|

நன்றியுடன் 21 நாட்கள்Day – 10

Day – 10 (10- டிசம்பர், 2023)

தற்கொலை எண்ணங்களுக்கு விலக்கினீர்

செய்தி தாளில் வாசித்த செய்திகளை திரும்பி பார்க்கலாம்.  அப்பா அம்மா ரீசார்ஜ் பண்ணி தராததால், மாணவன் தற்கொலை. நம் காலத்தில், நாம் கேட்ட எல்லாம் நம் பெற்றோர் தந்தார்களா? இல்லையே. ஆனால் நமக்கு தற்கொலை எண்ணம் வரவில்லையே. அதற்காக நன்றி சொல்வோம்.

வேலையில் அதிக பணிச்சுமை காரணமாக தற்கொலை என்று பார்க்கிறோமே. நமக்கு வேலை சுமையாக இல்லையா? அதிலும் நீங்கள் ஒரு பெண் என்றால், காலையில் எழுந்து வீட்டையும் நிர்வகித்து, வேலைக்கும் செல்லும் போது, எவ்வளவு கஷ்டப்படுவீர்கள்? ஆனால் தற்கொலை எண்ணம் வரவில்லையே. வேலை பார்க்கும் இடத்தில் எவ்வளவு தொல்லைகள் கொடுத்தாலும், முன்னேறிச்செல்ல தேவன் பெலன் கொடுத்தாரே! நன்றி சொல்வோம்.

வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை. நமக்கு அப்படிப்பட்ட கொடுமையான வாழ்க்கை அமையவில்லை. கர்த்தர் நேர்த்தியாக நடத்துகிறாரே.  நன்றி சொல்வோம்.

நீட் தேர்வுக்காக எத்தனை பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். நாம் எதிர்பார்த்த எல்லாம் கிடைத்து விட்டதா? நமக்கு பிடித்த வேலை தான் செய்கிறோமா? ஆனால் இன்றும் நாம் உயிருடன் இருக்கிறோமே. நன்றி சொல்வோம்.

இப்போது எல்லாம் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளுக்கே மன அழுத்தமாம். நமக்கு மன அழுத்தம் என்றால் என்ன என்று, உண்மையாகவே தெரியுமா என்றால், சந்தேகமே. அதற்காக நம் வாழ்வில் கவலையே இல்லையா? உண்மையாகவே தற்கொலை செய்து கொண்டவர்களை விட நம் வாழ்வில் அதிக பிரச்சனை இருக்கும். பின் ஏன் நமக்கு அந்த எண்ணம் வரவில்லை. நம்முடன் இருப்பவர் பரிசுத்த ஆவியானவர் அல்லவா! இந்த வருடம் முழுவதும், எப்படியோ நம்மை தேற்றி விட்டார் அல்லவா! நன்றி சொல்வோம்.

திருமணம் செய்ய பெண் கிடைக்கவில்லை என்று தற்கொலையாம். நமக்கு ஈஸியாக வரன் கிடைத்ததா? திருமணம் எதிர்பார்த்தபடி நடந்ததா? எதிர் பார்த்த மாப்பிள்ளை கிடைத்தாரா? அல்லது எதிர்பார்த்த மனைவி அமைந்தாரா? ஆனால் இன்றும் தேவனை விசுவாசிக்கிறோம் அல்லவா! குடும்ப வாழ்வு இன்னும் அமையா விட்டாலும், அவரை விசுவாசிக்கிறோம், சரியான குடும்ப வாழ்வு அமையாமல் பிரச்சனைகளை சந்தித்தாலும், இன்னும் அவரை விசுவாசிக்கிறோமே. நல்ல குடும்ப வாழ்வு அமைந்து, பிரச்சனையே இல்லை என்றாலும் அவரை விசுவாசிக்கிறோம். அதற்காக நன்றி சொல்வோம்.

எத்தனையோ கல்லூரி மாணவர்கள் தற்கொலை செய்தி படிக்கிறோம். ஒருமுறை, ஒரு நர்சிங் மாணவி தற்கொலை கடிதத்தில், “என் காதுக்குள் நீ செத்து போ, இல்லையென்றால் உன் வீட்டினரை கொன்று விடுவேன் என்கிற சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. அம்மா அப்பா நல்லா இருங்க” என்று எழுதி இருந்தார். எவ்வளவு பரிதாபம் அல்லவா! சில ஆவிகள், மக்களை தற்கொலைக்கு தூண்டுவதற்காக சுற்றித் திரிந்து கொண்டு இருக்கிறது. ஆனால், தேவன் அவைகளிடமிருந்து நம்மை வேலியடைத்து பாதுகாத்தாரே. அதற்காக நன்றி சொல்வோம்.

எவ்வளவோ காரணங்களுக்காக தற்கொலை செய்கின்றனர். அவர்கள் காரணங்களை விட, நம் வீட்டில் பிரச்சனை பெரிதாக உள்ளது. ஆனால் இம்மட்டும் தற்கொலையின் ஆவிகள், தற்கொலை சிந்தைகள் நம்மை தொடாதவாறு கர்த்தர் பாதுகாத்தார். அதற்காக நன்றி சொல்வோம் இன்றைய நாளில்.

Similar Posts

  • |

    ஆவிக்குரிய வாழ்க்கைக்கான விசுவாச அறிக்கைகள்

    ஆவிக்குரிய வாழ்க்கைக்கான விசுவாச அறிக்கைகள்  ஆழமான அறிக்கைகள் என்று சொல்வதை விட, ஆவிக்குரிய வாழ்க்கைக்கான அடிப்படை அறிக்கைகள் என்று கூறலாம். நான் நீதிமான் என்னும் தலைப்பில் உள்ள விசுவாச அறிக்கைகள் இன்னும் ஆழமாக தேவனிடம் சேர்க்கும். ஆனால் எந்தவொரு விஷயத்தையும் பாரம்பரியமாக வாசிப்பதால் எந்த பயனும் இல்லை. உண்மையாக புரிந்து தினமும் அறிக்கையிட்டால், தேவனுக்குள் இன்னும் ஆழமாகச் செல்லலாம்.  வசன அறிக்கைகள் நான் கிறிஸ்துவுக்குள் இருக்கிறேன். நான் இப்போது பழைய மனுஷன் அல்ல. புது சிருஷ்டியாயிருக்கிறேன். என்…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 5

    Day – 5 (05- டிசம்பர், 2023) குறைவுகளை நிறைவாக்கினீர் நன்றி இந்த வருடம் முழுவதும் நம்மை போஷித்தார், ஆதலால் தேவனுக்கு நன்றி சொல்வோம் என்று சபையில் ஊழியர்கள் சொல்லும்போது, அந்த நேரத்தில் கூட, “ஆண்டவரே என் குறையை மாற்றும்” என்று ஜெபிப்பவர்கள் உண்டு. அல்லது, அடுத்த வருடம் இதே ஜெபத்தில் நானும் நன்றி சொல்கிற அளவு உயர வேண்டும் என்று ஜெபிப்பவர்களும் உண்டு. ஆனால் இன்று, நாம் இருக்கிற இந்த நிலைக்கு, நன்றி சொல்ல வேண்டும்…

  • |

    விசுவாச அறிக்கை புது வீடு

    எபிரெயர் 3:4 ஏனெனில், எந்த வீடும் ஒருவனால் உண்டாக்கப்படும்; எல்லாவற்றையும் உண்டுபண்ணினவர் தேவன். Thiru Viviliam ஏனெனில், ஒவ்வொரு வீட்டையும் கட்டி எழுப்ப ஒருவர் இருப்பது போல, எல்லாவற்றையும் கட்டி எழுப்புகிறவர் ஒருவர் இருக்கிறார்; அவர் கடவுளே. எல்லாவற்றையும் உண்டு பண்ணின தேவன், தற்போது எங்களுக்கென ஒரு வீட்டைக் கொடுத்ததற்காக நன்றி சொல்லுகிறோம். மத்தேயு 7:24,25 24.ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள…

  • |

    சுகத்திற்கான விசுவாச அறிக்கைகள்

    நியாயப்பிரமாண காலத்தில், நான் செய்த தவறுக்கு எனக்கு தண்டனை உண்டு. அதனால் எனக்கு வியாதி, தரித்திரம், சாபம் எல்லாம் வந்தது. சரியாகச் சொல்ல வேண்டுமானால், ஆதாம் செய்த தவறினால் உலகத்துக்கே சாபம் வந்தது. அது உண்மையாக இருக்குமானால், அதேபோல பிந்தின ஆதாமாகிய இயேசுவால், உலகத்தின் எல்லா சாபமும், வியாதியும், தரித்திரமும் மாறிவிட்டது. இப்பொழுது நான் கிருபைக்குள்ளாக வந்து விட்டேன். என் பலவீனங்கள் எல்லாம் அவர் சுமந்து தீர்த்து விட்டார். நான் சுமக்க தேவை இல்லை. நான் விடுதலை…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 8

    Day – 8 (08- டிசம்பர், 2023)  நல்ல நண்பர்கள் தந்தீர் நன்றி இந்த வருடத்தில் தேவன் நமக்கு தந்த நண்பர்களுக்காக நன்றி சொல்ல வேண்டும்.  நமக்கு சில ஆவிக்குரிய நண்பர்கள் இருப்பார்கள், ஒருவேளை சபையில் யாரோ ஒருவராக இருப்பார், அல்லது நாம் இணைந்திருக்கும் ஏதோ ஒரு இடத்தில், ஆவிக்குரிய நண்பர் இருப்பார்கள். நமக்கு ஒரு பிரச்சனை என்றவுடன், எனக்காக ஜெபியுங்கள் என்று சொல்ல ஒரு நண்பர் இருந்தால், அதற்காக நன்றி சொல்ல வேண்டும். சிலருக்கு அந்த…

  • |

    நன்றியுடன் 21 நாட்கள் Day – 4

    Day – 4 (04- டிசம்பர், 2023) பலவீனத்தில் பெலன் தந்ததற்காக நன்றி இந்த நன்றிக்கு நான் எழுதவே தேவையில்லை. ஒவ்வொருவரும், 1000 நன்றியை வரிசையாக சொல்லலாம். நம் குடும்பத்தில் அவ்வளவு பலவீனங்கள் வந்திருக்கிறது. நம் பெற்றோருக்கு, நம் பிள்ளைகளுக்கு என்று யாரோ ஒருவர் சுகவீனமாய் இருந்திருப்பார்கள். ஆனால் தேவன் பெலனைக் கொடுத்தார் அல்லவா! அதற்காக நன்றி சொல்வோம். என் அனுபவத்தில், இந்த 2023 ஆரம்பிக்கும் போது, ஜனவரி மாதத்தில் ஒருவர் மாற்றி ஒருவர் மருத்துவமனைக்கு சென்றோம்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *