|

Deliverance Ministries -2

விடுதலை – 12

Deliverance Ministries -2 (விடுதலை ஊழியங்கள் 2)

இயேசு எப்படி ஊழியம் செய்தார் என்பதைப் பார்த்தோம். இயேசுவால் மட்டும்தான் இப்படி ஊழியம் செய்ய முடியுமா? இல்லையே. அவரை விசுவாசிக்கிறவன், அவரைப் பார்க்கிலும் பெரிய காரியங்களைச் செய்வான் என்று வேதம் சொல்கிறது.

கடந்த பாகத்தில் பார்த்தது போல, விடுதலை என்பது வெறும் பிசாசுகளை துரத்துவது மட்டுமல்ல. அப்படியானால் விடுதலை என்றால் என்ன? நம் ஒவ்வொருவருக்கும் பிரச்சனைகள் அசுத்த ஆவிகளிடமிருந்து மட்டும் வருவது இல்லை. பல பிரச்சனைகள் வருவதற்கு நாம் தான் காரணமாக இருப்போம். சில பிரச்சனைகள் தலைமுறை சாபத்தால் வருகிறது. சாத்தான் சில சமயங்கள் நம் மீது legal actions எடுப்பதால் கூட பிரச்சனைகள் வருகிறது.

விடுதலை ஊழியத்தில் என்ன செய்ய வேண்டும்?

தனிப்பட்ட நபருக்கான inner healing

அசுத்த ஆவிகள் ஒரு மனிதனுடைய வாழ்க்கைக்குள் சுலபமாக நுழைய முடியாது. நாம் ஏதோ ஒரு கதவை திறந்து வைத்திருப்பதால் தான் அவை உள்ளே வந்திருக்கும். பல சமயங்களில், ஜெபத்தின் மூலம் அந்த கிரியையை துரத்தி விட்டாலும், மீண்டும் அது உள்ளே வருவதற்கு காரணம், அசுத்த ஆவி வெளியேறியவுடன், அது உள்ளே நுழைந்த கதவை மூடி, அந்த இடத்தை பரிசுத்த ஆவியானவர் நிரப்பும்படி ஜெபிக்க தவறி விடுகிறோம். அதனால், அந்த கதவின் மூலம் தன்னுடன் இன்னும் சில ஆவிகளை கூட்டி வந்து, மீண்டும் பிரச்சனையை தொடர வைக்கிறது. 

பிசாசுக்கு எப்படி கதவு திறக்கப்பட்டிருக்கும்?

  1. பாவம் – நாம் செய்யும் சின்ன சின்ன பாவங்கள், நம்மை அடிமைப்படுத்தி, பெரிய பாவத்துக்கு கொண்டு செல்லும். சில இச்சைகள் அடிமைத்தனத்துக்கு கொண்டு செல்லும்.
  2. மன்னிக்காமை – எல்லாரையும் மன்னிப்பது நம்மால் கூடாத காரியம் தான். ஆனால் சிந்தித்து பாருங்கள், நாம் எவ்வளவு பின் வாங்கிப் போனாலும், மீண்டும் மீண்டும் இயேசு நம்மை மன்னித்துக் கொண்டு இருக்கிறார். மன்னிக்காமை என்பது, ஒரு பெரிய கதவை திறந்து வைத்திருக்கும்.
  3. தலைமுறை சாபங்கள் – தலைமுறை சாபங்கள், நாம் பிறக்கும்போதே பெரிய கதவை திறந்து அசுத்த கிரியைகளை வரவேற்கிறது.
  4. தலைமுறை பாவங்கள் – சில சமயம் அப்பா செய்த பாவம், மகனாலும் செய்யப்படும். இதற்கு காரணம், அந்தக் கதவு திறப்பில் இருக்கிறது. (தினமும் முன்னோரின் பாவம் என் குடும்பத்தை தாக்க கூடாது என்ற ஜெபம் அவசியம்)
  5. சுய சாபங்கள் – இதை நாம் வெகு சுலபமாக செய்வோம். “நான் செத்தால் தான் நிம்மதி”, “என் வாழ்க்கையே பாழாய் போச்சு”, “எனக்கு அவ்வளவு திறமை இல்லை”, “நான் ஒரு பயந்தாங்கொள்ளி” இப்படி negative words எல்லாமே, ஒரு கதவை open செய்து கொண்டு தான் இருக்கிறது.
  6. பலவீனமான தருணம் – விபத்து, திடீர் அதிர்ச்சி, உணர்ச்சி காயம் போன்ற நேரத்தில் நாம் பலவீனமாக சிந்திக்கும்போது, நம்மை அறியாமல் அசுத்த ஆவிகள் சுலபமாக உள் நுழைகின்றன.
  7. தீய உடன்படிக்கை – மந்திரவாதம், ஜோதிடம் போன்ற காரியங்களில் ஈடுப்படும்போது, ஒரு தீய உடன்படிக்கை உருவாகி, ஒரு கதவு திறக்கிறது.
  8. Soul ties – திருமணத்துக்கு மீறிய உறவு, sexual relationship, Pornography மூலமாக, சிலருடன் ஆத்தும பிணைப்பு ஏற்பட்டு, மிகப்பெரிய கதவு திறக்கப்படுகிறது.

இவை எடுத்துக்காட்டாக சொல்லப்பட்டவை தான். நமது கோபம், வெறுப்பு, கசப்பு, இச்சை, பொறாமை என்று கதவைத் திறக்கும் காரணிகள் இன்னும் அநேகம் உள்ளன.

ஒரு தனி மனிதனுடைய உள்ளார்ந்த மனந்திரும்புதல் மிகவும் அவசியம். அதோடு, சில கதவுகளை மூடி, அதன் மூலம் உருவான அந்த வெறுமையான இடத்தில் பரிசுத்த ஆவியானவரை நிரப்புவது மிகவும் அவசியம்.

முக்கியமான கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்னவெனில், “எந்த கதவு திறக்கப்பட்டிருக்கும்? எந்த ஆவி கிரியை செய்கிறது?” என்றெல்லாம் எண்ணுவதை விட்டு விட்டு, இயேசுவினுடைய அன்பை எண்ணிப் பாருங்கள். பிசாசின் காரியங்கள் அல்ல, இயேசுவையும், தேவனுடைய அன்பையும் சிந்தியுங்கள்.

“சிலுவை அன்பு, கிருபை, நான் நீதிமான், கிறிஸ்துவுக்குள் நான் யார்? நான் அவருடைய சொந்த பிள்ளை, அவருடைய நாமத்தை சொல்லி என்னால் பிசாசை துரத்த முடியும்…” இப்படிப்பட்ட சிந்தனைகளில் மூழ்கும்போது, சுலபமாக திறந்த கதவுகளை அடைக்க, அடைக்கப்பட்ட அந்த வெற்றிடத்தில் ஆவியானவர் வசிக்க, கர்த்தர் கிருபை செய்வார்.

தொடர்ந்து பார்க்கலாம்…

Similar Posts

  • |

    Day 181 (30-06-2025)

    Scripture Portion: 2Chronicles 19-23 2 நாளாகமம் 19 1யூதாவின் ராஜாவாகிய யோசபாத், எருசலேமிலுள்ள தன் வீட்டிற்குச் சமாதானத்தோடே திரும்பிவந்தான். 2அப்பொழுது அனானியின் குமாரனாகிய யெகூ என்னும் ஞானதிருஷ்டிக்காரன் புறப்பட்டு, அவனைச் சந்தித்து, ராஜாவாகிய யோசபாத்தை நோக்கி: துன்மார்க்கனுக்குத் துணைநின்று, கர்த்தரைப் பகைக்கிறவர்களை நீர் சிநேகிக்கலாமா? இதினிமித்தம் கர்த்தருடைய கடுங்கோபம் உம்மேல் வர இருந்தது. 3ஆகிலும் நீர் விக்கிரகத்தோப்புகளை தேசத்தை விட்டகற்றி, தேவனைத் தேட உம்முடைய இருதயத்தை நேராக்கின விஷயத்தில் நன்மையான காரியங்கள் உம்மிடத்திலே காணப்பட்டது உண்டு என்றான். 4யோசபாத் எருசலேமிலே வாசமாயிருந்து,…

  • |

    Day 250 (07-09-2025)

    Scripture Portion: Ezekiel 35-37 எசேக்கியேல் 35 1கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 2மனுபுத்திரனே, நீ உன் முகத்தை சேயீர்மலைக்கு நேராகத் திருப்பி அதற்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்து, 3அதற்குச் சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், சேயீர்மலையே, இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து, என் கையை உனக்கு விரோதமாக நீட்டி, உன்னைப் பாழும் அவாந்தரவெளியுமாக்குவேன். 4உன் பட்டணங்களை வனாந்தரமாக்கிப்போடுவேன்; நீ பாழாய்ப்போவாய்; நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வாய். 5நீ பழைய பகையை வைத்து, இஸ்ரவேல் புத்திரருடைய அக்கிரமம் நிறைவேறுகையில் அவர்களுக்கு…

  • |

    Day 178 (27-06-2025)

    Scripture Portion: 1 kings 17-19 1 இராஜாக்கள் 17 1கீலேயாத்தின் குடிகளிலே திஸ்பியனாகிய எலியா ஆகாபை நோக்கி: என் வாக்கின்படியே அன்றி இந்த வருஷங்களிலே பனியும் மழையும் பெய்யாதிருக்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான். 2பின்பு கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று, அவர்: 3நீ இவ்விடத்தை விட்டுக் கீழ்த்திசையை நோக்கிப் போய், யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையில் ஒளித்துக்கொண்டிரு. 4அந்த ஆற்றின் தண்ணீரைக் குடிப்பாய்; அங்கே உன்னைப் போஷிக்க, காகங்களுக்குக் கட்டளையிடுவேன்…

  • |

    Day 4 (04-01-2025)

    Scripture Portion: Job 1-5 யோபு 1 1ஊத்ஸ் தேசத்திலே யோபு என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் இருந்தான்; அந்த மனுஷன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான். 2அவனுக்கு ஏழு குமாரரும், மூன்று குமாரத்திகளும் பிறந்தார்கள். 3அவனுக்கு ஏழாயிரம் ஆடுகளும், மூவாயிரம் ஒட்டகங்களும், ஐந்நூறு ஏர்மாடுகளும், ஐந்நூறு கழுதைகளுமாகிய மிருகஜீவன்கள் இருந்ததுமன்றி, திரளான பணிவிடைக்காரரும் இருந்தார்கள்; அதினால் அந்த மனுஷன் கிழக்கத்திப் புத்திரர் எல்லாரிலும் பெரியவனாயிருந்தான். 4அவன் குமாரர், அவனவன் தன்தன் நாளிலே தன்தன்…

  • |

    Day 248 (05-09-2025)

    Scripture Portion: Ezekiel 28-31 எசேக்கியேல் 28 1 கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி அவர்: 2மனுபுத்திரனே, நீ தீருவின் அதிபதியை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், உன் இருதயம் மேட்டிமைகொண்டு: நான் தேவன், நான் சமுத்திரத்தின் நடுவே தேவாசனத்தில் வீற்றிருக்கிறேன் என்று நீ சொல்லி, உன் இருதயத்தை தேவனின் இருதயத்தைப்போல் ஆக்கினாலும், நீ மனுஷனேயல்லாமல் தேவனல்ல. 3இதோ, தானியேலைப்பார்க்கிலும் நீ ஞானவான்; இரகசியமானதொன்றும் உனக்கு மறைபொருள் அல்ல. 4நீ உன் ஞானத்தினாலும் உன் புத்தியினாலும் பொருள் சம்பாதித்து, பொன்னையும் வெள்ளியையும்…

  • |

    Day 359 (25-12-2025)

    Scripture Portion: 2 Peter 1-3, Jude 2 பேதுரு 1 1நம்முடைய தேவனும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய நீதியால் எங்களைப்போல அருமையான விசுவாசத்தைப் பெற்றவர்களுக்கு, இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும் அப்போஸ்தலனுமாகிய சீமோன் பேதுரு எழுதுகிறதாவது: 2தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிகிற அறிவினால் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் பெருகக்கடவது. 3தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும், அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளினதுமன்றி, 4இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *