Bible Study

  • |

    Day 7 (07-01-2025)

    Scripture Portion: Job 14-16 யோபு 14 1ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான். 2அவன் பூவைப்போலப் பூத்து அறுப்புண்கிறான்; நிழலைப்போல நிலைநிற்காமல் ஓடிப்போகிறான். 3ஆகிலும் இப்படிப்பட்டவன்மேல் நீர் உம்முடைய கண்களைத் திறந்துவைத்து, உம்முடைய நியாயத்துக்கு என்னைக் கொண்டுபோவீரோ? 4அசுத்தமானதிலிருந்து சுத்தமானதைப் பிறப்பிக்கத்தக்கவன் உண்டோ? ஒருவனுமில்லை. 5அவனுடைய நாட்கள் இம்மாத்திரம் என்று குறிக்கப்பட்டிருக்கையால், அவனுடைய மாதங்களின் தொகை உம்மிடத்தில் இருக்கிறது; அவன் கடந்துபோகக்கூடாத எல்லையை அவனுக்கு ஏற்படுத்தினீர். 6அவன் ஒரு கூலிக்காரனைப்போல் தன் நாளின்…

  • |

    Day 6 (06-01-2025)

    Scripture Portion: Job 10-13 யோபு 10 1என் ஆத்துமா ஜீவனை அரோசிக்கிறது, நான் என் துயரத்துக்கு எனக்குள்ளே இடங்கொடுத்து, என் மனச்சஞ்சலத்தினாலே பேசுவேன். 2நான் தேவனை நோக்கி: என்னைக் குற்றவாளியென்று தீர்க்காதிரும்; நீர் எதினிமித்தம் என்னோடே வழக்காடுகிறீர், அதை எனக்குத் தெரியப்படுத்தும் என்பேன். 3நீர் என்னை ஒடுக்கி, உம்முடைய கைகளின் கிரியையை வெறுத்து, துன்மார்க்கரின் யோசனையைக் கிருபையாய்ப் பார்க்கிறது உமக்கு நன்றாயிருக்குமோ? 4மாம்சக்கண்கள் உமக்கு உண்டோ? மனுஷன் பார்க்கிறபிரகாரமாய்ப் பார்க்கிறீரோ? 5நீர் என் அக்கிரமத்தைக் கிண்டிக்கிளப்பி,…

  • |

    Day 5 (05-01-2025)

    Scripture Portion: Job 6-9 யோபு 6 1யோபு பிரதியுத்தரமாக: 2என் சஞ்சலம் நிறுக்கப்பட்டு, என் நிர்ப்பந்தம் எல்லாம் தராசிலே வைக்கப்பட்டால் நலமாயிருக்கும். 3அப்பொழுது அது கடற்கரை மணலைப்பார்க்கிலும் பாரமாயிருக்கும்; ஆகையால் என் துக்கம் சொல்லிமுடியாது. 4சர்வவல்லவரின் அம்புகள் எனக்குள் தைத்திருக்கிறது; அவைகளின் விஷம் என் உயிரைக் குடிக்கிறது; தேவனால் உண்டாகும் பயங்கரங்கள் எனக்கு முன்பாக அணியணியாய் நிற்கிறது. 5புல்லிருக்கிற இடத்திலே காட்டுக்கழுதை கத்துமோ? தனக்குத் தீவனமிருக்கிற இடத்திலே எருது கதறுமோ? 6ருசியில்லாத பதார்த்தத்தை உப்பில்லாமல் சாப்பிடக்கூடுமோ?…

  • |

    Day 4 (04-01-2025)

    Scripture Portion: Job 1-5 யோபு 1 1ஊத்ஸ் தேசத்திலே யோபு என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் இருந்தான்; அந்த மனுஷன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான். 2அவனுக்கு ஏழு குமாரரும், மூன்று குமாரத்திகளும் பிறந்தார்கள். 3அவனுக்கு ஏழாயிரம் ஆடுகளும், மூவாயிரம் ஒட்டகங்களும், ஐந்நூறு ஏர்மாடுகளும், ஐந்நூறு கழுதைகளுமாகிய மிருகஜீவன்கள் இருந்ததுமன்றி, திரளான பணிவிடைக்காரரும் இருந்தார்கள்; அதினால் அந்த மனுஷன் கிழக்கத்திப் புத்திரர் எல்லாரிலும் பெரியவனாயிருந்தான். 4அவன் குமாரர், அவனவன் தன்தன் நாளிலே தன்தன்…

  • |

    Day 3 (03-01-2025)

    Scripture Portion: Genesis 8-11 ஆதியாகமம் 8 1தேவன் நோவாவையும், அவனுடனே பேழையிலிருந்த சகல காட்டு மிருகங்களையும், சகல நாட்டு மிருகங்களையும் நினைத்தருளினார்; தேவன் பூமியின்மேல் காற்றை வீசப்பண்ணினார், அப்பொழுது ஜலம் அமர்ந்தது. 2ஆழத்தின் ஊற்றுக்கண்களும், வானத்தின் மதகுகளும் அடைபட்டன; வானத்து மழையும் நின்றுபோயிற்று. 3ஜலம் பூமியிலிருந்து நாளுக்குநாள் வற்றிக்கொண்டே வந்தது; நூற்றைம்பது நாளுக்குப்பின்பு ஜலம் வடிந்தது. 4ஏழாம் மாதம் பதினேழாம் தேதியிலே பேழை அரராத் என்னும் மலைகளின்மேல் தங்கிற்று. 5பத்தாம் மாதம் மட்டும் ஜலம் வடிந்துகொண்டே…

  • |

    Day – 2 (02-01-2025)

    Scripture Portion: Genesis 4-7 ஆதியாகமம் – 4 1ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, காயீனைப் பெற்று, கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன் என்றாள். 2பின்பு அவனுடைய சகோதரனாகிய ஆபேலைப் பெற்றாள்; ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனானான், காயீன் நிலத்தைப் பயிரிடுகிறவனானான். 3சிலநாள் சென்றபின்பு, காயீன் நிலத்தின் கனிகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தான். 4ஆபேலும் தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளின் கொழுமையானவைகளிலும் சிலவற்றைக் கொண்டுவந்தான். ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கிகரித்தார். 5காயீனையும் அவன் காணிக்கையையும் அவர் அங்கிகரிக்கவில்லை. அப்பொழுது காயீனுக்கு மிகவும்…

  • |

    Day -1 (01-01-2025)

    Scripture Portion: Genesis 1-3 ஆதியாகமம் 1 1ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். 2பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார். 3தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார். வெளிச்சம் உண்டாயிற்று. 4வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார். 5தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று. 6பின்பு தேவன்; ஜலத்தின்…

  • 2025ல் வேத வாசிப்பு அட்டவணை (கால வரிசை வாசிப்பு திட்டம்)

    கர்த்தருடைய பெரிதான கிருபையால், அடுத்த வருடத்துக்குள் அடியெடுத்து வைக்க இருக்கிறோம். நமக்கு தெரிந்த எத்தனையோ பேர், இன்று இல்லை. புதிய வருடத்தை காணாமலே சென்று விட்டார்கள். இன்றும் நாம் உயிருடன் இருப்பது கர்த்தருடைய கிருபையே. இந்த புதிய வருடத்தில், வேதத்தை 2025ல் ஒருமுறை வாசித்து முடிக்க ஒரு அட்டவணை வெளியிடுகிறோம். எத்தனையோ வேத வாசிப்பு அட்டவணையை நீங்கள் பார்த்திருக்கலாம். இந்த அட்டவணை அதிலிருந்து கொஞ்சம் வேறுபாடானது. நாம் பார்த்த அட்டவணைகள், வரிசையாக புத்தகங்களின் வரிசையில் இருக்கும். இங்கோ…

  • |

    வேதாகம பெண்கள்- 4 (யோவன்னாள்)

    Joanna/ Johannah – யோவன்னாள் வேத பகுதி: இரண்டே வசனங்களில் வருபவர் இந்த யோவன்னாள். ஆனால், இவருடைய பங்கு மிக முக்கியமானது. கதை பின்புலம்: இயேசு வாழ்ந்த நாட்களில் அவருடன் ஊழியம் செய்த பெண்களின் பெயரில் இந்த யோவன்னாளின் பெயரும் வருகிறது. எனவே, இயேசுவை கண்குளிர பார்த்து, அவருடன் பேசும் அனுபவம் பெற்றவர் இவர். “தங்கள் ஆஸ்திகளால் அவருக்கு ஊழியம் செய்தவர்கள்” என்ற listல் இவர் பெயரும் உள்ளதால், மனமுவந்து கொடுத்து, ஊழியத்தை தாங்கிய ஒரு பெண்…

  • |

    வேதாகம பெண்கள் – 3 (யாகேல்)

    Jael – யாகேல் வேதபகுதி: நியாயாதிபதிகள் 4 மற்றும் 5ம் அதிகாரத்தில் வருகிறது. கதை பின்புலம்: இஸ்ரவேலருக்கும் கானானியருக்கும் ஒரு யுத்தம் நடக்கிறது. நாம் அறிந்தபடி, இஸ்ரவேலர் கானானியரின் தேசத்தை சுதந்தரித்து, இஸ்ரேல் என்னும் தேசமாக உருவாகினார்கள். ஆனால் அவர்களுக்கு ராஜா இல்லை. ஒவ்வொரு கோத்திரம் கோத்திரமாக, அவர்களுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொண்டு இருந்தார்கள். பிற தேசத்திலிருந்தும் அவர்கள் மீது போருக்கு வருவார்கள். அப்போது எவரேனும் ஒருவர் இரட்சகனாக எழும்பி, தேசத்தை வெற்றி பெற வைப்பார்கள். அதன்பின் அந்த…