|

நன்றியுடன் 21 நாட்கள் Day – 6

Day – 6 (06- டிசம்பர், 2023)

விபத்து நடக்காமல் காத்தீர் நன்றி

இன்றைய கால கட்டத்தில், தெருவில் நடந்து சென்றால் கூட accident நடக்கிறது. நாம் சரியாக வண்டி ஓட்டி சென்றால் கூட, முன்னால் சென்று கொண்டு இருக்கும் வண்டி, சடன்பிரேக் போட்டால் அவ்வளவு தான். நமக்கு ஆக்ஸிடன்ட். எந்தவொரு பாதுகாப்பும் இல்லாத நிலையில்தான் வெளியே செல்கிறோம். இப்பொழுது சிந்தித்து பார்க்கலாம்.

நம் பிள்ளைகளோ, பேரக்குழந்தைகளோ, அனுதினமும் பள்ளிக்கு அல்லது கல்லூரிக்கு சென்று வருகிறார்கள். இந்த வருடம் முழுவதும் கர்த்தர் பாதுகாத்தார். நன்றி சொல்லலாமா? சென்னையில், பள்ளி வாகனத்தில் பள்ளிக்கு சென்ற குழந்தை, பள்ளியில் வைத்தே, பள்ளி வாகனத்தின் டயரில் சிக்கி உயிரிழந்ததை செய்தியில் பார்த்து இருப்போம். அந்த குழந்தை பாவி, நாம் நீதிமான்களா? இல்லையே. ஆனாலும் கூட, கர்த்தர் நம் பிள்ளைகளை பாதுகாத்துக் கொண்டிருக்கிறாரே. எவ்வளவு நன்றி சொல்ல வேண்டும்.

பெண்களோ, ஆண்களோ, அனுதினமும் வேலைக்கு சென்று வரும் சூழல் உள்ளது. ஒவ்வொரு நாளும், நாம் நடந்து செல்லும்போது, பைக்கில் காரில் செல்லும்போது பாதுகாத்தாரே. சென்னையில், ரோட்டில் பெருக்கி கொண்டிருந்த மாநகராட்சி பெண்ணை, ஒரு கார் இடித்து, அவர் மேலேறி, அந்த இடத்திலேயே அந்த பெண் மரித்தாரே. எவ்வளவு கொடுமை அல்லவா! இன்றும் நாம் உயிரோடு இருக்கிறோம். நாம் ஒன்றும் நல்ல ஓட்டுனர் அல்ல. ஆனால் இன்று உயிரோடு இருந்து, இதை படித்துக் கொண்டிருக்கிறோமே. நன்றி சொல்வோம்.

வீட்டிலிருக்கும்போது கூட பாதுகாப்பு கிடையாது. திடீரென தீ விபத்து, சிலிண்டர் வெடிப்பு என்று எவ்வளவோ விபத்துக்கள் நடந்து கொண்டிருக்கின்றன. நாம் நலமுடன் இருக்கிறோம். மின்சாரம் பாய்ந்து சாவு என்று வாசிக்கிறோம். நாம் எவ்வளவு மின் உபகரணங்கள் உபயோகித்துக் கொண்டிருக்கிறோம். தூங்கி எழுந்து, பால் பாக்கெட் எடுக்க ஃப்ரிட்ஜ் திறந்த பெண் மீது மின்சாரம் பாய்ந்தது என்ற செய்தி அதிர்ச்சியைத் தந்தது. நாமும் தினமும் அதேதான் செய்து கொண்டு இருக்கிறோம். கர்த்தர் நம்மை காத்தாரே. திடீரென திருடர் வீட்டில் நுழைந்து கொலை கொள்ளை நடக்கிறது. கர்த்தர் இன்றும் நம்மை பாதுகாத்துக் கொண்டு இருக்கிறார். தேவனுக்கு நன்றி சொல்லலாமா?

ஒருமுறை ஒரு செய்திதாளில் வந்த செய்தியைப் படித்தேன். நாக்ர்கோவிலில், தினமும் அதிகாலை ஜெபிக்கும் தாய், அன்றும் வழக்கம் போல பிரார்த்தனை செய்வதற்காக 3 மணிக்கு எழுந்த போது, வீடு முழுவதும் மின்கசிவு ஏற்பட்டு புகை சூழ்ந்து இருந்துள்ளது. எப்படியோ வீட்டின் மற்றவர்கள் வெளியே வந்துவிட, அவரின் மகன் மட்டும் தனியே ஒரு ரூமில் மாட்டி விட்டான். வெளியே வர வேண்டுமானால், கரும்புகையில் சிக்கிவிடுவான், எனவே அந்த மகனின் அறையின் சுவரை ட்ரில் செய்து, சுவரில் துளையிட்டு மகனை வெளியே காப்பாற்றினார்கள்.

அந்த தாய் 3 மணிக்கு எழவில்லை என்றால், எல்லாரும் மரித்திருப்பர். ஆனால் அந்த குடும்பமே தாயின் ஜெபத்தால் பாதுகாக்கப்பட்டது. ஒருவிசை சிந்தித்து பார்ப்போம், நாம் தினமும் தவறாமல் ஜெபிக்கிறோமா? ஆனால் இன்றும் நாம் உயிருடன் இருக்கிறோம். கிருபை என்றால் என்ன என்பது, நம் வாழ்க்கையை யோசித்தாலே புரிந்து விடும். நன்றி சொல்வோம், தேவன் விபத்திலிருந்து காத்தார் என்பதற்காக.  நமக்கு தெரியாமல், நம்மை பல இடங்களில் தேவன் காப்பாற்றி இருப்பார். அதற்காகவும் சேர்த்து நன்றி சொல்வோம்.

Similar Posts

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 12

    Day – 12 (12- டிசம்பர், 2023) தெய்வீக பாதுகாப்பிற்காக நன்றி தேவன் நம்மை எவ்வளவோ கிருபையாக, அருமையாக பாதுகாத்து வருகிறார். அதற்காக நன்றி சொல்வது நமது கடமை. இந்த 2023 முழுவதும், கிருபையாக பாதுகாத்து வந்தார் அல்லவா! நம் பிள்ளைகளை, நம் குடும்பத்தாரை தேவன் தான் பாதுகாத்தார் என்பது நிச்சயம். அதற்காக நன்றி சொல்ல வேண்டும். ஒரு மனிதன் கர்த்தரை ஏற்றுக் கொண்டான் என்றாலே அவன், மறுபடியும் பிறந்த அனுபவத்துக்குள் வந்துவிட்டான். அப்போதே தெய்வீக பாதுகாப்பிற்குள்…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 18

    Day – 18 (18- டிசம்பர், 2023) அரசியல் தலைவர்களுக்காக நன்றி நமக்கு தேவன் கொடுத்த அரசியல் தலைவர்களுக்காக நன்றி சொல்லப்போகிறோம். திமுக அல்லது அதிமுக என்ற கட்சிகளுக்காக அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு முன்பாக அதிமுக ஆட்சியில் இருந்து, இப்போது திமுக ஆட்சியில் இருக்கிறது. எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், கிறிஸ்தவர்கள் ஆங்காங்கே தாக்கப்பட்டாலும், இன்றும் நம் தமிழ் நாட்டில் ஓரளவு சுவிசேஷம் அறிவிக்கப்படுகிறது அல்லவா! நன்றி சொல்வோம். உண்மையில், இப்போது தமிழ்…

  • |

    விசுவாச அறிக்கை (நீதிமன்ற வழக்கு)

    விசுவாச அறிக்கை (நீதிமன்ற வழக்கு) இன்றைக்கு அனேக கிறிஸ்தவர்களின் கவலை நீதிமன்ற வழக்கு. ஒருவர் தவறு செய்திருந்தால் நீதிமன்றம் செல்ல வேண்டும் என்ற காலம் மாறி, தவறு செய்யாதவர்கள் கூட நீதிமன்றம் செல்லும் நிலை வந்துவிட்டது. தவறு செய்யாதவர்கள் இதனால், அதிக கவலைக்கு உள்ளாகி விடுகின்றனர். விரக்திக்கே சென்று விடுகின்றனர். நமது கஷ்டமான நேரத்தில், நம் வாயால் என்ன அறிக்கையிடுகிறோம் என்பதே நம் கிறிஸ்தவ வாழ்க்கை நிலையைக் காட்டுகிறது. மரணமோ, ஜீவனோ, அது நம் நாவில்தான் இருக்கிறது….

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 3

    Day – 3 (03- டிசம்பர், 2023) அனுதின உணவுக்காக நன்றி இந்த நன்றி சொல்லும் நாளில், இன்று உணவுக்காக நன்றி சொல்லப் போகிறோம். “எல்லாரும்தானே சாப்பிடுகிறார்கள். நான் மட்டும் ஸ்பெஷல் விருந்தா சாப்பிடுகிறேன்?” என்று நினைக்கலாம். ஆனால் உண்மை அதுதான். நாம் விருந்து தான் சாப்பிடுகிறோம். இன்று நம் காஃபியில் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால், அது விருந்து தான். ஏனெனில் எத்தனையோ பேர், ஆசையிருந்தாலும், சுகர் என்பதால் சாப்பிட முடியாமல் இருக்கின்றனர். அசைவ உணவு சாப்பிட்டால்…

  • |

    சுகத்திற்கான விசுவாச அறிக்கைகள்

    நியாயப்பிரமாண காலத்தில், நான் செய்த தவறுக்கு எனக்கு தண்டனை உண்டு. அதனால் எனக்கு வியாதி, தரித்திரம், சாபம் எல்லாம் வந்தது. சரியாகச் சொல்ல வேண்டுமானால், ஆதாம் செய்த தவறினால் உலகத்துக்கே சாபம் வந்தது. அது உண்மையாக இருக்குமானால், அதேபோல பிந்தின ஆதாமாகிய இயேசுவால், உலகத்தின் எல்லா சாபமும், வியாதியும், தரித்திரமும் மாறிவிட்டது. இப்பொழுது நான் கிருபைக்குள்ளாக வந்து விட்டேன். என் பலவீனங்கள் எல்லாம் அவர் சுமந்து தீர்த்து விட்டார். நான் சுமக்க தேவை இல்லை. நான் விடுதலை…

  • |

    பொருளாதாரத்துக்கான விசுவாச அறிக்கை

    பொருளாதாரத்துக்கான விசுவாச அறிக்கை ஏதோ பாரம்பரியமாக விசுவாச அறிக்கைகளைச் சொன்னால், நிச்சயமாக எந்த பலனும் கிடையாது. நாம் தேவனுடைய பிள்ளை என்கிற அதிகாரத்தை உணர்ந்து, விசுவாசத்தோடு கூறி, அதன் பலனைப் பெற்றுக் கொள்வோம். வசன அறிக்கைகள் பரிசுத்தமுள்ள என் தேவன் எனக்கு கொடுத்த அதிகாரத்தினால், மற்றும் இயேசுவின் நாமத்தினால் நான் அறிக்கையிடுகிறேன். என் கடன்கள் யாவும் கட்டி தீர்ந்தது. எனக்கான பொருளாதார ஆசீர்வாதத்தை நான் கட்டவிழ்க்கிறேன். பரலோகத்திலும் அவை கட்டவிழ்க்கப்படுவதாக. தேவன் எனக்கு கொடுத்த அதிகாரத்தினாலே, என்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *