இஸ்ரேல் – 5 (இஸ்ரேல் தேசிய கீதம்)

இஸ்ரேல் – 5

இஸ்ரேல் தேசிய கீதம்

யார் இந்த யூதர்கள்?

பூமியில் யூதர்கள் கஷ்டப்பட்ட அளவு, வேறு எந்த இனமும் கஷ்டப்பட்டது கிடையாது. அதேபோல யூதர்கள் வெறுக்கப்பட்ட அளவு, வேறு எந்த இனமும் வெறுக்கப்பட்டதும் இல்லை. யூதர்களை அதிகம் வருத்தியப்படுத்தியது முஸ்லிம்களோ, அரபியர்களோ கிடையாது. வரலாற்றை நன்றாக படித்துப் பார்த்தால், யூதர்களை கொடுமைப்படுத்தியது கிறிஸ்தவர்கள் தான் என்பதை அறியலாம். இயேசு ஒரு யூதர். இயேசுவைக் கொன்றவர்கள் யூதர்கள். இயேசுவின் சீஷரை விரட்டி விரட்டி கொன்றவர்கள் யூதர்கள். இந்த எண்ணமே கிறிஸ்தவர்கள், யூதர்களை கொலை செய்வதற்கு காரணமாக இருந்தது. யூதர்கள் இலுமினாட்டிகள் என்றும், அவர்கள் இந்த உலகை ஆள்வதற்காக, உலக மக்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள் என்றும், பல கருத்துக்கள் தற்போது நிலவுகின்றன. பாலஸ்தீனியத்தில் அடிக்கடி குண்டு மழை பொழிந்து, அதிகம் பேரை காவு வாங்கிக் கொண்டிருப்பவர்களும் யூதர்கள் தான்.

யூதர்கள் இத்தனை மூர்க்கமாக இருப்பதற்கும், இரக்கமற்று செயல்படுவதற்கும், சுயநலவாதிகளாக வலம் வருவதற்கும், வரலாறு முழுவதும் அவர்கள் அடைந்த துயரமே காரணம். இன்னொருமுறை அகதிகளாக அலைந்து திரிய அவர்கள் தயாராக இல்லை. பல நூற்றாண்டு காத்திருப்புக்குப் பின், தன் கைக்கு கிடைத்த தேசத்தை விட்டுக் கொடுப்பதற்கு அவர்கள் தயாராக இல்லை. முஸ்லிம்கள், அரபியர்கள், கிறிஸ்தவர்கள் என யாரையுமே நம்பிக்கைகுரியவராக பார்ப்பதற்கு யூதர்கள் தயாராக இல்லை. தம்மையும் தம் தேசத்தையும் காப்பாற்றிக் கொள்வதற்காக, எந்த எல்லைக்கும் போக யூதர்கள் தயாராக இருக்கிறார்கள். இரக்கமற்று எத்தனை பேரை கொலை செய்யவும், அவர்கள் தயாராக இருக்கிறார்கள். எத்தனை லட்சம் உயிர்களை பலியிடவும் தயாராக இருக்கிறார்கள். இதற்கு காரணம் 2000 ஆண்டுகள் அவர்கள் பெற்றிருந்த, நீண்ட கொடிய அனுபவங்கள்.

இஸ்ரேல் தேசிய கீதம்

இஸ்ரேலின் தேசிய கீதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை வாசிக்கும் போது அவ்வளவு ஆச்சரியம். கிபி 73ல், இஸ்ரேல் முற்றிலுமாக இல்லாமல் போனது. அதன்பின் 1948ல் தான் அவர்கள் தேசம் அவர்களுக்கு திரும்பக் கிடைத்தது. கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளாக தங்களுக்கு என்று தேசமே இல்லாத ஜனங்கள். பல நாடுகளில் அகதிகளாக வாழ்ந்த மக்கள். ஆனால் அவர்களது வெறி, இஸ்ரேல் என்று தேசியகீதம் மூலம் அறியலாம்.இந்தக் கீதம் எழுதப்பட்ட ஆண்டு கிபி1878. Naftali Herz Imber, 1878ல் எழுதி இருக்கிறார். அப்போது அவர்களுக்கென்று ஒரு தேசம் கூட கிடையாது. யூதர்கள் தங்கள் குழந்தைகளை தங்கள் தேவனுக்காக எப்படி வளர்த்து இருக்கிறார்கள் என்பதை இது காட்டுகிறது. அமைதியாக அந்த தேசிய கீதத்தை ஒருமுறை படித்துப் பாருங்கள். அவர்களின் ஏக்கம் புரியும். எந்த தேசத்தில் இருந்தாலும் எங்கள் கண்கள் சீயோனை நோக்கியே இருக்கும் என்று பாடுவது, அவர்கள் வலியைக் காட்டுகிறது.

இந்தப் பாடலை வாசித்தாலே தெரிகிறது அல்லவா! எவ்வளவு துயரம் பட்டிருக்கிறார்கள் என்று. வேறு நாடுகளில் அகதிகளாக வாழ்ந்தாலும், கண்கள் எப்போதும் கிழக்கே சீயோனை நோக்கியே இருந்தது அவர்களுக்கு. (தானியேல் பாபிலோனில் சிறைப்பட்டு இருக்கும் போது, மூன்று வேளையும் எருசலேமுக்கு நேராக திரும்பி ஜெபித்தார்.) நம் நாட்டில் இருந்து அமெரிக்கா போனால், அங்கேயே செட்டில் ஆகிறதற்கு என்ன வழி என்று தான் யோசிக்கிறார்கள். மீண்டும் இந்தியா வருவதைப் பற்றி யாரும் எண்ணிப் பார்ப்பதே இல்லை. ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளாக தங்கள் நாட்டுக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள் என்றால் எவ்வளவு தேசவெறி அல்லவா! அவர்கள் பிற நாடுகளில் எவ்வளவு கஷ்டத்தை அனுபவித்து இருக்கிறார்கள் என்பதை இனி வரும் பதிவுகளில் காணலாம்.

Similar Posts

  • |

    Day 228 (16-08-2025)

    Scripture Portion: Jeremiah 32-34 எரேமியா 32 1நேபுகாத்நேச்சாரின் பதினெட்டாம் வருஷத்துக்குச் சரியான யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா அரசாண்ட பத்தாம் வருஷத்தில், கர்த்தரால் எரேமியாவுக்கு உண்டான வார்த்தை: 2அப்பொழுது பாபிலோன் ராஜாவின் சேனை எருசலேமை முற்றிக்கை போட்டிருந்தது; ஏரேமியா தீர்க்கதரிசியோ, யூதா ராஜாவின் அரமனையிலுள்ள காவற்சாலையின் முற்றத்திலே அடைக்கப்பட்டிருந்தான். 3ஏனென்றால், இதோ, இந்த நகரத்தைப் பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கிறேன்; அவன் இதைப் பிடிப்பான் என்று கர்த்தர் சொல்லுகிறாரென்றும், 4யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா கல்தேயருடைய கைக்குத் தப்பிப்போகாமல் பாபிலோன் ராஜாவின் கையில் நிச்சயமாக…

  • இஸ்ரேல்-18 (பரிசுத்த வித்து)

    பரிசுத்த வித்து இஸ்ரேல் தேசத்தின் கடந்த காலங்களை, வேதப்பிரகாரமாகவும், சரித்திர ரீதியிலும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இடையிடையே, பரிசுத்த வித்து, என்ற ஒன்றையும் சேர்த்து பார்த்தோம். அந்த பரிசுத்த வித்து, எப்படி பயணம் செய்தது? யார் மூலமாக அடுத்த தலைமுறைக்கு வந்தது என்பதையும் பார்த்தோம். அதையே கொஞ்சம் விரிவாக இன்று பார்க்கலாம். முதலாவது தேவன் ஏன் ஆதாமை உருவாக்கினார்? மல்கியா 2:15 அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பரிபூரணமாயிருந்ததே; பின்னை ஏன் ஒருவனைப்படைத்தார்? தேவபக்தியுள்ள, சந்ததியைப் பெறும்படிதானே…

  • |

    Day 305 (01-11-2025)

    Scripture Portion: Matthew 20-21 மத்தேயு 20 1பரலோகராஜ்யம் வீட்டெஜமானாகிய ஒரு மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது; அவன் தன் திராட்சத்தோட்டத்துக்கு வேலையாட்களை அமர்த்த அதிகாலையிலே புறப்பட்டான். 2வேலையாட்களுடன் நாளொன்றுக்கு ஒரு பணம் கூலிபேசி, அவர்களைத் தன் திராட்சத்தோட்டத்துக்கு அனுப்பினான். 3மூன்றாம் மணிவேளையிலும் அவன் புறப்பட்டுப்போய், கடைத்தெருவிலே சும்மா நிற்கிற வேறு சிலரைக் கண்டு: 4நீங்களும் திராட்சத்தோட்டத்துக்குப் போங்கள், நியாயமானபடி உங்களுக்குக் கூலி கொடுப்பேன் என்றான்; அவர்களும் போனார்கள். 5மறுபடியும், ஆறாம் ஒன்பதாம் மணிவேளையிலும் அவன் போய் அப்படியே செய்தான்….

  • |

    Day 170 (19-06-2025)

    Scripture Portion: Ecclesiastes 1-6 பிரசங்கி 1 1தாவீதின் குமாரனும் எருசலேமின் ராஜாவுமாகிய பிரசங்கியின் வாக்கியங்கள். 2மாயை, மாயை, எல்லாம் மாயை என்று பிரசங்கி சொல்லுகிறான். 3சூரியனுக்குக் கீழே மனுஷன் படுகிற எல்லாப் பிரயாசத்தினாலும் அவனுக்குப் பலன் என்ன? 4ஒரு சந்ததி போகிறது, மறு சந்ததி வருகிறது; பூமியோ என்றைக்கும் நிலைத்திருக்கிறது. 5சூரியன் உதிக்கிறது, சூரியன் அஸ்தமிக்கிறது; தான் உதித்த இடத்திற்கே அது திரும்பவும் தீவிரிக்கிறது. 6காற்று தெற்கே போய், வடக்கேயுஞ்சுற்றி, சுழன்று சுழன்று அடித்து, தான்…

  • |

    Day 190 (09-07-2025)

    Scripture Portion: Isaiah 1-4 ஏசாயா 1 1ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா, யூதாவின் ராஜாக்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்பவர்களின் நாட்களில், யூதாவையும் எருசலேமையும் குறித்துக்கண்ட தரிசனம். 2வானங்களே, கேளுங்கள்; பூமியே, செவிகொடு; கர்த்தர் பேசுகிறார்; நான் பிள்ளைகளை வளர்த்து ஆதரித்தேன்; அவர்களோ எனக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினார்கள். 3மாடு தன் எஜமானையும், கழுதை தன் ஆண்டவனின் முன்னணையையும் அறியும்; இஸ்ரவேலோ அறிவில்லாமலும், என் ஜனம் உணர்வில்லாமலும் இருக்கிறது என்கிறார். 4ஐயோ, பாவமுள்ள ஜாதியும், அக்கிரமத்தால் பாரஞ்சுமந்த ஜனமும், பொல்லாதவர்களின்…

  • |

    Day 308 (04-11-2025)

    Scripture Portion: Matthew 22, Mark 12 மத்தேயு 22 1இயேசு மறுபடியும் அவர்களோடே உவமைகளாய்ப் பேசிச் சொன்னது என்னவென்றால்: 2பரலோகராஜ்யம் தன் குமாரனுக்குக் கலியாணஞ்செய்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது. 3அழைக்கப்பட்டவர்களைக் கலியாணத்திற்கு வரச்சொல்லும்படி அவன் தன் ஊழியக்காரரை அனுப்பினான்; அவர்களோ வர மனதில்லாதிருந்தார்கள். 4அப்பொழுது அவன் வேறு ஊழியக்காரரை அழைத்து: நீங்கள் போய், இதோ, என் விருந்தை ஆயத்தம்பண்ணினேன், என் எருதுகளும் கொழுத்த ஜெந்துக்களும் அடிக்கப்பட்டது, எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது; கலியாணத்திற்கு வாருங்கள் என்று அழைக்கப்பட்டவர்களுக்குச் சொல்லுங்களென்று…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *