|

பண்டிகைகள் – 5 (Timeline)

கால வரிசை (எகிப்து முதல் சீனாய் மலை)

Timeline (Egypt to Sinai)

மேலே குறிப்பிட்ட வசனங்களின் படி,

Second Month

சீப் மாதம் (ஐயர் மாதம்)

ஜனங்கள் அதற்குள் கன்றுகுட்டி செய்து வழிபட்டதால் கோபத்தில் கற்பலகையை உடைத்துப் போடுகிறார். அந்த 40 நாளில் ஆசரிப்புகூடாரம் எப்படி செய்ய வேண்டும், ஆசாரியரின் வஸ்திரங்கள், பலிகள் பற்றி கர்த்தர் கற்றுக் கொடுத்திருப்பார்.

(2nd time Day 1)

வேதத்தில் கூறப்படவில்லை என்றாலும், இஸ்ரவேலரின் மத நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த 40 நாட்களும், தேவன் மோசேயிடம், “நீயும் நீ அழைத்து வந்த ஜனமும்”, என்பது போல பேசுவார். அதற்கு முன்பாக, என் ஜனமாகிய இஸ்ரவேலர் எகிப்தில் படும் உபத்திரவத்தைக் கண்டேன் என்று, “என் ஜனங்கள்” என்று கூறியிருப்பார்.

இந்த அனுபவத்தை மோசேக்கு தோல்வியடைந்த நேரம் என்று கருதுகிறார்கள். அதன் பின்னர், மோசே 33ம் அதிகாரம் முழுவதிலும் “உம்முடைய ஜனம், உம்முடைய ஜனம்” என்று பரிந்து பேசி இருப்பார். ஆனாலும் தோல்வியடைந்த தருணமாக பார்க்கப்படுகிறது.

Fifth Month

ஆப் மாதம்

(2nd Time Day 40)

Sixth Month

ஏலுல் மாதம்

தோல்வியடைந்து திரும்பிய மோசேயிடம், தேவன் பேசி, இரண்டு கற்பலகை கொண்டு வரும்படி சொல்கிறார். இந்த 40 நாட்களை Teshuvah என்று இஸ்ரவேலர் இன்றும் கொண்டாடுகின்றனர். இந்த 40 நாட்கள் தேவனுடைய தொடுதலின் நாட்கள், மனந்திரும்புதலின் நாட்கள், அனுக்கிரகத்தின் நாட்கள், புதிய ஆரம்பத்தின் நாட்கள் என்று கொண்டாடுகின்றனர்.

Sevanth Month

திஷ்ரி மாதம்

இந்த நாட்களை இஸ்ரவேலர் கொண்டாடுகின்றனர். ஏனெனில் இது தேவன் ஆரம்பித்த காலம்.

நாம் இப்பொழுது ஏன் இந்த காலவரிசையைப் பார்த்தோம் என்றால், இஸ்ரவேலர் கொண்டாடும் பண்டிகைகள் இதோடு தொடர்புடையது.

பொதுவாக நாம் எப்பொழுது பண்டிகைகள் கொண்டாடுவோம்? பிறந்த நாள் என்றால், அந்த நாளில் நான் பிறந்து இருக்கிறேன். எனக்கு ஒரு காரணம் இருக்கிறது. திருமண நாள் என்றால், அன்று எனக்கு திருமணம் நடந்து இருக்கிறது. கிறிஸ்துமஸ் என்பது, ஏதோ ஒரு நாளை கிறிஸ்து பிறப்பின் நாளாக நியமித்து, நாம் கொண்டாடுகிறோம். இப்படி ஏதோ ஒன்றை, நடந்து முடிந்த காரியத்தைக் கொண்டு பண்டிகைகள் கொண்டாடுகிறோம். அதேபோல் தான் வேத பண்டிகைகளும். இஸ்ரவேலருக்கு அது நடந்து முடிந்த அனுபவமாக உள்ளது.

 முதல் பண்டிகையான பஸ்கா, எகிப்தில் ஆட்டை அடித்து இரத்தத்தை வீட்டு நிலைக்கால்களில் தெளித்து, சங்காரத்தூதனிடம் இருந்து காப்பாற்றப்பட்ட அனுபவம். வாரங்களின் பண்டிகை என்று கொண்டாடப்படும் ஐம்பதாவது நாள் பண்டிகை, சீனாய் வனாந்திரத்தில் கர்த்தர் இறங்கி வந்து மோசேயிடம் பேசிய அனுபவம். பாவ நிவிர்த்தி நாள் கொண்டாடுவது, மோசே மூன்றாவது முறையாக தேவனே ஆரம்பித்த சீசனில், மலைக்கு சென்று இறங்கி வந்த அனுபவம். இப்படி நடந்து முடிந்த காரியங்களை அவர்கள் கொண்டாடுகின்றனர். நமக்கு இந்த காரியத்தில் ஏதேனும் தொடர்பு உள்ளதா?

ஆம், நமக்கு பண்டிகை நாட்கள் என்பது கிறிஸ்துவைப் பற்றியது. பஸ்கா என்பது, இஸ்ரவேலருக்கு ஆட்டு இரத்தத்தின் மூலம் மீட்கப்பட்ட அனுபவம். நமக்கு தேவ ஆட்டுக்குட்டியாகிய இயேசு கிறிஸ்துவினால் மீட்கப்பட்ட, அதாவது இரட்சிக்கப்பட்ட அனுபவம்.

ஐம்பதாவது நாளான பெந்தெகோஸ்தே பண்டிகையில், யாத்திரகாமம் 19 மற்றும் அப்போஸ்தலர் 2 ஒப்பிட்டு பார்த்தால், மிகச் சிறப்பாக இருக்கும். அவர்களுக்கு தேவன் மலையில் இறங்கி பேசிய அனுபவம். நமக்கு பரிசுத்த ஆவியானவர் நமக்குள் ஊற்றப்பட்ட அனுபவம். இஸ்ரவேலருக்கு அப்போது தான் நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டது. நமக்கு பெந்தேகொஸ்தே நாளில் ஆவி கொடுக்கப்பட்டது.

இஸ்ரவேலர் எகிப்தில் இருந்து கானான் வரை என்னவெல்லாம் செய்தார்களோ அது நமக்கு தீர்க்கதரிசனம். துரதிஷ்டவசமாக, தேவனுடைய ஜனங்களாகிய அவர்கள், நம் வாழ்க்கையில் எப்படி இருக்க கூடாது என்பதற்கு உதாரணமாகி விட்டார்கள். பிரச்சனைகளின் போது, அவர்களைப் போல, முறுமுறுக்க கூடாது, தேவனை கோப்பபடுத்தக் கூடாது, நமக்கென வைத்திருக்கும் கானானை இழந்து போய்விடக் கூடாது என்பது அவர்கள் நமக்கு கற்றுக்கொடுக்கும் பாடம். இஸ்ரவேலர் எகிப்தின் அடிமைத்தனம் விட்டு வெளிவந்தது போல, நாமும் பாவ அடிமைத்தனத்திலிருந்து, இயேசுவின் இரத்தம் மூலம் வெளியே வருகிறோம். இயேசுவை ஏற்றுக்கொண்டால் சோதனையே வராது என்பது தவறானது. அதற்கு பின்னர்தான் செங்கடல் வந்தது. நமக்கும் செங்கடல் போன்ற பிரச்சனைகள் வரும். அபிஷேகம் பெற்றால் சோதனை இல்லை என்பதும் தவறு தான், எல்லாருடைய வாழ்விலும் வனாந்திரமான காலம் ஒன்று இருக்கும். சிலர் செங்கடலில் பின்வாங்கி போய் விடுவர். சிலர் வனாந்தரத்தில் பின்வாங்குவர். ஆனாலும் ஆண்டவர் மீது நம்பிக்கை வைத்து யோர்தானையும் கடந்து, கானானுக்குள் நுழைவதே கிறிஸ்தவ வாழ்க்கை.

குறிப்பு

(தோராயத்தின்படி மாத்திரமே இந்த தேதிகள் கணக்கிடப்பட்டு இருக்கிறது. சிலருடைய கணக்கில் பெந்தெகோஸ்தே பண்டிகை, சீவான் மாதம் 6ம் தேதி வரும், சிலருடைய கணக்கில் 4ம் தேதி வரும். நமக்கு பண்டிகைகளின் பொருள் அறிவதற்காக மட்டுமே இந்த பதிவு.)

நன்றி

Similar Posts

  • |

    Day 73 (14-03-2025)

    Scripture Portion: Deuteronomy 8-10 உபாகமம் 8 1நீங்கள் பிழைத்துப் பெருகி, கர்த்தர் உங்கள் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்திலே பிரவேசித்து, அதைச் சுதந்தரிக்கும்படி நான் இன்று உங்களுக்கு விதிக்கிற எல்லாக் கட்டளைகளின்படியும் செய்யச் சாவதானமாயிருப்பீர்களாக. 2உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிறுமைப்படுத்தும்படிக்கும், தம்முடைய கட்டளைகளை நீ கைக்கொள்வாயோ கைக்கொள்ளமாட்டாயோ என்று அவர் உன்னைச் சோதித்து, உன் இருதயத்திலுள்ளதை நீ அறியும்படிக்கும், உன்னை இந்த நாற்பது வருஷமளவும் வனாந்தரத்திலே நடத்திவந்த எல்லா வழியையும் நினைப்பாயாக. 3அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி,…

  • |

    Day 112 (22-04-2025)

    Scripture Portion: Psalm 6, 8-10, 14,16,19,21 சங்கீதம் 6 (நெகினோத் என்னும் வாத்தியத்தில் செமினீத் என்னும் இராகத்தால் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.) 1கர்த்தாவே, உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாதேயும், உம்முடைய உக்கிரத்திலே என்னைத் தண்டியாதேயும். 2என்மேல் இரக்கமாயிரும் கர்த்தாவே, நான் பெலனற்றுப்போனேன்; என்னைக் குணமாக்கும் கர்த்தாவே, என் எலும்புகள் நடுங்குகிறது. 3என் ஆத்துமா மிகவும் வியாகுலப்படுகிறது; கர்த்தாவே, எதுவரைக்கும் இரங்காதிருப்பீர். 4திரும்பும் கர்த்தாவே, என் ஆத்துமாவை விடுவியும்; உம்முடைய கிருபையினிமித்தம் என்னை இரட்சியும். 5மரணத்தில் உம்மை நினைவுகூர்வதில்லை, பாதாளத்தில் உம்மைத் துதிப்பவன் யார்? 6என் பெரு­மூச்சினால்…

  • |

    Day 189 (08-07-2025)

    Scripture Portion: 2 kings 15, 2Chronicles 26 2 இராஜாக்கள் 15 1இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாமின் இருபத்தேழாம் வருஷத்தில், யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவின் குமாரன் அசரியா ராஜாவானான். 2அவன் ராஜாவாகிறபோது பதினாறு வயதாயிருந்து, ஐம்பத்திரண்டு வருஷம் எருசலேமிலே அரசாண்டான்; எருசலேம் நகரத்தாளான அவன் தாயின் பேர் எக்கோலியாள். 3அவன் தன் தகப்பனாகிய அமத்சியா செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான். 4மேடைகள் மாத்திரம் அகற்றப்படவில்லை; ஜனங்கள் இன்னும் மேடைகள்மேல் பலியிட்டுத் தூபங்காட்டிவந்தார்கள். 5கர்த்தர் இந்த ராஜாவை வாதித்ததினால், அவன் தன்…

  • |

    Day 204 (23-07-2025)

    Scripture Portion: Isaiah 31-34 ஏசாயா 31 1சகாயமடையும்படி இஸ்ரவேலுடைய பரிசுத்தரை நோக்காமலும், கர்த்தரைத் தேடாமலும், எகிப்துக்குப்போய், குதிரைகள்மேல் நம்பிக்கைவைத்து, இரதங்கள் அநேகமாயிருப்பதினால் அவைகளை நாடி, குதிரைவீரர் மகா பெலசாலிகளாயிருப்பதினால் அவர்களை நம்பிக்கொண்டிருக்கிறவர்களுக்கு ஐயோ! 2அவரும் ஞானமுள்ளவர்; அவர் தம்முடைய வார்த்தைகளை மறுக்காமல், தீங்கு வரப்பண்ணி, தீமை செய்கிறவர்களின் வீட்டுக்கும், அக்கிரமக்காரருக்குச் சகாயஞ்செய்கிறவர்களுக்கும் விரோதமாக எழும்புவார். 3எகிப்தியர் தெய்வம் அல்ல, மனுஷர்தானே; அவர்களுடைய குதிரைகள் ஆவியல்ல, மாம்சந்தானே; கர்த்தர் தமது கரத்தை நீட்டுவார், அப்பொழுது சகாயம் செய்கிறவனும் இடறி, சகாயம் பெறுகிறவனும் விழுந்து,…

  • |

    Day 67 (08-03-2025)

    Scripture Portion: Numbers 31-32 எண்ணாகமம் 31 1கர்த்தர் மோசேயை நோக்கி: 2இஸ்ரவேல் புத்திரர் நிமித்தம் மீதியானியரிடத்தில் பழிவாங்குவாயாக; அதன் பின்பு உன் ஜனத்தாரிடத்தில் சேர்க்கப்படுவாய் என்றார். 3அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: கர்த்தர் நிமித்தம் மீதியானியரிடத்தில் பழிவாங்கும்பொருட்டு, உங்களில் அவர்கள்மேல் யுத்தத்திற்குப் போகத்தக்கதாக மனிதரைப் பிரித்தெடுங்கள். 4இஸ்ரவேலுடைய எல்லாக் கோத்திரங்களிலும் ஒவ்வொரு கோத்திரத்தில் ஆயிரம்பேரை யுத்தத்திற்கு அனுப்பவேண்டும் என்றான். 5அப்படியே இஸ்ரவேலராகிய அநேகம் ஆயிரங்களில், ஒவ்வொரு கோத்திரத்தில் ஆயிரமாயிரம் பேராகப் பன்னீராயிரம்பேர் யுத்தசன்னத்தராய் நிறுத்தப்பட்டார்கள். 6மோசே அவர்களையும் ஆசாரியனாகிய எலெயாசாரின்…

  • |

    Day 321 (17-11-2025)

    Scripture Portion: Acts 4-6 அப்போஸ்தலர் 4 1அவர்கள் ஜனங்களுடனே பேசிக்கொண்டிருக்கையில், ஆசாரியர்களும் தேவாலயத்துச் சேனைத்தலைவனும் சதுசேயரும் அவர்களிடத்தில் வந்து, 2அவர்கள் ஜனங்களுக்கு உபதேசிக்கிறதினாலும், இயேசுவை முன்னிட்டு, மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுதலைப் பிரசங்கிக்கிறதினாலும், சினங்கொண்டு, 3அவர்களைப் பிடித்து, சாயங்காலமாயிருந்தபடியினால், மறுநாள்வரைக்கும் காவலில் வைத்தார்கள். 4வசனத்தைக் கேட்டவர்களில் அநேகர் விசுவாசித்தார்கள்; அவர்கள் தொகை ஏறக்குறைய ஐயாயிரமாயிருந்தது. 5மறுநாளிலே ஜனங்களுடைய அதிகாரிகளும் மூப்பரும் வேதபாரகரும், 6பிரதான ஆசாரியனாகிய அன்னாவும், காய்பாவும், யோவானும், அலெக்சந்தரும், பிரதான ஆசாரியருடைய குடும்பத்தார் யாவரும் எருசலேமிலே கூட்டங்கூடி,…

4 Comments

  1. எனக்கு மிகவும் பிரயோஜனமாய் இருந்தது. உங்களோடு தொடர்பில் இருக்க விரும்புகிறேன் எனது வாட்சாப் எண் 9894640326 நன்றி

    1. உங்களது கருத்துக்கு நன்றி சகோ. எங்களுடன் ஏதேனும் பகிர விரும்பினால், rhematamilforyou@gmail.com என்ற ஈமெயிலில் தெரியப்படுத்துங்கள். கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *