|

பண்டிகைகள் – 5 (Timeline)

கால வரிசை (எகிப்து முதல் சீனாய் மலை)

Timeline (Egypt to Sinai)

மேலே குறிப்பிட்ட வசனங்களின் படி,

Second Month

சீப் மாதம் (ஐயர் மாதம்)

ஜனங்கள் அதற்குள் கன்றுகுட்டி செய்து வழிபட்டதால் கோபத்தில் கற்பலகையை உடைத்துப் போடுகிறார். அந்த 40 நாளில் ஆசரிப்புகூடாரம் எப்படி செய்ய வேண்டும், ஆசாரியரின் வஸ்திரங்கள், பலிகள் பற்றி கர்த்தர் கற்றுக் கொடுத்திருப்பார்.

(2nd time Day 1)

வேதத்தில் கூறப்படவில்லை என்றாலும், இஸ்ரவேலரின் மத நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த 40 நாட்களும், தேவன் மோசேயிடம், “நீயும் நீ அழைத்து வந்த ஜனமும்”, என்பது போல பேசுவார். அதற்கு முன்பாக, என் ஜனமாகிய இஸ்ரவேலர் எகிப்தில் படும் உபத்திரவத்தைக் கண்டேன் என்று, “என் ஜனங்கள்” என்று கூறியிருப்பார்.

இந்த அனுபவத்தை மோசேக்கு தோல்வியடைந்த நேரம் என்று கருதுகிறார்கள். அதன் பின்னர், மோசே 33ம் அதிகாரம் முழுவதிலும் “உம்முடைய ஜனம், உம்முடைய ஜனம்” என்று பரிந்து பேசி இருப்பார். ஆனாலும் தோல்வியடைந்த தருணமாக பார்க்கப்படுகிறது.

Fifth Month

ஆப் மாதம்

(2nd Time Day 40)

Sixth Month

ஏலுல் மாதம்

தோல்வியடைந்து திரும்பிய மோசேயிடம், தேவன் பேசி, இரண்டு கற்பலகை கொண்டு வரும்படி சொல்கிறார். இந்த 40 நாட்களை Teshuvah என்று இஸ்ரவேலர் இன்றும் கொண்டாடுகின்றனர். இந்த 40 நாட்கள் தேவனுடைய தொடுதலின் நாட்கள், மனந்திரும்புதலின் நாட்கள், அனுக்கிரகத்தின் நாட்கள், புதிய ஆரம்பத்தின் நாட்கள் என்று கொண்டாடுகின்றனர்.

Sevanth Month

திஷ்ரி மாதம்

இந்த நாட்களை இஸ்ரவேலர் கொண்டாடுகின்றனர். ஏனெனில் இது தேவன் ஆரம்பித்த காலம்.

நாம் இப்பொழுது ஏன் இந்த காலவரிசையைப் பார்த்தோம் என்றால், இஸ்ரவேலர் கொண்டாடும் பண்டிகைகள் இதோடு தொடர்புடையது.

பொதுவாக நாம் எப்பொழுது பண்டிகைகள் கொண்டாடுவோம்? பிறந்த நாள் என்றால், அந்த நாளில் நான் பிறந்து இருக்கிறேன். எனக்கு ஒரு காரணம் இருக்கிறது. திருமண நாள் என்றால், அன்று எனக்கு திருமணம் நடந்து இருக்கிறது. கிறிஸ்துமஸ் என்பது, ஏதோ ஒரு நாளை கிறிஸ்து பிறப்பின் நாளாக நியமித்து, நாம் கொண்டாடுகிறோம். இப்படி ஏதோ ஒன்றை, நடந்து முடிந்த காரியத்தைக் கொண்டு பண்டிகைகள் கொண்டாடுகிறோம். அதேபோல் தான் வேத பண்டிகைகளும். இஸ்ரவேலருக்கு அது நடந்து முடிந்த அனுபவமாக உள்ளது.

 முதல் பண்டிகையான பஸ்கா, எகிப்தில் ஆட்டை அடித்து இரத்தத்தை வீட்டு நிலைக்கால்களில் தெளித்து, சங்காரத்தூதனிடம் இருந்து காப்பாற்றப்பட்ட அனுபவம். வாரங்களின் பண்டிகை என்று கொண்டாடப்படும் ஐம்பதாவது நாள் பண்டிகை, சீனாய் வனாந்திரத்தில் கர்த்தர் இறங்கி வந்து மோசேயிடம் பேசிய அனுபவம். பாவ நிவிர்த்தி நாள் கொண்டாடுவது, மோசே மூன்றாவது முறையாக தேவனே ஆரம்பித்த சீசனில், மலைக்கு சென்று இறங்கி வந்த அனுபவம். இப்படி நடந்து முடிந்த காரியங்களை அவர்கள் கொண்டாடுகின்றனர். நமக்கு இந்த காரியத்தில் ஏதேனும் தொடர்பு உள்ளதா?

ஆம், நமக்கு பண்டிகை நாட்கள் என்பது கிறிஸ்துவைப் பற்றியது. பஸ்கா என்பது, இஸ்ரவேலருக்கு ஆட்டு இரத்தத்தின் மூலம் மீட்கப்பட்ட அனுபவம். நமக்கு தேவ ஆட்டுக்குட்டியாகிய இயேசு கிறிஸ்துவினால் மீட்கப்பட்ட, அதாவது இரட்சிக்கப்பட்ட அனுபவம்.

ஐம்பதாவது நாளான பெந்தெகோஸ்தே பண்டிகையில், யாத்திரகாமம் 19 மற்றும் அப்போஸ்தலர் 2 ஒப்பிட்டு பார்த்தால், மிகச் சிறப்பாக இருக்கும். அவர்களுக்கு தேவன் மலையில் இறங்கி பேசிய அனுபவம். நமக்கு பரிசுத்த ஆவியானவர் நமக்குள் ஊற்றப்பட்ட அனுபவம். இஸ்ரவேலருக்கு அப்போது தான் நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டது. நமக்கு பெந்தேகொஸ்தே நாளில் ஆவி கொடுக்கப்பட்டது.

இஸ்ரவேலர் எகிப்தில் இருந்து கானான் வரை என்னவெல்லாம் செய்தார்களோ அது நமக்கு தீர்க்கதரிசனம். துரதிஷ்டவசமாக, தேவனுடைய ஜனங்களாகிய அவர்கள், நம் வாழ்க்கையில் எப்படி இருக்க கூடாது என்பதற்கு உதாரணமாகி விட்டார்கள். பிரச்சனைகளின் போது, அவர்களைப் போல, முறுமுறுக்க கூடாது, தேவனை கோப்பபடுத்தக் கூடாது, நமக்கென வைத்திருக்கும் கானானை இழந்து போய்விடக் கூடாது என்பது அவர்கள் நமக்கு கற்றுக்கொடுக்கும் பாடம். இஸ்ரவேலர் எகிப்தின் அடிமைத்தனம் விட்டு வெளிவந்தது போல, நாமும் பாவ அடிமைத்தனத்திலிருந்து, இயேசுவின் இரத்தம் மூலம் வெளியே வருகிறோம். இயேசுவை ஏற்றுக்கொண்டால் சோதனையே வராது என்பது தவறானது. அதற்கு பின்னர்தான் செங்கடல் வந்தது. நமக்கும் செங்கடல் போன்ற பிரச்சனைகள் வரும். அபிஷேகம் பெற்றால் சோதனை இல்லை என்பதும் தவறு தான், எல்லாருடைய வாழ்விலும் வனாந்திரமான காலம் ஒன்று இருக்கும். சிலர் செங்கடலில் பின்வாங்கி போய் விடுவர். சிலர் வனாந்தரத்தில் பின்வாங்குவர். ஆனாலும் ஆண்டவர் மீது நம்பிக்கை வைத்து யோர்தானையும் கடந்து, கானானுக்குள் நுழைவதே கிறிஸ்தவ வாழ்க்கை.

குறிப்பு

(தோராயத்தின்படி மாத்திரமே இந்த தேதிகள் கணக்கிடப்பட்டு இருக்கிறது. சிலருடைய கணக்கில் பெந்தெகோஸ்தே பண்டிகை, சீவான் மாதம் 6ம் தேதி வரும், சிலருடைய கணக்கில் 4ம் தேதி வரும். நமக்கு பண்டிகைகளின் பொருள் அறிவதற்காக மட்டுமே இந்த பதிவு.)

நன்றி

Similar Posts

  • Paul Intro

    பவுல் – ஒரு அறிமுகம் கிறிஸ்தவ வரலாற்றில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் இயேசு கிறிஸ்து. அவருக்குப் பிறகு கிறிஸ்தவத்தின் வளர்ச்சியிலும், அதன் இறையியலிலும், உலகமெங்கும் சுவிசேஷம் பரவுவதிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் அப்போஸ்தலனாகிய பவுல். அநேகருக்கு பவுலைப் மிகவும் பிடிக்கும். அவருடைய வாழ்க்கையையும், ஊழியத்தையும் குறித்து நிறைய செய்திகள் கேட்டிருப்போம். ஆனால் ஒரு காலத்தில், எனக்கு வேதாகமம் ஆழமாகப் புரியாதபோது, எனக்குப் பிடிக்காத ஒருவர் என்றால் அது பவுல்தான். அவருடைய நிருபங்கள் பெரும்பாலும் ஆழமான போதனைகளால் நிறைந்திருப்பதால்,…

  • |

    வேதாகம பெண்கள்- 4 (யோவன்னாள்)

    Joanna/ Johannah – யோவன்னாள் வேத பகுதி: இரண்டே வசனங்களில் வருபவர் இந்த யோவன்னாள். ஆனால், இவருடைய பங்கு மிக முக்கியமானது. கதை பின்புலம்: இயேசு வாழ்ந்த நாட்களில் அவருடன் ஊழியம் செய்த பெண்களின் பெயரில் இந்த யோவன்னாளின் பெயரும் வருகிறது. எனவே, இயேசுவை கண்குளிர பார்த்து, அவருடன் பேசும் அனுபவம் பெற்றவர் இவர். “தங்கள் ஆஸ்திகளால் அவருக்கு ஊழியம் செய்தவர்கள்” என்ற listல் இவர் பெயரும் உள்ளதால், மனமுவந்து கொடுத்து, ஊழியத்தை தாங்கிய ஒரு பெண்…

  • |

    Day 364 (30-12-2025)

    Scripture Portion: Revelation 12-18 வெளிப்படுத்தின விசேஷம் 12 1அன்றியும் ஒரு பெரிய அடையாளம் வானத்திலே காணப்பட்டது; ஒரு ஸ்திரீ சூரியனை அணிந்திருந்தாள், அவள் பாதங்களின் கீழே சந்திரனும், அவள் சிரசின்மேல் பன்னிரண்டு நட்சத்திரங்களுள்ள கிரீடமும் இருந்தன. 2அவள் கர்ப்பவதியாயிருந்து, பிரசவவேதனையடைந்து, பிள்ளைபெறும்படி வருத்தப்பட்டு அலறினாள். 3அப்பொழுது வேறொரு அடையாளம் வானத்திலே காணப்பட்டது; ஏழு தலைகளையும், பத்துக் கொம்புகளையும், தன் தலைகளின்மேல் ஏழு முடிகளையுமுடைய சிவப்பான பெரிய வலுசர்ப்பமிருந்தது. 4அதின் வால் வானத்தின் நட்சத்திரங்களில் மூன்றிலொருபங்கை இழுத்து,…

  • |

    Day 190 (09-07-2025)

    Scripture Portion: Isaiah 1-4 ஏசாயா 1 1ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா, யூதாவின் ராஜாக்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்பவர்களின் நாட்களில், யூதாவையும் எருசலேமையும் குறித்துக்கண்ட தரிசனம். 2வானங்களே, கேளுங்கள்; பூமியே, செவிகொடு; கர்த்தர் பேசுகிறார்; நான் பிள்ளைகளை வளர்த்து ஆதரித்தேன்; அவர்களோ எனக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினார்கள். 3மாடு தன் எஜமானையும், கழுதை தன் ஆண்டவனின் முன்னணையையும் அறியும்; இஸ்ரவேலோ அறிவில்லாமலும், என் ஜனம் உணர்வில்லாமலும் இருக்கிறது என்கிறார். 4ஐயோ, பாவமுள்ள ஜாதியும், அக்கிரமத்தால் பாரஞ்சுமந்த ஜனமும், பொல்லாதவர்களின்…

  • |

    Day 112 (22-04-2025)

    Scripture Portion: Psalm 6, 8-10, 14,16,19,21 சங்கீதம் 6 (நெகினோத் என்னும் வாத்தியத்தில் செமினீத் என்னும் இராகத்தால் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.) 1கர்த்தாவே, உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாதேயும், உம்முடைய உக்கிரத்திலே என்னைத் தண்டியாதேயும். 2என்மேல் இரக்கமாயிரும் கர்த்தாவே, நான் பெலனற்றுப்போனேன்; என்னைக் குணமாக்கும் கர்த்தாவே, என் எலும்புகள் நடுங்குகிறது. 3என் ஆத்துமா மிகவும் வியாகுலப்படுகிறது; கர்த்தாவே, எதுவரைக்கும் இரங்காதிருப்பீர். 4திரும்பும் கர்த்தாவே, என் ஆத்துமாவை விடுவியும்; உம்முடைய கிருபையினிமித்தம் என்னை இரட்சியும். 5மரணத்தில் உம்மை நினைவுகூர்வதில்லை, பாதாளத்தில் உம்மைத் துதிப்பவன் யார்? 6என் பெரு­மூச்சினால்…

  • |

    Day 269 (26-09-2025)

    Scripture Portion: Nehemiah 1-5 நெகேமியா 1 1அகலியாவின் குமாரனாகிய நெகேமியாவின் நடபடிகள்: இருபதாம் வருஷம் கிஸ்லேயு மாதத்தில் நான் சூசான் என்னும் அரமனையில் இருக்கும்போது சம்பவித்தது என்னவென்றால், 2என் சகோதரரில் ஒருவனாகிய ஆனானியும், வேறே சில மனுஷரும் யூதாவிலிருந்து வந்தார்கள்; அவர்களிடத்தில் நான் சிறையிருப்பில் மீந்து தப்பின யூதரின் செய்தியையும், எருசலேமின் செய்தியையும் விசாரித்தேன். 3அதற்கு அவர்கள்: சிறையிருப்பில் மீந்திருக்கிறவர்கள் அந்தத் தேசத்திலே மகா தீங்கையும் நிந்தையையும் அநுபவிக்கிறார்கள்; எருசலேமின் அலங்கம் இடிபட்டதும், அதின் வாசல்கள்…

4 Comments

  1. எனக்கு மிகவும் பிரயோஜனமாய் இருந்தது. உங்களோடு தொடர்பில் இருக்க விரும்புகிறேன் எனது வாட்சாப் எண் 9894640326 நன்றி

    1. உங்களது கருத்துக்கு நன்றி சகோ. எங்களுடன் ஏதேனும் பகிர விரும்பினால், rhematamilforyou@gmail.com என்ற ஈமெயிலில் தெரியப்படுத்துங்கள். கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *