|

நன்றியுடன் 21 நாட்கள் (Day – 1)

 

Day – 1 (01- டிசம்பர், 2023)

உயிரோடு இருப்பதற்காக நன்றி

இந்த வருடத்தின் முடிவுக்கு வந்துவிட்டோம். கர்த்தருக்கு நன்றி சொல்வது நமது கடமை. இயேசுவே, நீங்க கொடுத்த ஜீவனுக்காக நன்றி என்று பலமுறை சொல்லி இருப்போம். இன்று அதை யோசித்து பார்த்து நன்றி சொல்லலாமா?

என் அனுபவத்தில், கடந்த வருடம் நவம்பர் மாதம் என் தோழியின் பிறந்த நாளுக்கு எல்லாரும் வாழ்த்து அனுப்பினார்கள், Whatsapp Groupல். அப்போது திடீரென கேள்விப்பட்ட செய்தி, அவள் இறந்து 4 மாதங்கள் ஆகிறது என்று. 4 வருடம் கல்லூரி படிப்பில், கிட்டத்தட்ட 2 வருடங்கள் என் அருகில் இருந்தவள், எனக்கு நிறைய பாடங்கள் சொல்லிக் கொடுத்தவள், அநேக நாட்கள் சாப்பாடு கொடுத்தவள்( நான் Hostel மாணவி என்பதால்). அவளுடைய Delivery காலத்தில் அதிக உதிரப்போக்கு ஏற்பட்டு இறந்து விட்டாள் என்றனர். எனக்கு இன்றுமே நம்ப முடியவில்லை.

ஏன் என்று நான் ஆண்டவரிடம் கேள்வி கேட்க முடியாது. ஆனால், நான் ஏன் உயிரோடு இருக்கிறேன் என்பதை யோசிக்க முடிந்தது. அதே 4 வருடத்தில், எனக்கு low BP என்பதால், எவ்வளவோ முறை உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தேன். நான் எப்படி இரு குழந்தைகள், அதுவும் சுகப்பிரசவத்தில் பெற்றேன் என்பதை யோசித்தேன், கிருபையின் அர்த்தம் புரிந்தது. அவள் மேல் கிருபை இல்லையா என்று நான் கேள்வி கேட்க முடியாது, ஆனால் இன்று உயிரோடு இருக்கும் நம் ஒவ்வொருவர் மேலும் கிருபை இருக்கிறது. நாம் ஜீவனோடு இருக்கிறோம். இதற்காகவே நன்றி சொல்லலாமே!

மேற்படிப்பு படித்த கல்லூரியில், எனக்கு எடுத்த professor, நன்றாக இருப்பார், மிகவும் active ஆக இருப்பார். சிறு வயது தான். கொரோனா காலத்தில், ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல், வேலூரில் 5 பேர் சாவு என்ற செய்தியை, வெறும் செய்தியாக செய்தி செயலியில் படித்தேன். ஆனால், அந்த 5 பேரில் ஒருவர், எங்கள் professor என்பதைக் கேள்விபடும்போது, அதிர்ச்சியாக இருந்தது. கணவரின் அலுவலகத்தில் வேலை செய்பவர்களில் சிலர் அந்த கொரொனா அலையில் மரித்தனர். கணவருடன் கல்லூரியில் படித்த ஒருவர் இறந்து விட்டார். இப்போது அனேக இளவயது மரணங்கள். ஜிம்மில் வொர்க் அவுட் செய்பவர்கள் இறந்து விடுகிறார்கள். பள்ளியில் சிறுவனுக்கு மாரடைப்பு. ஷவர்மா சாப்பிட்டவர்கள், சிக்கன் சாப்பிட்டவர்கள் மரணம். இன்னும் எவ்வளவோ மரண செய்திகள் கேட்கிறோம்.  நாம் இன்னும் உயிருடன் இருக்கிறோம்.

ஒருவேளை கஷ்டத்தில் இருக்கலாம், கைவிடப்பட்ட நிலையில் இருக்கலாம், நெருக்கமானவர்களை இழக்க கொடுத்திருக்கலாம், வறுமையில் இருக்கலாம், பிரிவினையில் இருக்கலாம், சாபத்தில் இருக்கலாம், பாவத்தில் கூட இருக்கலாம். ஆனால் உயிருடன் இருக்கிறோமே! அதற்கு என்ன காரணம்? ஒருவேளை இந்த நாளில் நாம் உயிரோடு இல்லை என்றால், நம் பிள்ளைகளின் எதிர்காலம் என்ன? நம் பிள்ளைக்காக யார் திறப்பில் நிற்பார்கள்?

நாம் இருப்பது நம் பெலன் அல்ல. கர்த்தருடைய கிருபை மட்டுமே.. நன்றி சொல்வோம். ஏன் இவ்வளவு யோசித்து நன்றி சொல்ல வேண்டும்?  அனேக நேரங்களில் எனக்கு ஜீவனைத் தந்ததற்காக நன்றி என்று தினமும் சொல்லும்போது, அது வெறும் slogan ஆக மாறி விடுகிறது. எனவே தான் யோசித்து நன்றி சொல்வோம். நமக்கு தெரிந்தவர்கள் மரித்து இருக்கலாம், அவர்கள் கெட்டவர்கள், நாம் நல்லவர்கள் என்பதால் அல்ல. நாம் எப்படிப் பட்டவர்கள் என்பது, நம்மை விட யாருக்கும் நிச்சயமாகத் தெரியாது. எவ்வளவோ நாட்கள் கடையில் சாப்பிட்டோம், எவ்வளவோ நாட்கள் பைக்கிலும், காரிலும், பேருந்திலும், ட்ரெயினிலும் சென்றோம். ஆனாலும் இன்று ஜீவனோடு இருக்கிறோம். இது கர்த்தருடைய கிருபை மாத்திரமே. மனதார நன்றி சொல்வோம்.

Similar Posts

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 5

    Day – 5 (05- டிசம்பர், 2023) குறைவுகளை நிறைவாக்கினீர் நன்றி இந்த வருடம் முழுவதும் நம்மை போஷித்தார், ஆதலால் தேவனுக்கு நன்றி சொல்வோம் என்று சபையில் ஊழியர்கள் சொல்லும்போது, அந்த நேரத்தில் கூட, “ஆண்டவரே என் குறையை மாற்றும்” என்று ஜெபிப்பவர்கள் உண்டு. அல்லது, அடுத்த வருடம் இதே ஜெபத்தில் நானும் நன்றி சொல்கிற அளவு உயர வேண்டும் என்று ஜெபிப்பவர்களும் உண்டு. ஆனால் இன்று, நாம் இருக்கிற இந்த நிலைக்கு, நன்றி சொல்ல வேண்டும்…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 9

    Day – 9 (09- டிசம்பர், 2023) அடிமைதனம் வராமல் காத்தீர் நன்றி இன்றைக்கு முக்கியமான ஒரு காரியத்துக்காக நன்றி சொல்லப் போகிறோம். ஆண்டவரே, நான் ஒரு பாவி என்பதை நாம் ஈஸியாக ஒத்துக் கொள்வோம். இயேசுவின் இரத்தம் என்னைக் கழுவி விட்டது, நான் இப்பொழுது நீதிமான் என்பதை நாம் அறிந்தாலும்கூட, பல சமயங்களில் நம்மை பாவியாகவே நினைத்துக் கொள்கிறோம். முதலாவது தேவனுக்கு, நம்மை நீதிமான் ஆக்கியதற்காக நன்றி சொல்வோம். நாம் எல்லாரும் மனிதர்கள், நம்மால் ஒருவரை…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 13

    Day – 13 (13- டிசம்பர், 2023) ஆவிக்குரிய ஆசீர்வாதங்களுக்காக நன்றி நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். எபேசியர் 1 -3 Praised be ADONAI, Father of our Lord Yeshua the Messiah, who in the Messiah has blessed us with every spiritual blessing in heaven. கர்த்தர் நம்மை ஆவிக்குரிய சகல ஆசீர்வாதங்களாலும் ஆசீர்வதித்திருக்கிறார்….

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 7

    Day – 7 (07- டிசம்பர், 2023) நீரே மெய்தெய்வம் என்று உணர வைத்ததற்காக நன்றி இந்த தளத்தில் வாசித்துக் கொண்டு இருப்போம் என்றால், நாம் இயேசுவை ஏற்றுக் கொண்டவர்களாகத்தான் இருப்போம். இயேசுவே மேசியா என்பதை அறிந்தவர்கள் நாம். கல்லோ மண்ணோ தெய்வம் அல்ல, நம் தேவனுக்கு உருவம் கிடையாது, ஆனால் நம் தேவன் நமக்குள் வசிக்கிறார். அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்குள்ளும் வாழ்கிறார், ஒவ்வொருவருடனும் பேசுகிறார், அற்புதங்களைச் செய்கிறார். இதெல்லாம் நமக்குத் தெரியும். இப்பொழுது கொஞ்சம் சிந்திப்போமா?…

  • |

    விசுவாச அறிக்கை புது வீடு

    எபிரெயர் 3:4 ஏனெனில், எந்த வீடும் ஒருவனால் உண்டாக்கப்படும்; எல்லாவற்றையும் உண்டுபண்ணினவர் தேவன். Thiru Viviliam ஏனெனில், ஒவ்வொரு வீட்டையும் கட்டி எழுப்ப ஒருவர் இருப்பது போல, எல்லாவற்றையும் கட்டி எழுப்புகிறவர் ஒருவர் இருக்கிறார்; அவர் கடவுளே. எல்லாவற்றையும் உண்டு பண்ணின தேவன், தற்போது எங்களுக்கென ஒரு வீட்டைக் கொடுத்ததற்காக நன்றி சொல்லுகிறோம். மத்தேயு 7:24,25 24.ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள…

  • |

    விசுவாச அறிக்கை Intro

    விசுவாச அறிக்கை நமது அமைச்சர், திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு, ஏதோ ஒரு பிரச்சனை என்றால், நம்மை போல சாதாரண குடிமக்கள் பயப்படுவது போல அவர் பயப்படுவாரா என்பது சந்தேகமே. ஏனென்றால், அவரது அப்பா, தமிழ் நாட்டின் முதலமைச்சர். ஒரு முதலமைச்சரின் மகன் பயமில்லாமல் வாழ முடியுமானால், ஒரு ராஜாவின் மகன் பயமில்லாமல் வாழ முடியுமென்றால், தேவாதி தேவனின் பிள்ளைகள் நாம் எப்படி வாழ வேண்டும். ஆனால், அப்படிப்பட்ட வாழ்வு வாழ்கிறோமா என்பது சந்தேகமே! அநேக சபைகளில் விசுவாச…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *