|

Deliverance Ministries

விடுதலை – 11

Deliverance Ministries (விடுதலை ஊழியங்கள்)

இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். ஏற்கனவே நாம் soul ties என்ற பெயரில் “விடுதலை” என்ற கட்டுரையை தொடர்ந்தோம். ஆனால், இடையில் ஏற்பட்ட தடங்களால் அவை restore ஆகவில்லை. மீண்டும் அதையே post செய்ய நினைத்த போது, இன்னும் கொஞ்சம் ஆழமாக மற்றும் அடிப்படையிலிருந்து எழுத வேண்டும் என் தோன்றியதால், மீண்டும் புதிதாக ஆரம்பிக்கிறோம்.

Deliverance Ministry என்று கேட்டதும் நம் மனதில் தோன்றுவது என்ன? “பேய் ஓட்டுவது” , “பிசாசுகளை துரத்துவது” , “அசுத்த ஆவிகளை விரட்டுவது” என்று நமக்கு தோன்றும். அது தவறல்ல… ஆனால், இது மட்டும்தான் deliverance ministryயா?

இயேசு சீஷர்களை ஏன் தேர்ந்தெடுத்தார்?

மாற்கு புத்தகத்தை வாசிக்கும் பொழுது, மாற்கு 3: 14,15 இப்படி சொல்கிறது,

  1. அவர்கள் இயேசுவோடு இருக்க வேண்டும். இன்று நமக்கு தேவன் ஊழியம் கொடுத்திருந்தால், முதலாவது நாம் செய்ய வேண்டியது, தேவனோடு இருக்க வேண்டும், அவரோடு நேரம் செலவளிக்க வேண்டும்.
  2. பிரசங்கம் பண்ணும்படியாக இயேசு அவர்களை அனுப்ப வேண்டும். யார் கூப்பிட்டாலும் சென்று பிரசங்கம் பண்ணுவது ஊழியம் அல்ல, இயேசு அனுப்பும் இடத்துக்கு, அவர் சொல்லும் நேரத்தில் போய் சொல்வதே ஊழியம்.
  3. வியாதிகளை குணமாக்கி, பிசாசுகளை துரத்தும் அதிகாரம் உள்ளவர்களாயிருக்க வேண்டும். எனவே ஊழியர்கள், குணமாக்கும் வல்லமை உடையவர்களாய் மாத்திரம் இருக்க கூடாது. பிசாசுகளை துரத்தும் அதிகாரமுடையவர்களாய் இருக்க வேண்டும். அதாவது Healing and Deliverance ministry செய்ய வேண்டும்.

இயேசு எப்படி ஊழியம் செய்தார்?

  1. நாம் எப்படி இயேசுவோடு இருக்க வேண்டுமோ, அவரும் ஆவியானவரோடு இருந்தார்.
  2. நம்மை இயேசு பிரசங்கம் பண்ணும்படி அனுப்புவது போல, அவரையும் பிரசங்கம் பண்ண அபிஷேகம் பண்ணியிருந்தார்.
  3. இயேசுவும் Healing and Deliverance ministry செய்து இருக்கிறார்.

நாம் அனைவருமே அவருடைய சீஷர்கள் என்றபோது, நமக்கு இந்த 3 தகுதிகளும் அவசியம். நாமும் healing and deliverance ministry செய்ய வேண்டும். கர்த்தரோடு நேரம் செலவளிக்க வேண்டும்.

விடுதலை அல்லது Deliverance என்று பேசுகிறோமே… விடுதலை என்றால், பிசாசின் பிடியிலிருந்து விடுவிக்கப்படுவது மட்டும்தானா? இல்லை. தயவு செய்து, விடுதலையை பிசாசுகளை துரத்துவதோடு நிறுத்தி விடாதீர்கள். விடுதலை என்பது அதற்கும் மேல்.

விடுதலை ஊழியம் என்றால், பிசாசுகளைப் பற்றி அதிகமாக கவனம் கொள்கிறோம், அதிகமாக பேசுகிறோம். ஆனால் விடுதலை என்பது இயேசுவை மையமாக கொண்டது. அநேக ஊழியர்கள், அந்த ஆவி, இந்த ஆவி என்று பல பெயர்களை மக்களுக்கு அறிமுகம் செய்து ஜெபிக்க சொல்கிறார்கள். அது நல்லது தான். ஆனால் அதை விட முக்கியமான தேவை, “இயேசு எவ்வளவு நல்லவர், எவ்வளவு வல்லமையுள்ளவர், அவர் சிலுவையில் சம்பாதித்தது என்ன? கிறிஸ்துவுக்குள் நான் யார்?” இதை மக்களுக்கு போதிக்க வேண்டும். விடுதலை என்பது இயேசுவால் தான் கிடைக்கும்.

பலர் இயேசுவை ஏற்றுக்கொண்ட பிறகும், பயம், கோபம், மனச்சோர்வு, வெறுப்பு, கசப்பு, பாவ அடிமைத்தனம், ஆழமான காயங்கள் என்று சொல்ல முடியாத காரியங்களோடு போராடுகிறார்கள். இதற்கு காரணம் என்ன? நம் மனதில் நாம் வைத்திருக்கிற அரண் போன்ற சிந்தனைகள் (strongholds) இருக்கலாம். நம் ஆத்துமா குணமாகாமல் இருக்கலாம். எதிரிக்கு இடம் கொடுத்து இருக்கலாம்.

காரணம் எதுவாக இருந்தாலும், இயேசு சிலுவையில் வெற்றி சிறந்து விட்டார். விடுதலை கிடைத்து விட்டது. ஆனால் அது ஒரு செயல்முறை (process). சிலருக்கு ஒரு நிமிடத்தில் விடுதலை கிடைக்கலாம். சிலருக்கு நிறைய நேரம் எடுக்கலாம். நம் மனதில் கிறிஸ்துவுக்குள் நாம் யார் என்பதை உணர வேண்டும், தவறான நம்பிக்கைகளை உடைத்தெறிய வேண்டும். நிச்சயமாக நம்மால் விடுதலையை பெற்றுக்கொள்ள முடியும். கர்த்தருக்கு சித்தமானால், தொடர்ச்சியாக விடுதலை பற்றி நாம் பார்க்கலாம்.

விடுதலை என்பது,

  1. கட்டுகளிலிருந்து முழுமையாக விடுவிக்கப்படுவது.
  2. இயேசு முழுமையாக நம்மில் ஆட்சி செய்வது.
  3. பாவம், பயம், அடிமைத்தனத்திலிருந்து முழுமையாக விடுவிக்கப்படுவது.
  4. இயேசுவின் பிள்ளை என்ற அதிகாரத்தில் வாழ்வது.
  5. பேயைப்பற்றியது அல்ல, இயேசுவைப் பற்றியது.

Similar Posts

  • இஸ்ரேல்-23 (தாவீது – 5 (இராட்சதர்கள்)

    தாவீது –5 தாவீது சுதந்தரித்த எல்லை – இராட்சதர்கள் யார்? இஸ்ரவேல் என்ற நாடு, ஆபிரகாம் என்கிற ஒரு மனிதனின், குடும்பம் என்பது நமக்கு தெரியும். தேவன் ஆபிரகாமுக்கு 3 வித ஆசீர்வாதங்கள் கொடுத்தார் என்பது வேதத்தில் உள்ளது. 1. இந்த தேசத்தை உனக்கு கொடுத்தேன் என்று ஒரு நிலத்தைக் கொடுத்தார். (Land) 2. உன் சந்ததி ஒரு நாடாக உருவாகுவார்கள் என்று தேச ஜனங்கள் வாக்களித்தார். (People) 3. உனக்கும் உனக்கு பின் வரும் சந்ததிக்கும் நித்திய உடன்படிக்கை ஏற்படுத்துவேன்…

  • |

    பண்டிகைகள் – 5 (Timeline)

    கால வரிசை (எகிப்து முதல் சீனாய் மலை) Timeline (Egypt to Sinai) 2. இந்த மாதம் உங்களுக்குப் பிரதான மாதம்; இது உங்களுக்கு வருஷத்தின் முதலாம் மாதமாயிருப்பதாக.3. நீங்கள் இஸ்ரவேல் சபையார் யாவரையும் நோக்கி: இந்த மாதம் பத்தாம் தேதியில் வீட்டுத் தலைவர்கள், வீட்டுக்கு ஒரு ஆட்டுக்குட்டியாக, ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளக்கடவர்கள். 6. அதை இந்த மாதம் பதினாலாம் தேதிவரைக்கும் வைத்திருந்து, இஸ்ரவேல் சபையின் ஒவ்வொரு கூட்டத்தாரும் சாயங்காலத்தில் அதை அடித்து, யாத்திரகாமம் 12…

  • |

    Day 154 (03-06-2025)

    Scripture Portion: Proverbs 1-3 நீதிமொழிகள் 1 1தாவீதின் குமாரனும் இஸ்ரவேலின் ராஜாவுமாகிய சாலொமோனின் நீதிமொழிகள்: 2இவைகளால் ஞானத்தையும் போதகத்தையும் அறிந்து, புத்திமதிகளை உணர்ந்து, 3விவேகம், நீதி, நியாயம், நிதானம் என்பவைகளைப்பற்றிய உபதேசத்தை அடையலாம். 4இவைகள் பேதைகளுக்கு வினாவையும், வாலிபருக்கு அறிவையும் விவேகத்தையும் கொடுக்கும். 5புத்திமான் இவைகளைக் கேட்டு, அறிவில் தேறுவான்; விவேகி நல்லாலோசனைகளை அடைந்து; 6நீதிமொழியையும், அதின் அர்த்தத்தையும், ஞானிகளின் வாக்கியங்களையும், அவர்கள் உரைத்த புதைபொருள்களையும் அறிந்துகொள்வான். 7கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும்…

  • |

    Day 83 (24-03-2025)

    Scripture Portion: Joshua 5-8 யோசுவா 5 1இஸ்ரவேல் புத்திரர் கடந்து தீருமளவும், கர்த்தர் யோர்தானின் தண்ணீரை அவர்களுக்கு முன்பாக வற்றிப்போகப்பண்ணினதை, யோர்தானுக்கு மேல்கரையில் குடியிருந்த எமோரியரின் சகல ராஜாக்களும், சமுத்திரத்தருகே குடியிருந்த கானானியரின் சகல ராஜாக்களும் கேட்டதுமுதற்கொண்டு, அவர்கள் இருதயம் கரைந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகச் சோர்ந்துபோனார்கள். 2அக்காலத்திலே கர்த்தர் யோசுவாவை நோக்கி: நீ கருக்கான கத்திகளை உண்டாக்கி, திரும்ப இரண்டாம்விசை இஸ்ரவேல் புத்திரரை விருத்தசேதனம்பண்ணு என்றார். 3அப்பொழுது யோசுவா கருக்கான கத்திகளை உண்டாக்கி, இஸ்ரவேல் புத்திரரை ஆர்லோத் மேட்டிலே விருத்தசேதனம்பண்ணினான்….

  • |

    Day 41 (10-02-2025)

    Scripture Portion: Exodus 33-35 யாத்திராகமம் 33 1கர்த்தர் மோசேயை நோக்கி: நீயும், எகிப்துதேசத்திலிருந்து நீ அழைத்துக்கொண்டு வந்த ஜனங்களும் இவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டு. உன் சந்ததிக்குக் கொடுப்பேன் என்று நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுக்கொடுத்த பாலும் தேனும் ஓடுகிற தேசத்துக்குப் போங்கள். 2நான் ஒரு தூதனை உங்களுக்கு முன்பாக அனுப்பி, கானானியனையும் எமோரியனையும் ஏத்தியனையும் பெரிசியனையும் ஏவியனையும் எபூசியனையும் துரத்திவிடுவேன். 3ஆனாலும், வழியிலே நான் உங்களை நிர்மூலம்பண்ணாதபடிக்கு, நான் உங்கள் நடுவே செல்லமாட்டேன், நீங்கள் வணங்காக்கழுத்துள்ள ஜனங்கள்…

  • இஸ்ரேல்-16 (பத்சேபாள்)

    தாவீது – பத்சேபாள் சவுலுக்கு அடுத்து அரசாண்ட தாவீதைப் பற்றி பார்க்க இருக்கிறோம். நிறைய பேருக்கு, தாவீது என்றாலே நினைவுக்கு வருவது, பத்சேபாள் தான். முதலாவது, இன்று பத்சேபாள் பற்றி பார்த்து விட்டு, பின்னர் தாவீதைப் பற்றி படிக்கலாம். வேதத்தில் 1 சாமுவேல் 11ம் அதிகாரத்தில் ஒரு யுத்தம் நடக்கிறது. பொதுவாக, மக்களாட்சி என்றால், பிரதமர் அவர் இடத்திலிருக்க, வீரர்கள் போருக்கு செல்வார்கள். தாவீது செய்ததுஅரசாட்சி. யுத்தத்துக்கு அரசன் செல்ல வேண்டும். ஆனால் தாவீதோ, மற்றவர்களை யுத்தத்துக்கு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *