|

நன்றியுடன் 21 நாட்கள் Day – 19

Day – 19 (19- டிசம்பர், 2023)

இரட்சிப்புக்காக நன்றி

தேவன் இந்த உலகத்தை மனிதனிடம் கொடுத்து, பலுகி பெருகுங்கள் என்றும், எல்லாவற்றையும் ஆண்டு கொள்ளுங்கள் என்றும் கூறினார். சாத்தான் சதியால், கீழ்ப்படியாமை வந்து, தேவனோடு இருந்து நெருங்கிய தொடர்பை துண்டித்துப் போட்டது. அதன் பின்னர், இந்த உலகத்தின் அதிபதியாக சாத்தான் இருந்து நம்மை ஆண்டு வந்தான். ஒரு கூட்ட ஜனங்கள் மட்டும் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு, இஸ்ரேல் என்னும் இனமாக வாழ்ந்தார்கள். அவர்களாலும் சாத்தானை ஜெயிக்க முடியவில்லை. அதே இனத்தில், இயேசு பிறந்து, நியாயப்பிரமாணத்துக்கு முழுமையாக கீழ்ப்படிந்து, கீழ்ப்படியாமையின் சாபத்தை தொலைத்து போட்டார்.  சிலுவையில் குற்றமில்லாத இரத்தத்தை சிந்தி, யூதர்களை மட்டுமல்ல, வெளியே இருந்து நம்மையும் மீட்டு விட்டார். இது தான் கிறிஸ்தவம். நம் எல்லாருக்கும் தெரியும்.

முதலாவது நாம் வாழும் காலம் சிறந்த காலம், இதற்காக நாம் தேவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். கிறிஸ்து இரத்தம் சிந்தி மீட்ட பின்னர் நாம் பிறந்திருக்கிறோம். அதுவும் நம் நாட்டில் சுவிசேஷம் அறிவிக்கப்பட்ட பின்னர் நாம் பிறந்திருக்கிறோம். அதுவும், வேத புத்தகம் தாராளமாக கிடைக்கும் காலத்தில் நாம் பிறந்திருக்கிறோம். நிறைய வேத வெளிப்பாடுகள் கிடைக்கும் காலத்தில் நாம் பிறந்திருக்கிறோம். அதற்காக நாம் தேவனுக்கு நன்றி சொல்வோம்.

இஸ்ரவேலர்கள், கடவுளின் குழந்தைகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் இன்னும் மேசியாவாகிய இயேசுவைக் கண்டு கொள்ளவில்லை. ஆனால் நாமோ, ஆவிக்குரிய இஸ்ரவேலாக, ஆபிரகாமின் சந்ததியாக வந்து, இயேசுவைக் கண்டு, அவரது அன்பை ருசித்துக் கொண்டிருக்கிறோம். அதற்காக நன்றி சொல்ல வேண்டும்.

வருடத்தில் ஒரு நாள், பாவ நிவாரண பலி செலுத்த வேண்டும், இது வரை செய்த பாவங்களுக்காக. ஒருவேளை அதன் பிறகு பாவம் செய்து விட்டால், மீண்டும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டும் மன்னிப்பு கேட்பதற்காக. ஆனால் இன்று நாம் அந்த நிலையில் இல்லையே. நாம் பாவம் செய்த ஐந்தாவது நிமிடத்தில், உணர்ந்து மன்னிப்பு கேட்டால், உடனடியாக நம் பாவத்தை மன்னித்து நம்மை கட்டி அரவணைக்க நம் நேசர் இருக்கிறார். இது மிகப் பெரிய கிருபை. இதற்காக எவ்வளவு நன்றி சொல்ல வேண்டும்!

இயேசுவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை விசுவாசித்தால் போதும், நாம் இரட்சிக்கப்பட்டு விட்டோம். நாம் இரட்சிக்கப்பட வேண்டுமானால், நமக்கு தேவையானது ஒன்று தான், விசுவாசம் மட்டும் தான். அதற்காக நன்றி சொல்வோம். அவர் ஒரே பேரான குமாரனை நமக்காக தந்தார். இதைவிட சிறந்த பரிசு Precious gift எதுவும் இருக்காது, அதற்காக நாம் நன்றி சொல்வோம்.

இயேசுவின் உயிர்த்தெழுந்த மகிமையினால், இன்றைக்கு நாம் எந்த காரியத்தையும் செய்து விடலாம். அதற்கான அதிகாரம் நமக்கு கொடுத்திருக்கிறார். ஒரு மனிதன் சுகவீனமாக இருக்கும் போது, இயேசுவின் நாமத்தை(Name) சொல்லி, அந்த மனிதனை சுகப்படுத்தும் அதிகாரம் நம் நாவில் இருக்கிறது. அதற்காக நன்றி சொல்வோம்.

Father God, உம் கிருபை அளவிட முடியாதது, உம் அன்பு அளவிட முடியாதது. இதெல்லாம் எனக்கு புரிய வேண்டும் என்றால், நான் இரட்சிக்கப்பட்டு இருக்க வேண்டும். நான் இரட்சிப்பின் அனுபவத்துக்குள் இருப்பதற்காக நன்றி. நீர் ரொம்ப அற்புதமானவர். பாவிகளை, அப்படியே போகட்டும் என்று விடாமல், அவர்கள் மனந்திரும்ப, சந்தர்ப்பம் கொடுக்கிறீர். அப்படி எனக்கும் ஒரு  சந்தர்ப்பம் கொடுத்தீர், அதனால்தான் நான் இரட்சிக்கப்பட்டு இருக்கிறேன். அதற்காக நன்றி. நீர் எங்களை அழைக்கும்போது, எங்கள் இருதயத்தை விசாலமாக்கி, Yes சொல்ல வைத்தீர். அதற்காக நன்றி. உம் வல்லமை பெரிது. நீர் பெரியவர். அற்புதம் செய்பவர். மகிமை நிறைந்தவர், ஆனால், எங்கள் வாயால் நாங்கள் துதிக்கும்போது, நீர் எங்களுக்குள் இறங்கி வருகிறீர். உம் மகிமையை, உம் பிரசன்ன்னத்தை உணரச் செய்கிறீர். அதற்காக நன்றி. எங்களுக்கு தகுதி இருக்கிறதா என்று தெரியாது, ஆனால் நீர் எங்களை தகுதி படுத்திவிட்டீர், நாங்கள் இப்பொழுது நீதிமான்கள். அதற்காக நன்றி இயேசுவே. நாங்கள் மட்டுமல்ல, எங்களை சேர்ந்தவர்கள், மற்றும், உலகில் உள்ள அனைவரும் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். நீர் கிரியை செய்யும். ஆமென்

Similar Posts

  • |

    பொருளாதாரத்துக்கான விசுவாச அறிக்கை

    பொருளாதாரத்துக்கான விசுவாச அறிக்கை ஏதோ பாரம்பரியமாக விசுவாச அறிக்கைகளைச் சொன்னால், நிச்சயமாக எந்த பலனும் கிடையாது. நாம் தேவனுடைய பிள்ளை என்கிற அதிகாரத்தை உணர்ந்து, விசுவாசத்தோடு கூறி, அதன் பலனைப் பெற்றுக் கொள்வோம். வசன அறிக்கைகள் பரிசுத்தமுள்ள என் தேவன் எனக்கு கொடுத்த அதிகாரத்தினால், மற்றும் இயேசுவின் நாமத்தினால் நான் அறிக்கையிடுகிறேன். என் கடன்கள் யாவும் கட்டி தீர்ந்தது. எனக்கான பொருளாதார ஆசீர்வாதத்தை நான் கட்டவிழ்க்கிறேன். பரலோகத்திலும் அவை கட்டவிழ்க்கப்படுவதாக. தேவன் எனக்கு கொடுத்த அதிகாரத்தினாலே, என்…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 20

    Day – 20 (20- டிசம்பர், 2023) அபிஷேகத்துக்காக நன்றி அப்பா, என் மீதுள்ள உம் அபிஷேகத்துக்காக நன்றி. இந்த 2023ல் எத்தனையோ முறை சோர்ந்து போயிருக்கிறேன், மனம் தளர்ந்து போயிருக்கிறேன், பாவத்தில் விழுந்திருக்கிறேன், வேதத்தை மறந்து ஓடியிருக்கிறேன், உம்மிடம் பேச நேரம் கொடுக்காமல் போயிருக்கிறேன், துணிகரமாக சில காரியங்கள் செய்திருக்கிறேன். உம்மை மறுதலித்திருக்கிறேன், ஊழியர்களை குறை சொல்லி இருக்கிறேன், தேவனுடைய ராஜ்யத்துக்கான வேலையில் ஈடுபடவில்லை, தேவையற்ற வெட்டி கதைகளில் நேரம் செலவழித்தேன், அடுத்தவரை பொறாமையுடன் பார்த்தேன்,…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 3

    Day – 3 (03- டிசம்பர், 2023) அனுதின உணவுக்காக நன்றி இந்த நன்றி சொல்லும் நாளில், இன்று உணவுக்காக நன்றி சொல்லப் போகிறோம். “எல்லாரும்தானே சாப்பிடுகிறார்கள். நான் மட்டும் ஸ்பெஷல் விருந்தா சாப்பிடுகிறேன்?” என்று நினைக்கலாம். ஆனால் உண்மை அதுதான். நாம் விருந்து தான் சாப்பிடுகிறோம். இன்று நம் காஃபியில் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால், அது விருந்து தான். ஏனெனில் எத்தனையோ பேர், ஆசையிருந்தாலும், சுகர் என்பதால் சாப்பிட முடியாமல் இருக்கின்றனர். அசைவ உணவு சாப்பிட்டால்…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 21

    Day – 21 (21- டிசம்பர், 2023) கடைசி கால எழுப்புதலுக்காக நன்றி கடைசி கால எழுப்புதல் என்பது சுக்கோத் அனுபவம். அது ஆவியில் நடக்கிற அனுபவம். மூன்றாம் பெந்தெகோஸ்தே, Joy anointing என்றெல்லாம் அழைக்கப்படுகிறது என்று பண்டிகைகள் பற்றிய பதிவில் அறிந்தோம். இந்த கடைசி கால எழுப்புதலில் என்ன நடக்கும்? ஜனங்கள் கூட்டம்கூட்டமாக இரட்சிக்கப்படுவார்கள். அனேக அற்புத அடையாளங்கள் நடக்கும். மறுரூப அனுபவம் நடக்கும். இன்னும் பல காரியங்கள் சொல்லலாம். ஆனால், இன்று கூட ஆங்காங்கே…

  • |

    விசுவாச அறிக்கை – நான் நீதிமான்

    நீதிமான் நான் பாவி என்று நினைக்கும் வரை, என்னால் அவரிடம் நெருங்க முடியாது. அவர் எனக்காய் ஜீவனை தந்து, என்னை நீதிமான் ஆக்கிவிட்டார். நான் இப்பொழுது நீதிமான். ஐந்து நிமிடத்திற்கு முன் நான் பாவம் செய்திருந்தாலும், அவர் இரத்தம் இருப்பதால், என் மன்னிப்பை ஏற்றுக்கொண்டு, அவர் என்னை மன்னித்து விட்டார். நான் இப்பொழுதும் நீதிமான் தான். மோசேயின் நியாயப்பிரமாணத்தினாலே, ஒருவன் எவைகளினின்று விடுதலையாகி, நீதிமானாகக்கூடாதிருந்ததோ, விசுவாசிக்கிறவனாகிய நான், அவைகளினின்று, இயேசுவாலே, விடுதலையாகி, நீதிமான் ஆக்கப்பட்டேன். (அப் 13-39)…

  • |

    விசுவாச அறிக்கை புது வீடு

    எபிரெயர் 3:4 ஏனெனில், எந்த வீடும் ஒருவனால் உண்டாக்கப்படும்; எல்லாவற்றையும் உண்டுபண்ணினவர் தேவன். Thiru Viviliam ஏனெனில், ஒவ்வொரு வீட்டையும் கட்டி எழுப்ப ஒருவர் இருப்பது போல, எல்லாவற்றையும் கட்டி எழுப்புகிறவர் ஒருவர் இருக்கிறார்; அவர் கடவுளே. எல்லாவற்றையும் உண்டு பண்ணின தேவன், தற்போது எங்களுக்கென ஒரு வீட்டைக் கொடுத்ததற்காக நன்றி சொல்லுகிறோம். மத்தேயு 7:24,25 24.ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *