|

நன்றியுடன் 21 நாட்கள் Day – 3

Day – 3 (03- டிசம்பர், 2023)

அனுதின உணவுக்காக நன்றி

இந்த நன்றி சொல்லும் நாளில், இன்று உணவுக்காக நன்றி சொல்லப் போகிறோம். “எல்லாரும்தானே சாப்பிடுகிறார்கள். நான் மட்டும் ஸ்பெஷல் விருந்தா சாப்பிடுகிறேன்?” என்று நினைக்கலாம். ஆனால் உண்மை அதுதான். நாம் விருந்து தான் சாப்பிடுகிறோம். இன்று நம் காஃபியில் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால், அது விருந்து தான். ஏனெனில் எத்தனையோ பேர், ஆசையிருந்தாலும், சுகர் என்பதால் சாப்பிட முடியாமல் இருக்கின்றனர். அசைவ உணவு சாப்பிட்டால் அது விருந்து தான். ஏனெனில், மட்டன் சாப்பிட்டால் கொல்ஸ்ட்ரால் என்று, 30 வயதிலே மட்டன் சாப்பிட முடியாமல் ஏங்குபவர்கள் அதிகம். ஏதோ ஒரு நாள், கடையில் பரோட்டா சாப்பிட்டால், அது கூட விருந்து தான். ஏனெனில், பரோட்டா சாப்பிட ஆசை இருந்தும், சாப்பிட முடியாமல் இளவயதினர் இருக்கின்றனர். இதேபோல நிறைய சொல்லலாம். பழைய கஞ்சி சாப்பிட்டால் சளி பிடிப்பவர் அனேகர். தண்ணீர் அதிகமாக குடித்தால் வாந்தி எடுப்பவர் அனேகர். ஒரு சகோதரன், 25 வயதில் டையலிசிஸ் செய்யும் ஒரு பையனால், இவ்வளவு மில்லிலிட்டர் தண்ணீர் தான் உடலில் சேர்க்க வேண்டும் என்று, குழம்பு கூட ஊற்றாமல், அளவு சாப்பாடு தான் சாப்பிட முடியும்.  நினைத்தவுடன் தண்ணீர் குடிக்க முடியாது. இப்பொழுது யோசித்தால், நாம் எவ்வளவு அருமையாக விருந்து சாப்பிடுகிறோம் என்பது புரியும். டெய்லி சாப்பாடு தர்றீங்க, நன்றி என்ற வார்த்தை அல்ல, ஆ… இவ்வளவு பேர் கஷ்டப்படும்போது, நான் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவளாக இருக்கிறேன் என்று மனதார உணர்ந்து சொல்வதே உண்மையான நன்றி.

ஒரு ஊழியர், ஊழியத்துக்கு போகும்போது, காரில் ஏறியவுடன், இன்றைய நாளின் கூட்டத்தில் அனேக ஆத்துமாக்களை அறுவடை செய்ய வேண்டும் என்று கண்களை மூடி ஜெபித்துக்கொண்டே போவாராம். திரும்பி வரும்போதும், காரில் ஏறியவுடன், கண்களை மூடி ஆண்டவரே நன்றி என்று ஜெபித்துக்கொண்டே வருவாராம். ஒரு நாள் அந்த ஊழியரோடு ஆண்டவர் இடைபட்டாராம். “நீ சொல்லுகின்ற நன்றி எனக்கு பிரியமானது தான். அதை விட பிரியமானது ஒன்று உண்டு தெரியுமா?” என்று கேட்டாராம்.  “நான் உனக்காக பார்த்து பார்த்து படைத்த, இந்த படைப்புகளைப் பார். அழகிய மலர்களைப் பார். மரங்களைப் பார். உனக்காக நான் படைத்த படைப்புகளைப் பார்த்து, நீ அப்படியே சந்தோஷப்பட்டு, எனக்காக இதைப் படைத்தீரே நன்றி என்று சொன்னால், என் இருதயம் களிகூறும்” என்று ஆண்டவர் கூறினாராம்.

ஒரு சூரியனைப் பார்க்கும்போது, நமக்கு தேவையான் அளவு மட்டும் வெளிச்சம் தருகிறது, தேவையான அளவு மட்டும் வெப்பம் தருகிறது. அதன் வெப்பம் கொஞ்சம் அதிகமானால் கூட, நம்மால் வாழ முடியாது. அதற்கு ஏற்றாற்போல சரியான இடத்தில் சூரியனை வைத்திருக்கிறார். உம் படைப்பான சூரியனுக்காக நன்றி என்று சொல்லலாம். கடலைப் பார்த்தால், இந்த அலைகளுக்கு ஒரு லிமிட் வைத்து இம்மட்டும் வா, மிஞ்சி வராதே என்று வைத்திருக்கிறாரே என்று நன்றி சொல்ல வேண்டும். இப்படி பார்க்கிற ஒவ்வொரு படைப்பும் நமக்காக படைக்கப்பட்டது என்பதை உணர்ந்து நன்றி சொல்வது ஆண்டவருக்கு பிரியமான நன்றி பலி.

ஒவ்வொரு முறை சாப்பிடும்போதும், இதை சாப்பிட முடியாதவர்கள் எத்தனையோபேர் இருக்கிறார்கள், நான் இன்று சாப்பிடுகிறேன் நன்றி என்று நாம் சொல்லி இருக்க மாட்டோம். இன்றாவது, இந்த வருடம் முழுவதும் நாம் நன்றாக சாப்பிட்டோம். எத்தனை நாட்கள் ஹோட்டலில் சாப்பிட்டோம். என்பதை எல்லாம் நினைத்து பார்த்து, நன்றி சொல்லலாமா?

உணவே மருந்து என்பது மாறி, உணவே விஷமாகி விட்டது. சாப்பிட்டு கூல்டிரிங்க்ஸ் குடித்தவர் சாவு. ஹோட்டலில் சென்று நண்டு சாப்பிட்டவர், சிக்கன் சாப்பிட்டவர், ஷவர்மா சாப்பிட்டவர் சாவு என்றெல்லாம் அறிகிறோம். அவர்களைப் பார்க்கிலும் நாம் நல்லவர் என்பதினால் அல்ல, கர்த்தருடைய கிருபையால் இம்மட்டும் இருக்கிறோம். நினைத்துப் பார்த்து நன்றி சொல்வோம். சில காரியங்கள் நாமும் சாப்பிட கூடாது என்று இருந்தாலும், ஏதோ சில உணவுகள் சாப்பிடுகிறோமே… உணவே சாப்பிட முடியாமல் கஷ்டப்படுவோர் ஏராளம். மனதுருகி நன்றி சொல்வோம்.

Similar Posts

  • |

    விசுவாச அறிக்கை Intro

    விசுவாச அறிக்கை நமது அமைச்சர், திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு, ஏதோ ஒரு பிரச்சனை என்றால், நம்மை போல சாதாரண குடிமக்கள் பயப்படுவது போல அவர் பயப்படுவாரா என்பது சந்தேகமே. ஏனென்றால், அவரது அப்பா, தமிழ் நாட்டின் முதலமைச்சர். ஒரு முதலமைச்சரின் மகன் பயமில்லாமல் வாழ முடியுமானால், ஒரு ராஜாவின் மகன் பயமில்லாமல் வாழ முடியுமென்றால், தேவாதி தேவனின் பிள்ளைகள் நாம் எப்படி வாழ வேண்டும். ஆனால், அப்படிப்பட்ட வாழ்வு வாழ்கிறோமா என்பது சந்தேகமே! அநேக சபைகளில் விசுவாச…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 18

    Day – 18 (18- டிசம்பர், 2023) அரசியல் தலைவர்களுக்காக நன்றி நமக்கு தேவன் கொடுத்த அரசியல் தலைவர்களுக்காக நன்றி சொல்லப்போகிறோம். திமுக அல்லது அதிமுக என்ற கட்சிகளுக்காக அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு முன்பாக அதிமுக ஆட்சியில் இருந்து, இப்போது திமுக ஆட்சியில் இருக்கிறது. எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், கிறிஸ்தவர்கள் ஆங்காங்கே தாக்கப்பட்டாலும், இன்றும் நம் தமிழ் நாட்டில் ஓரளவு சுவிசேஷம் அறிவிக்கப்படுகிறது அல்லவா! நன்றி சொல்வோம். உண்மையில், இப்போது தமிழ்…

  • |

    விசுவாச அறிக்கை புது வீடு

    எபிரெயர் 3:4 ஏனெனில், எந்த வீடும் ஒருவனால் உண்டாக்கப்படும்; எல்லாவற்றையும் உண்டுபண்ணினவர் தேவன். Thiru Viviliam ஏனெனில், ஒவ்வொரு வீட்டையும் கட்டி எழுப்ப ஒருவர் இருப்பது போல, எல்லாவற்றையும் கட்டி எழுப்புகிறவர் ஒருவர் இருக்கிறார்; அவர் கடவுளே. எல்லாவற்றையும் உண்டு பண்ணின தேவன், தற்போது எங்களுக்கென ஒரு வீட்டைக் கொடுத்ததற்காக நன்றி சொல்லுகிறோம். மத்தேயு 7:24,25 24.ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 7

    Day – 7 (07- டிசம்பர், 2023) நீரே மெய்தெய்வம் என்று உணர வைத்ததற்காக நன்றி இந்த தளத்தில் வாசித்துக் கொண்டு இருப்போம் என்றால், நாம் இயேசுவை ஏற்றுக் கொண்டவர்களாகத்தான் இருப்போம். இயேசுவே மேசியா என்பதை அறிந்தவர்கள் நாம். கல்லோ மண்ணோ தெய்வம் அல்ல, நம் தேவனுக்கு உருவம் கிடையாது, ஆனால் நம் தேவன் நமக்குள் வசிக்கிறார். அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்குள்ளும் வாழ்கிறார், ஒவ்வொருவருடனும் பேசுகிறார், அற்புதங்களைச் செய்கிறார். இதெல்லாம் நமக்குத் தெரியும். இப்பொழுது கொஞ்சம் சிந்திப்போமா?…

  • |

    சுகத்திற்கான விசுவாச அறிக்கைகள்

    நியாயப்பிரமாண காலத்தில், நான் செய்த தவறுக்கு எனக்கு தண்டனை உண்டு. அதனால் எனக்கு வியாதி, தரித்திரம், சாபம் எல்லாம் வந்தது. சரியாகச் சொல்ல வேண்டுமானால், ஆதாம் செய்த தவறினால் உலகத்துக்கே சாபம் வந்தது. அது உண்மையாக இருக்குமானால், அதேபோல பிந்தின ஆதாமாகிய இயேசுவால், உலகத்தின் எல்லா சாபமும், வியாதியும், தரித்திரமும் மாறிவிட்டது. இப்பொழுது நான் கிருபைக்குள்ளாக வந்து விட்டேன். என் பலவீனங்கள் எல்லாம் அவர் சுமந்து தீர்த்து விட்டார். நான் சுமக்க தேவை இல்லை. நான் விடுதலை…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 17

    Day – 17 (17- டிசம்பர், 2023) சோதனையில் வெற்றி தந்தீர் நன்றி 1 கொரிந்தியர் 10:13 மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார். Tamil Easy Reading Version எல்லா மனிதர்களுக்கும் வரும் சோதனைகளே உங்களுக்கும் வரும். ஆனால் நீங்கள் தேவனை நம்பமுடியும். நீங்கள் தாங்க இயலாத அளவு சோதனைகளை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *