|

நன்றியுடன் 21 நாட்கள் Day – 2

Day – 2 (02- டிசம்பர், 2023)

நல்ல குடும்பத்துக்காக நன்றி

இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள். இன்று நாம் நன்றி சொல்ல இருப்பது நம் குடும்பத்திற்காக. தேவன் நமக்கு குடும்பத்தை தந்திருக்கிறார். நன்றி சொல்வது நம் கடமை. நாம் எப்போதுமே இருப்பதை உணராமல், இல்லாததை நினைத்தே கவலைப்படுபவர்கள். ஒருவேளை, கணவரின் சம்பளம் குறைவு என்றால் அல்லது, கணவர் குடிக்கிறார் என்றால், மனைவி எப்போதும் ஏதாவது சொல்லிக் கொண்டே இருக்கிறார் என்றால், இவரைப் போய் திருமணம் செய்து விட்டோமே என்று கவலைப்படுவோம். ஆனால் இதுவரை உடனிருந்த பெற்றோர் நல்ல பெற்றோராக இருந்திருப்பார்கள். நல்ல நண்பர்கள் இருந்திருப்பார்கள். சந்தோஷமான வாழ்க்கை இருந்திருக்கும், அதையெல்லாம் மறந்து விடுவோம். நம் குடும்பத்துக்காக நன்றி சொல்வது அவசியம். கர்த்தர் நம்மை கிருபையாக நடத்திக் கொண்டு வருகிறார் என்பது நம் எல்லாருக்கும் தெரியும். அதை யோசித்து நன்றி சொல்லி இருக்கிறோமா? 

இரண்டு மாதங்களுக்கு முன், உடன் படித்த இரு கல்லூரி தோழிகளிடம் பேசினேன். இருவருமே, கல்லூரி விடுதியில் படித்தவர்கள், மிகவும் நல்ல பிள்ளைகள், தங்கள் வாலிப நாட்களை கறைபடாமல் காத்தவர்கள். அவர்களிடம் பேசும்போது, திருமண வாழ்வில் அடி, உதை என்று கஷ்டப்படுகிறார்கள். நீ சந்தோஷமாக இல்லையா என்று வருத்தத்துடன் கேட்கும்போது, “கர்த்தருக்குள் சந்தோஷமாக இருக்கிறேன்” என்கிற பதில் கிடைத்தது. நான் உண்மையில் உடைந்து தான் போனேன். அதேபோல, என் மேற்படிப்பில் என்னுடன் படித்த தோழியும் அதே சூழலில் இருக்கிறாள். இதைக் கேள்விப்படும்போது தான், கர்த்தர் எனக்கு கொடுத்த கிருபையையே உணர முடிந்தது என்னால்.

ஒருவரை எவ்வளவு சோதிக்க வேண்டும் என்பது தேவனுக்கு தெரியும் என்று கூறுவார்கள். அது ஒருவேளை உண்மைதான் போல. “அவர்கள் சோதனையிலும் கர்த்தரை விட்டு பின்வாங்காதவர்கள்” என்று தேவன் அறிந்ததினால்தான், அவர்களுக்கு இவ்வளவு பாடுகள் என்று எண்ணிக்கொண்டேன். தங்கள் சோதனைக்காக நன்றி சொல்கிற தோழிகள். அவர்களிடம் பேசிய பின்னர் தான், என் வாழ்க்கையில் கர்த்தர் கொடுத்திருக்கிற கிருபையை உணர முடிந்தது. “என் விசுவாசம், நான் கர்த்தரை நேசிப்பது எல்லாவற்றையும் விட, அவர்கள் இருக்கும் சூழலில், அவர்கள் கர்த்தரை நேசிப்பது பெரிய காரியம்” என்பதை கற்றுக்கொண்டேன்.

இன்று நம் வீட்டிலும் பிரச்சனைகள் இருக்கலாம். அந்த ஒரு பிரச்சனையை எண்ணி மற்ற காரியங்களில் தேவன் கொடுத்த கிருபையை மறந்து விடக் கூடாது.  இன்றைய பிரச்சனைகள், இதுவரை தேவன் கொடுத்த நன்மையை மறக்க வைப்பதாக இருக்கக் கூடாது. இன்று ஒருவேளை உங்களுக்கு 50 வயதாகிறது என்றால், தேவன் கொடுத்த பெற்றோர், தேவன் கொடுத்த உடன்பிறப்புகள், தேவன் கொடுத்த வாழ்க்கைத்துணை, தேவன் கொடுத்த பிள்ளைகள், தேவன் கொடுத்த மருமக்கள் எல்லாம் எண்ணிப்பார்த்து நன்றி சொல்லவேண்டும். நம் வாழ்வில் பிரிவினை இருந்தால் கூட, கர்த்தருக்கு தெரியாமல் எதுவும் என் வாழ்வில் நடக்காது என்ற உறுதியுடன் துதிக்கலாமே.

பலர், பெற்றோர் இல்லாமல், இல்லங்களில் வளர்ந்தார்கள், பலர் வாழ்க்கைத்துணை கிடைக்காமல் கஷ்டப்பட்டார்கள், பல குடும்பங்கள் பிரிந்து தான் இருக்கிறது, ஆனால் கர்த்தர் நடத்துகிறார் அல்லவா? யாரையுமே கைவிடவில்லையே! சில தாமதங்கள் இன்று இருந்தாலும், ஒரு நாள் ஒன்று வரும், அது கர்த்தர் நமக்காக வைத்திருக்கும் நாள், அன்று எல்லாருடைய கண்களுக்கும் முன்பாக உயர்த்துவார் தேவன். இன்று, இப்போது, நாம் எவ்வளவு கோபப்பட்டாலும், நம்முடன் இருக்கிற ஏதோ ஒரு உறவு, நமக்கு இருக்கிறதல்லவா! இல்லாத உறவை எண்ணி வருத்தப்படுவதை விட, கூட இருக்கும் உறவுகளுக்காக இன்றைக்கு தேவனுக்கு நன்றி சொல்வோமே.  

Similar Posts

  • |

    விசுவாச அறிக்கை Intro

    விசுவாச அறிக்கை நமது அமைச்சர், திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு, ஏதோ ஒரு பிரச்சனை என்றால், நம்மை போல சாதாரண குடிமக்கள் பயப்படுவது போல அவர் பயப்படுவாரா என்பது சந்தேகமே. ஏனென்றால், அவரது அப்பா, தமிழ் நாட்டின் முதலமைச்சர். ஒரு முதலமைச்சரின் மகன் பயமில்லாமல் வாழ முடியுமானால், ஒரு ராஜாவின் மகன் பயமில்லாமல் வாழ முடியுமென்றால், தேவாதி தேவனின் பிள்ளைகள் நாம் எப்படி வாழ வேண்டும். ஆனால், அப்படிப்பட்ட வாழ்வு வாழ்கிறோமா என்பது சந்தேகமே! அநேக சபைகளில் விசுவாச…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 20

    Day – 20 (20- டிசம்பர், 2023) அபிஷேகத்துக்காக நன்றி அப்பா, என் மீதுள்ள உம் அபிஷேகத்துக்காக நன்றி. இந்த 2023ல் எத்தனையோ முறை சோர்ந்து போயிருக்கிறேன், மனம் தளர்ந்து போயிருக்கிறேன், பாவத்தில் விழுந்திருக்கிறேன், வேதத்தை மறந்து ஓடியிருக்கிறேன், உம்மிடம் பேச நேரம் கொடுக்காமல் போயிருக்கிறேன், துணிகரமாக சில காரியங்கள் செய்திருக்கிறேன். உம்மை மறுதலித்திருக்கிறேன், ஊழியர்களை குறை சொல்லி இருக்கிறேன், தேவனுடைய ராஜ்யத்துக்கான வேலையில் ஈடுபடவில்லை, தேவையற்ற வெட்டி கதைகளில் நேரம் செலவழித்தேன், அடுத்தவரை பொறாமையுடன் பார்த்தேன்,…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 15

    Day – 15 (15- டிசம்பர், 2023) ஆவிக்குரிய யுத்தத்தில் துணை நின்றீர் நன்றி பல நேரங்களில், சாத்தான் சில உத்திகளைப்(Strategies) பயன்படுத்தி, நம்மை மேற்கொள்ள பார்ப்பான். ஏமாற்றுதல்(deception), குற்றச்சாட்டு(accusation) ,அலட்சியம்(negligence), கிளர்ச்சி(rebelliousness), பயம்(fear), தெய்வ பக்தியின்மை(ungodliness), சோதனை(temptations) போன்ற பல காரியங்கள் நம் வாழ்வில் இருக்கும். சிலர் நம் கூடவே இருப்பார்கள், ஏமாற்றி விட்டு போயிருப்பார்கள்… நம்மை எல்லாரும் குற்றம்சாட்டி பேசுவார்கள்… மதிப்பு கொடுக்காமல் நம்மை அலட்சியப்படுத்துவார்கள்… நமக்கு நிறைய சோதனை வரும்… நம் நண்பர்களுக்குள்,…

  • |

    சுகத்திற்கான விசுவாச அறிக்கைகள்

    நியாயப்பிரமாண காலத்தில், நான் செய்த தவறுக்கு எனக்கு தண்டனை உண்டு. அதனால் எனக்கு வியாதி, தரித்திரம், சாபம் எல்லாம் வந்தது. சரியாகச் சொல்ல வேண்டுமானால், ஆதாம் செய்த தவறினால் உலகத்துக்கே சாபம் வந்தது. அது உண்மையாக இருக்குமானால், அதேபோல பிந்தின ஆதாமாகிய இயேசுவால், உலகத்தின் எல்லா சாபமும், வியாதியும், தரித்திரமும் மாறிவிட்டது. இப்பொழுது நான் கிருபைக்குள்ளாக வந்து விட்டேன். என் பலவீனங்கள் எல்லாம் அவர் சுமந்து தீர்த்து விட்டார். நான் சுமக்க தேவை இல்லை. நான் விடுதலை…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 9

    Day – 9 (09- டிசம்பர், 2023) அடிமைதனம் வராமல் காத்தீர் நன்றி இன்றைக்கு முக்கியமான ஒரு காரியத்துக்காக நன்றி சொல்லப் போகிறோம். ஆண்டவரே, நான் ஒரு பாவி என்பதை நாம் ஈஸியாக ஒத்துக் கொள்வோம். இயேசுவின் இரத்தம் என்னைக் கழுவி விட்டது, நான் இப்பொழுது நீதிமான் என்பதை நாம் அறிந்தாலும்கூட, பல சமயங்களில் நம்மை பாவியாகவே நினைத்துக் கொள்கிறோம். முதலாவது தேவனுக்கு, நம்மை நீதிமான் ஆக்கியதற்காக நன்றி சொல்வோம். நாம் எல்லாரும் மனிதர்கள், நம்மால் ஒருவரை…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 19

    Day – 19 (19- டிசம்பர், 2023) இரட்சிப்புக்காக நன்றி தேவன் இந்த உலகத்தை மனிதனிடம் கொடுத்து, பலுகி பெருகுங்கள் என்றும், எல்லாவற்றையும் ஆண்டு கொள்ளுங்கள் என்றும் கூறினார். சாத்தான் சதியால், கீழ்ப்படியாமை வந்து, தேவனோடு இருந்து நெருங்கிய தொடர்பை துண்டித்துப் போட்டது. அதன் பின்னர், இந்த உலகத்தின் அதிபதியாக சாத்தான் இருந்து நம்மை ஆண்டு வந்தான். ஒரு கூட்ட ஜனங்கள் மட்டும் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு, இஸ்ரேல் என்னும் இனமாக வாழ்ந்தார்கள். அவர்களாலும் சாத்தானை ஜெயிக்க முடியவில்லை….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *