|

பண்டிகைகள்–17 (கூடாரப் பண்டிகை)

கூடாரப் பண்டிகை

Feast of Tabernacle (Sukkot)

எனக்கு வேதத்தில் சில காரியங்களை ஆராய்ந்து படிக்க பிடிக்கும். சில மாதங்களுக்கு முன்பு, யோவான் சுவிசேஷம் படித்துக் கொண்டிருந்தேன். யோவான் புத்தகத்தில் 7, I am Statement, 7 அற்புதங்கள் இருக்கிறது என்பதை ஏற்கனவே அறிந்திருந்ததால், அதை Note செய்து கொண்டே வந்தேன். அப்போது, இயேசு உயிர்த்தெழுந்தது 8வது அற்புதமாகவும், பின்னர் பெரிய 153 மீன்கள் பிடித்தது 9வது அற்புதமாகவும் இருந்து. (நிறைய நேரங்களில் இப்படித்தான் என் நேரத்தை வீணாக்குவது போல எனக்கு தோன்றும்.) ஒருவேளை இயேசு உயிர்த்தெழுந்த பின்னர், 153 மீன் என்பதால், அதைக்கூட அப்போது அவர் மனிதன் இல்லை என்று விட்டுவிடலாம். ஆனால் இயேசு உயிர்த்தெழுந்தது 8வது தானே என்று என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சில தளங்களில், பேதுரு கடலில் நடந்தது அற்புதம் அல்ல என்றும், இயேசுவின் உயிர்த்தெழுதல் 7வது அற்புதம் என்றும் படித்தேன். அதன் பின்னர் நிறைய படிக்கும்போதுதான் தெளிவான ஒரு விளக்கம் கிடைத்தது. 7 அற்புதங்கள் இயேசுவின் அற்புதங்கள் பழைய உடன்படிக்கையில் இருக்கிறது. எட்டாவது அற்புதமான இயேசுவின் உயிர்த்தெழுதல் புதிய உடன்படிக்கையை ஆரம்பிக்கிறது.  இப்படி கொஞ்சம் விளக்கம் கிடைத்தது.

வேதத்தில் உள்ள ஒவ்வொரு எண்ணுக்கும் ஒவ்வொரு விளக்கம் இருக்கும். உதாரணமாக 7 என்பது பரிபூரணத்தைக் குறிக்கும். அதுபோல தான் இந்த 8 என்ற எண்ணும். 8 என்பது New Beginning புதிய ஆரம்பத்தைக் குறிக்கிறது. இயேசு எப்பொழுது உயிர்த்தெழுந்தார்? வாரத்தின் முதல் நாளில். அதாவது 7 நாட்கள் கழித்து, எட்டாம் நாளில் உயிர்த்தெழுந்தார். 8 என்பது புதிய ஆரம்பம் அல்லவா! இப்போது யோவான் சுவிசேஷத்தில், 8 வது அற்புதம் இயேசுவின் உயிர்த்தெழுதல். அதாவது புதிய உடன்படிக்கை ஆரம்பிக்கிறது. பலி எல்லாம் முடிந்து, நமக்கான ஒரே பலி செலுத்தப்பட்டு விட்டது. எனவே 8 என்பது புதிய ஆரம்பம் தானே. அடுத்ததாக, தேவன் இந்த உலகத்தை 7 நாளில் படைத்தார் என்பதை அறிவோம். நாம் இப்பொழுது தேவனுடைய 7வது நாளில் இருக்கிறோம். அடுத்ததாக இந்த பூமி அழிந்து, புதிய பூமி உருவாகும்போது, தேவனுடைய எட்டாவது நாள் ஆரம்பிக்கும். நான் உங்களுக்காக வாசஸ்தலத்தை உருவாக்க போகிறேன் என்று இயேசு சொல்லியிருந்தார் அல்லவா! அது எட்டாம் நாளின் படைப்பு. அப்படியானால், 8 என்பது புதிய ஆரம்பம் அல்லவா!

தேவன் சூரியனை சந்திரனை எல்லாம் நான்காவது நாளிலே உருவாக்கினார். ஒரு நாளில், சூரியன் உதித்தால் நமக்கு நாள் ஆரம்பிக்கிறது. அதேபோல, இஸ்ரவேலர் போல, லூனார் காலண்டர் உபயோகிப்பவர்களுக்கு, சந்திரன் தோன்றினால் நாள் ஆரம்பிக்கிறது என்று பார்த்திருக்கிறோம். இங்கே நான்காவது நாள்தான் சூரியன் படைக்கிறார் என்றால், அதற்கு முன் எப்படி 3 நாள் முடிந்திருக்கும்?  நாள் என்பதை எப்படி கணக்கிட்டு இருப்பார்?

“தேவன் வெளிச்சம் படைத்தது முதல் நாளில். ஆனால் சூரிய, சந்திர, நட்சத்திரங்கள் படைத்தது நான்காவது நாளில். எப்படி வெளிச்சம் வந்திருக்கும்? உன் பைபிள் தவறு” என்று சிலர் பதிவை வாசித்த பின்னர் தான், அட ஆமால.. என்று யோசிக்கவே செய்தேன் என் கல்லூரி நாட்களில். சிறு வயதிலிருந்தே நாம் வேதம் வாசித்தாலும், புரிந்து தெளிவாக படிக்கிறோமா? என்பது சந்தேகமே. அதன் பின்னர் தான் தெரிந்து கொண்டேன், முதல் 3 நாட்களில் பூமிக்கு வெளிச்சம் தந்தது கர்த்தருடைய மகிமையே. ஆதாம் இழந்து போன கர்த்தருடைய மகிமை அது. ஆதாம் கீழ்ப்படியாமையில் விழும்வரை, அந்த மகிமை பூமியில் இருந்தது.

இந்த ஆதியாகமம் 1ம் அதிகாரத்தில், முதல் வசனத்துக்கும் 2ம் வசனத்துக்கும் இடையே, ஒரு காலம் மறைக்கப்பட்டிருக்கிறது என்று, இரண்டாம் வருகை பற்றி பேசும், சகோ.ஏசுவடியான் அவர்களின் புத்தகத்திலும், சகோ.சாம் ஜெபத்துரை அவர்களின் புத்தகத்திலும் கூறப்பட்டிருந்தது.  அதன் பின்னர்தான் creation பற்றி படிக்கும் போது, முதலாம் நாள், இரண்டாம் நாள் என்று தேவன் கூறியது, மனிதர்களுடைய நாட்கணக்கு அல்ல, தேவனுடைய நாள். 10,000 வருட படிமம் கிடைத்தது, பல லட்ச வருடத்துக்கு முந்தின டைனோசர் படிமம், என்றெல்லாம் ஆராய்ச்சியாளார்கள் கண்டுபிடிப்பது உண்மையாக இருக்கலாம். எபிரேயத்தில், முதலாம் நாள் ஆயிற்றென்று எழுதப்பட்டதன் இன்னொரு அர்த்தம், ஒரு சகாப்தம் ஆயிற்று என்பதாம். அதாவது, முதலாவது தேவன் ஒரு படைப்பை படைத்து அதை ரசித்து நல்லது என்று கண்டு, பின்னர் அடுத்த படைப்பை படைத்தார். அப்படி பார்த்தால், இப்போது நாம் ஏழாவது நாளில் இருக்கிறோம் என்பது உண்மை தானே! எட்டாவது நாள் என்பது, இனி வரும் புதிய பூமி. II பேதுரு 3:8 பிரியமானவர்களே, கர்த்தருக்கு ஒருநாள் ஆயிரம்வருஷம்போலவும், ஆயிரம்வருஷம் ஒருநாள்போலவும் இருக்கிறதென்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாதிருக்கவேண்டாம். எனவே கர்த்தருக்கு ஒரு நாள் என்பது எத்தனை வருடங்கள் என்பதை கர்த்தரே அறிவார்.

இப்பொழுது ஏன் இவ்வளவு விளக்கம் என்றால், சுக்கோத் என்ற கூடாரப்பண்டிகையிலும், ஏழு நாட்கள் கூடாரத்துக்குள் இருக்க வேண்டும். எட்டாவது நாள் என்பது பரிசுத்தமான ஓய்வு நாள். அதில் சபை கூட வேண்டும் என்று தேவன் கூறினார். எட்டு என்பது புதிய பூமியைக் குறிக்கும். எனவே எட்டாம் நாள் பண்டிகை என்பது, இரகசிய வருகை முடிந்து, அந்தி கிறிஸ்து ஆட்சி 7 வருடம் முடிந்து, கிறிஸ்துவின் 1000 வருட அரசாட்சி முடிந்து, அதன் பின்னர் ஆரம்பிக்கப்போகும் புதிய பூமியைக் குறிக்கும். 

இந்த கூடாரப்பண்டிகையை பொறுத்தவரையில் தேவன் ஜனங்களுக்கு கொடுத்த கட்டளை, சந்தோஷமாயிருங்கள். சுக்கோத் பண்டிகையில் என்ன செய்ய வேண்டும், nothing but joy. லேவி 23-36ல் எட்டாம் நாள் சபை கூடும் பரிசுத்த நாள். அதில் யாதொரு வேலையும் செய்ய வேண்டாம் என்று கூறினார். எட்டாம் நாள், வேலை செய்ய வேண்டாம், சந்தோஷமாயிருக்க வேண்டும். அவ்வளவு தான்.

இந்த கூடாடப்பண்டிகை கர்த்தர் ராஜாவாயிருக்கும்போதும் நடக்கும் என்று, சகரியா தீர்க்கதரிசனம் உரைத்திருக்கிறார். கூடாரப்பண்டிகை கொண்டாடவில்லை என்றால், அவர்களுக்கு தண்டனை வரும் என்று கர்த்தர் கூறியிருக்கிறார். அவ்வளவு முக்கியத்துவம் பெற்ற பண்டிகை இது. இஸ்ரவேலர் இப்போது எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

Similar Posts

  • |

    இஸ்ரேல்–31 (ரோம சாம்ராஜ்யம்)

    அசீரிய சாம்ராஜ்யம், பாபிலோன் சாம்ராஜ்யம், மேதிய பெர்சிய சாம்ராஜ்யம், மற்றும் கிரேக்க சாம்ராஜ்யம் பற்றி பார்த்தோம். அடுத்ததாக ரோம சாம்ராஜ்யம் பற்றி பார்க்கலாம். இயேசு கிறிஸ்து வாழ்ந்த காலத்தில் ஆண்ட சாம்ராஜ்யம் ரோம சாம்ராஜ்யம். எனவே இதைப் பற்றி முழுமையாக நாம் அறிந்தால், வேதத்தை ஆழமாக படிக்க உதவியாக இருக்கும். முடிந்த வரையில் முழுமையாக, பொறுமையாக படியுங்கள். ரோம சாம்ராஜ்யம் அடுத்ததாக ஆட்சி செய்த சாம்ராஜ்யம், ரோம சாம்ராஜ்யம். அதிக வருடங்கள் ஆட்சி செய்த சாம்ராஜ்யமும் இதுதான்….

  • |

    Day 227 (15-08-2025)

    Scripture Portion: Jeremiah 30-31 எரேமியா 30 1கர்த்தராலே எரேமியாவுக்கு உண்டான வார்த்தை: 2இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் உன்னோடே சொன்ன எல்லா வார்த்தைகளையும் ஒரு புஸ்தகத்தில் எழுதிக்கொள். 3இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது நான் இஸ்ரவேலும் யூதாவுமாகிய என் ஜனத்தினுடைய சிறையிருப்பைத்திருப்பி, நான் அவர்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்துக்கு அவர்களைத் திரும்பிவரப்பண்ணுவேன்; அதை அவர்கள் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 4இவைகள் கர்த்தர் இஸ்ரவேலையும் யூதாவையுங்குறித்துச் சொன்னவார்த்தைகளே. 5கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: தத்தளிப்பின் சத்தத்தைக் கேட்கிறோம்; திகிலுண்டு, சமாதானமில்லை. 6ஆணாய்ப் பிறந்தவன் பிரசவிக்கிறதுண்டோ என்று…

  • |

    இஸ்ரேல்-44 (ஆறு நாள் யுத்தம்)

    ஆறு நாள் யுத்தம் (Operation Focus) 1967 இப்பதிவை வாசிப்பதை விட, இந்த காணொலியில் இஸ்ரேல் ஜெயித்த வரலாறை கேட்பது மிகவும் நன்றாக இருக்கும். நேரம் இருந்தால் இஸ்ரேலின் இந்த வெற்றியை தமிழில் கேட்டு இரசிக்கலாமே! இஸ்ரேலின் வீரதீர சாகசங்களில் ஒன்று, ஆறுநாள் யுத்தம். அது என்ன ஆறு நாள் யுத்தம்? இஸ்ரேலில் எதிரி நாடுகளான அரபு நாடுகள், மீண்டும் ஒரு யுத்தத்தை அறிவித்தது. எகிப்து, ஈராக், ஜோர்தான் சிரியா ராணுவம் இணைந்து ஒரு யுத்தத்தை அறிவித்தது….

  • |

    Day 91 (01-04-2025)

    Scripture Portion: Judges 6-7 நியாயாதிபதிகள் 6 1பின்னும் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தார்கள்; அப்பொழுது கர்த்தர் அவர்களை ஏழு வருஷம் மீதியானியரின் கையில் ஒப்புக்கொடுத்தார். 2மீதியானியரின் கை இஸ்ரவேலின்மேல் பலத்துக்கொண்டபடியால், இஸ்ரவேல் புத்திரர் மீதியானியர் நிமித்தம் தங்களுக்கு மலைகளிலுள்ள கெபிகளையும் குகைகளையும் அரணான ஸ்தலங்களையும் அடைக்கலங்களாக்கிக்கொண்டார்கள். 3இஸ்ரவேலர் விதை விதைத்திருக்கும்போது, மீதியானியரும் அமலேக்கியரும் கிழக்கத்திப் புத்திரரும் அவர்களுக்கு விரோதமாய் எழும்பி வந்து; 4அவர்களுக்கு எதிரே பாளயமிறங்கி, காசாவின் எல்லைமட்டும் நிலத்தின் விளைச்சலைக் கெடுத்து, இஸ்ரவேலிலே ஆகாரத்தையாகிலும், ஆடுமாடுகள் கழுதைகளையாகிலும்…

  • இஸ்ரேல்-14 (இஸ்ரேலுக்கு ராஜா)

    இஸ்ரவேலுக்கு ராஜா சாமுவேல் இஸ்ரவேலின் கடைசி நியாயாதிபதி என்று பார்த்தோம். சாமுவேல் தனக்கு அடுத்ததாக தன் பிள்ளைகளை நியாயாதிபதியாக வைக்கிறார். ஆனால் அது தேவ சித்தம் அல்ல. இன்றைக்கு ஊழியர்கள் கூட அந்த தவறை செய்கிறார்கள். தங்களுக்கடுத்து தங்கள் பிள்ளைகளை ஊழியத்தில் ஏற்றுகிறார்கள். நிச்சயமாக அப்பாவின் அபிஷேகம் பிள்ளைகள் மீது இருக்கும். ஆனால், கர்த்தருடைய அழைப்பு இருக்கிறதா என்பதை சரிபார்த்து, ஊழியத்துக்கு வரவேண்டும். இதுவரை நியாயாதிபதிகளாய் இருந்தவர்கள், வேறு வேறு கோத்திரத்திலிருந்து வந்தார்கள். அவர்களையும் தெரிவு செய்தவர்…

  • |

    Day 347 (13-12-2025)

    Scripture Portion: Acts 24-26 அப்போஸ்தலர் 24 1ஐந்து நாளைக்குப்பின்பு பிரதானஆசாரியனாகிய அனனியா மூப்பர்களோடும் தெர்த்துல்லு என்னும் ஒரு நியாயசாதுரியனோடும் கூடப்போனான், அவர்கள் பவுலுக்கு விரோதமாய்த் தேசாதிபதியினிடத்தில் பிராதுபண்ணினார்கள். 2அவன் அழைக்கப்பட்டபோது, தெர்த்துல்லு குற்றஞ்சாட்டத்தொடங்கி: 3கனம்பொருந்திய பேலிக்ஸே, உம்மாலே நாங்கள் மிகுந்த சமாதான சவுக்கியத்தை அநுபவிக்கிறதையும், உம்முடைய பராமரிப்பினாலே இந்தத் தேசத்தாருக்குச் சிறந்த நன்மைகள் நடக்கிறதையும் நாங்கள் எப்பொழுதும் எங்கும் மிகுந்த நன்றியறிதலுடனே அங்கிகாரம்பண்ணுகிறோம். 4உம்மை நான் அநேக வார்த்தைகளினாலே அலட்டாதபடிக்கு, நாங்கள் சுருக்கமாய்ச் சொல்வதை நீர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *