இஸ்ரேல்-24 (தாவீது – 6 சீயோன்)

தாவீது – 6

தாவீதும் சீயோனும்(எருசலேம்)

யோசுவா காலத்தில் இஸ்ரவேலர் அனேக இடங்களைப் பிடித்தாலும், ஆபிரகாமுக்கு வாக்கு கொடுத்த, அத்தனை இடமும் பிடிக்கவில்லை. காலேபுக்கு, தேவன் எபிரோனை வாக்கு பண்ணியதால், காலேப் தன்னுடைய 85ஆவது வயதில் போய், எபிரோனை சுதந்தரித்துக் கொண்டார். யோசுவா, காலேப் காலத்துக்கு பின்னர், கிட்டத்தட்ட 450 வருடங்கள் நியாயாதிபதிகள் காலம் முடிந்து, பின்னர் சவுல் காலமும் முடிந்து, இப்போது தாவீதின் காலம் வந்து விட்டது.

தாவீது, எபூசியர் பட்டணம் பிடித்து, அதற்கு எருசலேம் என்று பேரிட்டார். அப்போது தான் எருசலேம் வேதத்தில் வருகிறதா? தாவீது தான் முதன் முதலாக எருசலேமை பிடித்தாரா என்றால் இல்லை என்பதே பதில்.  யோசுவா ஏற்கனவே எருசலேமின் ராஜாவைப் பிடித்து கொன்று போட்டார் என்று வேதத்தில் பார்க்கலாம். ஆனால், அந்த ஜனங்களை அவர்களால் விரட்ட முடியவில்லை.

அதற்கு பின்னர் தாவீதின் காலத்தில், எபூசியரை தோற்கடித்து, அந்த பட்டணத்தை இஸ்ரவேலரின் அடையாளமாக மாற்றுகிறார் தாவீது.

ரொம்ப அழகான வசனம் இது. தாவீதை நோக்கி, எங்கள் குருடர் சப்பாணியே போதும் உன்னை துரத்துவதற்கு என்று எபூசியர் சொல்கிறார்கள். ஆனாலும் தாவீது கோட்டையை பிடித்தாராம். எப்படி பிடித்தார் என்று வேதத்தில் சொல்லப்படவில்லை. ஒரே வசனத்தில் முக்கியமான பட்டணத்தின் வரலாறை முடித்து விட்டார். 18ம் நூற்றாண்டு வரையுமே, இந்த வசனத்தை மக்கள் நம்ப கடினமாக இருந்ததாம். நம்மைப் பொறுத்தவரையில், நாம் இந்தியாவில் இருக்கிறோம். நமக்கு இஸ்ரேலின் நில அமைப்பு தெரியாது. நாம் கண்ணை மூடிக்கொண்டு நம்பி விடுவோம். ஆனால் அதை தெரிந்தவர்களால் நம்ப முடியாமல் இருந்தது.

காரணம், மேற்கண்ட படத்தில் இருப்பது தான் சீயோன் கோட்டை. எபூசியர், ஒரு மலையின் மேல் கோட்டை கட்டிக்கொண்டு, மிகவும் பாதுகாப்பாக வாழ்கிறார்கள். அந்த கோட்டையின் மேலே, எப்போதுமே காவல்காரர்கள் இருப்பார்கள். ஒருவன் அந்த பட்டணத்துக்குள் போக வேண்டும் என்றாலே, மலையில் ஏறித்தான் போக முடியும். ஆனால் அதற்குள் மேலிருந்து அம்பு எய்தால், அவ்வளவுதான். அனைவரும் மரிப்பது நிச்சயம்.

கண் தெரியாத ஒருவன், மேலிருந்து அம்பு எய்தால் கூட போதும். மரணம் நிச்சயம். ஏனெனில் அது மலையின் மேல் உள்ள பட்டணம். அதனால்தான் எபூசியர்கள் தாவீதை, அவ்வளவு கேவலமாக பேசினார்கள்.

பின் எப்படி தாவீது வெற்றி கண்டார்? 1867ம் ஆண்டு, பிரிட்டிஷ் பொறியாளரும், தொல்பொருள் ஆய்வாளருமான, சார்லஸ் வாரன் என்பவர், ஒரு சுரங்க பாதையை கண்டுபிடித்தார். அதாவது, எபூசியர் இருந்த எருசலேமுக்கு தண்ணீர் செல்லும் பாதையாக இருக்கும் என்று அனுமானித்தவர், அந்த பாதையில் இறங்கி நடக்க தொடங்குகிறார். முதலில் ஒரு சுரங்க பாதை, பின்னர் கிடை மட்டமான சுரங்க பாதையில் வந்தவர், பின் ஒரு செங்குத்தான பாதையை பார்க்கிறார். செங்குத்து தண்டு என்றழைக்கப்படும் Warren’s Shaft 13 மீட்டர் ஆழமானது. ஆனால் அதில் ஏறக்கூடிய சாத்தியக்கூறு இருப்பதாக தோன்றியதால், ஒவ்வொரு கல்லின் மீதும் கால் வைத்து ஏறுகிறார். பின் சுரங்கப் பாதையின் முடிவில், அது எருசலேமுக்குள் வருவதைக் கண்டறிந்தார். தாவீது எப்படி எருசலேமை பிடித்திருக்க முடியும் என்ற, ஆராய்ச்சியாளரின் கேள்விக்கு துல்லியமான பதில் கிடைத்தது.

எப்படி பிடித்தார்?

தாவீது, தன் படைக்கு ஒரு ஆஃபர் கொடுக்கிறார். யார் முந்தி போய் முறியடிப்பீர்களோ, அவர்கள் என் படைக்கு தளபதி என்றார். இந்த யோவாப் என்பவன், அந்த சுரங்கத்தின் வழியாக நுழைந்து, நேரடியாக, எருசலேம் நகரத்துக்குள் சென்று, அங்கிருந்து வந்து நகரத்தின் வாயிலை திறந்து விட்டு, ராஜாவை உள்ளே அழைத்தான். எபூசியர் எதிர்பாராமல் இருந்ததால், தாவீதின் படை ஈஸியாக வெற்றி பெற்றது. கீழ்க்கண்ட வீடியோவில் தெளிவாகப் பார்க்கலாம்.

https://www.youtube.com/watch?v=XXHiXuPw7zM

நாம் கடந்த பதிவில், உண்மையில் இராட்சதர் இருந்தார்களா? என்று வேதத்தின் அடிப்படையில் பார்த்தோம். இந்த சுரங்கத்தின் கற்களைப் பார்த்தாலே, இராட்சதர் அந்த காலங்களில் வாழ்ந்தார்கள் என்பதை அறியலாம்.  

தாவீது தான், எல்லா இராட்சதரையும் அழித்து, பூமியை சுத்தப்படுத்தியவர் என்று பார்த்தோம். இந்த எபேசு பட்டணமான எருசலேமும், இராட்சதர்களின் பட்டணம்தான். தாவீது அவர்களை துரத்தி விட்டு, அவருக்கு அங்கே ஒரு அரமனை கட்டினார். அதனால் அந்த இடத்துக்கு, தாவீதின் நகரம் என்றும் பேர் வந்தது. 

வேதத்தில் எருசலேம்

  1. மெல்கிசெதேக்கு

இந்த வசனத்தில் சாலேமின் ராஜா என்று சொல்லப்படுவது, எருசலேமின் ராஜா என்று சொல்கிறார்கள்.

இந்த சாலேம் என்னும் இடம், பழைய கானானிய பட்டணம் என்று வல்லுனர்கள் கூறுகிறார்கள். ஆபிரகாம் வாழ்ந்த காலத்தில், மெல்கிசேதேக்கு தொழுது கொண்ட இடங்கள் என்று, தொல்பொருள் ஆய்வாளர் கண்டுபிடித்து இருக்கிறார்கள். எனவே இவர் எருசலேமில் ராஜாவாக இருந்தவர் என்பது உண்மை.

  • ஆபிரகாம்

ஆபிரகாம், ஒரு இடத்தை தேடி அலைந்தான் (The Place). அதுதான் எருசலேம் என்று யூதர்கள் நம்புவதாக நாம் முதல் பதிவில் பார்த்தோம். ஆதியாகமம் 22ல் ஈசாக்கை பலி செலுத்த ஆபிரகாம் சென்ற இடம் மோரியா மலை என்பது, இந்த எருசலேமில் தான் உள்ளது.

  • தாவீது

தாவீது சீயோன் கோட்டையை பிடித்தான் என்று பார்த்தோம் அல்லவா. அது இந்த எருசலேம் தான்.

தாவீது உடன்படிக்கை பெட்டியைக் கொண்டு வந்து சீயோனில் வைத்தார் என்று பார்த்தோம் அல்லவா! அதுவும் இதே எருசலேம் தான்.

தாவீது தனக்காக அரமனை கட்டி, தாவீதின் நகரம் என்று பேரிட்டது கூட, இந்த எருசலேமுக்கு தான்.

  • சாலமோன்

சாலமோன் ஆலயம் கட்டியது இதே எருசலேம். அதுவும் ஈசாக்கை பலி கொடுக்க சென்ற அதே இடம் என்று வேத ஆராய்ச்சியாளர் கூறுகிறார்கள்.

  • பாபிலோன் சாம்ராஜ்யம்

பாபிலோனியர் வந்து, தேவாலயத்தை சுட்டெரித்து, நகரத்தை அழித்து போட்டதும் இதே எருசலேம் தான்.

  • எஸ்றா, நெகேமியா

 எஸ்றா நெகேமியா பட்டணத்தை பழுது பார்த்தது இதே நகரத்தை தான்.

  • இயேசு

இயேசு நமக்காக மரித்து உயிர்த்தெழுந்தது இதே எருசலேமில்.

  • பரிசுத்த ஆவியானவர்

பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்பட்ட மேல்வீடு இருக்கும் அறை எருசலேமில் தான் உள்ளது.

  • இரண்டாம் வருகை

இயேசு மீண்டும் வந்து, ஆட்சி செய்யப்போவது எருசலேமில் இருந்து தான்.

இப்படி பல விஷயங்களில் தொடர்புடைய எருசலேமை, யூதர்களுக்கு சொந்தமாக்கியது தாவீது தான்.

Similar Posts

  • |

    Day 278 (05-10-2025)

    Scripture Portion: Matthew 4, Luke 4-5, John 1:15-51 மத்தேயு 4 1அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார். 2அவர் இரவும் பகலும் நாற்பதுநாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று. 3அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான். 4அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார். 5அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய்,…

  • |

    Day 351 (17-12-2025)

    Scripture Portion: Philippians 1-4 பிலிப்பியர் 1 1இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரராகிய பவுலும் தீமோத்தேயும், பிலிப்பி பட்டணத்தில் கிறிஸ்து இயேசுவுக்குள்ளான பரிசுத்தவான்கள் அனைவருக்கும், கண்காணிகளுக்கும், உதவிக்காரருக்கும் எழுதுகிறதாவது: 2நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. 3சுவிசேஷம் உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நாள்முதல் இதுவரைக்கும் நீங்கள் அதற்கு உடன்பட்டவர்களானபடியால், 4நான் பண்ணுகிற ஒவ்வொரு விண்ணப்பத்திலும் உங்கள் அனைவருக்காகவும் எப்போதும் சந்தோஷத்தோடே விண்ணப்பம்பண்ணி, 5உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்பி, 6நான் உங்களை நினைக்கிறபொழுதெல்லாம்…

  • |

    Day 21 (21-01-2025)

    Scripture Portion: Genesis 27-29 ஆதியாகமம் 27 1ஈசாக்கு முதிர்வயதானதினால் அவன் கண்கள் இருளடைந்து பார்வையற்றுப் போனபோது, அவன் தன் மூத்த குமாரனாகிய ஏசாவை அழைத்து, என் மகனே என்றான்; அவன், இதோ, இருக்கிறேன் என்றான். 2அப்பொழுது அவன்: நான் முதிர்வயதானேன், என் மரணம் இன்ன நாளில் என்று அறியேன். 3ஆகையால், நீ உன் ஆயுதங்களாகிய உன் அம்பறாத்தூணியையும் உன் வில்லையும் எடுத்துக்கொண்டு வனத்துக்குப்போய், எனக்காக வேட்டையாடி, 4அதை எனக்குப் பிரியமாயிருக்கிற ருசியுள்ள பதார்த்தங்களாகச் சமைத்து, நான்…

  • |

    Day 15 (15-01-2025)

    Scripture Portion: Job 40-42 யோபு 40 1பின்னும் கர்த்தர் யோபுக்கு உத்தரமாக: 2சர்வவல்லவரோடே வழக்காடி அவருக்குப் புத்தி படிப்பிக்கிறவன் யார்? தேவன் பேரில் குற்றம் பிடிக்கிறவன் இவைகளுக்கு உத்தரவு சொல்லக்கடவன் என்றார். 3அப்பொழுது யோபு கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: 4இதோ, நான் நீசன்; நான் உமக்கு என்ன மறுஉத்தரவு சொல்லுவேன்; என் கையினால் என் வாயைப் பொத்திக்கொள்ளுகிறேன். 5நான் இரண்டொருதரம் பேசினேன்; இனி நான் பிரதியுத்தரம் கொடாமலும் பேசாமலும் இருப்பேன் என்றான். 6அப்பொழுது கர்த்தர் பெருங்காற்றில் இருந்து யோபுக்கு உத்தரவு அருளினார். 7இப்போதும் புருஷனைப்போல நீ…

  • |

    Day 121 (01-05-2025)

    Scripture Portion: 2 Samuel 5: 1-10, 1 Chronicles 11-12 2 சாமுவேல் 5 (5: 1-10) 1அக்காலத்திலே இஸ்ரவேலின் கோத்திரங்களெல்லாம் எப்ரோனிலிருக்கிற தாவீதினிடத்தில் வந்து: இதோ, நாங்கள் உம்முடைய எலும்பும் உம்முடைய மாம்சமுமானவர்கள். 2சவுல் எங்கள்மேல் ராஜாவாயிருக்கும்போதே இஸ்ரவேலை நடத்திக்கொண்டுபோனவரும், நடத்திக்கொண்டு வந்தவரும் நீரே; கர்த்தர்: என் ஜனமாகிய இஸ்ரவேலை நீ மேய்த்து, நீ இஸ்ரவேலின்மேல் தலைவனாயிருப்பாய் என்று உம்மிடத்தில் சொன்னாரே என்றார்கள். 3இஸ்ரவேலின் மூப்பர் எல்லாரும் எப்ரோனிலே ராஜாவினிடத்தில் வந்தார்கள்; தாவீது ராஜா எப்ரோனிலே கர்த்தருக்கு முன்பாக அவர்களோடே…

  • |

    Day 206 (25-07-2025)

    Scripture Portion: Isaiah 37-39, Psalm 76 ஏசாயா 37 1ராஜாவாகிய எசேக்கியா அதைக்கேட்டபோது, தன் வஸ்திரங்களைக் கிழித்து, இரட்டு உடுத்திக்கொண்டு, கர்த்தருடைய ஆலயத்தில் பிரவேசித்து, 2அரமனை விசாரிப்புக்காரனாகிய எலியாக்கீமையும், சம்பிரதியாகிய செப்னாவையும், ஆசாரியர்களின் மூப்பரையும், ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசியினிடத்திற்கு இரட்டு உடுத்தவர்களாக அனுப்பினான். 3இவர்கள் அவனை நோக்கி: இந்த நாள் நெருக்கமும், கண்டிதமும், தூஷணமும் அநுபவிக்கிற நாள்; பிள்ளைப்பேறு நோக்கியிருக்கிறது; பெறவோ பெலன் இல்லை. 4ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படி, அசீரியா ராஜாவாகிய தன் ஆண்டவனால் அனுப்பப்பட்ட…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *