|

பண்டிகைகள்–13 (எக்காள பண்டிகை part 4)

எக்காளம்

தமிழ் வேதத்தில் எக்காளம் என்றும் பூரிகைகள் என்றும் தனித்தனி பெயர்கள் இருந்தன. இரண்டும் ஒன்று தானா? என்று தேடிப் படித்தால், இரண்டும் வேறு வேறு என்பதை அறியலாம். எக்காளம் என்பது (shofar) என்றும், பூரிகை என்பது Trumpet என்றும் அறியலாம். ஆட்டின் கொம்பில் எக்காளம் தயாரிப்பது Shofar அதாவது எக்காளம் என்றும், வெள்ளியினால் பூரிகை செய்வது, Trumpet என்றும் அழைக்கப்படுகிறது.

நாள் தொடங்கும்போது, அதாவது இரவில் ஆரம்பிக்கும் இந்த பண்டிகையில், அடுத்த நாள் காலையில் தொடர்ச்சியாக 100 முறை எக்காளம் ஊதுவார்கள். நாம் ஏற்கனவே பார்த்தபடி, இந்த சீசனில் மாதுளை முக்கியமானது. இந்த பண்டிகையில் ஆப்பிளை தேனில் முக்கி சாப்பிட்டாலும், மாதுளை யூதர்களுக்கு முக்கியமானது. இது மாதுளையின் சீசன் என்பதாலும், மாதுளை யூத கலாச்சாரத்தில் முக்கியமானது என்பதாலும், மாதுளையை சாப்பிடுவர். மாதுளை ஏன் முக்கியமானது?

முதலாவது, தேவன் இஸ்ரவேலருக்கு கொடுத்த தேசமே, மாதளம்செடி உள்ள தேசம் என்று கூறியிருக்கிறார். இரண்டாவதாக, ஆசாரியருக்கு உடுத்த வேண்டிய உடையில், அடிப்பக்கத்தில், மணியும், மாதளம்பழமும் தொங்க வேண்டும் என்று தேவன் கூறினார். அதுவும் போக, யூதர்களின் நம்பிக்கையின் படி, மாதளம் பழத்தில், 613 விதைகள் இருக்குமாம். தேவன் இஸ்ரவேலருக்கு, 10 கற்பனைகள் கொடுத்தது போல, நியாயப்பிரமாணம் 613 கொடுத்தார். எனவே மாதுளை முக்கியமானது. ஆனால் உண்மையில் மாதுளையில், 200 முதல் 1200 வரை விதைகள் இருக்கும். 613 என்பது அறிவியல் பூர்வ உண்மை கிடையாது. ஆனால், யூதர்களின் பாரம்பரிய நம்பிக்கை, 613 விதைகள் தான் இருக்கும் என்பது. 

மாதுளையை சாப்பிடுவதற்கு முன்னர், இந்த ஜெபத்தை சொல்வார்களாம். ஒரு நல்ல பாரம்பரிய யூதன், ஒரு நாளைக்கு 70 முறை ஜெபம் செய்வான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஒருவேளை, இப்படி அனேக ஜெபங்கள் மனப்பாடமாக சிறுவயதிலிருந்தே சொல்வதால், 70 முறை என்பது அவருக்கு எளிதாக இருக்கும் போல.

கிதியோன்

கிதியோனை பராக்கிரமசாலி என்று தேவன் கூறினாலும், தேவனுக்கே 2 முறை Test வைத்து, சோதித்த பின்னர் தான், யுத்தத்துக்கு தயாரானார் கிதியோன். அப்படிப்பட்ட கிதியோனிடம், கையில் பானை, வழிக்கு Snacks, ஒரு எக்காளம் மட்டும் போதும், யுத்தத்துக்கு போ என்று தேவன் கூறினால், உடனே நம்பி போய்விடுவாரா? பின் எப்படி கிதியோன் போனார்? தேவன் மீது நம்பிக்கை என்றே வைத்துக் கொள்ளலாம். எக்காளத்தை ஏன் ஊதச் சொன்னார்? இருப்பதே 300 பேர். அதையும் 100, 100ஆக பிரித்து, நாங்கள் 100 பேர் எக்காளம் ஊதும்போது, நீங்களும் ஊத வேண்டும் என்று கூறினார்.

ஒரு இஸ்ரவேலன் இவ்வளவு விசுவாசமாயிருக்கிறான் என்றால், அதன் பின்னால் ஒரு வாக்குத்தத்தம் உள்ளது என்று அர்த்தம். அப்படி என்ன வார்த்தையை நம்பி போருக்கு எக்காளத்துடன் கிதியோன் போயிருப்பார்?

தேவன் ஏற்கனவே வாக்கு கொடுத்திருந்தார், நீங்கள் எக்காளம் ஊதினால், நான் உங்களை நினைவு கூறுவேன். உங்கள் பகைஞரிலிருந்து விடுதலை தருவேன் என்று. என்வே தான் கிதியோன், தேவனுடைய வார்த்தையை நம்பி போனார். வெற்றியும் பெற்றார்.

கிதியோன் ஏதோ ஒரு நாளில் எக்காளம் ஊதும்போது, மிகப்பெரிய வெற்றியை பெற்றார். இந்த எக்காள பண்டிகை என்பது, எக்காளம் ஊதி, சத்தமிட்டு சந்தோசமாயிருங்கள் என்று தேவன் கூறியிருக்கிறார். இது தேவன் நியமித்த நாள். அப்படியானால் இந்த நாளில் எக்காளம் ஊதும்போது, நாம் தேவனுடைய சமூகத்தில் நினைவுகூறப்படுவோம் என்பது உண்மைதானே!

எரிகோ கோட்டை

எரிகோ கோட்டையை மக்கள் பிடிக்க முக்கிய காரணம், ஆசாரியர் எக்காளம் ஊதும்போது, ஜனங்கள் சத்தமாய் ஆர்ப்பரித்தார்கள். எக்காளம் என்பது, தேவ சமூகத்தில் நினவு கூற பயன்படும் ஒரு Powerful Weapon. கிதியோனுடன் இருந்து மக்கள், எரிகோ கோட்டையின் வெளியே இருந்து மக்கள், மகா சத்தமாய் ஆர்ப்பரித்தார்கள். நாம் எல்லா இடத்திலும் அமைதியாக காட்டிக்கொள்ள அவசியம் இல்லை. தேவனை புகழ எந்த இடத்தில் சந்தர்ப்பம் கிடைக்கிறதோ, அங்கே சத்தமாய் தேவனை மகிமைப்படுத்தலாம். பெரிய வெற்றியும் பெறலாம்.

இதுவரை நான்கு பண்டிகைகள் படித்தோம். ஒவ்வொன்றும் இயேசுவின் காலத்தில் துல்லியமாக நிறைவேறியது. பஸ்கா பண்டிகையில் இயேசு பஸ்கா ஆடாக பலியானார். புளிப்பில்லாத அப்ப பண்டிகையில், இயேசு பாவமில்லாதவராக அடக்கம் பண்ணப்பட்டார். முதற்கனி பண்டிகையில், இயேசு உயித்தெழுதலின் முதற்பலனானார். பெந்தெகோஸ்தே பண்டிகையில், பரிசுத்த ஆவியானவர் அருளப்பட்டார். இப்போது ஐந்தாவது பண்டிகையான, எக்காள பண்டிகை பார்த்தோம். ஆனால், இப்பண்டிகையின் காலத்தில் தான் நாம் இருக்கிறோம். இன்னும் இந்த தரிசனங்கள் நிறைவேறவில்லை. இயேசு கடைசி எக்காளம் தொனிக்கும்போது இந்த உலகுக்கு வருவதை, அதாவது இயேசுவின் இரண்டாம் வருகையை இப்பண்டிகை குறிக்கிறது. இயேசு சீக்கிரமாய் வரப்போகிறார். நாமும் ஆயத்தமாகலாம், பிறரையும் ஆயத்தப்படுத்துவோம். ஆறாவது பண்டிகை பற்றி வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

Similar Posts

  • |

    Day 137 (17-05-2025)

    Scripture Portion: 2 Samuel 16-18 2 சாமுவேல் 16 1தாவீது மலையுச்சியிலிருந்து சற்றப்புறம் நடந்துபோனபோது, இதோ, மேவிபோசேத்தின் காரியக்காரனாகிய சீபா, பொதிகளைச் சுமக்கிற இரண்டு கழுதைகளை ஓட்டிக்கொண்டுவந்து, அவனைச் சந்தித்தான்; அவைகளில் இருநூறு அப்பங்களும், வற்றலான நூறு திராட்சப்பழக்குலைகளும், வசந்தகாலத்துப் பலனான நூறு குலைகளும், ஒரு துருத்தி திராட்சரசமும் இருந்தது. 2ராஜா சீபாவைப்பார்த்து: இவைகள் என்னத்திற்கு என்று கேட்டதற்கு, சீபா: கழுதைகள் ராஜாவின் வீட்டார் ஏறுகிறதற்கும், அப்பங்களும் பழங்களும், வாலிபர் புசிக்கிறதற்கும், திராட்சரசம் வனாந்தரத்தில் விடாய்த்துப்போனவர்கள்…

  • |

    Day 70 (11-03-2025)

    Scripture Portion: Deuteronomy 1-2 உபாகமம் 1 1சேயீர் மலைவழியாய் ஓரேபுக்குப் பதினொரு நாள் பிரயாண தூரத்திலுள்ள காதேஸ்பர்னேயாவிலிருந்து, 2சூப்புக்கு எதிராகவும், பாரானுக்கும் தோப்பேலுக்கும் லாபானுக்கும் ஆஸரோத்துக்கும் திசாகாபுக்கும் நடுவாகவும் இருக்கிற யோர்தானுக்கு இக்கரையான வனாந்தரத்தின் சமனான வெளியிலே வந்தபோது, மோசே இஸ்ரவேலர் எல்லாரையும் நோக்கிச் சொன்ன வசனங்களாவன: 3எஸ்போனில் குடியிருந்த எமோரியரின் ராஜாவாகிய சீகோனையும், எத்ரேயின் அருகே அஸ்தரோத்தில் குடியிருந்த பாசானின் ராஜாவாகிய ஓக் என்பவனையும், மோசே முறிய அடித்தபின்பு, 4நாற்பதாம் வருஷம் பதினோராம் மாதம்…

  • |

    Day 103 (13-04-2025)

    Scripture Portion: 1 Samuel 18-20 Psalm 11,59 1 சாமுவேல் 18 1அவன் சவுலோடே பேசி முடிந்த பின்பு, யோனத்தானுடைய ஆத்துமா தாவீதின் ஆத்துமாவோடே ஒன்றாய் இசைந்திருந்தது; யோனத்தான் அவனைத் தன் உயிரைப்போலச் சிநேகித்தான். 2சவுல் அவனை அவன் தகப்பன் வீட்டுக்குத் திரும்பிப்போக ஒட்டாமல், அன்று முதல் தன்னிடத்தில் வைத்துக்கொண்டான். 3யோனத்தான் தாவீதைத் தன் ஆத்துமாவைப்போலச் சிநேகித்ததினால், அவனும் இவனும் உடன்படிக்கைபண்ணிக்கொண்டார்கள். 4யோனத்தான் போர்த்துக்கொண்டிருந்த சால்வையைக் கழற்றி, அதையும், தன் வஸ்திரத்தையும், தன் பட்டயத்தையும், தன்…

  • |

    Day 295 (22-10-2025)

    Scripture Portion: Matthew 18 மத்தேயு 18 1அவ்வேளையிலே சீஷர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பரலோகராஜ்யத்தில் எவன் பெரியவனாயிருப்பான் என்று கேட்டார்கள். 2இயேசு ஒரு பிள்ளையைத் தம்மிடத்தில் அழைத்து, அதை அவர்கள் நடுவே நிறுத்தி: 3நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 4ஆகையால் இந்தப் பிள்ளையைப்போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோகராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான். 5இப்படிப்பட்ட ஒரு பிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான். 6என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில்…

  • |

    Day 140 (20-05-2025)

    Scripture Portion: Psalm 5,38, 41-42 சங்கீதம் 5 (நெகினோத் என்னும் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.) 1கர்த்தாவே, என் வார்த்தைகளுக்குச் செவிகொடும், என் தியானத்தைக் கவனியும். 2நான் உம்மிடத்தில் விண்ணப்பம் பண்ணுவேன்; என் ராஜாவே, என் தேவனே, என் வேண்டுதலின் சத்தத்தைக் கேட்டருளும். 3கர்த்தாவே, காலையிலே என் சத்தத்தைக் கேட்டருளுவீர்; காலையிலே உமக்கு நேரே வந்து ஆயத்தமாகி, காத்திருப்பேன். 4நீர் துன்மார்க்கத்தில் பிரியப்படுகிற தேவன் அல்ல; தீமை உம்மிடத்தில் சேர்வதில்லை. 5வீம்புக்காரர் உம்முடைய கண்களுக்கு முன்பாக…

  • இஸ்ரேல்-22 (தாவீது – உடன்படிக்கை பெட்டி பயணம் -2)

    தாவீது -4 (உடன்படிக்கை பெட்டியின் பயணம்-2) தேவன் வாசம் பண்ணிய உடன்படிக்கை பெட்டி, எங்கெல்லாம் பயணம் செய்தது என்பதைப் பற்றி பார்த்துக்கொண்டு இருக்கிறோம். மோசே, தேவன் தெரிந்து கொண்ட ஸ்தலத்தில், ஆசரிப்பு கூடாரத்தை வைக்க வேண்டும் என்று கூறினார், ஆனால் எந்த இடம் என்று கூறவில்லை. யோசுவாவும் சபையின் மூப்பரும் இணைந்து சீலோ என்னும் இடத்தில் ஆசரிப்பு கூடாரத்தின், மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள், பெட்டியை வைத்தார்கள். யோசுவாவுக்கு அடுத்து 450 வருட நியாயாதிபதிகள் காலத்திலும் ஆசரிப்பு கூடாரம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *