|

இஸ்ரேல்–25 (தாவீதின் பாவம்)

தாவீதின் பாவம்

தாவீதைப் பற்றிய பல காரியங்களைப் பார்த்தோம். பலருக்கு தாவீது என்றவுடன், பத்சேபாள் தான் நினைவுக்கு வருவார். அதைத் தாண்டி, தாவீது செய்த பல காரியங்களைப் பார்த்தோம். அதிலும் இராட்சதர்களை பூமியில் இராமல் அழித்து போட்டவர் தாவீது என்பது முக்கியமானது.

தாவீது பாவம் செய்யவில்லையா? ஆம், அவர் பாவம் செய்தார். பத்சேபாளுடன் செய்தது பாவம் தான். அது மட்டும்தானா என்றால் இல்லை. தாவீது இன்னொரு முக்கியமான பாவம் செய்தார். என்ன அது?

முதல் காரணம்

இச்சம்வத்தில் தாவீது என்ன பாவம் செய்தார்? நான் அனேக நாட்கள் யோசித்ததுண்டு. ‘எல்லாருமே தன்னிடம் எவ்வளவு போர்ச்சேவகர் இருக்கிறார்கள் என்று அறிந்து, அதன்படி யுத்தத்துக்கான திட்டம் வகுப்பார்கள். தாவீதும் அதையே தான் செய்தார், தேவனுக்கு ஏன் கோபம் வர வேண்டும்?’

அந்த இடத்தில் உண்மையாகவே தாவீது அறிய நினைத்தது, “யூதா கோத்திரத்தில் படைவீரர்கள் எவ்வளவு பேர்? மற்ற கோத்திரங்களை கணக்கிட்டால் எவ்வளவு பேர்?” ஏன் இந்த கணக்கெடுப்பு எடுக்க நினைத்தார் தாவீது?

நம் காலத்தைப் போல தான் அப்போதும் தாவீது செய்தார். தாவீது, யூதா கோத்திரத்தை சேர்ந்தவர். அவரை முதலில் ராஜாவாக்கியதும் யூதா கோத்திரத்தார் தான். சவுலின் மரணத்துக்கு பிறகு தான், முழு 12 கோத்திரத்தையும் தனதாக்கி, இஸ்ரவேல் என்று முழு தேசத்தையும் ஆட்சி செய்தார். ஆனாலும், நம் ஜாதியில்(யூதா கோத்திரத்தில்) எத்தனை பேர், பிற ஜாதி வீரர்கள் எத்தனை பேர் என்று தாவீது அறிய நினைத்தார். அதனால்தான் இந்த கணக்கெடுப்பு நடந்தது. இஸ்ரவேலிலே பட்டயம் உருவத்தக்க யுத்த சேவகர் எட்டுலட்சம்பேர் இருந்தார்கள்; யூதா மனுஷர் ஐந்து லட்சம் பேர் இருந்தார்கள்.

மொத்தம் 13 லட்சம் பேர் இருக்கிறார்கள் என்று சொல்லவில்லை. இஸ்ரவேலில் 8லட்சம், யூதாவில் 5 லட்சம் என்று தான் சொல்கிறார்கள். தேவன் முழு தேசமாக தாவீதின் கையில் கொடுத்திருக்க, தாவீதோ பிரித்து விட்டார். அதனால் தேவ கோபம் வந்தது.

இரண்டாம் காரணம்

தேவன் ஏற்கனவே அவர்களுக்கு, நியாயப்பிரமாணத்தில் கொடுத்திருக்கிறார், கணக்கெடுப்பு நடத்தினால், அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப காணிக்கை செலுத்தவேண்டும் என்று. ஏன் அப்படி சொன்னார்? தெரியாது. ஆனால் நிச்சயமாக அதற்கு பின்னால் ஆவிக்குரிய காரணங்கள் இருக்கும். ஆனால் இந்த விஷயத்தில் தாவீது நியாயப்பிரமாணத்தை மீறி விட்டதால் வாதை வந்தது.

 ஏன் கொள்ளை நோயை தேர்ந்தெடுத்தார்?

தாவீதுக்கு தேவன் 3 ஆப்சன் கொடுத்தார். முதலாவது, பஞ்சம். இரண்டாவது யுத்தம். மூன்றாவது கொள்ளை நோய். பஞ்சம் என்றால், ராஜா தன் ஜனங்களுக்காக, பிற தேசத்தில் உணவு கேட்க வேண்டும். யுத்தம் என்றால், பிற தேசத்தோடு யுத்தம் செய்ய வேண்டும், அதற்கு தன் போர் வீரர்களின் தயவு வேண்டும். மனிதன் முன்பாக போக்ககூடாது என்று, சுய நலமாக யோசித்து தாவீது கொள்ளை நோய் பக்கம் சென்றாரா? இல்லை.

தாவீது சுய நலமாக கொள்ளை நோய்க்கு செல்லவில்லை. தாவீது நன்றாக அறிந்திருந்தார், அவர் பஞ்சம் என்றாலும் சரி, யுத்தம் என்றாலும் சரி, அவர் எப்படியும் வெற்றி பெற்று விடுவார், மனிதர்களின் உதவியால். ஆனால் கொள்ளை நோய் என்றால், தேவன் தான் மனமிறங்க வேண்டும். தேவன் மன்னித்தாரா இல்லையா என்பதையும் கொள்ளை நோய் சரியாவதன் மூலமாக தாவீது அறிய முடியும். அதோடு, தேவன் எவ்வளவு இரக்கமுள்ளவர் என்பதையும் அவர் அறிந்திருந்தார். அதனால்தான் அந்த தண்டனையை செலெக்ட் செய்தார்.

பலி செலுத்திய இடம்

இந்த தண்டனையை நிறுத்துவதற்கு தேவன் பலி செலுத்த சொன்னார். எந்த இடத்திலும் தாவீது பலி செலுத்தலாம். ஆனால் தேவனே ஒரு இடத்தை சொல்லி, அங்கே பலி செலுத்த வேண்டும் என்று சொல்கிறார் ஒரு இடத்தை தேவனே செலெக்ட் செய்தால், அது எவ்வளவு முக்கியமானது அல்லவா. ஆம், அங்கே தான் சாலமோனை ஆலயம் கட்ட சொன்னார். தேவாலயம் கட்டப்பட்ட இடம் அது. இஸ்ரவேலர் இன்றும் மூன்றாவது ஆலயம் கட்ட போராடிக் கொண்டிருப்பது அதே இடத்தில்தான்.

எது எப்படியோ? அந்த தண்டனையின் மூலம் தான், தேவன் தங்குமிடம் இஸ்ரவேலருக்கு வெளிப்பட்டது.  அதுவும் நன்மைக்கே. இனி சாலமோனைப் பற்றி பார்த்துவிட்டு, ஒவ்வொரு சாம்ராஜ்யங்களைப் பார்க்கலாம்.

Similar Posts

  • |

    Day 20 (20-01-2025)

    Scripture Portion: Genesis 25-26 ஆதியாகமம் 25 1ஆபிரகாம் கேத்தூராள் என்னும் பேர்கொண்ட ஒரு ஸ்திரீயையும் விவாகம்பண்ணியிருந்தான். 2அவள் அவனுக்குச் சிம்ரானையும், யக்‌ஷானையும், மேதானையும், மீதியானையும், இஸ்பாக்கையும், சூவாகையும் பெற்றாள். 3யக்‌ஷான் சேபாவையும், தேதானையும் பெற்றான்; தேதானுடைய குமாரர் அசூரீம், லெத்தூசீம், லெயூமீம் என்பவர்கள். 4மீதியானுடைய குமாரர் ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா என்பவர்கள்; இவர்கள் எல்லாரும் கேத்தூராளின் பிள்ளைகள். 5ஆபிரகாம் தனக்கு உண்டான யாவையும் ஈசாக்குக்குக் கொடுத்தான். 6ஆபிரகாமுக்கு இருந்த மறுமனையாட்டிகளின் பிள்ளைகளுக்கோ ஆபிரகாம்…

  • |

    Day 173 (22-06-2025)

    Scripture Portion: Proverb 30-31 நீதிமொழிகள் 30 1யாக்கேயின் குமாரனாகிய ஆகூர் என்னும் புருஷன் ஈத்தியேலுக்கு வசனித்து, ஈத்தியேலுக்கும் ஊகாலுக்கும் உரைத்த உபதேச வாக்கியங்களாவன: 2மனுஷரெல்லாரிலும் நான் மூடன்; மனுஷருக்கேற்ற புத்தி எனக்கு இல்லை. 3நான் ஞானத்தைக் கற்கவும் இல்லை, பரிசுத்தரின் அறிவை அறிந்துகொள்ளவும் இல்லை. 4வானத்துக்கு ஏறியிறங்கினவர் யார்? காற்றைத் தமது கைப்பிடிகளில் அடக்கினவர் யார்? தண்ணீர்களை வஸ்திரத்திலே கட்டினவர் யார்? பூமியின் எல்லைகளையெல்லாம் ஸ்தாபித்தவர் யார்? அவருடைய நாமம் என்ன? அவர் குமாரனுடைய நாமம்…

  • |

    Day 163 (12-06-2025)

    Scripture Portion: I kings 7, 2Chronicles 4 1 இராஜாக்கள் 7 1சாலொமோன் தன் அரமனை முழுதையும் கட்டிமுடிக்க பதின்மூன்று வருஷம் சென்றது. 2அவன் லீபனோன் வனம் என்னும் மாளிகையையும் கட்டினான்; அது நூறுமுழ நீளமும், ஐம்பதுமுழ அகலமும், முப்பதுமுழ உயரமுமாயிருந்தது; அதைக் கேதுருமர உத்திரங்கள் பாவப்பட்ட கேதுருமரத்தூண்களின் நாலு வரிசைகளின்மேல் கட்டினான். 3ஒவ்வொரு வரிசைக்குப் பதினைந்து தூண்களாக நாற்பத்தைந்து தூண்களின்மேல் வைக்கப்பட்ட உத்திரங்களின்மேல் கேதுருக்களால் மச்சுப்பாவியிருந்தது. 4மூன்று வரிசை ஜன்னல்கள் இருந்தது; மூன்று வரிசையிலும்…

  • இஸ்ரேல் – 5 (இஸ்ரேல் தேசிய கீதம்)

    இஸ்ரேல் – 5 இஸ்ரேல் தேசிய கீதம் யார் இந்த யூதர்கள்? பூமியில் யூதர்கள் கஷ்டப்பட்ட அளவு, வேறு எந்த இனமும் கஷ்டப்பட்டது கிடையாது. அதேபோல யூதர்கள் வெறுக்கப்பட்ட அளவு, வேறு எந்த இனமும் வெறுக்கப்பட்டதும் இல்லை. யூதர்களை அதிகம் வருத்தியப்படுத்தியது முஸ்லிம்களோ, அரபியர்களோ கிடையாது. வரலாற்றை நன்றாக படித்துப் பார்த்தால், யூதர்களை கொடுமைப்படுத்தியது கிறிஸ்தவர்கள் தான் என்பதை அறியலாம். இயேசு ஒரு யூதர். இயேசுவைக் கொன்றவர்கள் யூதர்கள். இயேசுவின் சீஷரை விரட்டி விரட்டி கொன்றவர்கள் யூதர்கள்….

  • |

    Deliverance Ministries

    விடுதலை – 11 Deliverance Ministries (விடுதலை ஊழியங்கள்) இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். ஏற்கனவே நாம் soul ties என்ற பெயரில் “விடுதலை” என்ற கட்டுரையை தொடர்ந்தோம். ஆனால், இடையில் ஏற்பட்ட தடங்களால் அவை restore ஆகவில்லை. மீண்டும் அதையே post செய்ய நினைத்த போது, இன்னும் கொஞ்சம் ஆழமாக மற்றும் அடிப்படையிலிருந்து எழுத வேண்டும் என் தோன்றியதால், மீண்டும் புதிதாக ஆரம்பிக்கிறோம். Deliverance Ministry என்று கேட்டதும் நம் மனதில் தோன்றுவது…

  • |

    Day 338 (04-12-2025)

    Scripture Portion: 2 Corinthians 1-4 2 கொரிந்தியர் 1 1தேவனுடைய சித்தத்தினாலே இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுலும், சகோதரனாகிய தீமோத்தேயும், கொரிந்துபட்டணத்திலுள்ள தேவனுடைய சபைக்கும், அகாயா நாடெங்குமுள்ள எல்லாப் பரிசுத்தவான்களுக்கும் எழுதுகிறதாவது: 2நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. 3நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம். 4தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல்செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு…

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *