சிறப்பு பதிவு (Rhema Tamil)

சில பயணங்களை தொடர்வது மிகக் கடினமானது. சில பயணங்கள் சவாலானதும் கூட. எனக்கும் உங்களுக்கும் உள்ள இந்த எழுத்து பயணம் கூட அப்படித்தான். இது என்னுடைய 100 வது பதிவு. இன்னொரு சிறப்பு, நமது தளத்தில் எனது முதல் பதிவை நான் பதிவிட்டது செப்டம்பர் 16,2023. ஆக, நமது தளத்தின் முதல் பிறந்த நாள் இன்று. மகிழ்ச்சியான இந்த நாளில், உங்கள் யாவருக்கும் என் வாழ்த்துக்கள்.

ஒருவேளை நான் எழுத்தாளராக, எனது கற்பனைகளை எழுதிக்கொண்டிருந்தால், 366 நாட்களில், 400 பதிவு கூட பதிவிட்டு இருக்கலாம். ஆனால், வேதத்தின் காரியங்கள் என்பதால், அதிகமாக படித்து எனக்கு புரிந்ததை பதிவு செய்தேன். 366 நாட்களில் 100 பதிவுகள் என்பது, மிகவும் குறைவானதுதான். ஆனால், எனக்கு இது அதிகமானது. இம்மட்டும் பெலன் கொடுத்து, ஞானம் கொடுத்து, என்னை வழி நடத்தி வரும் நம் தேவனுக்கு நன்றி.

இந்த தளத்தை நினைத்த உடனே ஆரம்பிக்கவில்லை. பல செய்திகள் மூலம் பரிசுத்த ஆவியானவர் பேசி, கணவருக்கும் ஒத்த இதயத்தைக் கொடுத்து, இந்த தளத்தை ஆரம்பிக்க உதவி செய்தார்.

Proverbs 14:1 says, “The wise woman builds her house…

  • You are not Home Maker
  • You are Home Builder  

Ps. Angelina Gersson (11-03-2023)

இந்த செய்தி தான், எனக்கு ஆரம்ப புள்ளியாக இருந்தது. அதன்பின், பல ஊழியர்களின் செய்திகள், விசேஷமாக அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களின் Restart என்ற செய்தியில், “நீங்கள் retired ஆகி விட்டேன்… என்னால் எப்படி ஊழியம் செய்ய முடியும் என சாக்கு சொல்லாதீர்கள். கையில் மொபைல் போன் இருக்கும் யாரும், atleast message அனுப்பி கூட ஊழியம் செய்ய முடியும்” என பேசியது என்னை எழுத தூண்டியது. 26-03-2023ல் தளம் ஆரம்பிக்க ஒருவரிடம் பேசினேன். ஆனால் பல முறை முயற்சித்தும் தடங்கல் வந்தது. கர்த்தருடைய கிருபையால், 13-09-2023ல் என் கணவரின் நண்பரிடம் பேசி, 15-09-2023ல் அவரே தளம் ஆரம்பித்து தந்தார். கர்த்தர் முன்குறித்த நாளில், கர்த்தர் எனக்கு ஆரம்பித்துக் கொடுத்தார். அதற்காக கர்த்தருக்கு நன்றி.

அடுத்ததாக, நான் எழுதுவதை வாசித்து எனக்கு குறுஞ்செய்தி அனுப்பிய உற்சாகப்படுத்திய, அல்லது வாசித்து தியானிக்கிற உங்கள் அனைவருக்கும் நன்றி. நான் யாரென்றே தெரியாத போதகர்கள், அவ்வப்போது என் பதிவுகளை வாசித்து, என்னை உற்சாகப்படுத்தினீர்கள். உங்கள் யாவருக்கும் நன்றி. ஒருவேளை, உங்கள் உற்சாகமூட்டும் வார்த்தைகள் இல்லையென்றால், 100 பதிவுகளை நான் எட்டியிருக்க முடியாது. உங்கள் யாவருக்கும் நன்றி.

முதன்முதலாக பண்டிகைகள் பற்றிய பதிவுகளை பதிப்பித்தேன். கடந்த வருடம் செப்டம்பர் 16ம் தேதி, இஸ்ரேலின் Rosh Hashannah. அதாவது எபிரேய காலண்டரில் வருடப் பிறப்பு. அந்த நாளில் நாம் இந்த தளத்தை ஆரம்பித்தோம். இஸ்ரவேலர்கள், எபிரேய வருடப்பிறப்பை New Beginning என்று கூறுவார்கள். நாமும் புதிய ஆரம்பத்தை ஆரம்பித்தோம். கர்த்தர் நம்மை இம்மட்டும் நடத்தி வந்தார். கர்த்தருடைய கிருபையால், “பண்டிகைகள்”, “நன்றியுடன் 21 நாட்கள்”, “விசுவாச அறிக்கைகள்”, “இஸ்ரேல்”, “விடுதலை” என பல தலைப்புகளில் படிக்க ஆரம்பித்தோம். இன்னும் நாம் போகவேண்டிய தூரம் வெகு அதிகம். கர்த்தர் நம்மை நடத்துவார் என்று விசுவாசிக்கிறேன்.

எப்போதும் எந்த மனிதன் சொல்வதும், அப்படியே ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. எனவே நான் எழுதுவதையும் அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கூற மாட்டேன். ஆனால், எல்லாவற்றையும் சோதித்து, நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள். எல்லாவற்றையும் சோதிக்க வேண்டுமானால், எல்லாவற்றையும் அறிந்திருக்க வேண்டும். அதற்காக நமது பதிவுகளை படியுங்கள். ஆவியானவர் உங்களுக்கு என்ன வெளிப்படுத்துகிறாரோ, அதைப் பிடித்துக் கொள்ளுங்கள்.

இந்த நேரத்தில் சிலருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். முதலாவது, நம் தேவாதி தேவனுக்கு நன்றி. அடுத்ததாக, என்னுடன் இணைந்து பயணம் செய்த உங்கள் அனைவருக்கும் நன்றி. எனக்கு மிகவும் சப்போர்ட்டாக இருக்கும் என் குடும்பத்தினருக்கும், என் கணவருக்கும் இந்த நேரத்தில் என் நன்றியைக் கூறுகிறேன். கிட்டத்தட்ட ஒரு வருடம், website வேலைகள் முடிக்காமல், Hosting idல் இருந்தே பதிவிட்டேன். தற்போது, website வேலைகளை முடிக்கலாம் என சனிக்கிழமை(14-09-2024) அதற்கான வேலையில் ஈடுபடும்போது, பழைய பதிவுகள் (99 பதிவுகள்) அப்படியே இல்லாமல் போய்விட்டது. மீண்டும் 99 பதிவுகளையும் நேற்றும், இன்றும், அதே urlல் புதிதாக பதிப்பித்தேன், அதற்கு உறுதுணையாக இருந்த கணவருக்கு நன்றி. கணவரின் நண்பர் எனக்கு free hosting கொடுத்ததுமல்லாமல், அவரது idல் நேற்று வரை பதிவிட உதவி செய்தார். அவருக்கும் என் நன்றி. என்னை அடிக்கடி உற்சாகப்படுத்திய நண்பர்களுக்கும், தினமும் தவறாமல் என் பதிவுகளைப் படித்து thumbsup கொடுத்த என் சகோதரிகளுக்கும் நன்றி. விசேஷமாக கணவரின் ஜெபக்குழுவில் உள்ளவர்களுக்கும், எனது சபையில் உள்ளவர்களுக்கும் மிக்க நன்றி. நீங்கள் உண்மையான விமர்சனம் கொடுத்தீர்கள். மீண்டுமாக என்னுடன் இணைந்து பயணிக்கிற உங்கள் யாவருக்கும் நன்றி. கர்த்தர் நிச்சயமாக உங்கள் வாழ்க்கையில், என் எழுத்தின் மூலம் கிரியை செய்வார் என விசுவாசித்து, கர்த்தருக்கு நன்றி சொல்கிறேன்.

இந்த மகிழ்ச்சியான தருணத்தில், உண்மையில் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஒரே ஒரு காரியம் மட்டும் சொல்ல விரும்புகிறேன். நம் தேவன் உண்மையுள்ளவர். இன்றைக்கு தோற்றுப்போனது போல நாம் இருக்கலாம். ஆனால், நாம் ஜெயிக்கப் பிறந்தவர்கள். நம்மை உயர்த்தும் தேவன் நமக்கு இருக்கிறார். நாம் ஜெயிப்பதற்கான விலையை, 2000 வருடங்கள் முன்பே அவர் கொடுத்து விட்டார். ஒருவேளை நாம் தோற்றுப்போனால், கிறிஸ்து மரித்தது வீணாக இருக்கும். வெற்றி வெகு சீக்கிரம் நம்மை நோக்கி வரும். தளர்ந்து போகாதிருங்கள். விசுவாச வார்த்தைகளை பேசுங்கள். கர்த்தருடைய கிருபை நம் அனைவரோடும் எப்போதும் இருக்கட்டும்.

Similar Posts

  • |

    Day 210 (29-07-2025)

    Scripture Portion: Isaiah 49-53 ஏசாயா 49 1தீவுகளே, எனக்குச் செவிகொடுங்கள்; தூரத்திலிருக்கிற ஜனங்களே, கவனியுங்கள்; தாயின் கர்ப்பத்திலிருந்ததுமுதல் கர்த்தர் என்னை அழைத்து, நான் என் தாயின் வயிற்றில் இருக்கையில் என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தினார். 2அவர் என் வாயைக் கூர்மையான பட்டயமாக்கி, தமது கரத்தின் நிழலினால் என்னை மறைத்து, என்னைத் துலக்கமான அம்பாக்கி, என்னைத் தமது அம்பறாத்தூணியிலே மூடிவைத்தார். 3அவர் என்னை நோக்கி: நீ என் தாசன்; இஸ்ரவேலே, நான் உன்னில் மகிமைப்படுவேன் என்றார். 4அதற்கு நான்: விருதாவாய் உழைக்கிறேன்,…

  • |

    Day 12 (12-01-2025)

    Scripture Portion: Job 32-34 யோபு 32 1யோபு தன் பார்வைக்கு நீதிமானாயிருந்தபடியினால், அவனுக்கு அந்த மூன்று மனுஷரும் பிரதியுத்தரம் சொல்லி ஓய்ந்தார்கள். 2அதினால் ராமின் வம்சத்தானான பூசியனாகிய பரகெயேலின் குமாரன் எலிகூவுக்குக் கோபம்மூண்டது, யோபு, தேவனைப்பார்க்கிலும் தன்னைத்தான் நீதிமானாக்கினதினிமித்தம், அவன்மேலும் அவனுக்குக் கோபம் மூண்டது. 3கொடுக்கத்தக்க மறுமொழி யோபின் மூன்று சிநேகிதருக்கும் அகப்படாதிருந்தும், அவர்கள் அவனை ஆகாதவனென்று தீர்த்ததினிமித்தம், அவர்கள்மேலும் அவனுக்குக் கோபம் மூண்டது. 4அவர்கள் தன்னைப்பார்க்கிலும் வயதுசென்றவர்களானபடியினால், எலிகூ யோபின் வார்த்தைகள் முடிந்து தீருமட்டும்…

  • |

    Day 129 (09-05-2025)

    Scripture Portion: 2 Samuel 8-9, 1 Chronicles 18 2 சாமுவேல் 8 1இதற்குப் பின்பு தாவீது பெலிஸ்தரை முறிய அடித்து, அவர்களைக் கீழ்ப்படுத்தி, மேத்தேக் அம்மாவைப் பிடித்துக்கொண்டான். 2அவன் மோவாபியரையும் முறிய அடித்து, அவர்களைத் தரைமட்டும் பணியப்பண்ணி, அவர்கள்மேல் நூல்போட்டு, இரண்டு பங்கு மனுஷரைக் கொன்றுபோட்டு, ஒரு பங்கை உயிரோடே வைத்தான்; இவ்விதமாய் மோவாபியர் தாவீதைச் சேவித்து, அவனுக்குக் கப்பங்கட்டுகிறவர்களானார்கள். 3ரேகோபின் குமாரனாகிய ஆதாதேசர் என்னும் சோபாவின் ராஜா ஐபிராத்து நதியண்டையில் இருக்கிற சீமையைத்…

  • |

    பண்டிகைகள் – 4 (வேதாகம பண்டிகைகள்)

    வேதாகம பண்டிகைகள் (மேலோட்டம்) Bible Festivals – Outline நாம் ஒவ்வொரு பண்டிகையையும் குறித்து விரிவாகப் பார்க்க இருக்கிறோம். அதற்கு முன்பாக ஒவ்வொரு பண்டிகையையும் பற்றிய மேலோட்டத்தை இப்பதிவில் காணலாம். நாம் இஸ்ரவேலரின் பண்டிகையைக் கொண்டாட அவசியம் இல்லை என்றாலும், அதைப் பற்றிய அறிவு அவசியமாக இருக்கிறது. அவைகள், ‘படைப்பிலிருந்து தேவன் ஒவ்வொரு காரியத்தையும் எவ்வளவு நேர்த்தியாகச் செய்து இருக்கிறார்’ என்பதை நமக்கு கற்றுக் கொடுக்கிறது. ஆதாம் பாவத்தில் விழுந்தாலும் அவனை மீட்பதற்காக தேவன் “மீட்பின் திட்டத்தை”…

  • |

    Day 326 (22-11-2025)

    Scripture Portion: James 1-5 யாக்கோபு 1 1தேவனுக்கும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கும் ஊழியக்காரனாகிய யாக்கோபு, சிதறியிருக்கிற பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் வாழ்த்துதல் சொல்லி எழுதுகிறதாவது: 2என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, 3உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள். 4நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரணகிரியை செய்யக்கடவது. 5உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும். 6ஆனாலும்…

  • |

    Day 328 (24-11-2025)

    Scripture Portion: Galatians 1-3 கலாத்தியர் 1 1மனுஷராலுமல்ல, மனுஷன் மூலமாயுமல்ல, இயேசுகிறிஸ்துவினாலும், அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின பிதாவாகிய தேவனாலும், அப்போஸ்தலனாயிருக்கிற பவுலாகிய நானும், 2என்னுடனேகூட இருக்கிற சகோதரரெல்லாரும், கலாத்தியா நாட்டிலுள்ள சபைகளுக்கு எழுதுகிறதாவது: 3பிதாவாகிய தேவனாலும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக; 4அவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார். 5அவருக்கு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். 6உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை…

4 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *