Paul Intro

பவுல் – ஒரு அறிமுகம்

கிறிஸ்தவ வரலாற்றில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் இயேசு கிறிஸ்து. அவருக்குப் பிறகு கிறிஸ்தவத்தின் வளர்ச்சியிலும், அதன் இறையியலிலும், உலகமெங்கும் சுவிசேஷம் பரவுவதிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் அப்போஸ்தலனாகிய பவுல்.

அநேகருக்கு பவுலைப் மிகவும் பிடிக்கும். அவருடைய வாழ்க்கையையும், ஊழியத்தையும் குறித்து நிறைய செய்திகள் கேட்டிருப்போம். ஆனால் ஒரு காலத்தில், எனக்கு வேதாகமம் ஆழமாகப் புரியாதபோது, எனக்குப் பிடிக்காத ஒருவர் என்றால் அது பவுல்தான்.

அவருடைய நிருபங்கள் பெரும்பாலும் ஆழமான போதனைகளால் நிறைந்திருப்பதால், அவற்றை வாசிப்பதே எனக்கு சலிப்பாகத் தோன்றும். அதோடு, “ஸ்திரீகள் சபையில் பேசக்கூடாது” என்று அவர் எழுதிய வசனத்தை மட்டும் பார்த்து, பவுல் ஒரு ஆணாதிக்க மனப்பான்மை கொண்டவர் என்ற எண்ணம் என் மனதில் பதிந்துவிட்டது. அந்த ஒரு காரணமே அவரை முழுமையாக வெறுக்கச் செய்தது.

ஆனால் இன்று, கர்த்தருடைய கிருபையால், பவுலை ஓரளவு புரிந்துகொள்ள முடிந்திருக்கிறது. இன்னும் அவரை ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற விருப்பத்தில்தான் இந்த ஆய்வுக் கட்டுரையைத் தயாரித்துள்ளேன்.

ஏன் பவுலைப் பற்றி படிக்க வேண்டும்?

பவுல் ஒரு ராஜாவா?

Alexander the Great போன்ற பேரரசனா?

யூதர்களின் பிரதான ஆசாரியரா?

இல்லை. இல்லவே இல்லை.

அப்படியிருக்க, ஏன் நாம் பவுலைப் பற்றி படிக்க வேண்டும்?

அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சம்பவங்களை மட்டும் வைத்து பவுலை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. அவரது யூதப் பின்னணி, பரிசேயக் கல்வி, ரோமக் குடியுரிமை, கிரேக்க கலாச்சாரத்தின் தாக்கம், அவர் வாழ்ந்த அரசியல் மற்றும் சமூகச் சூழல் ஆகிய அனைத்தையும் சேர்த்துப் பார்த்தால்தான் அவரது நிருபங்களையும் ஊழியத்தையும் சரியாகப் புரிந்துகொள்ள முடியும்.

அதற்காக முதலில் அவர் வாழ்ந்த காலத்தின் வரலாற்றுப் பின்னணியைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

ஒரு சிறிய மீள்பார்வை

இஸ்ரேல் குறித்த கட்டுரையில் சில விஷயங்களை ஏற்கனவே பார்த்தோம். அவற்றை இங்கே சுருக்கமாக நினைவுபடுத்திக் கொள்வோம்.

தாவீதின் ஆட்சிக் காலத்தில், இஸ்ரேல் முழுவதும் ஒரே ராஜ்யமாக இருந்தது. ஆனால் சாலொமோனின் மகன் ரெகொபெயாமின் காலத்தில் அந்த ராஜ்யம் இரண்டாகப் பிரிந்தது.

வடக்கு ராஜ்யம் – 10 கோத்திரங்களைக் கொண்டது. இதற்கு இஸ்ரேல் என்று பெயர். இதன் தலைநகரம் சமாரியா.

தெற்கு ராஜ்யம் – யூதா மற்றும் பென்யமீன் ஆகிய இரண்டு கோத்திரங்களைக் கொண்டது. இதற்கு யூதேயா என்று பெயர். இதன் தலைநகரம் எருசலேம்.

இந்த இரண்டு ராஜ்யங்களும் பின்னர் உலகின் வல்லரசுகளின் ஆட்சிக்குள் சென்றன.

உலகை ஆண்ட ஐந்து சாம்ராஜ்யங்கள்

  1. அசீரிய சாம்ராஜ்யம்
  2. பாபிலோனிய சாம்ராஜ்யம்
  3. மேதிய–பெர்சிய சாம்ராஜ்யம்
  4. கிரேக்க சாம்ராஜ்யம்
  5. ரோம சாம்ராஜ்யம்

முதலில், கி.மு. 722-ல் அசீரியர்கள் வடக்கு ராஜ்யமான இஸ்ரேலை கைப்பற்றி, அங்கிருந்த பத்து கோத்திர மக்களையும் சிறைபிடித்து பல நாடுகளுக்குச் சிதறடித்தனர். அவர்கள் 25-க்கும் மேற்பட்ட பகுதிகளில் குடியமர்த்தப்பட்டனர். அதன் பிறகு பெரும்பாலானவர்கள் மீண்டும் தங்கள் தாய்நாட்டிற்குத் திரும்பவில்லை. காலப்போக்கில் மற்ற இன மக்களுடன் கலந்துவிட்டனர்.

கி.பி. 1900-களுக்குப் பிறகுதான், அவர்களில் சிலர் மீண்டும் இஸ்ரேலுக்குத் திரும்பத் தொடங்கினர். இருப்பினும், இன்னும் பலர் தாங்கள் இஸ்ரவேல் வம்சாவளியினர் என்பதையே அறியாமல் உலகின் பல நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கலாம்.

அடுத்ததாக, பாபிலோனியர்கள் தெற்கு ராஜ்யமான யூதேயாவைக் கைப்பற்றி, யூதா மற்றும் பென்யமீன் கோத்திர மக்களைப் பாபிலோனுக்குச் சிறைபிடித்துச் சென்றனர். அந்தச் சிறைவாசிகளுள் தானியேலும் ஒருவர். எரேமியா வாழ்ந்த காலத்தில், பாபிலோனியர் யூதர்களை சிறைபிடித்தனர். ஆனால் எரேமியா எருசலேமில் இருந்தார். 2இராஜாக்கள் 25ஆம் அதிகாரத்தில், யூதரில் சிலர் கல்தேயரை (பாபிலோனியரை) வெட்டிப்போட்டதால், பயந்து எகிப்துக்கு ஓடிப்போய் விட்டார்கள்.

அதன்பிறகு மேதிய–பெர்சிய சாம்ராஜ்யம் பாபிலோனை வென்றது. அதனால் நேபுகாத்நேச்சாரின் ஆட்சியில் வாழ்ந்த தானியேல், பின்னர் மேதிய ராஜாவாகிய தரியுவின் ஆட்சியிலும் உயர்ந்த பதவியில் பணியாற்றினார். அந்தக் காலகட்டத்தில் பாபிலோனிலிருந்த யூதர்கள் தங்கள் தேசத்துக்கு திரும்பினர். ஆனால் எகிப்திலிருந்த யூதர்கள் அங்கேயே தங்கி விட்டனர்.

(வரலாற்று உண்மை அல்ல, ஒரு ஊகம் தான். அதாவது ஊகம் என்னவென்றால், யூதேயா பாபிலோனுக்கு சிறைபிடிக்கும்போது, ஒருவேளை பாபிலோனிலிருந்து நேரடியாக பவுலின் முன்னோர்கள் எகிப்துக்கு போயிருக்கலாம். அல்லது, எருசலேமில் தங்க வைக்கப்பட்ட யூதர்களில், பவுலின் முன்னோர்களும் இருந்து, யூதர்கள் பாபிளொனிய அதிகாரியை கொன்றதால், பாபிலோனிய அரசனுக்கு பயந்து எகிப்துக்கு ஓடிய கூட்டத்தில் பவுலின் முன்னோர்களும் இருந்திருக்கலாம். பின்னர், கிரேக்க சாம்ராஜ்யம் வந்து, எகிப்தை பிடிக்கும்போது, அங்கிருந்து தப்பி சிலிசியா நாட்டின் தர்சு பட்டணத்தில் பவுலின் முன்னோர்கள் குடியேறி இருக்கலாம். பவுல் ஒரு பென்யமீன் கோத்திரம் என்பதால் இப்படி சிந்திக்கிறார்கள்)

அதற்குப் பிறகு உலக வரலாற்றில் மிக வேகமாக எழுந்த பேரரசு கிரேக்க சாம்ராஜ்யம். அதற்கு தலைமை வகித்தவர் Alexander the Great.

கிரேக்கர்கள் பல நாடுகளை வென்றதோடு மட்டுமல்லாமல், தங்கள் மொழியான கிரேக்கத்தையும் உலகம் முழுவதும் பரவச் செய்தனர். பல பகுதிகளில் கிரேக்க மொழி நிர்வாக மொழியாகவும், பொதுவான தொடர்பு மொழியாகவும் பயன்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அக்காலத்தில் வாழ்ந்த பலருக்கு கிரேக்க மொழி பரிச்சயமாக இருந்தது.

இறுதியாக ரோம சாம்ராஜ்யம் உலக வல்லரசாக உருவெடுத்தது.

“All roads lead to Rome” என்ற பழமொழி உருவாகும் அளவிற்கு, ரோமர்கள் தங்கள் பேரரசு முழுவதையும் சாலைகள் மூலம் இணைத்தனர். இந்தச் சாலை அமைப்பே பின்னர் சுவிசேஷம் மிக வேகமாகப் பரவுவதற்கும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

ரோம ஆட்சிக் காலத்தில்தான் இயேசு கிறிஸ்து பிறந்தார், சிலுவையில் அறையப்பட்டார், உயிர்த்தெழுந்தார். பெரும்பாலான அப்போஸ்தலர்களும் இதே காலத்தில் இரத்தசாட்சிகளாக மரித்தனர்.

நாம் இந்தக் கட்டுரையில் பார்க்கப்போகும் அப்போஸ்தலனாகிய பவுலும் ரோம சாம்ராஜ்யத்தின் ஆட்சிக் காலத்தில்தான் பிறந்து, வளர்ந்து, தனது ஊழியத்தை நிறைவேற்றி, இறுதியில் இரத்தசாட்சியாக மரித்தார்.

இனி, பவுலின் வாழ்க்கையையும், பின்னணியையும், ஊழியத்தையும் விரிவாகப் பார்ப்போம்.

Similar Posts

  • |

    Day 337 (03-12-2025)

    Scripture Portion: 1 Corinthians 15-16 1 கொரிந்தியர் 15 1அன்றியும், சகோதரரே, நான் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தை மறுபடியும் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்; நீங்களும் அதை ஏற்றுக்கொண்டு, அதிலே நிலைத்திருக்கிறீர்கள். 2நான் உங்களுக்குப் பிரசங்கித்தபிரகாரமாய், நீங்கள் அதைக் கைக்கொண்டிருந்தால், அதினாலே நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள்; மற்றபடி உங்கள் விசுவாசம் விருதாவாயிருக்குமே. 3நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, 4அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்து, 5கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார். 6அதன்பின்பு…

  • |

    Day 233 (21-08-2025)

    Scripture Portion: Jeremiah 41-45 எரேமியா 41 1பின்பு ஏழாம் மாதத்திலே ராஜவம்சத்தில் பிறந்தவனும், எலிசாமாவின் குமாரனாகிய நெத்தானியாவின் மகனுமான இஸ்மவேலும், அவனுடனேகூட ராஜாவின் பிரபுக்களான பத்துப்பேரும் மிஸ்பாவுக்கு அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவினிடத்தில் வந்து, அங்கே ஏகமாய் போஜனம்பண்ணினார்கள். 2அப்பொழுது நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலும், அவனோடிருந்த பத்துப்பேரும் எழும்பி, பாபிலோன் ராஜா தேசத்தின்மேல் அதிகாரியாக வைத்த சாப்பானின் குமாரனாகிய அகிக்காமின் மகனான கெதலியாவைப் பட்டயத்தால் வெட்டினார்கள். 3மிஸ்பாவிலே கெதலியாவினிடத்தில் இருந்த எல்லா யூதரையும், அங்கே காணப்பட்ட யுத்தமனுஷராகிய…

  • |

    Day 259 (16-09-2025)

    Scripture Portion: Daniel 7-9 தானியேல் 7 1பாபிலோன் ராஜாவாகிய பெல்ஷாத்சாரின் முதலாம் வருஷத்திலே தானியேல் ஒரு சொப்பனத்தையும் தன் படுக்கையின்மேல் தன் தலையில் தோன்றின தரிசனங்களையும் கண்டான். பின்பு அவன் அந்தச் சொப்பனத்தை எழுதி, காரியங்களின் தொகையை விவரித்தான். 2தானியேல் சொன்னது: இராத்திரி காலத்தில் எனக்கு உண்டான தரிசனத்திலே நான் கண்டது என்னவென்றால்: இதோ, வானத்தின் நாலு காற்றுகளும் பெரிய சமுத்திரத்தின்மேல் அடித்தது. 3அப்பொழுது வெவ்வேறு ரூபமுள்ள நாலு பெரிய மிருகங்கள் சமுத்திரத்திலிருந்து எழும்பின. 4முந்தினது…

  • |

    Day 301 (28-10-2025)

    Scripture Portion: Luke 16, Luke 17: 1-10 லூக்கா 16 1பின்னும் அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: ஐசுவரியவானாகிய ஒரு மனுஷனுக்கு ஒரு உக்கிராணக்காரன் இருந்தான்; அவன் தன் எஜமானுடைய ஆஸ்திகளை அழித்துப்போடுகிறதாக எஜமானுக்கு அறிவிக்கப்பட்டது. 2அப்பொழுது எஜமான் அவனை வரவழைத்து: உன்னைக்குறித்து நான் இப்படிக் கேள்விப்படுகிறதென்ன? உன் உக்கிராணக் கணக்கையொப்புவி, இனி நீ உக்கிராணக்காரனாயிருக்கக்கூடாது என்றான். 3அப்பொழுது உக்கிராணக்காரன்: நான் என்ன செய்வேன், என் எஜமான் உக்கிராண விசாரிப்பிலிருந்து என்னைத் தள்ளிப்போடுகிறானே; கொத்துகிறதற்கு எனக்குப்…

  • |

    வேதாகம பெண்கள் -5 அபிகாயில்

    அபிகாயில் – Abigail வேதபகுதி: 1 சாமுவேல் 25ம் அதிகாரத்தில் இருக்கிறது கதை பின்புலம்: சவுலுக்கு பயந்து தாவீது வனாந்திரத்துக்கு சென்றார். அவருடன் 600 பேர் யுத்த மனுஷர் வனாந்திரத்தில் இருந்தனர். அப்போது, அவர்கள் தங்கியிருக்கும் இடத்துக்கு அருகில், நாபால், ஆடுகளுக்கு மயிர் கத்தரிக்க வந்த செய்தியை அறிந்தார் தாவீது. ஏற்கனவே தாவீது, நாபாலின் மந்தை மேய்ப்பர்கள், தாவீது இருந்த கர்மேலில் இருக்கும்போது, அவர்களை வருத்தப்படுத்தாமல் நல்ல முறையில் நடந்து கொண்டார். நாபால் செல்வ செழிப்பானவர் என்பதை…

  • |

    Day 127 (07-05-2025)

    Scripture Portion: 2 Samuel 7, 1 Chronicles 17 2 சாமுவேல் 7 1கர்த்தர் ராஜாவைச் சுற்றிலும் இருந்த அவனுடைய எல்லாச் சத்துருக்களுக்கும் அவனை நீங்கலாக்கி, இளைப்பாறப்பண்ணினபோது, அவன் தன் வீட்டிலே வாசமாயிருக்கையில், 2ராஜா தீர்க்கதரிசியாகிய நாத்தானை நோக்கி: பாரும், கேதுரு மரங்களால் செய்யப்பட்ட வீட்டிலே நான் வாசம்பண்ணும்போது, தேவனுடைய பெட்டி திரைகளின் நடுவே வாசமாயிருக்கிறதே என்றான். 3அப்பொழுது நாத்தான் ராஜாவை நோக்கி: நீர் போய் உம்முடைய இருதயத்தில் உள்ளபடியெல்லாம் செய்யும்; கர்த்தர் உம்மோடு இருக்கிறாரே என்றான். 4அன்று இராத்திரியிலே கர்த்தருடைய வார்த்தை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *