தனை செய்வதற்காக 3 மணிக்கு எழுந்த போது, வீடு முழுவதும் மின்கசிவு ஏற்பட்டு புகை சூழ்ந்து இருந்துள்ளது. எப்படியோ வீட்டின் மற்றவர்கள் வெளியே வந்துவிட, அவரின் மகன் மட்டும் தனியே ஒரு ரூமில் மாட்டி விட்டான். வெளியே வர வேண்டுமானால், கரும்புகையில் சிக்கிவிடுவான், எனவே அந்த மகனின் அறையின் சுவரை ட்ரில் செய்து, சுவரில் துளையிட்டு மகனை வெளியே காப்பாற்றினார்கள்.

அந்த தாய் 3 மணிக்கு எழவில்லை என்றால், எல்லாரும் மரித்திருப்பர். ஆனால் அந்த குடும்பமே தாயின் ஜெபத்தால் பாதுகாக்கப்பட்டது. ஒருவிசை சிந்தித்து பார்ப்போம், நாம் தினமும் தவறாமல் ஜெபிக்கிறோமா? ஆனால் இன்றும் நாம் உயிருடன் இருக்கிறோம். கிருபை என்றால் என்ன என்பது, நம் வாழ்க்கையை யோசித்தாலே புரிந்து விடும். நன்றி சொல்வோம், தேவன் விபத்திலிருந்து காத்தார் என்பதற்காக.  நமக்கு தெரியாமல், நம்மை பல இடங்களில் தேவன் காப்பாற்றி இருப்பார். அதற்காகவும் சேர்த்து நன்றி சொல்வோம்.

Similar Posts

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 7

    Day – 7 (07- டிசம்பர், 2023) நீரே மெய்தெய்வம் என்று உணர வைத்ததற்காக நன்றி இந்த தளத்தில் வாசித்துக் கொண்டு இருப்போம் என்றால், நாம் இயேசுவை ஏற்றுக் கொண்டவர்களாகத்தான் இருப்போம். இயேசுவே மேசியா என்பதை அறிந்தவர்கள் நாம். கல்லோ மண்ணோ தெய்வம் அல்ல, நம் தேவனுக்கு உருவம் கிடையாது, ஆனால் நம் தேவன் நமக்குள் வசிக்கிறார். அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்குள்ளும் வாழ்கிறார், ஒவ்வொருவருடனும் பேசுகிறார், அற்புதங்களைச் செய்கிறார். இதெல்லாம் நமக்குத் தெரியும். இப்பொழுது கொஞ்சம் சிந்திப்போமா?…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 20

    Day – 20 (20- டிசம்பர், 2023) அபிஷேகத்துக்காக நன்றி அப்பா, என் மீதுள்ள உம் அபிஷேகத்துக்காக நன்றி. இந்த 2023ல் எத்தனையோ முறை சோர்ந்து போயிருக்கிறேன், மனம் தளர்ந்து போயிருக்கிறேன், பாவத்தில் விழுந்திருக்கிறேன், வேதத்தை மறந்து ஓடியிருக்கிறேன், உம்மிடம் பேச நேரம் கொடுக்காமல் போயிருக்கிறேன், துணிகரமாக சில காரியங்கள் செய்திருக்கிறேன். உம்மை மறுதலித்திருக்கிறேன், ஊழியர்களை குறை சொல்லி இருக்கிறேன், தேவனுடைய ராஜ்யத்துக்கான வேலையில் ஈடுபடவில்லை, தேவையற்ற வெட்டி கதைகளில் நேரம் செலவழித்தேன், அடுத்தவரை பொறாமையுடன் பார்த்தேன்,…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 21

    Day – 21 (21- டிசம்பர், 2023) கடைசி கால எழுப்புதலுக்காக நன்றி கடைசி கால எழுப்புதல் என்பது சுக்கோத் அனுபவம். அது ஆவியில் நடக்கிற அனுபவம். மூன்றாம் பெந்தெகோஸ்தே, Joy anointing என்றெல்லாம் அழைக்கப்படுகிறது என்று பண்டிகைகள் பற்றிய பதிவில் அறிந்தோம். இந்த கடைசி கால எழுப்புதலில் என்ன நடக்கும்? ஜனங்கள் கூட்டம்கூட்டமாக இரட்சிக்கப்படுவார்கள். அனேக அற்புத அடையாளங்கள் நடக்கும். மறுரூப அனுபவம் நடக்கும். இன்னும் பல காரியங்கள் சொல்லலாம். ஆனால், இன்று கூட ஆங்காங்கே…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 8

    Day – 8 (08- டிசம்பர், 2023)  நல்ல நண்பர்கள் தந்தீர் நன்றி இந்த வருடத்தில் தேவன் நமக்கு தந்த நண்பர்களுக்காக நன்றி சொல்ல வேண்டும்.  நமக்கு சில ஆவிக்குரிய நண்பர்கள் இருப்பார்கள், ஒருவேளை சபையில் யாரோ ஒருவராக இருப்பார், அல்லது நாம் இணைந்திருக்கும் ஏதோ ஒரு இடத்தில், ஆவிக்குரிய நண்பர் இருப்பார்கள். நமக்கு ஒரு பிரச்சனை என்றவுடன், எனக்காக ஜெபியுங்கள் என்று சொல்ல ஒரு நண்பர் இருந்தால், அதற்காக நன்றி சொல்ல வேண்டும். சிலருக்கு அந்த…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 4

    Day – 4 (04- டிசம்பர், 2023) பலவீனத்தில் பெலன் தந்ததற்காக நன்றி இந்த நன்றிக்கு நான் எழுதவே தேவையில்லை. ஒவ்வொருவரும், 1000 நன்றியை வரிசையாக சொல்லலாம். நம் குடும்பத்தில் அவ்வளவு பலவீனங்கள் வந்திருக்கிறது. நம் பெற்றோருக்கு, நம் பிள்ளைகளுக்கு என்று யாரோ ஒருவர் சுகவீனமாய் இருந்திருப்பார்கள். ஆனால் தேவன் பெலனைக் கொடுத்தார் அல்லவா! அதற்காக நன்றி சொல்வோம். என் அனுபவத்தில், இந்த 2023 ஆரம்பிக்கும் போது, ஜனவரி மாதத்தில் ஒருவர் மாற்றி ஒருவர் மருத்துவமனைக்கு சென்றோம்….

  • |

    விசுவாச அறிக்கை (நீதிமன்ற வழக்கு)

    விசுவாச அறிக்கை (நீதிமன்ற வழக்கு) இன்றைக்கு அனேக கிறிஸ்தவர்களின் கவலை நீதிமன்ற வழக்கு. ஒருவர் தவறு செய்திருந்தால் நீதிமன்றம் செல்ல வேண்டும் என்ற காலம் மாறி, தவறு செய்யாதவர்கள் கூட நீதிமன்றம் செல்லும் நிலை வந்துவிட்டது. தவறு செய்யாதவர்கள் இதனால், அதிக கவலைக்கு உள்ளாகி விடுகின்றனர். விரக்திக்கே சென்று விடுகின்றனர். நமது கஷ்டமான நேரத்தில், நம் வாயால் என்ன அறிக்கையிடுகிறோம் என்பதே நம் கிறிஸ்தவ வாழ்க்கை நிலையைக் காட்டுகிறது. மரணமோ, ஜீவனோ, அது நம் நாவில்தான் இருக்கிறது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *