|

நன்றியுடன் 21 நாட்கள் Day – 19

Day – 19 (19- டிசம்பர், 2023)

இரட்சிப்புக்காக நன்றி

தேவன் இந்த உலகத்தை மனிதனிடம் கொடுத்து, பலுகி பெருகுங்கள் என்றும், எல்லாவற்றையும் ஆண்டு கொள்ளுங்கள் என்றும் கூறினார். சாத்தான் சதியால், கீழ்ப்படியாமை வந்து, தேவனோடு இருந்து நெருங்கிய தொடர்பை துண்டித்துப் போட்டது. அதன் பின்னர், இந்த உலகத்தின் அதிபதியாக சாத்தான் இருந்து நம்மை ஆண்டு வந்தான். ஒரு கூட்ட ஜனங்கள் மட்டும் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு, இஸ்ரேல் என்னும் இனமாக வாழ்ந்தார்கள். அவர்களாலும் சாத்தானை ஜெயிக்க முடியவில்லை. அதே இனத்தில், இயேசு பிறந்து, நியாயப்பிரமாணத்துக்கு முழுமையாக கீழ்ப்படிந்து, கீழ்ப்படியாமையின் சாபத்தை தொலைத்து போட்டார்.  சிலுவையில் குற்றமில்லாத இரத்தத்தை சிந்தி, யூதர்களை மட்டுமல்ல, வெளியே இருந்து நம்மையும் மீட்டு விட்டார். இது தான் கிறிஸ்தவம். நம் எல்லாருக்கும் தெரியும்.

முதலாவது நாம் வாழும் காலம் சிறந்த காலம், இதற்காக நாம் தேவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். கிறிஸ்து இரத்தம் சிந்தி மீட்ட பின்னர் நாம் பிறந்திருக்கிறோம். அதுவும் நம் நாட்டில் சுவிசேஷம் அறிவிக்கப்பட்ட பின்னர் நாம் பிறந்திருக்கிறோம். அதுவும், வேத புத்தகம் தாராளமாக கிடைக்கும் காலத்தில் நாம் பிறந்திருக்கிறோம். நிறைய வேத வெளிப்பாடுகள் கிடைக்கும் காலத்தில் நாம் பிறந்திருக்கிறோம். அதற்காக நாம் தேவனுக்கு நன்றி சொல்வோம்.

இஸ்ரவேலர்கள், கடவுளின் குழந்தைகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் இன்னும் மேசியாவாகிய இயேசுவைக் கண்டு கொள்ளவில்லை. ஆனால் நாமோ, ஆவிக்குரிய இஸ்ரவேலாக, ஆபிரகாமின் சந்ததியாக வந்து, இயேசுவைக் கண்டு, அவரது அன்பை ருசித்துக் கொண்டிருக்கிறோம். அதற்காக நன்றி சொல்ல வேண்டும்.

வருடத்தில் ஒரு நாள், பாவ நிவாரண பலி செலுத்த வேண்டும், இது வரை செய்த பாவங்களுக்காக. ஒருவேளை அதன் பிறகு பாவம் செய்து விட்டால், மீண்டும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டும் மன்னிப்பு கேட்பதற்காக. ஆனால் இன்று நாம் அந்த நிலையில் இல்லையே. நாம் பாவம் செய்த ஐந்தாவது நிமிடத்தில், உணர்ந்து மன்னிப்பு கேட்டால், உடனடியாக நம் பாவத்தை மன்னித்து நம்மை கட்டி அரவணைக்க நம் நேசர் இருக்கிறார். இது மிகப் பெரிய கிருபை. இதற்காக எவ்வளவு நன்றி சொல்ல வேண்டும்!

இயேசுவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை விசுவாசித்தால் போதும், நாம் இரட்சிக்கப்பட்டு விட்டோம். நாம் இரட்சிக்கப்பட வேண்டுமானால், நமக்கு தேவையானது ஒன்று தான், விசுவாசம் மட்டும் தான். அதற்காக நன்றி சொல்வோம். அவர் ஒரே பேரான குமாரனை நமக்காக தந்தார். இதைவிட சிறந்த பரிசு Precious gift எதுவும் இருக்காது, அதற்காக நாம் நன்றி சொல்வோம்.

இயேசுவின் உயிர்த்தெழுந்த மகிமையினால், இன்றைக்கு நாம் எந்த காரியத்தையும் செய்து விடலாம். அதற்கான அதிகாரம் நமக்கு கொடுத்திருக்கிறார். ஒரு மனிதன் சுகவீனமாக இருக்கும் போது, இயேசுவின் நாமத்தை(Name) சொல்லி, அந்த மனிதனை சுகப்படுத்தும் அதிகாரம் நம் நாவில் இருக்கிறது. அதற்காக நன்றி சொல்வோம்.

Father God, உம் கிருபை அளவிட முடியாதது, உம் அன்பு அளவிட முடியாதது. இதெல்லாம் எனக்கு புரிய வேண்டும் என்றால், நான் இரட்சிக்கப்பட்டு இருக்க வேண்டும். நான் இரட்சிப்பின் அனுபவத்துக்குள் இருப்பதற்காக நன்றி. நீர் ரொம்ப அற்புதமானவர். பாவிகளை, அப்படியே போகட்டும் என்று விடாமல், அவர்கள் மனந்திரும்ப, சந்தர்ப்பம் கொடுக்கிறீர். அப்படி எனக்கும் ஒரு  சந்தர்ப்பம் கொடுத்தீர், அதனால்தான் நான் இரட்சிக்கப்பட்டு இருக்கிறேன். அதற்காக நன்றி. நீர் எங்களை அழைக்கும்போது, எங்கள் இருதயத்தை விசாலமாக்கி, Yes சொல்ல வைத்தீர். அதற்காக நன்றி. உம் வல்லமை பெரிது. நீர் பெரியவர். அற்புதம் செய்பவர். மகிமை நிறைந்தவர், ஆனால், எங்கள் வாயால் நாங்கள் துதிக்கும்போது, நீர் எங்களுக்குள் இறங்கி வருகிறீர். உம் மகிமையை, உம் பிரசன்ன்னத்தை உணரச் செய்கிறீர். அதற்காக நன்றி. எங்களுக்கு தகுதி இருக்கிறதா என்று தெரியாது, ஆனால் நீர் எங்களை தகுதி படுத்திவிட்டீர், நாங்கள் இப்பொழுது நீதிமான்கள். அதற்காக நன்றி இயேசுவே. நாங்கள் மட்டுமல்ல, எங்களை சேர்ந்தவர்கள், மற்றும், உலகில் உள்ள அனைவரும் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். நீர் கிரியை செய்யும். ஆமென்

Similar Posts

  • |

    ஆவிக்குரிய வாழ்க்கைக்கான விசுவாச அறிக்கைகள்

    ஆவிக்குரிய வாழ்க்கைக்கான விசுவாச அறிக்கைகள்  ஆழமான அறிக்கைகள் என்று சொல்வதை விட, ஆவிக்குரிய வாழ்க்கைக்கான அடிப்படை அறிக்கைகள் என்று கூறலாம். நான் நீதிமான் என்னும் தலைப்பில் உள்ள விசுவாச அறிக்கைகள் இன்னும் ஆழமாக தேவனிடம் சேர்க்கும். ஆனால் எந்தவொரு விஷயத்தையும் பாரம்பரியமாக வாசிப்பதால் எந்த பயனும் இல்லை. உண்மையாக புரிந்து தினமும் அறிக்கையிட்டால், தேவனுக்குள் இன்னும் ஆழமாகச் செல்லலாம்.  வசன அறிக்கைகள் நான் கிறிஸ்துவுக்குள் இருக்கிறேன். நான் இப்போது பழைய மனுஷன் அல்ல. புது சிருஷ்டியாயிருக்கிறேன். என்…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 4

    Day – 4 (04- டிசம்பர், 2023) பலவீனத்தில் பெலன் தந்ததற்காக நன்றி இந்த நன்றிக்கு நான் எழுதவே தேவையில்லை. ஒவ்வொருவரும், 1000 நன்றியை வரிசையாக சொல்லலாம். நம் குடும்பத்தில் அவ்வளவு பலவீனங்கள் வந்திருக்கிறது. நம் பெற்றோருக்கு, நம் பிள்ளைகளுக்கு என்று யாரோ ஒருவர் சுகவீனமாய் இருந்திருப்பார்கள். ஆனால் தேவன் பெலனைக் கொடுத்தார் அல்லவா! அதற்காக நன்றி சொல்வோம். என் அனுபவத்தில், இந்த 2023 ஆரம்பிக்கும் போது, ஜனவரி மாதத்தில் ஒருவர் மாற்றி ஒருவர் மருத்துவமனைக்கு சென்றோம்….

  • |

    விசுவாச அறிக்கை Intro

    விசுவாச அறிக்கை நமது அமைச்சர், திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு, ஏதோ ஒரு பிரச்சனை என்றால், நம்மை போல சாதாரண குடிமக்கள் பயப்படுவது போல அவர் பயப்படுவாரா என்பது சந்தேகமே. ஏனென்றால், அவரது அப்பா, தமிழ் நாட்டின் முதலமைச்சர். ஒரு முதலமைச்சரின் மகன் பயமில்லாமல் வாழ முடியுமானால், ஒரு ராஜாவின் மகன் பயமில்லாமல் வாழ முடியுமென்றால், தேவாதி தேவனின் பிள்ளைகள் நாம் எப்படி வாழ வேண்டும். ஆனால், அப்படிப்பட்ட வாழ்வு வாழ்கிறோமா என்பது சந்தேகமே! அநேக சபைகளில் விசுவாச…

  • |

    சுகத்திற்கான விசுவாச அறிக்கைகள்

    நியாயப்பிரமாண காலத்தில், நான் செய்த தவறுக்கு எனக்கு தண்டனை உண்டு. அதனால் எனக்கு வியாதி, தரித்திரம், சாபம் எல்லாம் வந்தது. சரியாகச் சொல்ல வேண்டுமானால், ஆதாம் செய்த தவறினால் உலகத்துக்கே சாபம் வந்தது. அது உண்மையாக இருக்குமானால், அதேபோல பிந்தின ஆதாமாகிய இயேசுவால், உலகத்தின் எல்லா சாபமும், வியாதியும், தரித்திரமும் மாறிவிட்டது. இப்பொழுது நான் கிருபைக்குள்ளாக வந்து விட்டேன். என் பலவீனங்கள் எல்லாம் அவர் சுமந்து தீர்த்து விட்டார். நான் சுமக்க தேவை இல்லை. நான் விடுதலை…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 15

    Day – 15 (15- டிசம்பர், 2023) ஆவிக்குரிய யுத்தத்தில் துணை நின்றீர் நன்றி பல நேரங்களில், சாத்தான் சில உத்திகளைப்(Strategies) பயன்படுத்தி, நம்மை மேற்கொள்ள பார்ப்பான். ஏமாற்றுதல்(deception), குற்றச்சாட்டு(accusation) ,அலட்சியம்(negligence), கிளர்ச்சி(rebelliousness), பயம்(fear), தெய்வ பக்தியின்மை(ungodliness), சோதனை(temptations) போன்ற பல காரியங்கள் நம் வாழ்வில் இருக்கும். சிலர் நம் கூடவே இருப்பார்கள், ஏமாற்றி விட்டு போயிருப்பார்கள்… நம்மை எல்லாரும் குற்றம்சாட்டி பேசுவார்கள்… மதிப்பு கொடுக்காமல் நம்மை அலட்சியப்படுத்துவார்கள்… நமக்கு நிறைய சோதனை வரும்… நம் நண்பர்களுக்குள்,…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 9

    Day – 9 (09- டிசம்பர், 2023) அடிமைதனம் வராமல் காத்தீர் நன்றி இன்றைக்கு முக்கியமான ஒரு காரியத்துக்காக நன்றி சொல்லப் போகிறோம். ஆண்டவரே, நான் ஒரு பாவி என்பதை நாம் ஈஸியாக ஒத்துக் கொள்வோம். இயேசுவின் இரத்தம் என்னைக் கழுவி விட்டது, நான் இப்பொழுது நீதிமான் என்பதை நாம் அறிந்தாலும்கூட, பல சமயங்களில் நம்மை பாவியாகவே நினைத்துக் கொள்கிறோம். முதலாவது தேவனுக்கு, நம்மை நீதிமான் ஆக்கியதற்காக நன்றி சொல்வோம். நாம் எல்லாரும் மனிதர்கள், நம்மால் ஒருவரை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *