|

இஸ்ரேல்-4 (வினோத சட்டங்கள்)

இஸ்ரேலின் விநோதமான சட்டங்கள்

1. இஸ்ரேலில் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, கட்டாயமாக இரண்டு வருடம் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும். ராணுவத்தில் பெண்களைக் கொண்ட நாடு என்ற பெருமையும் இஸ்ரேலுக்கு உள்ளது.

2. நமது குழந்தைகள் பார்க்கும் கார்ட்டூனில் அதிக அளவு கார்ட்டூனை தயாரிப்பவர்கள் யூதர்கள் தான். ஆனால் இஸ்ரேல் நாட்டில் குழந்தைகள் கார்ட்டூன் பார்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் மூளை மழுங்கி விடும் என்பதால், 15 வயது வரை கார்ட்டூன் பார்க்க கூடாது என்ற சட்டம் இஸ்ரேலில் இருக்கிறது.

3. பேருந்து நிலையமாக இருக்கட்டும்… ரயில் நிலையமாக இருக்கட்டும்… எங்கு சென்றாலும் குனிந்த தலை நிமிராமல் மொபைல் போனை நோண்டிக் கொண்டிருக்கும் மக்கள் நாம். ஆனால் இஸ்ரேலில், ஒவ்வொரு பேருந்து நிலையத்திலும் ஏசி உடன் கூடிய லைப்ரரி உள்ளது. பேருந்துக்காக காத்து நிற்கிறவர்கள், அந்த நேரத்தில் அந்த நூலகத்தை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

4. இஸ்ரேலில் அரசியலுக்கு வரவேண்டும் என்றால், அவர்கள் ராணுவத்தில் மிக முக்கிய பொறுப்பாளராக பணியாற்றி இருக்க வேண்டும் என்பது, அங்குள்ள வினோதமான ஒரு சட்டம்.

5. Highway roadல் பைக்கையோ காரையோ நிறுத்தி லிப்ட் கேட்பது மிகப்பெரிய குற்றம். வழிப்பறி கொள்ளைகள் நிகழாமல் தடுக்க இந்த சட்டம் நடைமுறையில் உள்ளது.

6. ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு, டிப்ஸ் கொடுக்கவில்லை என்றால், நீங்கள் செல்லும் போது உங்களை நிறுத்தி டிப்ஸ் தருமாறு கேட்பார்கள்.

7. இஸ்ரேலில் புகை பிடிப்பது மரண தண்டனைக்குரிய குற்றம். அதில் இருக்கும் நிக்கோட்டின், டிஎன்ஏவில் கலப்பதால், அடுத்த தலைமுறையின் மூளை பாதிக்கப்படும். எனவே அவர்கள் பொது இடத்திலோ, வெளியிலோ புகை பிடிப்பதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். (இப்பொழுது நன்றாகவே குடிக்கிறார்கள்)

ஆனால் உலகின் மிகப்பெரிய சிகரெட் கம்பெனி ஒரு யூதருடையது. இரண்டு வருடம் ராணுவத்தில் பணியாற்றி முடிக்கும் வீரர்கள், உடனடியாக இந்தியாவுக்கு சுற்றுலா வருவார்கள். இந்தியாவில் உள்ள கோவாவில், ஓய்வு எடுத்தபடி, சிகரெட் புகையை இழுத்து மூச்சு வாங்குவார்கள். அதுதான் அவர்கள் வாழ்க்கையில் முதலாவது பிடிக்கும் சிகரெட், அதே போல் அவர்கள் வாழ்க்கையில் கடைசியாக குடிக்கும் சிகரெட்டும் இந்தியாவில் தான் குடிப்பார்கள். ராணுவத்தில் பணியாற்றியதால் ஏற்பட்ட மன அழுத்தம், வேலைப்பளு அனைத்தையும் தோற்கடிக்க, இந்தியாவுக்கு சுற்றுலா வந்து, நன்கு ஓய்வெடுத்து விட்டுத்தான், தங்களது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவார்கள் யூதர்கள். (ஒரு காலத்தில் இருந்தது. இப்பொழுது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆனால் கட்டுப்படுத்த முடியவில்லை.)

யூத பெற்றோர்கள்:

உலக அளவில் பதினைந்து சதவீதம் கூட மக்கள்தொகை இல்லாதவர்கள் யூதர்கள், உலக அளவில் தொழில்நுட்பம், இசை, விஞ்ஞானம் இவற்றில் 70% யூதர்களாகத் தான் இருப்பார்கள். இதற்கு பெற்றோரின் வளர்ப்பும் மிகப்பெரிய காரணம். குழந்தை வளர்ப்பில் மிக முக்கிய பங்கு வகிப்பவர் தாய் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் இஸ்ரேலில் குழந்தை வளர்ப்பில் முக்கிய பங்கு ஆற்றிக் கொண்டிருப்பவர் தாய் என்பதை வெளிப்படையாகக் காணலாம். தன் வயிற்றில் கரு உருவாவது தெரிந்த உடனேயே, அந்தத் தாய் எல்லா வேலையும் ஒதுக்கி விட்டு, Maths puzzle போட்டுக் கொண்டே இருக்க வேண்டும். தாயின் மூளை தூண்டப்படும் போது, குழந்தையின் மூளையும் தூண்டப்படும் என்பது அவர்களது எண்ணம். அறிவியல் பூர்வமாக அந்த கருத்தும் சரியே. கரு உருவான உடன், அந்த தாய் தூக்கம் வரக் கூடிய எந்த ஒரு பொருளையும் சாப்பிடாமல், தன்னை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். எப்போதும் இசை வாசித்துக் கொண்டிருக்க வேண்டும். அவர்கள் சாப்பாட்டிலும் அதிகமாக மீன் எடுத்துக் கொள்வார்கள். மீனும் இறைச்சியும் ஒரே நேரத்தில் எடுத்துக் கொள்வது அந்த அளவுக்கு சத்து அல்ல என்று கூறும் யூதர்கள், இறைச்சியை avoid செய்து விட்டு, அதிகமாக மீனைத்தான் சமைப்பர். அதுவும் மீனைப் பொறித்து உண்ணாமல், வேக வைத்துத் தான் சாப்பிடுவர். நிறைய nuts, vegetables எடுத்துக் கொள்வார்கள்.

யூதக் குழந்தைகள்:

குழந்தைகள் சிறு வயதிலிருந்து இசை வாசிக்கப் பழக வேண்டும். கண்டிப்பாக குழந்தைகள் கார்ட்டூன் பார்க்கக் கூடாது. 15 வயது வரை உள்ள குழந்தைகள் கார்ட்டூன் பார்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் மூளையைத் தூண்டும் வில் வித்தை, துப்பாக்கி சுடுதல் போன்றவை, கட்டாயமாக குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கப்படும். ஆறாம் வகுப்பு வரை குழந்தைகளுக்கு வணிக கணிதவியல் படிப்பு கட்டாயமாக சொல்லித் தரப்படும். அதன் பின்னர் அவர்கள் என்ன துறையில் படிக்க விரும்புகிறார்களோ, அந்தத் துறைக்கான பாடங்கள் மட்டுமே சொல்லித் தரப்படும். நம்மைப் போல் எல்லா பாடங்களையும் அவர்கள் படிப்பது கிடையாது. போர்த்தளவாடம், மருத்துவம், தொழில்நுட்பம். இதுதான் அவர்களது முக்கிய பாடங்கள். இதை நோக்கித்தான் அவர்களது கவனம் சென்று கொண்டே இருக்கும்.

முக்கியமாக வணிகவியல் எடுக்கும் ஆசிரியருக்கு, அங்கே மரியாதை அதிகம். வணிகவியலில் ஒரு பத்து பேர் சேர்ந்து கூட்டாக இருப்பார்கள். அந்த பத்து மாணவர்களும் சேர்ந்து, ஒரு business செய்து, பத்து மில்லியன் அமெரிக்கன் டாலரை சம்பாதித்துக் கொடுக்க வேண்டும். அப்படி சம்பாதித்தால் மட்டுமே அவர்களுக்கு டிகிரி முடித்ததற்கான சான்றிதழ் கொடுக்கப்படும். இதனால் தான் எழுபது சதவீத உலகமே யூதனின் கையில் இருக்கிறது. Cococola, Dell, Apple, Motorola என்று முக்கிய நிறுவனங்கள் யூதனுடையதாகத்தான் இருக்கும்.

மாணவர்கள் பிசினஸ் செய்வதற்கு பணம் தேவை. பணம் யார் கொடுப்பார்கள்? நியூயார்க்கில் யூதர்களுக்கென்று ஒரு வர்த்தக நிறுவனம் உள்ளது. அங்கே போய் மாணவர்கள், ‘எனக்கு இந்த ஐடியா இருக்கிறது. நான் இப்படி ஒரு ப்ராஜெக்ட் செய்யப் போகிறேன்’ என்று சொன்னால், வட்டி இல்லா கடன் அந்த நிறுவனம் கொடுக்கும். அதனால் தான் அவர்களால் அதிக பிசினஸ் செய்ய முடிகிறது.

மருத்துவம் படிக்கிற மாணவர்களுக்கும் கடன் வழங்கப்படும். அவர்கள் மருத்துவர்கள் ஆன பின்பு, தன்னை நிலைப்படுத்திக் கொண்டு, மூன்று வருடங்களுக்குள் ஒரு நல்ல நிலைக்கு வர வேண்டும். மூன்று வருடம் முடிந்த பின்னர், அவர்கள் அந்த வட்டி இல்லா கடனைத் திரும்ப செலுத்தலாம்.

Similar Posts

  • |

    Day 364 (30-12-2025)

    Scripture Portion: Revelation 12-18 வெளிப்படுத்தின விசேஷம் 12 1அன்றியும் ஒரு பெரிய அடையாளம் வானத்திலே காணப்பட்டது; ஒரு ஸ்திரீ சூரியனை அணிந்திருந்தாள், அவள் பாதங்களின் கீழே சந்திரனும், அவள் சிரசின்மேல் பன்னிரண்டு நட்சத்திரங்களுள்ள கிரீடமும் இருந்தன. 2அவள் கர்ப்பவதியாயிருந்து, பிரசவவேதனையடைந்து, பிள்ளைபெறும்படி வருத்தப்பட்டு அலறினாள். 3அப்பொழுது வேறொரு அடையாளம் வானத்திலே காணப்பட்டது; ஏழு தலைகளையும், பத்துக் கொம்புகளையும், தன் தலைகளின்மேல் ஏழு முடிகளையுமுடைய சிவப்பான பெரிய வலுசர்ப்பமிருந்தது. 4அதின் வால் வானத்தின் நட்சத்திரங்களில் மூன்றிலொருபங்கை இழுத்து,…

  • இஸ்ரேல்-22 (தாவீது – உடன்படிக்கை பெட்டி பயணம் -2)

    தாவீது -4 (உடன்படிக்கை பெட்டியின் பயணம்-2) தேவன் வாசம் பண்ணிய உடன்படிக்கை பெட்டி, எங்கெல்லாம் பயணம் செய்தது என்பதைப் பற்றி பார்த்துக்கொண்டு இருக்கிறோம். மோசே, தேவன் தெரிந்து கொண்ட ஸ்தலத்தில், ஆசரிப்பு கூடாரத்தை வைக்க வேண்டும் என்று கூறினார், ஆனால் எந்த இடம் என்று கூறவில்லை. யோசுவாவும் சபையின் மூப்பரும் இணைந்து சீலோ என்னும் இடத்தில் ஆசரிப்பு கூடாரத்தின், மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள், பெட்டியை வைத்தார்கள். யோசுவாவுக்கு அடுத்து 450 வருட நியாயாதிபதிகள் காலத்திலும் ஆசரிப்பு கூடாரம்…

  • |

    Day 152 (01-06-2025)

    Scripture Portion: Psalm 119: 89-176 கட்டளைகள் மேல் விசுவாசம் 89 கர்த்தாவே, உமது வசனம் என்றென்றைக்கும் வானங்களில் நிலைத்திருக்கிறது. 90உம்முடைய உண்மை தலைமுறை தலைமுறையாக இருக்கும்; பூமியை உறுதிப்படுத்தினீர், அது நிலைத்திருக்கிறது. 91உம்முடைய பிரமாணங்களை நிறைவேற்றும்படி அவைகள் இந்நாள் வரைக்கும் நிற்கிறது; சமஸ்தமும் உம்மைச் சேவிக்கும். 92உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன். 93நான் ஒருபோதும் உம்முடைய கட்டளைகளை மறக்கமாட்டேன்; அவைகளால் நீர் என்னை உயிர்ப்பித்தீர். 94நான் உம்முடையவன், என்னை இரட்சியும்; உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறேன்….

  • |

    Day 201 (20-07-2025)

    Scripture Portion: Hosea 1-7 ஓசியா 1 1யூதாதேசத்து ராஜாக்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்பவர்களின் நாட்களிலும், யோவாசின் குமாரனாகிய யெஸ்ரயேலின் ராஜாவாகிய யெரொபெயாம் என்பவனின் நாட்களிலும், பெயேரியின் குமாரனாகிய ஓசியாவுக்கு உண்டான கர்த்தருடைய வசனம். 2கர்த்தர் ஓசியாவைக்கொண்டு உரைக்கத்தொடங்கினபோது, கர்த்தர் ஓசியாவை நோக்கி: நீ போய், ஒரு சோரஸ்திரீயையும் சோரப்பிள்ளைகளையும் உன்னிடமாகச் சேர்த்துக்கொள்; தேசம் கர்த்தரை விட்டு விலகிச் சோரம்போயிற்று என்றார். 3அவன் போய், திப்லாயிமின் குமாரத்தியாகிய கோமேரைச் சேர்த்துக்கொண்டான்; அவள் கர்ப்பந்தரித்து, அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள். 4அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: இவனுக்கு யெஸ்ரயேல்…

  • இஸ்ரேல்-24 (தாவீது – 6 சீயோன்)

    தாவீது – 6 தாவீதும் சீயோனும்(எருசலேம்) யோசுவா காலத்தில் இஸ்ரவேலர் அனேக இடங்களைப் பிடித்தாலும், ஆபிரகாமுக்கு வாக்கு கொடுத்த, அத்தனை இடமும் பிடிக்கவில்லை. காலேபுக்கு, தேவன் எபிரோனை வாக்கு பண்ணியதால், காலேப் தன்னுடைய 85ஆவது வயதில் போய், எபிரோனை சுதந்தரித்துக் கொண்டார். யோசுவா, காலேப் காலத்துக்கு பின்னர், கிட்டத்தட்ட 450 வருடங்கள் நியாயாதிபதிகள் காலம் முடிந்து, பின்னர் சவுல் காலமும் முடிந்து, இப்போது தாவீதின் காலம் வந்து விட்டது. 18. நாற்பது வருஷகாலமாய் வனாந்தரத்தில் அவர்களை ஆதரித்து,…

  • இஸ்ரேல்-20 ( தாவீது – இஸ்ரவேலர் பாளையமிறங்கிய வரிசை)

    தாவீது -3 (இஸ்ரவேலர் பாளையமிறங்கிய வரிசை) ஆதாம் கீழ்ப்படியாததால், (சாகவே சாவான்)ஜீவனை இழந்தான். எனவே மனிதன் முழுமையாக கீழ்ப்படிந்து, அதன் மூலம் இழந்த ஜீவனை மறுபடி பெற்றுக்கொள்ளும்படி, தேவன் நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தார். ஆனால், அப்போதும் மனிதர்களால், கீழ்ப்படிய முடியவில்லை. பொய் சொல்லக்கூடாது என்று தேவன் சொல்லி இருக்க, மனிதன் சுலபமாக பொய் சொல்லி பாவம் செய்து விட்டான். அதை சரிசெய்ய வேண்டுமானால், ஏதோ ஒன்று செய்ய வேண்டும். தேவன், ஆசரிப்பு கூடாரம் என்ற ஒன்றை, மோசேக்கு காண்பித்து,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *